Posted By:sohailmamooty On 12/1/2009 |
|
ஜும்ஆ தினத்தன்று இமாம் குத்பா ஓதிக்கொண்டிருக்கும் போது உம்முடன்இருப்பவரை வாய்பொத்தி இரு(ம்) என நீர் கூறினால் நிச்சயமாக (ஜும்ஆவை)வீணடித்து விட்டீர். என அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்! ஆதாரம் ௲ சஹீ முஸ்லிம்- ஹதீஸ் எண் 419 அறிவிப்பாளா அபு ஹுரைரா (ரலி)
ஜும்ஆ நாளன்று யார் குத்பாவை செவியுற்று வாய்பொத்தி இருந்தாரோ அவரதுசிறப்பு பற்றிய பாடம் யார் குளித்துவிட்டு அதன்பிறகு ஜும்ஆ-விற்கு வந்து (அல்லாஹ்வினால்)அவருக்கு ஏற்படுத்தப்பட்டைதை தொழுதுவிட்டு அவர் குத்பா பிரசங்கத்தைமுடிக்கும்வரை வாய்பொத்தி இருந்து(விட்டு) அவரோடு தொழுதம் விட்டால்,அவருக்கும் அடுத்த ஜும்ஆ-விற்கும் இடையில் (அதற்கு) மேலும் அதிகமாகமூன்று நாட்களுக்கும் (அவறில் ஏற்படும் சிறிய பாவங்கள்) அவருக்குமன்னிக்கப்படுகிறது. ஆதாரம் ௲ சஹீ முஸ்லிம்- ஹதீஸ் எண் 420 அறிவிப்பாளா அபு ஹுரைரா (ரலி)
இறைநம்பிக்கையை சுவைத்தவர் நம்மில் யார்?
‘எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார். (அவை) அல்லாஹ்வும் அவனுடையதூதரும் ஒருவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரிய வராவது, ஒருவர்மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது, நெருப்பில் வீசப்படுவதைவெறுப்பது போல் இறை நிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது’என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அனஸ்(ரலி) அறிவித்தார்.Volume:1 Book:2 : Verse 16
|
|