Posted By:peer On 1/31/2013 |
|
புத்திசாலித்தனம் எதுவென்று கேட்டால் பரீட்சையில் நிறைய மார்க் வாங்கியவர்களை சொல்வார்கள். உண்மையில் அது சரி என்றால் நாடு முழுவதும் ஏகப்பட்ட ஐன்ஸ்டீன்களும், நியுட்டன்களும் தோன்றியிருக்க வேண்டும் . எனவே புத்திசாளித்தனத்துக்கான அளவீடு அதுவல்ல. ஐன்ஸ்டீனின் ஆசிரியர் ஒருவர் கூட அவருடைய திறமையை கண்டுப்பிடித்ததாக தெரியவில்லை . ஒரு ஆசிரியர் அவரிடம் '' பாருப்பா நீ ஒன்றும் உருப்படற ஆளாதெரியல . நீ இந்த வகுப்பில் இருப்பதே எனக்கு அவமானம்'' என்று திட்டியிருக்கிறார் .
ராமானுஜன், கணக்கில் மாமேதையாக இருந்தாலும் ஆங்கிலத்தில் பூஜ்யம்தான். துறைமுகத்தில் கிளார்க்காக பணியாற்றிய ராமானுஜத்தின் மேதமையை உணர்ந்து கொள்ள லண்டனில் இருந்து ஒரு ஹார்டிவரவேண்டியிருந்தது . எனவே பரீட்சை மார்க்குக்கும் புத்திசாலித்தனத்துக்கும் சம்பந்தம் இல்லை. சிந்தனை, உற்சாகம், கடும் உழைப்பு இவை மூன்றும் சேர்ந்ததுதான் புத்திக்கூர்மை என்று பிரான்சிஸ் கால்ட்டன் என்பவர்சொல்லியிருக்கிறார் . தர்ஸ்டன் என்பவர் புத்திசாலித்தனத்துக்கு 7 அம்சங்களை சொல்லியுள்ளார். ,பேச்சுத்திறமை, வார்த்தை சரளம், எண்களின் திறமை, முப்பரிமான சிந்தனை, உணர்வு, ஊகம், ஞாபகம் ஆகியவை இருக்க வேண்டும் என்றார். கில்போர்டு என்பவர் '' ஏழு இல்லை'' மொத்தம் 120 அம்சங்கள் புத்திசாலித்தனத்துக்கு உள்ளன என்றார்.
புத்திசாலித்தனத்தை அளப்பதற்கு பற்பல சூழ்நிலைகளில் அவசியம் தேவைப்படுகிறது. விண்வெளிப் பயணிகள், கம்ப்யுட்டர் விஞ்ஞானிகள் இவர்களையெல்லாம் தேர்ந்தெடுக்க 'ஐ க்யு' என்ற ஒரு அளவை மனோதத்துவ நிபுணர்கள் கண்டுப்பிடித்துள்ளனர். ஆர்யிரக்கனக்கான மனிதர்களின் புத்திக்கூர்மையை பல்வேறு சூழ்நிலைகளில் அளந்து ஒரு சராசரி மனிதனுக்கு 'ஐ க்யு' 100 என்று வைத்துள்ளார்கள். அதன்படி உலக மக்கள் தொகையில் 68 சதவீதத்தினர் 85 லிருந்து 115 வரைதான் உள்ளனர். 13 சதவீதத்தினருக்கு 116 லிருந்து 130 வரை உள்ளது. 130-க்கு மேல் இருப்பவர்களின் எண்ணிக்கை 2வெறும் சதவீதம்தான். இதன் மூலம் புத்திசாலிகள் மிகக்குறைவு என்பது தெளிவாகிறது.
- நன்றி தினம் ஒரு தகவல் |