Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
ப‌சிக்கு உண்ணாத‌வ‌ன் துரோகி, ப‌சிக்க‌ ப‌சிக்க‌ உண்ணாத‌வன் நோயாளி
Posted By:stmohideen On 3/29/2013

ciproxin torrino

ciproxin

ப‌சிக்கு உண்ணாத‌வ‌ன் துரோகி,

ப‌சிக்க‌ ப‌சிக்க‌ உண்ணாத‌வன் நோயாளி

 

தற்போது நாம் பெற்று வ‌ரும் வைத்திய‌ முறைக‌ளின் மூல‌ம் நோய்க‌ளை குண‌ப்ப‌டுத்துவ‌து என்ப‌து மிக‌வும் அரிதான‌ ம‌ற்றும் அபூர்வ‌மான‌ ஒன்றாகி வ‌ருகிறது

 

ஹார்லிக்ஸ், பூஸ்ட், காம்ளான், உள் நாடு ம‌ற்றும் இற‌க்கும‌தி செய்ய‌ப்ப‌ட்ட‌ ப‌ழ‌ வ‌கைக‌ளை உண்டும், ‌ ஆரோக்கிய‌த்திற்காக‌ அதிக‌ய‌ள‌வில் செல‌வு செய்தும் இறுதியாக‌ புது புது நோய்க‌ளை க‌ண்ட‌து தான் மிச்ச‌ம்.

 

ந‌ம்மை அன்றாட‌ம் சிர‌ம‌ப்ப‌டுத்தி  வ‌ரும் நெஞ்ச‌க் க‌ரிப்பு, அல்ச‌ர், உட‌ல் வ‌லி, தூக்க‌மின்மை, பொடுகு, மேக‌ம், வெள்ளைப‌டுத‌ல், க‌ண் பார்வை குறைபாடு, ம‌ல‌ச்சிக்க‌ல் போன்ற‌ சிறு சிறு நோய்க‌ளை கூட‌ குண‌ப்ப‌டுத்த‌ முடியாம‌ல் திண‌றி வ‌ருகிற‌து த‌ற்கால‌ வைத்திய‌ம். அதாவ‌து சிகிச்சை எடுத்துக் கொள்ளும் போதும், அத‌ன் பிற‌கும் சிறிது கால‌ங்க‌ளுக்கு நோயின் தொந்த‌ர‌வு இருக்காது, ஆனால் சிகிச்சையை விட்டு விட்ட‌ சிறிது கால‌த்தில் பழைய‌ நோயின் பின் தொட‌ர்ச்சியாலும், ப‌ழைய‌ நோயிக்காக‌ உட்கொண்ட‌ ம‌ருந்துக்களாலும் அதிக‌ப்ப‌டியான பாதிப்புக்குள்ளாகிறோம்.

 

ஏற்க‌ன‌வே குண‌ப்ப‌டுத்த‌ முடியாத‌ நோய்க‌ள் என்று நீர‌ழிவு, இர‌த்த‌ அழுத்த‌ம், எயிட்ஸ், கேன்ச‌ர் என்ற‌ ப‌ட்டிய‌ல் உள்ள‌து. அவைக‌ள் போக‌ மேலே குறிப்ப‌ட்டுள்ள‌ சாத‌ர‌ண‌ நோய்க‌ளையும் அந்த‌ ப‌ட்டிய‌லில் சேர்த்து விட‌ வேண்டிய‌து தானா? அப்ப‌டியென்றால் இது போன்ற‌ நோய்க‌ளை குண‌ப்ப‌டுத்த‌வே முடியாதா? 

 

உட‌லின் அமைப்பு

 

ம‌னித‌ உட‌லான‌து ப‌ல‌ ம‌ண‌ட‌ல‌ங்க‌ளை கொண்ட‌து. ஒவ்வொரு ம‌ண்ட‌ல‌மும் ப‌ல‌ உறுப்புக‌ளைக் கொண்ட‌து. உறுப்புக‌ள் யாவும் திசுக்க‌ளால் ஆன‌வை. திசுக்க‌ள் கோடிக் க‌ண‌க்கான‌ செல்க‌ளால் உருவான‌வைக‌ள்.

 

செல்க‌ள் என்ப‌வை உருவ‌த்தாலும், செய‌ல்பாடாலும், நிற‌த்தாலும் வேறுப‌ட்டு இருக்கும் ஆனால் அவைக‌ளின் உள்க‌ட்ட‌மைப்பு எல்லா திசுக‌ளுக்கு ஒரே விதமாக‌த் தானிருக்கும். ம‌னித‌ உட‌லில் ஒரு நிமிட‌த்தில் 300 கோடி செல்‌க‌ள் அழிந்தும், உட‌னேயே புதிதாக‌வும் தோன்றி வ‌ருவ‌தால், குறிப்பிட்ட‌ நாட்க‌ளில் உட‌லிலுள்ள‌ ஒவ்வொரு உறுப்பும் புதுப்பிக்க‌ப் ப‌ட்டு வ‌ருகின்ற‌ன‌ என்ப‌து விஞ்ஞான‌மாகும்.

 

உதார‌ண‌த்திற்கு இர‌த்த‌த்தில் வெள்ளைய‌ணுக்க‌ள் 13 நாட்க‌ளிலும், சிக‌ப்பு அணுக்க‌ள் 120 நாட்‌களிலும், குட‌ல் 36 ம‌ணி நேர‌த்திலும், க‌ல்லீர‌ல் ஒரு வ‌ருட‌த்திலும் த‌ங்க‌ளை புதுபித்துக் கொள்கின்ற‌ன‌.

 

சாத‌ர‌ண‌மாக‌ ந‌ம‌து க‌ட்டிட‌ங்க‌ளுக்கு வெள்ளைய‌டிப்ப‌தாக‌ இருந்தால் கூட‌ க‌ட்டிட‌த்தில் தெரியும் ப‌ழுதுக‌ளை ச‌ரி செய்து விட்டு தான் வெள்ளைய‌டிப்போம். அதே க‌ட்டிட‌த்தை புதுபிப்ப‌தாக‌ இருந்தால் சிறு கீர‌ல் கூட‌ இல்லாம‌ல் புதிய‌ க‌ட்டிட‌ம் போல் ச‌ரி செய்து விடுவோம்.

 

ஆனால் ந‌ம‌து உட‌லிலுள்ள‌ உறுப்புக‌ள் புதுப்பிக்க‌ப்ப‌டும் போதே அந்த‌ உறுப்பிலுள்ள‌ நோய்க‌ள் குண‌ப்ப‌டுத்த‌ப் பட்டிருக்க‌ வேண்டும். மாறாக‌ நோய் குண‌மாக‌வில்லை என்றால் நோய் உறுப்புக‌ளில் இருக்க‌ வாய்ப்பில்லை என்ப‌து இத‌ன் மூல‌ம் தெளிவாகிற‌து.

 

உட‌லில் உள்ள‌ உறுப்புக‌ள் யாவும் செல்க‌ளால் உருவாக்க‌ப்ப‌ட்ட‌வைக‌ள். செல்க‌ள் இர‌த்திலுள்ள‌ ச‌ர்க்க‌ரையையும் ஆக்ஸிஜ‌னையும் கொண்டு வெப்ப‌ ச‌க்தி உருவாக்கி, வெப்ப‌ச‌க்தி பின்பு இய‌க்க‌ ச‌க்தியாக‌ மாற்ற‌ப்ப‌ட்டு, அந்த‌ உறுப்புக‌ளுக்கு தேவையான‌ ச‌த்துக‌ளையும் இர‌த்திலிருந்து எடு‌த்துக் கொண்டு உட‌ல் உறுப்புக‌ள் இய‌ங்குகின்ற‌ன‌.

 

உதார‌ண‌த்திற்கு க‌ணினியை எடுத்துக் கொள்ளுங்க‌ள். ஒரு க‌ணினியான‌து ப‌ல பாக‌ங்களால் வ‌டிவமைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. இவைகள்‌ அத‌ற்குரிய‌ மென் பொருட்களின் ப‌டியும், அவைக‌ளுக்குரிய‌ மின்சார‌ம் கிடைக்கும் போதும் இய‌ங்குகின்ற‌ன‌. அந்த‌ க‌ணினி இப்போது இய‌ங்க‌வில்லை, ஆனால் பாக‌ங்க‌ளிலும் எந்த‌ பிர‌ச்ச‌னையுமில்லை என்றால் ஒன்று பிர‌ச்ச‌னை மென்பொருளில் இருக்க‌ வேண்டும் அல்ல‌து மின்சார‌ பிர‌ச்ச‌னையாக‌வோ அல்ல‌து இர‌ண்டும் சேர்ந்த‌ பிர‌ச்ச‌னையாக‌வோ இருக்க‌ வேண்டும்.

 

அதுபோல் உறுப்புக‌ளில் பிர‌ச்ச‌னையில்லை என்றால் உறுப்புக‌ளை இய‌க்க‌ உத‌வும் இர‌த்தத்திலோ அல்ல‌து செல்க‌ள் ப‌ய‌ன்ப‌டுத்தும் ஆக்ஸிஜ‌னிலோ அல்ல‌து இர‌த்த‌ம் கொண்டு வ‌ந்து கொடுக்கும் ச‌த்துக‌ளின் கார‌ண‌மாக‌வோ அல்ல‌து இவை அனைத்திலுமோ உள்ள‌ பிர‌ச்ச‌னை கார‌ண‌மாக‌ தான் இருக்க‌ வேண்டும்.

 

 

இந்த‌ நிலைக்கு என்ன‌ கார‌ண‌ம்?

 

என‌து பாலிய‌ கால‌த்து ந‌ண்ப‌ன் ஒருவ‌ன், எட்டாவாது ப‌டிக்கும் கால‌த்தில் ச‌வ‌ர‌ம் செய்ய‌ ப‌ய‌ன்ப‌டும் பிளேடின் பாதியை க‌வ‌ன‌க் குறைவால் விழுங்கி விட்டான். அவ‌னின் வீட்டிலில் உள்ள‌ பெரிய‌வ‌ர்க‌ள் அவ‌னை ம‌ருத்துவ‌ம‌னைக்கு அழைத்துச் சென்றார்க‌ள். மருத்துவ‌ரோ ம‌றுநாள் வ‌ரை பொறுத்திருக்க‌ கூறிய‌த‌ன் பேரில் எந்த‌ அதிர‌டி வைத்திய‌மும் அன்று அவ‌னுக்கு செய்ய‌ப்ப‌ட‌வில்லை. ம‌ருத்துவ‌ர் சொன்ன‌து போல் ம‌றுநாள் அவ‌ன் ம‌ல‌ம் க‌ழிக்கும் போது எந்த‌ வித‌ காய‌ங்க‌ளையும் வெளிப்ப‌டையாக‌ ஏற்ப‌டுத்தாம‌ல் பிளேடும் வெளியே வ‌ந்து விட்ட‌து. மேலும் அந்த‌ பிளேடு உட‌லினுள் ப‌ய‌னித்த‌ இர‌ப்பை, குட‌ல் போன்ற‌வைக‌ளிலும் எந்த‌ பாதிப்பையும் ஏற்ப‌டுத்த‌வில்லை. ந‌ம‌து உட‌ல் உறுப்புக‌ள் எப்போதும் இய‌ங்கி கொண்டிருப்ப‌வை, அப்ப‌டியிருக்க‌ நாற்புற‌மும் கூரான‌ பாக‌ங்க‌ளை கொண்ட‌ அந்த‌ பிளேடால் என‌து ந‌ண்ப‌னின் உள் உறுப்புக‌ளில்  சிறு வெட்டு காய‌ம் அல்ல‌து கீர‌லாவ‌து ஏற்ப‌ட்டிருக்க‌ வேண்டும்.  மாறாக‌ எவ்வித‌ பிர‌ச்ச‌னையும் அவ‌னுக்கு ஏற்ப‌ட‌வில்லை. இன்று வ‌ரை அத‌னால் எந்த‌ பிர‌ச்ச‌னையையும் அவ‌ன் ச‌ந்தித்த‌தும் இல்லை. இப்போது என‌து ந‌ண்ப‌னுக்கு வ‌ய‌து 46 ஆகிற‌து. இது நாள் வ‌ரை அந்த‌ பிளேடை விழுங்கிய‌தால் அவ‌னுக்கு எவ்வித‌ தொந்த‌ர‌வும் இல்லை.

 

பிளேடு ச‌ம்ப‌வ‌ம் ந‌டைபெற்ற‌ ஒரு வ‌ருட‌த்திற்கு பிற‌கு மீண்டும் அதே ந‌ண்ப‌ன் வ‌டிவிய‌ல்  பெட்டியிலுள்ள (Geometry Box)‌ க‌வ‌ராய‌த்தை (Compass) வாயில் வைத்து விளையாடிக் கொண்டிருக்கையில் க‌வ‌ராய‌த்தின் அடிபாக‌த்தில் உள்ள‌ ஊசி த‌னியாக‌ பிரிந்து ந‌ண்ப‌னின் வ‌யிற்றுக்குள் சென்று விட்ட‌து. இப்போது வீட்டில் சொன்னால் விப‌ரீத‌ விளைவுக‌ள் ஏற்ப‌ட்டுவிடும் என்ப‌தால் ந‌ண்ப‌ன் மேற்ப‌டி விஷ‌ய‌த்தை யாரிட‌மும் சொல்ல‌வில்லை. ஆனால் முன்பு பிளேடு எவ்வாறு வெளியே வ‌ந்த‌தோ அதுபோல் க‌வ‌ராய‌த்தின் ஊசியும் உட‌லில் எவ்வித‌ பாதிப்பையும் ஏற்ப‌டுத்தாம‌ல் மல‌த்துட‌ன் ம்றுநாள் வெளியே வ‌ந்து விட்ட‌து.

 

அதுபோல் ந‌ம் உட‌லிலுள்ள‌ அசுத்த‌ங்க‌ளையும், உட‌லுக்கு ஒவ்வாத‌ பொருட்க‌ளையும், கிருமிக‌ளையும் ந‌ம‌து உட‌ல் வெளியேற்றியே தீரும் என்ப‌து தெளிவாகிற‌து.

 

ந‌ம‌து உட‌லிலுள்ள தேவைய‌ற்ற‌ க‌ழிவுக‌ளை ‌ நுரையீர‌ல், சிறுநீர‌க‌ம், தோல் முத‌லிய‌வைக‌ள் வெளியேற்றுகின்ற‌ன‌.

 

ச‌மீப‌கால‌மாக‌ அதிக‌மாக‌ எல்லோராலும் பேச‌ப்ப‌ட்டு வ‌ரும் நோய் என‌ கூற‌ப்ப‌ட்டு வ‌ருப‌வைக‌ளில் நீர‌ழிவு முத‌ன்மையான‌து. சிறார் முத‌ல் முதிய‌வ‌ர் வ‌ரை வ‌யது வித்தியாச‌மின்றி எல்லோரிட‌மும் காண‌ப்ப‌டுகிற‌து. இந்த‌ நோயை எவ்வாறு க‌ண்டு பிடிக்கிறார்க‌ள்? அதாவ‌து ந‌ம‌து உட‌லுக்கு ஒவ்வாத‌, இர‌த்த‌த்திலிருந்து சிறுநீர‌க‌ம் பிரித்தெடுத்து வெளியேற்றும் சிறுநீரில் இருக்கும் ச‌ர்க்க‌ரையின் அளவை கொண்டு தான் நீர‌ழிவு நோய் க‌ண்ட‌றிய‌ப்ப‌டுகிற‌து.

 

ம‌ல‌மாக‌வோ அல்ல‌து சிறுநீராக‌வோ அல்ல‌து விய‌ர்வையாக‌ அல்ல‌து வாந்தியாக‌ ந‌ம் உட‌ல் வெளியேற்றும் எந்த‌வொன்றும் ந‌ம‌து உட‌லுக்கு ப‌ய‌ன் த‌ர‌க்கூடிய‌தாக‌ இருக்க‌ முடியாது. ஆகையால் அதை மாத்திரைக‌ள் மூல‌மாக‌வோ அல்ல‌து இன்சுலின் ஊசி மூல‌மாக‌வோ வ‌ழு க‌ட்டாய‌மாக‌ ந‌ம் உட‌லினுள் செலுத்துவ‌து ச‌ரியா? அதாவ‌து உட‌லுக்கு ஒவ்வாத‌ பொருட்க‌ளை ம‌ட்டும் தான் சிறுநீர‌க‌ம் வெளியேற்றும். உட‌லுக்கு போசாக்கை கொடுக்க‌க் கூடிய‌ எந்த‌வொரு பொருளையும் சிறுநீர‌க‌ம் வெளியேற்றாது. சிறுநீருட‌ன் வெளிவ‌ரும் ச‌ர்க்க‌ரை க‌ண்டிப்பாக‌ ந‌ம் உட‌லுக்கு ஒத்துவ‌ராத‌ தீங்கு உண்டாக்க‌ கூடிய‌‌து தான்.

 

நீர‌ழிவுக்கார‌ர்க‌ளின் உட‌ல் எதை க‌ழிவு என்று க‌ருதி சிறுநீருட‌ன் வெளியேற்றுகிற‌தோ  அந்த‌ க‌ழிவைத் தான் ஆங்கில‌ வைத்திய‌ம் மாத்திரை, இன்சுலின் மூல‌மாக‌ செல்க‌ளுக்குள் வ‌ன்முறையாக‌ திணிக்கிற‌து. இந்த‌ முறையில் வைத்திய‌ம் பெற்று வ‌ருப‌வ‌ர்க‌ள் ச‌ர்க்க‌ரையை ச‌ரியான‌ அள‌வில் வைத்திருந்தாலும் ப‌ல‌ஹீன‌மாக‌த் தான் இருந்து வ‌ருகிறார்க‌ள். இந்த‌ சிகிச்சை முறையை பின்ப‌ற்றுப‌வ‌ர்க‌ளில் எவ‌ராவ‌து நாள் ப‌ட‌, நாள் ப‌ட‌ ப‌ல‌சாலிக‌ளாக‌ ஆகி வ‌ருகிறார்க‌ளா? இல்லை ப‌ல‌ஹீன‌மாகி வ‌ருகிறார்க‌ளா? ஆக‌ இந்த‌ சிகிச்சை முறையில் தவ‌று இருப்ப‌தை புரிந்துக் கொள்ள‌ முடிகிற‌து.

 

விருந்தும் ம‌ருந்தும் சில‌ தின‌ங்க‌ளுக்கு தான். அதை விடுத்து ந‌ம்மில் ப‌ல‌ பேர்க‌ள் வீட்டில் உண‌வை விட‌ ம‌ருந்துக‌ள் அதிக‌மாக‌ உள்ள‌ன. இப்ப‌டியை போனால் உண‌வே இல்லாத‌ ம‌ருந்தே உல‌கமாகி விடும் போல் தெரிகிற‌து. ப‌த்திய‌ம் என்ப‌து சில‌ மாத‌ங்க‌ள் இருக்க‌லாம், ஆனால் வாழ்க்கை முழுவ‌தும் இனிப்போ அல்ல‌து காரமோ அல்ல‌து உப்போ சாப்பிடாதே என்று சொல்வ‌து என்ன‌ வைத்திய‌ம். அதாவ‌து குளித்தால் ச‌ளி பிடிக்கிற‌து என்று ம‌ருத்துவ‌ரிட‌ம் போனால் குளிக்காதே ஆனால் நான் த‌ரும் ம‌ருந்த‌க‌ளை த‌வ‌றாம‌ல் சாப்பிடுங்க‌ள் ச‌ரியாகி விடும். குளித்தால் அல்ல‌வா தெரியும் ச‌ளி வ‌ருகிறதா அல்ல‌து இல்லையா என்று? அடுத்த‌து மூட்டு வ‌லிக்கிற‌து என்று ம‌ருத்துவ‌ரிட‌ம் போனால், பிர‌ச்ச‌னை இல்லை நீங்க‌ள்  ந‌ட‌க்க‌ வேண்டாம் நான் த‌ரும் ம‌ருந்துக‌ளை சாப்பிடுங்க‌ள் ச‌ரியாகிவிடும். அடுத்து என‌க்கு அடிக்க‌டி நீர் பிரிகிற‌து. அப்ப‌டியா அதிக‌ தாக‌ம் எடுக்கிற‌தா, ஆம் என்றால் நீங்க‌ள் நிர‌ழிவு நோயாளி, ஆகையால் இன்று முத‌ல் இனிப்பு சாப்பிட‌க் கூடாது. எத்த‌னை நாளைக்கு டாக்ட‌ர் இனிப்பு சாப்பிட‌க் கூடாது என்றால், இன்று முத‌ல் வாழ்க்கை முழுக்க‌ இனிப்பு சாப்பிட‌க் கூடாது, ஆனால் நான் த‌ரும் ம‌ருந்துக‌ளை த‌வ‌றாம‌ல் சாப்பிட்டு வாருங்க‌ள். இதெல்லாம் ச‌ரி என்று ப‌டுகிறதா?

 

ஆக்ஸிஜ‌ன், குளுக்கோஸ் ஆகிய‌வைக‌ளை கொண்டு தான் செல்க‌ள் உயிர் ச‌க்தியான‌ வெப்ப‌ ச‌க்தியை உருவாக்குகின்ற‌ன‌. இந்த‌ வெப்ப‌ ச‌க்தியை ந‌ம‌து உட‌ல் இய‌க்க‌ ச‌க்தியாக‌ மாற்றுவ‌தால் ந‌ம்முடைய‌  உள் ம‌ற்றும் வெளி உறுப்புக‌ள் இய‌ங்குகின்ற‌ன‌.. ஆக்ஸிஜ‌ன், குளுக்கோஸ் ஆகிய‌ இர‌ண்டையும் செல்க‌ள் இர‌த்தத்திலிருந்து தான் எடுத்துக் கொள்கின்ற‌ன. அதிலும் க‌ணைய‌நீர் (இன்சுலினை)  கொண்டு சான்றுழிக்க‌ப் ப‌ட்டுள்ள‌ குளுக்கோஸ‌னை ம‌ட்டுமே செல்க‌ள் எடுத்துக் கொள்ளும்.

 

ஆக்ஸிஜ‌ன் நாம் சுவாசிக்கும் காற்றிலிருந்தும், குளுக்கோஸ் நாம் உண்ணும் உண‌விலிருந்தும் ந‌ம் உட‌லுக்கு கிடைத்து வ‌ருகிற‌து.

 

நாம் சாப்பிடும் உண‌வு ஜீர‌ணிக்க‌ப்ப‌ட்டு அதிலிருந்து சத்துக்க‌ள் உறிஞ்ச‌ப் ப‌ட்டு ந‌ம் இர‌த்த‌த்தில் க‌ல‌க்கின்ற‌ன‌. இதில் ச‌ர்க்க‌ரையும் அட‌ங்கும். நீர‌ழிவு நோயாளிக‌ளுக்கு ச‌ர்க்க‌ரை  முறையாக‌ கிடைக்க‌ அவ‌ர்க‌ள் உண்ணும்  உண‌வை மொத்த‌மாக ஒரே நேர‌த்தில் உண்ணாம‌ல் இடைவெளி விட்டு குறைய‌ குறைய‌ சாப்பிடும் ப‌டி ம‌ருத்துவ‌ர்க‌ள் ஆலோச‌னை கூறி வ‌ருகிறார்க‌ள். இத‌ற்கு கார‌ண‌ம் என்ன‌? உண‌வை பிரித்து சாப்பிட‌ சொல்லும் இந்த‌ ம‌ருத்துவ‌ அறிவுரை மூல‌ம் நீர‌ழிவு நோயாளிக‌ளின் ஜீர‌ண‌ ம‌ண்ட‌ல‌த்தில் தொந்த‌ர‌வு இருப்ப‌தை  நாம் புரிந்து கொள்ள் முடியும்.

 

உதார‌ண‌மாக‌ ந‌ல்ல‌ நிலையில் ஓடிக் கொண்டிருக்கும் வாக‌ன‌த்தில் நிர்ண‌யிக்க‌ப்ப‌ட்ட‌ அள‌வை காட்டிலும் ச‌ற்று அதிக‌ பார‌ம் ஏற்றினாலும் அந்த‌ வாக‌ன‌ம் ஓடும், ஆனால் மோச‌மான‌ நிலையிலுள்ள‌ வாக‌ன‌த்தில் நிர்ண‌யிக்க‌ப்ப‌ட்ட‌ அள‌வில் பார‌ம் ஏற்றினாலும் அந்த‌ வாக‌ன‌ம் ந‌க‌ல‌வே படாத‌ பாடு ப‌டும். ஆகையால் இது போன்ற‌ வாக‌ன‌ங்க‌ளில் குறைவான‌ அள‌வில் பார‌த்தை ஏற்றி செல்வ‌து வ‌ழ‌க்க‌ம்.

 

இதைபோல் நீர‌ழிவு நோயாளிக‌ளின் ஜீர‌ண‌ உறுப்புக‌ள் ச‌ரியாக‌ செய‌ல்ப‌டாத‌ கார‌ண‌த்தால் தான் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ உண‌வை உட்கொள்ளச் சொல்கிறார்க‌ள் இதை தான் நான் அஜீர‌ண‌ கோளாறு என்கிறோம்.

 

ச‌ரியாக‌ ஜீர‌ண‌ம் செய்ய‌ப்ப‌ட்ட ச‌ர்க்க‌ரை இர‌த்த‌த்தில் கலந்திருந்தால் , அத‌னை ந‌ம‌து உட‌லிலுள்ள‌ க‌ணைய‌ம் இன‌ம் க‌ண்டு கொண்டு க‌ணைய‌நீர் (இன்சுலினை) சுர‌ந்து செல்க‌ளுக்கு அனுப்பி வைக்கும். ஆனால் ந‌ம் வ‌யிற்றினுள் சென்ற‌ உண‌வு ச‌ரியாக‌ ஜீர‌ண‌ம் செய்ய‌ப்ப‌டாம‌ல், அத‌ன் மூல‌ம் கிடைத்த‌ ச‌ர்க்க‌ரையை க‌ணைய‌ம் இன‌ம் காணாம‌ல் இர‌த்த‌த்திலேயே விட்டு விடுகின்றன‌. பின்பு இவை க‌ழிவாக‌ சிறு நீர் வாயிலாக‌ வெளியேற்ற‌ப்ப‌டுகின்ற‌ன‌.

 

உட‌லுக்கு ஒத்துவ‌ராத‌ ச‌ர்க்க‌ரையை வ‌ழுக் க‌ட்ட‌ய‌மாக‌ உட‌லினுள் செலுத்துவ‌தை த‌விர்த்து விட்டு அதை உட‌ல் ஏற்றுக் கொள்ள‌க் கூடிய‌ சர்க்க‌ரையாக‌ மாற்றினால் நீர‌ழிவு நோயை வென்று விட‌லாம்.  நீர‌ழிவு நோய் ச‌ரி செய்ய‌ப்ப‌ட்டு விட்டால் ம‌ற்ற‌ நோய்க‌ள் வராது. ஆக‌ நீர‌ழிவு என்ப‌து பிர‌தான‌ நோய‌ல்ல‌. அஜீர‌ண‌ம் தான் நோய். அஜீர‌ண‌த்தை ச‌ரியாக்குவ‌தை விட்டு விட்டு ந‌ன்றாக‌ இருக்கும் க‌ணைய‌த்தை எப்ப‌டி ச‌ரி செய்கிறேன் என‌ கூறுவ‌து எந்த‌ வ‌கையில் நியாய‌மாகும்.

 

ஒரு நாளைக்கு ரூ1000.00 வ‌ருமான‌ம் வ‌ருவ‌தாக‌ வைத்து கொள்வோம். குடும்ப‌ செல‌வு ரூ400.00 என்றும் வைத்துக் கொண்டால் ரூ600.00 மிஞ்ச‌மாகும். மீத‌மாகும் ப‌ண‌த்தை பெரிய‌ ம‌திப்பை கொண்ட‌ ப‌ண‌மாக மாற்றி சேமித்து வைத்துக் கொள்வோம‌ல்லவா, அதுபோல் நாம் உண்ணும் உண‌வு முறையாக ஜீர‌ண‌மாகி 500 குளுக்கோஸை உற்ப‌த்தி செய்வ‌தாக‌ வைத்துக் கொள்வோம். இதில் 200 குளுக்கோஸ் உட‌ல் இய‌க்க‌த்திற்கு செல‌வாகி விட்ட‌தாக‌ வைத்துக் கொள்வோம், மீதி உள்ள‌ 300 குளுக்கோஸை பிற்கால‌ங்க‌ள் ப‌ய‌ன்ப‌டுத்துவ‌த‌ற்காக‌ செரியூட்ட‌ப் ப‌ட்ட‌ ச‌ர்க்க‌ரையாக (குளுக்கோஜ‌னாக‌) மாற்றி க‌ல்லீர‌ல்,   த‌சைக‌ளில் சேமிக்க‌ப்ப‌ட்டு விடும். என்றாவ‌து ஒரு நேர‌ம் ப‌சித்து சாப்பிட‌ தாம‌த‌மாகும் போது ஆர‌ம்ப‌த்தில் ச‌ற்று கிர‌க்க‌ம் ஏற்படுவ‌து போல் தோன்றும், ஆனால் நேர‌ம் செல்ல‌ செல்ல‌ கிர‌க்க‌மும் போய், ப‌சியும் போய்விடும். கார‌ண‌ம் ஏற்க‌னவே ந‌ம‌து த‌சைக‌ளில் சேமித்து வைக்க‌ப் ப‌ட்டுள்ள‌ செரியூட்ட‌ப் ப‌ட்ட‌ ச‌ர்க்க‌ரை தேவைக்கு ஏற்ப‌ ச‌ர்க்க‌ரையாக‌ மாற்ற‌ப்ப‌ட்டு உட‌ல் இய‌க்க‌ம் த‌டைப‌டாத‌வாறு பாதுகாக்க‌ப்ப‌டுகிற‌து. ஆகையால் உட‌லில் செரியூட்ட‌ப்ப‌ட்ட‌ ச‌ர்க்க‌ரை இருக்கும் கால‌ம் வ‌ரை ஒருவ‌ர் ப‌ட்டினியாக‌ இருந்தாலும் எந்த‌ பாதிப்பும் அவ‌ருக்கு ஏற்ப‌டாது.

 

 

லோ சுக‌ர்

 

நீர‌ழிவு நோய் இல்லாத‌வ‌ர்க‌ளின் இர‌த்த‌த்தில் தேவைக்கு போக‌ மீதுமுள்ள‌ ச‌ர்க்க‌ரை இருக்குமானால் அவை செரியூட்ட‌ப்ப‌ட்டு க‌ல்லீர‌ல், த‌சைக‌ளில் சேமிக்க‌ப்ப‌ட்டு விடும். ஆகையால் இர‌த்த‌த்தில் இருக்க‌ வேண்டிய‌ அள‌வு ச‌ர்க்க‌ரை ம‌ட்டும் எந்த‌ நேர‌மும் இர‌த்த‌த்தில் இருந்துக் கொண்டே இருக்கும். நீர‌ழிவு நோயாளிக‌ள் மாத்திரை உட்கொண்டாலும் ச‌ரி, இன்சுலீன் எடுத்துக் கொண்டாலும் ச‌ரி அவ‌ர்க‌ளின் இர‌த்த‌த்தில் காண‌ப்ப‌டும் அதிக‌ப்ப‌டியான த‌ர‌மில்லா ச‌ர்க்க‌ரை செரியூட்ட‌ப்ப‌ட மாட்டாது. அதாவ‌து கெட்டுபோன‌ உண‌வை நாம் எப்ப‌டி சேமித்து வைப்ப‌தில்லையோ அதைபோல் த‌ர‌மில்லா ச‌ர்க்க‌ரை சிறுநீர‌க‌ங்க‌ள் வாயிலாக‌ வெளியேற்ற‌ப் ப‌ட்டுவிடும். சிறுநீர‌க‌ம் வாயிலாக‌ இர‌த்த‌த்தில் இருந்த‌ சர்க்க‌ரை யாவும் சிறுநீர‌க‌ பைக்குள் சென்று பிற‌கோ அல்ல‌து சிறுநீராக‌ வெளியேறிய‌ பிற‌கோ செல்க‌ளுக்கு தேவையான‌ ச‌ர்க‌க‌ரை இர‌த்த‌த்தில் இல்லாத‌ நிலையில் செல்க‌ளுக்கு த‌ர‌மான‌ ச‌ர்க்க‌ரை கிடைக்காது. இப்போது உட‌ல் உறுப்புக‌ளின் செய‌ல்பாடுக‌ள் சோர்வ‌டையும். இந்நிலையில் ப‌சித்தும் சாப்பிட‌ வில்லை என்றால் செல்க‌ளுக்கு ச‌ர்க்க‌ரை கிடைப்ப‌து த‌டைப‌டும், இத‌னால் உட‌ல் உறுப்புக‌ள் செய‌ல்ப‌ட‌ முடியாத‌ நிலைக்கு த‌ள்ள‌ப்ப‌டுவ‌தால் நீர‌ழிவு நோயாளிக‌ளுக்கு ம‌ய‌க்க‌ம் வ‌ந்துவிடும்.

 

 

 

ஹை சுக‌ர்

ஹை சுக‌ர் என்றால் இர‌த்த‌த்தில் க‌ணைய‌ நீர் கொண்டு சான்று வ‌ழ‌ங்க‌ப் ப‌டாத‌ ச‌ர்க்க‌ரையின் அள‌வு அதிகமாக‌ இருக்கும் ஆனால் செல்க‌ளுக்கு த‌ர‌மான‌ ச‌ர்க்க‌ரை கிடைக்க‌வில்லை என்றால் ப‌சிக்கும், இந்நிலையில் ப‌சித்து சாப்பிட‌ வில்லை என்றாலும் அல்ல‌து சாப்பிட்ட பிற‌கு க‌ணைய‌ நீரைக் கொண்டு சான்றுழிக்க‌ கூடிய‌ ச‌ர்க்க‌ரை கிடைக்காவிட்டாலும் செல்க‌ளுக்கு த‌ர‌மான‌ ச‌ர்க்க‌ரை கிடைப்ப‌து த‌டைப‌டும், இத‌னால் உட‌ல் உறுப்புக‌ள் செய‌ல்ப‌ட‌ முடியாத‌தால் நீர‌ழிவு நோயாளிக‌ளுக்கு ம‌ய‌க்க‌ம் வ‌ந்துவிடும்.

 

மொத்த‌த்தில் லோ சுக‌ர், ஹை சுக‌ர் இர‌ண்டிலும் செல்க‌ளுக்கு கிடைக்க‌ வேண்டிய‌ குளுக்கோஸ் த‌டைப‌டும் போது ம‌ய‌க்க‌ம் ஏற்ப‌டுகிற‌து. சுக‌ர் இர‌த்த‌த்தில் அதிக‌மாக‌ இருப்ப‌தாலோ அல்ல‌து குறைவாக‌ இருப்ப‌தாலோ அல்ல‌ என்ப‌தை புரிந்திருப்பீர்க‌ள்.

 

இர‌த்த‌ அழுத்த‌ம்

உட‌லில் எந்த‌ இட‌ம் நோயால் பாதிக்க‌ப்ப‌ட்டிருந்தாலும் நோய் பாதிப்பை ச‌ரி செய்யும் வ‌ரை செல்க‌ள் சாதார‌ண‌மாக‌ செய‌ல்ப‌டுவ‌தை விட‌ தேவைக்கு ஏற்ப‌ விரைவாக‌ செய‌ல்ப‌ட்டு அதாவ‌து அதிக‌ப்ப‌டியான‌ ஆக்ஸிஜ‌னையும், குளுக்கோஸையும் ப‌ய‌ன்ப‌டுத்தி நோய் கிருமிக‌ளை க‌ட்டுப‌டுத்த முய‌ற்சிக்கும். இத‌ற்கு அதிக‌மான‌ ச‌க்தி தேவைப்ப‌டுவ‌தால் இய‌க்க ச‌க்தியை மிச்ச‌ப்ப‌டுத்தும் நோக்கில் ந‌ம்மை சோர்வ‌டைய‌ செய்யும். இத‌ன் வெளிப்பாடே காய்ச்ச‌ல் என்கிறோம். இத் த‌ருண‌த்தில் ப‌சி இருக்காது, எதையும் சாப்பிட‌ இஷ்ட‌ம் ஏற்ப‌டாது, ருசி தெரியாது, ஏனென்றால் உண்டால், உண்டது ஜீர‌ண‌ம் செய்ய‌ ச‌க்தி தேவைப‌டும், செல்க‌ள் ஜீர‌ண‌த்திற்காக‌வும் செய‌ல்ப‌டும் போது நோய் கிருமிக‌ளை தாக்கும் வேக‌த்தில் தொய்வு ஏற்ப‌டும், அத‌னை த‌விர்ப்ப‌த‌ற்காக‌ தான் நோயுற்ற‌ நேர‌த்தில் ப‌சியின்மை, ருசியின்மை போன்ற‌வ‌ற்றை கொண்டு ம‌னித‌ன் ப‌டைக்க‌ப்ப‌ட்டுள்ளான். அப்ப‌டியென்றால் நோயை எதிர்க்க‌ ச‌க்தி எங்கிருந்து கிடைக்கும் என்ற‌ ஐய‌ம் ஏற்ப‌டும். இந்த த‌ருண‌த்தில் ஏற்க‌ன‌வே க‌ல்லீர‌ல், த‌சைக‌ளில் சேமித்து வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ செரியூட்ட‌ப்ப‌ட்ட ‌ ச‌ர்க்க‌ரையை ப‌ய‌ன்ப‌டுத்தி நோய் கிருமிக‌ளுக்கு எதிரான‌ யுத்த‌ம் ந‌ட‌த்த‌ப்ப‌டும். இந்நிலையில் ப‌சி எப்போது ஏற்ப‌டுகிற‌தோ அப்போது நோய் கிருமியை உட‌ல் க‌ட்டுப‌டுத்தி விட்ட‌து என்ப‌தை புரிந்து கொள்ள‌ வேண்டும்.

 

மேலே குறிப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌து ஆரோக்கிய‌மான‌ ம‌னித‌ர்க‌ளுக்கு. ஏனென்றால் அவ‌ர்க‌ள் த‌சைக‌ளில் என்றும் செரியூட்ட‌ப்ப‌ட்ட‌ ச‌ர்க்க‌ரை இருந்துக் கொண்டே இருக்கும். ஆனால் ச‌ர்க்க‌ரை நோயாளிக‌ளின் உட‌லில் அதாவ‌து லோ சுக‌ர், ஹை சுக‌ரால் பாதிக்க‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ளின் உட‌லில் போதுமான‌ செரியூட்ட‌ப்ப‌ட்ட‌ ச‌ர்க்க‌ரை இருக்காது. ஆகையால் நோய் கிருமிக‌ளை க‌ட்டுப‌டுத்தும் செய‌லில் நீர‌ழிவு நோயாளிக‌ளின் உட‌ல் ஈடுப‌ட‌ முடியாது. ஆத‌லால் நோய் கிருமிக‌ளின் வீரிய‌ம் அதிக‌மாகி விடும். இத‌னால் தான் ச‌ர்க்க‌ரை நோயாளிக‌ளுக்கு புண் வ‌ந்தாலும் கூட‌ குண‌மாவ‌தில் பிர‌ச்ச‌னைக‌ள் ஏற்ப‌டுகின்ற‌ன‌.

 

அத்தோடு உட‌லில் நோய் கிருமிக‌ளின் தாக்க‌ம் ஏற்ப‌ட்டு விட்டால் அவ‌ர்க‌ள் இருத‌ய‌மும் நோயை எதிர்ப்ப‌த‌ற்காக‌ அதி வேக‌த்தில் இர‌த்த‌த்தை த‌ள்ளும். நோய் சரியாகும் வ‌ரை இதே நிலை நீடிக்கும். நோய் க‌ட்டுப்ப‌ட‌ வேண்டுமென்றால் செரியூட்ட‌ப்ப‌ட்ட‌ சர்க்க‌ரை வேண்டும் அல்ல‌து அவ்வ‌ப்போது உண்ணும் உண‌விலிருந்தாவ‌து குளுக்கோஸ் கிடைக்க‌ வேண்டும். இவை இர‌ண்டுமே கிடைக்க‌வில்லை எனில் இவ‌ர்க‌ள் இர‌த்த‌ அழுத்த‌ நோயாளியாக‌வும் ஆகி விடுகிறார்க‌ள்.

 

நீர‌ழிவு நோய் இருக்காது, ஆனால் ப‌சித்த‌வுட‌ன் சாப்பிடாம‌ல் பொடு போக்காக‌ இருந்து வ‌ருப‌வ‌ர்க‌ளின் உட‌லிலும் செரியூட்ட‌ப்ப‌ட்ட‌ ச‌ர்க்க‌ரை தீர்ந்து இருந்தாலும் அல்ல‌து குறைவாக‌ இருந்தாலும் அவ‌ர்க‌ளுக்கும் நோய் குண‌மாவ‌தில் பிர‌ச்ச‌னை ஏற்ப‌டும். அவ‌ர்க‌ள் த‌ங்க‌ளின் த‌வ‌றை திருத்திக் கொள்ளாம‌ல் அப்ப‌டியே இருந்தார்க‌ள் என்றால் அவ‌ர்க‌ளுக்கு ப‌சியை தூண்டும் அமில‌த்தின் சுர‌ப்பினால் வ‌யிற்றில் பாதிப்பு ஏற்ப‌டும், அதாவ‌து நெஞ்ச‌ க‌ரிப்பு, வ‌யிற்று புண் போன்ற‌வைக‌ள் ஏற்ப‌டும். இத‌னை க‌ட்டுப‌டுத்த‌ இருத‌ய‌ம் வேக‌மாக‌ இர‌த்த‌த்தை த‌ள்ளும், நோய் குண‌ப்ப‌டுத்தும் நோக்கில் இருத‌ய‌ம் அவ்வாறே நிர‌ந்த‌ர‌மாக‌ இய‌ங்குமேயானால் அவ‌ரும் இர‌த்த‌ அழுத்த‌ நோயாளியாகி விடுகிறார்.

 

2003 ஆம் ஆண்டில் என் ம‌க‌ள் டெங்கு காச்ச‌லால் பாதிக்க‌ப்ப‌ட்டால். ம‌ருத்துவ‌ம‌னையிலிருந்து வீடு திரும்பிய‌ சில‌ நாட்க‌ளுக்கு பிற‌கு மீண்டும் காய்ச்ச‌ல் வ‌ந்த‌தால் உட‌ன‌டியாக‌ டாக்ட‌ரை தொட‌ர்பு கொண்டோம், அவ‌ர்க‌ள் கொடுத்த‌ அறியுரை ப‌டி முத‌லுத‌வி செய்த‌தில் காய்ச்ச‌ல் குறைந்த‌து. டாக்ட‌ரை ச‌ந்தித்த‌ போது காய‌ச்ச‌ல் க‌ட்டுக்குள் தான் இருக்கிற‌து, ஆனால் இன்று ஒரு நாள் குழ‌ந்தையையே ம‌ருத்துவ‌ம‌னையில் த‌ங்கயிருக்க‌ சொன்னார். காய்ச்ச‌ல் தான் இல்லையே க‌ண்டிப்பாக‌ த‌ங்க‌ தான் வேண்டுமா என்று நான் கேட்ட‌த‌ற்கு காய்ச்ச‌ல் குறைந்து விட்ட‌து ஆனால் நாடித்துடிப்பு அதிக‌மாக‌ தான் உள்ள‌து, ஆகையால் மீண்டும் காய்ச்ச‌ல் வ‌ர வாய்ப்புக‌ள் இருப்ப‌தாக‌ நான் க‌ருதுகிறேன் என்றார். அவ‌ர் சொன்ன‌தை போல் மீண்டும் காய்ச்ச‌ல் வ‌ந்த‌து. அதிலிருந்து நோயுக்கும் இத‌ய‌ துடிப்பிற்கும் தொட‌ர்பு இருப்ப‌தை புரிந்து கொண்டேன்.

 

இதிலிருந்து தெரிவ‌து என்ன‌வென்றால் இர‌த்த‌ அழுத்த‌ம் என்ப‌து ஒரு நோய‌ல்ல‌. நோயை குண‌ப்ப‌டுத்த‌ போராடும் ஒரு செய‌லாகும். இந்த‌ செய‌லை ம‌ருந்து மாத்திரைக‌ள் மூல‌ம் க‌ட்டுப‌டுத்தினால் எத‌ற்காக‌ இர‌த்த‌ அழுத்த‌ம் அதிக‌ரித்த‌தோ அந்த‌ நோயை குண‌ப்ப‌டுத்த‌ முடியாத‌தால் அந்த‌ நோய் தீவிர‌ம‌டைவ‌தோடு, மேலும் புதிய‌ நோய‌க‌ளும் வ‌ரும்.

 

உட‌லே வைத்திய‌ர்

 

ஆரோக்கிய‌மாக‌ உள்ள‌ அத்த‌னை குழ‌ந்தைக‌ளுக்கும் ப‌ல‌ வ‌கையான‌ த‌டுப்பூசிக‌ளை போட்டு வ‌ருகிறோம். த‌டுப்பூசியில் ம‌ருந்துக‌ள் எதுவும் இருப்ப‌தில்லை. மாறாக‌ அம்மை த‌டுப்பூசியில் வீரியம் குறைக்கப்பட்ட  அம்மை கிருமி தானிருக்கும். அதை குழ‌ந்தைக‌ளுக்கு போட்ட‌வுட‌ன் ஆரோக்கிய‌மாக‌ இருக்கும் குழ‌ந்தைக‌ளின் உட‌லிள்ள‌ உறுப்புக‌ள், எலும்பிலுள்ள‌ ம‌ஞ்சை, இர‌த்திலுள்ள‌ வெள்ளை அணுக்க‌ள் இவைக‌ள் எல்லாம் ஒன்றுப‌ட்டு அந்த‌ கிருமியை சாக‌டிக்க‌ முடிவெடுக்கும். அத‌ற்கு தேவையான‌ ம‌ருந்து பொருட்க‌ளை குழ‌ந்தையின் இர‌த்த‌த்திலிருந்து எடுத்து, உட‌லே தயாரித்த‌ அந்த‌ ம‌ருந்தை ப‌ய‌ன்ப‌டுத்தி அந்த‌ அம்மை கிருமியை கொன்று விடும் என்ப‌து விஞ்ஞான‌ம்.

 

த‌டுப்பூசி போட‌ப்ப‌ட்ட‌ குழ‌ந்தைக‌ளுக்கு த‌டுப்பூசி போட‌ப்ப‌ட்ட‌ சிறிது நேர‌த்திலேயே காச்ச‌ல் வ‌ந்து விடுகிற‌து. இத‌ன் கார‌ண‌ம் குழ‌ந்தையின் உட‌ல் அந்த‌ கிருமியை இன‌ம் க‌ண்டு அதை அழிப்ப‌த‌ற்கு,  குழ‌ந்தைக‌ளுடைய செல்கள் அதிக அளவில் சர்க்கரை, ஆக்ஸிஜ‌னை பயன்படுத்தி மற்ற உறுப்புகள் வேகமாக இய‌க்க துணைபுரியும்.  அத‌னால் ஏற்ப‌டும் ‌ வெப்ப‌ ச‌க்தியை தான், நாம் காச்ச‌ல் என்கிறோம். அந்த‌ கிருகிக‌ளை, அந்த‌ குழ‌ந்தையின் உட‌ல் அழித்த‌ பிற‌கு தான் காச்ச‌ல் க‌ட்டுபாட்டுக்கு வ‌ரும். ஆக காச்சல் என்பது நோயல்ல, நோயை அழிக்கும் போராட்டமாகும்.

 

குழ‌ந்தை‌க்கு ஒரு முறை த‌டுப்பூசி போட‌ப்ப‌ட்டு அந்த‌ கிருமி அழிக்கப்பட்டு விட்டால், அந்த‌ கிருமியை ஒழித்த‌ முறையை குழ‌ந்தையின் உட‌ல் குழ‌ந்தை பெரிய‌வ‌ரானாலும் நினைவிலேயே வைத்திருக்கும். பிற்கால‌ங்க‌ளில் அதே கிருமி அந்த‌ ந‌ப‌ரை தாக்கினாலும் ஏற்க‌ன‌வே பின்ப‌ற்றிய‌ ‌ அந்த‌ முறையை பின் ப‌ற்றி அந்த‌ கிருமியை அழித்து விடும்.

 

ஆக‌ த‌டுப்பூசி என்ப‌து பிற் கால‌ங்க‌ளில் குறிப்பிட்ட‌ கிருமிக‌ளால் நோய் வ‌ருவ‌தை எதிர் கொள்ள‌ ந‌ம‌து உட‌லை தயார் நிலையில் வைத்திருப்ப‌திற்காக‌ செய்ய‌ப்ப‌டும் ஒரு முன்னோட்ட‌ம். ‌ மேலும் ந‌ம‌து உட‌லே அத‌னை தாக்க‌ முய‌ற்சிக்கும் கிருமிக‌ளை த‌ன்னிச்சையாக அழிக்கும் திற‌ன் கொண்டுள்ள‌து என்ப‌து த‌டுப்பு ஊசி த‌த்துவ‌த்தின் வாயிலாக‌ நிருப‌ண‌மாகிற‌து.

 

த‌டுப்பூசி த‌த்துவ‌த்தின் வாயிலாக‌ குழ‌ந்தைக‌ளின் உட‌ல், நோய் கிருமிக‌ளை ம‌ருந்து மாத்திரைக‌ள் எதுவுமின்றி கொன்றுவிட முடியும் என்ப‌து தெளிவாகிற‌து. குழ‌ந்தைக‌ளுக்கு இருக்கும் அந்த‌ நோய் கிருமியை கொன்று விடும் ச‌க்தி பெரிய‌வ‌ர்க‌ளிட‌மும் இருக்க‌ தானே வேண்டும்?  அது போன்ற‌ ச‌க்தி பெரிய‌வ‌ர்க‌ளிட‌மும் இருக்க‌த் தான் செய்கிற‌து என்ப‌து தான் உண்மை.

 

துப்ப‌ர‌வு தொழிலாளிக‌ள் எவ்வ‌ள‌வு மோச‌மான க‌ழிவுக‌ளை எல்லாம் கையாழுகிறார்க‌ள். அப்ப‌டியென்றால் அவ‌ர்க‌ளுக்கு எவ்வ‌ள‌வு நோய் வ‌ந்திருக்க‌ வேண்டும். ஏன் வ‌ருவ‌தில்லை?

 

ந‌ரி குற‌வ‌ர்க‌ளுக்கு ந‌டு ரோடு தான் ப‌டுக்கை, இந்த‌ திற‌ந்த‌வெளி ப‌டுக்கையில் ப‌டுத்திருப்ப‌வ‌ரை நோய் ப‌ர‌ப்பும் கொசுக்க‌ள் க‌டிக்க‌க் கூடாது என்று ஏதேனும் ச‌த்திய‌ம் செய்துள்ள‌தா? ச‌த்திய‌ம் செய்ய‌வில்லை என்றால் முத‌லில் அவர்க‌ளுக்கு அல்ல‌வா கொசுவினால் வ‌ர‌ வேண்டிய‌ நோய்‌க‌ள் வ‌ந்திருக்க‌ வேண்டும்.

 

இத‌ன் மூல‌ம் ம‌னித‌ உட‌லுக்கு நோய் கிருமிக‌ளை எதிர் கொள்ளும் ஆற்ற‌ல் உள்ள‌து என்ப‌து புலனாகிற‌து. அப்ப‌டி என்றால் ந‌ம் உட‌ம்பிலும் அந்த ஆற்ற‌ல் இருக்க‌த் தானே வேண்டும்.  

 

த‌டுப்பூசி பாதுகாப்பான‌து தானா?

 

த‌டுப்பூசியில் வீரிய‌ம் குறைக்க‌ப்ப‌ட்ட‌ நோய் கிருமிக‌ளை தான் ப‌ய‌ன்ப‌டுத்துகிறார்க‌ள் என்ப‌தால் அந்த‌ வீரிய‌த்திற்கான‌ வைத்திய‌த்தை தான் உட‌ல் தெரிந்து வைத்திருக்க‌‌ வாய்ப்புள்ள‌து. பிற் கால‌ங்க‌ளில் த‌டுப்பூசியின்  வீரிய‌த்திற்கு இணையான‌ வீரிய‌த்தை கொண்ட‌  நோய் கிருமிக‌ள் தான் தாக்கும் என்ப‌த‌ற்கு எந்த‌ உத்திர‌வாத‌மும் கிடையாது. மேலும் த‌டுப்பூசியாக‌ போட‌ப்ப‌ட்டால் ம‌ட்டும் தான் உட‌ல் எதிர்க்கும் என்ப‌தில்லை, இய‌ற்கையாக‌ வ‌ந்தாலும், செய‌ற்கையை எதிர்க்கும் ச‌க்திக் கொண்ட‌ உட‌லுக்கு இய‌ற்கையாக‌ வ‌ரும் நோய் கிருமிக‌ளையும் முறிய‌டிக்கும் ஆற்ற‌ல் இருக்க‌த் தானே செய்யும். அத்தோடு குறிப்பிட்ட‌ நோய் பிற்கால‌த்தில் இவ‌ர்க‌ளுக்கு எல்லாம் வ‌ரும் என்று க‌ண்ட‌றிய‌ இய‌லாத‌தால் எல்லா குழ‌ந்தைக‌ளுக்கும் போட்டு த‌ள்ளி விடுகிறார்க‌ள்.

 

போலியோ சொட்டு மருந்தால்தான் போலியோ உள்பட பல நோய்கள் ஏற்படுகின்றன என்றால் நம்ப முடிகிறதா? இந்த உண்மையை சொல்பவர் யாரோ, எவரோ அல்ல. போலியோ சொட்டு மருந்தை கண்டுபிடித்தவரே தான்.
''1961ம் ஆண்டுக்குப் பின், அமெரிக்காவில் ஏற்பட்ட அனைத்து போலியோவுக்கும் காரணம் போலியோ சொட்டு மருந்துதான்!'' என்று அமெரிக்க செனட் கமிட்டியில் ஒப்புக் கொண்டிருக்கிறார் ஜோனல் சால்க். இவர்தான் போலியோ சொட்டு மருந்தை கண்டுபிடித்தவர். 

 

அதைபோல் அம்மை நோய்க்கான மருந்தை 1796ல் எட்வர்ட் ஜென்னர் கண்டுபிடித்தார். தன்னுடைய மூத்த‌ மகனுக்கு முதன்முதலில் இந்த மருந்தை கொடுத்து தன் கண்டுபிடிப்பை நிரூபித்தார். அனைத்து மருத்துவர்களாலும் இந்த மருந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்பு அந்த வேதனையான சம்பவம் நிகழ்ந்தது. ஆமாம், சிலவருடங்களில் அம்மை தடுப்பு மருந்து முதன்முதலில் யாருக்கு போடப்பட்டதோ, அந்த ஜென்னருடைய மகனும், இன்னொருவரும் மருந்தின் வீரியத்தால் மரணமடைந்தனர். இதனால் எட்வர்ட் ஜென்னர் தன்னுடைய 2வது மகனுக்கு அம்மைத் தடுப்பூசியை போடவில்லை. ஆனால், அதற்குள் உலகம் முழுவதும் அம்மைத் தடுப்பூசி புழக்கத்துக்கு வந்துவிட்டது...

 

அதேபோல், 2006ல் மட்டும் போலியோ சொட்டு மருந்து கொடுத்தும் இந்தியாவில் 1600 பேருக்கு போலியோ பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், 27,000 பேர் பாதிக்கப்பட சாத்தியம் இருப்பதாகவும் ஜூலை 11, 2008ம் ஆண்டு தேதியிட்ட 'தி இந்து' நாளிதழில் கட்டுரை எழுதினார் இந்திய மருத்துவக் கழகத்தின் தடுப்பு மருந்துப் பிரிவின் தலைவரான டாக்டர் ஜேக்கப் புலியேல் (Politics of Polio, July 11/2008). இந்தக் கட்டுரையின் விவரத்தையும் உண்மையையும் ஆளும் வர்க்கங்கள் கண்டுகொள்ளவேயில்லை...

1853ம் ஆண்டு இங்கிலாந்தில் அம்மை தடுப்பு ஊசியை குத்தும் சட்டம் கட்டாயமாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உலகின் பல பகுதிகளுக்கும் தடுப்பு மருந்துகள் பரவின. கட்டாயச் சட்டங்களும் அமலுக்கு வந்தன. ஆனால், அம்மை நோய்த் தாக்கத்தில் இம்மருந்துகள் எந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. பதிலாக பல புதிய எதிர் விளைவுகளே ஏற்பட்டன. இதனால் 1889ம் ஆண்டு இங்கிலாந்தில் ராயல் கமிஷன் ஏற்படுத்தப்பட்டது. 7 ஆண்டுகள் விசாரணைக்கு பிறகு இக்கமிஷன் வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து இங்கிலாந்தில் கட்டாயத் தடுப்பூசி சட்டம் நீக்கப்பட்டது.



1870 - 71களில் அம்மை நோய் ஜெர்மனியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சுமார் 10 லட்சம் பேருக்கு அம்மை நோய் தோன்றியது. இவர்களில் ஒரு லட்சத்து இருபதாயிரம் பேர் மரணமடைந்தனர். இறந்தவர்களில் நூற்றுக்கு 96 பேர் அம்மை நோய் தடுப்பூசியை குத்திக் கொண்டவர்கள்.

 

மஞ்சள் காமாலைக்காக விளம்பரப்படுத்தப்பட்ட தடுப்பூசியின் கதையைக் கேட்டால் வயிறு எரியும். ஹெர்படைட்டிஸ் ஏ, ஹெர்படைட்டிஸ் பி என மஞ்சள் காமாலையில் இருவகை உண்டு. இதில் ஹெர்படைட்டிஸ் பி ஆட்கொல்லி நோய். ஆனால், தொற்று நோயல்ல. அதேபோல் பரவலாக வரக் கூடியதும் அல்ல. அபூர்வமாகவே மனிதர்களை தாக்கும் இந்த ஹெர்படைட்டிஸ் பி-க்கான தடுப்பூசி வீரியமிக்கது. இதை ஹெர்படைட்டிஸ் ஏ தாக்கியவர்களுக்கு போடக் கூடாது.
உண்மை இப்படியிருக்க, 1990களில் பூதாகரமாக மஞ்சள் காமாலைத் தடுப்பூசி குறித்து (ஹெர்படைட்டிஸ் ஏ) பிரசாரம் செய்யப்பட்டது. இது ஏதோ ஆட்கொல்லி நோய் போலவும், அந்நோய் வந்தவர்கள் எளிதில் மரணமடைவார்கள் என்பது போலவும் விளம்பரம் செய்யப்பட்டது. இந்த ஏகாதிபத்திய வெறிக்கு இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளும் பலியாகின. மஞ்சள் காமாலைக்கு மருந்துகள் எதுவும் இல்லாமல் உணவுமுறையை ஒழுங்குபடுத்துவதன் மூலமே குணமாக்கலாம் என்ற பழம்பெரும் உண்மை மறைக்கப்பட்டது.

இதன் விளைவாக 1990களில் அமெரிக்காவில் பிற‌ந்த‌ ஒவ்வொரு குழந்தைக்கும் மஞ்சள் காமாலை தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் என்ற சட்டம் நடைமுறைக்கு வந்தது. ஆனால், 1997ல் நடத்தப்பட்ட அமெரிக்க அரசின் ஆய்வில் மஞ்சள் காமாலை தடுப்பூசியும், அம்மைத் தடுப்பூசி போன்றே 13 விதமான புதிய நோய்களை ஏற்படுத்தும் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. வலிப்பு, ஜன்னி, கண்பார்வை பாதிப்பு, மூளைக் காய்ச்சல் போன்றவை இதில் அடங்கும். உடனே அமெரிக்க அரசு கட்டாய தடுப்பூசி சட்டத்தை அவசரமாக நீக்கியது.

இதனால் ஏராளமான தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்து வைத்திருந்த அமெரிக்க மருந்துக் கம்பெனிகள் அதிர்ந்தன. இந்த மருந்தை என்ன செய்வது? அவர்களின் துயர் தீர்க்க முன்வந்தார் பில்கேட்ஸ். தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் ஆந்திர மாநிலத்தில் 4.5 லட்சம் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை தடுப்பூசிகளை இலவசமாக போட்டார். இந்த தடுப்பூசி அமெரிக்க நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்பட்டு, அமெரிக்க அரசால் 1997ல் தடைசெய்யப்பட்டவை...

2009ம் ஆண்டு சீனாவிலிருந்து உலகம் முழுக்க சார்ஸ் (பறவைக்காய்ச்சல்) பரவுவதாக பிரசாரம் செய்தார்கள். இந்த சளிக்காய்ச்சலை கட்டுப்படுத்தவோ, பரவாமல் தடுக்கவோ எந்த மருந்தும் கண்டுபிடிப்பதற்கு முன்பே அக்காய்ச்சல் படிப்படியாக குறைந்தது. இதேநிலைதான் இந்தியாவில் ஏற்பட்ட சிக்குன்குனியா காய்ச்சலுக்கும் ஏற்பட்டது. பன்றிக்காய்ச்சலையே எடுத்துக் கொள்வோம். ஏதோ கொள்ளை நோய் போல உலகம் முழுவதும் பேசப்பட்ட இந்நோய்க்கான தடுப்பு மருந்து தாமிஃப்ளூ விற்பனைக்கு வரும் முன்பே இந்நோய் குறைந்துவிட்டது.

எந்தவொரு நோயானாலும் மக்களின் உடல் நிலை மற்றும் சுற்றுப்புற சமூக காரணிகளை வைத்து தானாகவே ஏற்படும். குறிப்பிட்ட இடைவெளியில் தானாகவே மறையும். இந்த அறிவியல் உண்மை மறைக்கப்பட்டு த‌டுப்பூசியால் தான் குறைந்த‌து போல் பிர‌ச்சார‌ங்க‌ள் செய்ய‌ப்ப‌ட்டு வியாபார‌ம் ந‌டைபெற்று வ‌ருகின்ற‌ன‌.

 

தடுப்பூசி மருந்துடனும் சில எச்சரிக்கைகளை பன்னாட்டு நிறுவனங்கள் அச்சிடுகின்றன. அவை என்ன தெரியுமா?



1. அதிகப்படியான காய்ச்சல் (105 டிகிரி அல்லது அதற்கு மேல்)



2. மந்தமாக இருத்தல்; நீடித்த அசதி



3.  மூளை வளர்ச்சி குறைபாடு; மூளை பாதிப்பு



4. எப்போதாவது வலிப்பு; மயக்கம்



5. கண் நரம்புக் கோளாறுகள்; நரம்பு தொடர்பான நிரந்தக் கோளாறுகள்



... ஆகியவை தடுப்பூசிகள் போட்டுக் கொண்டால் ஏற்படலாம் என எச்சரிப்பது அந்த தடுப்பூசி தயாரித்த நிறுவனங்கள் தான். ஆனால், எந்த மருத்துவரும் இதைக் குறித்து நோயாளிகளிடம் சொல்வதில்லை. அதுமட்டுமல்ல, உச்சபட்ச விளைவாக SIDS (Sudden Infant Death Syndrom) ஏற்படுத்துவதாக தடுப்பூசியை தயாரிக்கும் நிறுவனங்கள் சொல்கின்றன. இதன் அர்த்தம் என்ன தெரியுமா? குழந்தை திடீரென இறந்து போகும்...

ஆனால், இந்த உண்மையை - அதாவது தடுப்பூசியை தயாரித்த நிறுவனம் சொல்லும் எச்சரிக்கையை - எந்த மருத்துவரும் நோயாளிகளிடம் சொல்வதில்லை. பதிலாக சிரஞ்சியில் ஏற்பட்ட மருந்தையே கண்ணுக்கு காட்டுகிறார்கள்.

தடுப்பூசியில் கலக்கப்படும் ரசாயனங்கள்:



வெவ்வேறு தடுப்பூசிகளில் கலக்கப்படும் ரசாயனங்களும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் தெரிந்து கொள்வோம்.



1. அம்மோனியம் சல்பேட் - வயிறு குடல், கல்லீரல் மற்றும் நரம்பு மண்டலத்தில் விஷம் பரவும்.



2. பீட்டா பிராபியோலாக்டோன் - கல்லீரல், வயிற்று புற்றுநோய்களை ஏற்படுத்தும்.

3. லாட்டக்ஸ் ரப்பர் - திடீர் அதிர்ச்சி மற்றும் இறப்பு.



4. எம்.எஸ்.ஜி. - பிறவிக் கோளாறு மற்றும் ஒவ்வாமை.



5. அலுமினியம் - அலிமியர்ஸ் நோய், டிமெண்ட்சியா, வலிப்பு, கோமா.



6. பார்மால்டிஹைட் - மூளை மற்றும் குடல் புற்று நோய்.



7. பாலிசோர்பேட் 60 - நிரூபிக்கப்பட்ட புற்றுநோய் காரணி.



8. டிரைபுடைல் பாஸ்பேட் - சிறுநீரக மற்றும் நரம்பு மண்டல பாதிப்புகள்.



9. குளுதரால்டிஹைட் - பிறவி குறைபாடுகள்.



10. பாதரசம் - உலகிலேயே கொடிய விஷமாக கருதப்படுகிறது



11. பினால் (கார்பாலிக் அமிலம்) - செல்களை பாதிக்கும் விஷம்.



12. நியோமைசின் சல்பேட் - சத்துகள் உறிஞ்சப்படுவதில் தடையை ஏற்படுத்தும்...

 

(அ.உமர்பாரூக் மற்றும் இரா.ஞானமூர்த்தி எழுதிய 'தடுப்பூசி ப‌ற்றிய‌ நூலிலிருந்து)

தடுப்பூசிகளின் விப‌ரீத‌ங்க‌ள்

 

டாக்டர் வில்லியம் ட்ரெப்பிங், 2000ம் ஆண்டில் Good - Bye Germ Theory என்ற நூலை வெளியிட்டார். அமெரிக்காவில் கட்டாய தடுப்பூசிச் சட்டம் அமலில் இருந்தபோது வெளிவந்த நூல் இது. இதுவரை லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனையாகியுள்ள இந்நூலிலிருந்து சில குறிப்புகள்:



1. அமெரிக்கக் குழந்தைகளுக்கு அரிதாக ஏற்படும் மூளை வளர்ச்சிக் குறைபாடு (Autism) தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த பிறகு 3000 மடங்கு அதிகரித்துள்ளது. 

2. அமெரிக்கக் குழந்தைகளில் வாரத்துக்கு 3 பேர் தடுப்பூசியினால் மரணமடைகிறார்கள் என்று பெடரல் கவர்மெண்ட் அறிக்கை கூறுகிறது.

3. 1975களிலிருந்து ஐரோப்பிய நாடுகளிலும், ஜப்பானிலும் டிபிடி தடுப்பூசி அதன் அதிகப்படியான நச்சுத்தன்மை காரணமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. கொடிய நஞ்சுள்ள இந்த ஊசி, அமெரிக்காவிலும், இந்தியாவிலும் இன்றும் பயன்படுத்தப்படுகிறது.

4. சாதாரண நிலையில் கக்குவான் இருமலால் இறப்பவர்கள் ஆண்டுக்கு 10 பேர்தான். ஆனால், கக்குவான் இருமலுக்கான தடுப்பூசிக்கு பிறகு ஆண்டுக்கு 950 பேர் கக்குவான் இருமலால் இறக்கிறார்கள். இந்த கக்குவான் இருமல் தடுப்பூசியை மருந்துக் கம்பெனிகள் தங்கள் ஆய்வுக் கூடங்களில் எதற்கு பயன்படுத்துகிறார்கள் தெரியுமா? பரிசோதனை விலங்குகளுக்கு மூளைக் கோளாறையும், மூளைத் திசு வீக்கத்தையும் ஏற்படுத்துவதற்காக.



5. 95% நோய்வாய்ப்பட்டவர்கள் அதே நோய் வராமல் இருப்பதற்காக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள்தான்.



6. 'கிருமிகளால்தான் நோய் பரவுகிறது' என்று கூறும் கிருமித் தத்துவம், எந்தவொரு அறிவியல் பூர்வமான ஆதாரத்தை கொண்டும் நிரூபிக்கப்படவில்லை. கிருமித் தத்துவத்தை வெளியிட்டவர் லூயி பாஸ்டர். இவருடைய பெரும்பாலான கண்டுபிடிப்புகள் சொந்த முயற்சியால் ஆனதல்ல. டாக்டர் பீச்சாம்பின் கண்டுபிடிப்புகளை தழுவியவை. கிருமிகளால் நோய் ஏற்படும் என்ற கருத்தை பீச்சாம்ப் எதிர்த்தார். ஆய்வுகள் மூலம் நிரூபிக்கவும் செய்தார். தடுப்பூசிக்கான பாஸ்டரின் முந்தைய கண்டுபிடிப்புகள் அனைத்தும் பேரழிவிலேயே முடிந்தன.



7. பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை ஆகியவை ஒரே உயிரிடமிருந்து வந்தவை. அவை அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்பவை என்பதே நுண்ணுயிர்கள் குறித்த ஆரம்பக்கால ஆய்வு முடிவுகள்.



8. உலகில் பல அரசாங்கங்களால் பின்பற்றப்படும் கட்டாயத் தடுப்பூசிச் சட்டங்கள் அனைத்தும் அந்தந்த நாட்டு அரசியல் சாசனத்துக்கும், இறையான்மைக்கும் எதிரானவை. அமெரிக்காவின் சுகாதார நிலையங்கள் அனைத்தும் குழந்தைகளின் உயிரை பணயம் வைத்து தடுப்பூசித் திட்டங்கள் மூலம் அரசிடமிருந்து பணம் பறிக்கின்றன.



9. அமெரிக்க மத்திய அரசு எஃப்டிஏ அறிக்கையின் படி, 90% டாக்டர்கள் தடுப்பூசி தொடர்பான மோசமான விளைவுகளை அறிவிப்பதில்லை.


10. உலகில் எந்த நாட்டு மக்களானாலும் சரி, நோய்வாய்ப்பட்டவர்களில் பெரும்பாலோர் தடுப்பூசி போடப்பட்டவர்களே. தடுப்பூசி போடாதவர்கள் மிக ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பதை ஆய்வுரீதியாக சுலபமாக நிரூபிக்க முடியும்.



11. மூளைத்திசு வீங்கி சேதமடையும் நோய்தான் தடுப்பூசியின் விளைவுகளில் மிக முக்கியமானதாக தடுப்பூசி பற்றிய பெரும்பாலான ஆய்வுகள் கூறுகின்றன.



12. நான்கு கிலோ எடையுள்ள ஒரு குழந்தைக்கு ஒரு நாளில் ஒரு தடுப்பூசி போடுவது என்பது 40 கிலோ எடையுள்ள மனிதனுக்கு 40 தடுப்பூசிகளை போடுவதற்கு சமம்.

13. உலக மருத்துவ வரலாற்றிலேயே அதிகம் தடுப்பூசி போடப்பட்டவர்களும், அதிக நோய் பாதிப்பு உள்ளவர்களும் அமெரிக்கர்கள்தான். சரிபாதி அமெரிக்கர்கள் ஏதாவதொரு நாள்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்கள். ஐந்தில் ஒரு பங்கு அமெரிக்கர்கள் நீடித்த இரண்டு நோய்களால் அல்லது அதற்கு மேலும் பாதிக்கப்பட்டவர்கள். 70% அமெரிக்க இறப்புக்கு நீடித்த நோய்களே காரணம்....



இப்போது சொல்லுங்கள்... மனித உடலில் இயற்கையாகவே இருக்கும் எதிர்ப்பு சக்தியை மேலும் மேலும் வளர்க்கும் ஆரோக்கியமான உணவை அனைத்து மக்களுக்கும் வழங்காமல்

 

சுற்றுப்புற சீர்கேட்டை களையாமல் ‍ ஏகாதிபத்தியங்களுக்கு கூஜா தூக்கியபடி வலம் வருகிறதே ஆளும் வர்க்கம்... இவர்களால்தான் தடுப்பூசி வணிகம் கொடி கட்டிப் பறக்கிறது. கொள்ளை லாபமும் பன்னாட்டு நிறுவனங்கள் அடைகின்றன. மக்களும் கொத்து கொத்தாக பலவித நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள்.

 

இதை இனியும் அனுமதிக்கத்தான் வேண்டுமா?

 

ச‌ம‌ச்சீர் உண‌வு

ந‌ல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், க‌ட‌லை எண்ணெய்க‌ளில் கொழுப்பு ச‌த்தும், க‌லோரியும் அதிக‌மாக‌ இருப்ப‌தால் இதை ப‌ய‌ன்ப‌டுத்தாதீர்க‌ள் என்று ம‌ருத்துவ‌ர்க‌ளால் அறிவுரை வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து. இத‌ன் கார‌ண‌மாக‌ பெரும்பாலான‌ வீடுக‌ளில் மேற்க‌ண்ட‌ எண்ணெய் வ‌கைக‌ளை ப‌ய‌ன்ப‌டுத்துவ‌தை விட்டு விட்டு ச‌ர்க்க‌ரை இல்லாத‌, கொழுப்பும் இல்லாத‌, குறைவான‌ க‌லோரி கொண்ட‌ ச‌த்தே இல்லாத‌ பாமாயில் போன்ற‌ ப‌த்திய‌ எண்ணெய்க‌ளை ப‌ய‌ன்ப‌டுத்தி வ‌ருகிறோம். குழ‌ந்தைக‌ளின் உண‌விலும் இது போன்ற‌ எண்ணெய்க‌ளை ப‌ய‌ன்ப‌டுத்துவ‌தால் குழ‌ந்தைக‌ளின் உட‌லுக்கு தேவையான‌ கொழுப்பு ச‌த்து கிடைக்காத‌தால் ந‌ம் குழ‌ந்தைக‌ளை நாமே ஆரோக்கிய‌ம‌ற்ற‌ குழ‌ந்தையாக‌ மாற்றுகிறோம்.

 

அல்ச‌ர் நோயாளிக‌ளுக்கு கார‌மே இல்லாத‌ ச‌ம‌ச்சீர் உண‌வு முறை, நீர‌ழிவு நோயாளிக்கு இனிப்பே சேர்க்க‌ப் ப‌டாத‌ உண‌வு முறை, ஆரோக்கியமான‌வ‌ர்க‌ளுக்கும், குண‌ப்ப‌டுத்த‌ தெரியாத‌ நோய்க‌ளிட‌ம் மாட்டி கொள்ளாம‌ல் இருக்க‌ எண்ணெய்க‌ளை, கார‌த்தை, உப்பை, இனிப்பை த‌விர்க்க‌ அல்ல‌து குறைத்துக் கொள்ள‌ ப‌ரிந்துரைக்கிறார்க‌ள். இத‌னை உண‌வு க‌ட்டுபாடு என்றும் ச‌ம‌ச்சீர் உண‌வு என்றும் அழைத்துக் கொள்கிறார்க‌ள்.

 

ச‌ம‌ச்சீர் உண‌வு என்றால் அது அறுசுவை கொண்ட‌தாக‌ தான் இருக்க‌ வேண்டும். இது வேண்டாம் அது வேண்டாம் என்று சொல்வ‌த‌ற்கு பெய‌ர் ச‌ம‌ச்சீர் உண‌வாம்.

 

ச‌ம‌ச்சீர் உண‌வு என்றால் என்ன‌?

 

இஸ்லாமிய‌ர்க‌ளின் உண‌வு முறையில் கொழுப்பு மிக்க‌ உண‌வுக‌ள் வ‌கைக‌ள் அதிக‌மாக‌ இருக்கும். அத்தோடு இவ‌ர்க‌ள் உண‌வில் இஞ்சி, வெள்ளைப்பூடும் அதிக‌மாக‌ சேர்க்க‌ப்ப‌ட்டிருக்கும். வெள்ளைப்பூடு, ப‌ல்லாரி, கொண்டைக்க‌ட‌லை ஆகிய‌வைக‌ளுக்கு இர‌த்த‌ நாள‌த்தில் ஏற்ப‌டும் அடைப்புக‌ளை திற‌க்க‌ச் செய்யும் வ‌ல்ல‌மையை இறைவ‌ன் வ‌ழ‌ங்கியுள்ளான். இப்போது புரிந்திருக்கும் இஸ்லாமிய‌ர்க‌ளின் உண‌வில் அதிக‌ அள‌வில் பூண்டு சேர்த்துக் கொள்ள‌ப்ப‌டுவ‌த‌ன் நோக்க‌ம்.

 

மிக்ச‌ர் கார‌ச்சேவு முத‌லிய‌வ‌கைக‌ள் க‌டலை மாவையும், க‌ட‌லெண்ணெயையும் கொண்டு தான் தயாரித்தார்க‌ள். ஏனென்றால் க‌ட‌லை மாவும், க‌ட‌லெண்ணெயும், கொண்டை க‌ட‌லையின் வ‌ழி தோன்ற‌ல்க‌ள், கொண்டை க‌ட‌லைக்கும் இர‌த்த‌ நாள‌த்தில் ஏற்ப‌டும் அடைப்புக‌ளை திற‌க்க‌ச் செய்யும் வ‌ல்ல‌மையை இறைவ‌ன் வ‌ழ‌ங்கியுள்ளான். இதுவ‌ல்ல‌வா ச‌ம‌ச்சீர் உண‌வு. 

 

விருந்து என்றால் ச‌ற்று அதிக‌மாக‌ சாப்பிடுவ‌து ம‌னித‌ இய‌ல்பு. அவ்வாறு விருந்து உண்டால் தாம்பூல‌ம் த‌ரிக்க‌ச் சொல்கிற‌து ந‌ம் ம‌ர‌பு. தாம்பூல‌ம் த‌ரித்த‌ல் என்றால் புகையிலை அல்லாத‌ வெற்றிலை, பாக்கு ம‌ற்றும் சுண்ணாம்பு சேர்ந்த‌ க‌ல‌வை. இதை சாப்பிடுவ‌தால் அதிக‌ப்ப‌டியாக உமிழ்நீர் சுர‌க்க‌ப்ப‌ட்டு முறையாக‌ ஜீர‌ண‌ம் ந‌டைபெற‌ உத‌வும். விருந்துக்கு செல்லுமிட‌த்தில் குடி த‌ண்ணீர் மாற்ற‌த்தினால் தொண்டை ச‌ம்ப‌ந்த‌மான‌ நோய்க‌ள் ஏற்ப‌ட‌லாம் இந்த‌ வ‌கையான நோய்க‌ளையும் வெற்றிலை குத‌ப்புவ‌தால் த‌டுக்க‌லாம். தொண்டை பிர‌ச்ச‌னைக‌ள் வ‌ர‌க்கூடாது என்ப‌த‌ற்காவே பாக‌வ‌த‌ர்க‌ள் வெற்றிலையை குத‌ப்பி வ‌ந்துள்ளார்க‌ள். இதுவ‌ல்ல‌வா ச‌ம‌ச்சீர் உண‌வு முறை.

 

சைவ‌ம் ம‌ட்டுமே சாப்பிடுகிற‌வ‌ர்க‌ள் கொழூப்பு ச‌த்திற்காக‌ நெய் சேர்த்துக் கொள்கிறார்க‌ள். மேலும் த‌யிர் போன்ற‌ கொழுப்பு மிக்க‌ உண‌வுக‌ளையும் த‌ங்க‌ள‌து உண‌வோடு உண்டு வ‌ருகிறார்க‌ள். சைவ‌ உண‌வில் கொழுப்பு ச‌த்து குறைவாக‌த் தானிருக்கும். ஆகையால் நெய்யையும், த‌யிரையும் சேர்த்து சாப்பிடுவ‌தால் கொழுப்பு ச‌த்து உட‌லுக்கு கிடைத்து விடும்.  கொழுப்பு ச‌த்தின் முக்கிய‌த்துவ‌த்தை இத‌ன் மூல‌ம் நாம் புரிந்துக் கொள்ள‌லாம். 

 

வேர்க‌ட‌லை தின்றால் பித்த‌ம், ஆகையால் வேர்க‌ட‌லை தின்ற‌பின் சிறு துண்டு க‌ருப்பு க‌ட்டியாவ‌து சாப்பிட்டு விட‌ வேண்டும் என்று ந‌ம‌து முன்னோர்க‌ள் கூறுவ‌தை கேட்டுள்ளோம். இதுவ‌ல்ல‌வா ச‌ம‌ச்சீர் உண‌வு.

 

ச‌ம‌ச்சீர் உண‌வு என்ப‌து ச‌த்தில்லாத‌ உண‌வ‌ல்ல‌. எல்லா ச‌த்துக்க‌ளும் அள‌வோடு இருப்ப‌து தான் ச‌ம‌ச்சீர் உண‌வு. உதார‌ண‌த்திற்கு பிரியாணி போன்ற‌ கொழுப்பு சத்துக‌ள் அதிக‌ம் உள்ளதை ‌ சாப்பிடும் போது வெங்காய‌ ச‌ம்ப‌ல் த‌ருகிறார்க‌ள், அந்த‌ ச‌ம்ப‌லில் ப‌ல்லாரி சேர்க்க‌ப்ப‌ட்டிருக்கும். ப‌ல்லாரி இர‌த்த‌ நாள‌த்தில் அடைப்பை ஏற்ப‌டுத்தும் கொழுப்புக‌ளை நீக்கும் ச‌க்தி கொண்ட‌து. இதே ச‌ம்ப‌லை அதிக‌மாக‌ உட்கொண்டால் ஜீர‌ண‌க் கோளாறு ஏற்ப‌டும்.  ஆகையால் இது பித்த‌ம், அது காமாலை, ம‌ற்ற‌து சுக‌ர் என்று ஒதுக்காம‌ல் வேதிப் பொருட்க‌ள் க‌ல‌ப்பில்லாதா உண‌வுக‌ளை ப‌சிக்கும் போது தேவைக்கு புசிப்ப‌து  ந‌ல்ல‌து.

 

எந்த‌ உண‌வு ச‌த்தான‌து?

 

எதை சாப்பிடுகிறோம் என்ப‌தை விட‌ எப்ப‌டி சாப்பிடுகிறோம் என்ப‌து தான் முக்கிய‌ம். முறை த‌வ‌றி உட்கொள்ளும் உண‌வால் உட‌லுக்கு எந்த‌ ப‌ய‌னும் இல்லை. அப்ப‌டியென்றால் எப்ப‌டி சாப்பிடுவ‌து என்ற‌ கேள்வி வ‌ரும். எளிதான‌ சுருக்க‌மான‌ ப‌தில் தான். அதாவ‌து நாம் உண்ணும் உணவை‌ அவ‌ர‌வ‌ர் உமிழ்நீரை கொண்டு ந‌ன்றாக‌  கூழாக்கி சாப்பிட்டால் நாம் சாப்பிட்ட‌ உண‌வு  ந‌ன்றாக‌ ஜீர‌ண‌மாகி முழுமையான‌ ச‌த்துக்க‌ளும் உட‌லுக்கு கிடைக்கும்.

 

முன் ப‌க்க‌ங்க‌ளில் குறிப்பிட்டுள்ள‌ பிளேடு ம‌ற்றும் க‌வ‌ராய‌த்தின் ஊசி ச‌ம்ப‌வ‌ங்க‌ளிலிருந்து உட‌ல் தேவைய‌ற்ற‌ பொருளை பாதுகாப்பான‌ முறையில் வெளியேற்றி விடும் என்ப‌தை புரிந்து கொண்டோம். ஆனால் நாம் உண்ணும் உண‌வை மென்ற‌து போக‌ ந‌ம் உட‌ல் உறுப்புக‌ளும் ந‌ன்றாக‌ கூழாக்குகின்ற‌ன‌. இதிலும் ந‌ம‌க்கு ஒரு ப‌டிப்பினை உள்ள‌து. அதாவ‌து உண‌வு பொருட்க‌ளை ம‌ட்டும் ந‌ம் உட‌ல் இன‌ம் க‌ண்டு அத‌னை கூழாக்கி அதிலிருக்கும் ச‌க்திக‌ளை ந‌ம் உட‌ல் உறிஞ்சிக் கொள்கின்ற‌ன‌. மாறாக‌ உட‌லிலுள்ள‌ அசுத்த‌ங்க‌ளையும், உட‌லுக்கு ஒவ்வாத‌ பொருட்க‌ளையும், கிருமிக‌ளையும் உட‌லுக்கு தேவைய‌ற்ற‌ பிளேடு, க‌வ‌ராயம் போன்ற‌ பொருட்க‌ளை உட‌ல் பாதுகாப்பாக‌ வெளியேற்றி விடுகிற‌து.

 

நாம் உண்ணும் போது அந்த‌ உண‌வில் ந‌ம‌து உமிழ் நீர் க‌ல‌ந்துவிடும். ஆனால் ந‌ண்ப‌ன் விழுங்கிய‌ க‌வ‌ராயம், பிளேடில் உமிழ்நீர் எவ்வ‌கையிலும் க‌ல‌க்க‌ இய‌லாத‌தால் அதை உட‌ல் உறுப்புக‌ள் இன‌ம் க‌ண்டு ஜீர‌ண‌த்திற்கு உட்ப‌டுத்தாம‌ல் பாதுகாப்பாக‌ வெளியேற்றி விடுகின்ற‌ன‌. இதிலிருந்து உமிழ் நீர் க‌ல‌க்க‌ப்ப‌டாத‌ எந்த‌ப் பொருளையும் உட‌ல் ஜீர‌ண‌த்திற்காக‌ எடுத்துக் கொள்ளாது என்ப‌து தெளிவாகிற‌து. அரைகுறையாக‌ உமிழ்நீர் க‌ல‌க்க‌ப்ப‌ட்ட‌ உண‌வு பொருட்க‌ளும் ச‌ரியாக‌ ஜீர‌ண‌ம் செய்ய‌ப்ப‌டாத‌தால் த‌ர‌க் குறைபாடுள்ள‌ குளுக்கோஸ் அந்த‌ உண‌வுக‌ளிலிருந்து கிடைக்கிற‌து.

 

த‌ற்கால‌த்தில் நாம் அதிக வேக‌த்தில் செய‌ல்ப‌ட்டு வ‌ருவ‌தால் சாப்பாட்டை கூட‌ முறையாக‌ உட்கொள்ள‌ ந‌ம்மில் பெரும்பாலான‌வ‌ர்க‌ளுக்கு நேர‌மில்லை. ஆகையால் அவ‌ச‌ர‌ க‌தியில் உண‌வை உட்கொள்வ‌தால் நாம் உண்ணும் உண‌வுட‌ன் க‌ல‌க்க‌ வேண்டிய‌ உமிழ் நீர் தேவையான‌ அள‌விற்கு க‌ல‌க்கப் ப‌டாத‌தால் முறையாக‌ செரிமான‌ம் செய்ய‌ப்ப‌டாத‌தால் நாம் உண்ட‌ உண‌வு வீணாகி கொண்டிருக்கின்ற‌ன‌.‌   நாம் சாப்பிட்ட ‌உண‌வு ந‌ன்றாக‌ ஜீர‌ண‌மாகி முழுமையான‌ ச‌த்துக்க‌ளும் உட‌லுக்கு கிடைக்க வேண்டுமென்றால் இத‌ற்காக‌ சில‌ எளிய‌ ந‌டைமுறைக‌ளை ந‌ம் வாழ்வில் க‌டைபிடித்தால் போதும் ந‌மது குடும்ப‌த்தின் மாத‌ந்திர‌ ம‌ருத்துவ‌ ப‌ட்ஜெட்டை இல்லாம‌ல் ஆக்கி விட‌லாம்.

 

வேதிப் பொருட்க‌ளின் விப‌ரீத‌ம்

 

Bisphenol A (BPA) ம‌ற்றும் Epoxy Resins என்ப‌து பிளாஸ்டிக் தயாரிக்க‌ உத‌வும்  தொழிற்சாலை வேதி பொருளாகும். உண‌வு ம‌ற்றும் பானங்களை வைத்திருக்க‌ ப‌ய‌ன்ப‌டுத்தும் பாலி கார்போனேட் (Poly Carbonate) பிளாஸ்டிக்கினால் உருவாக்க‌ ப‌ட்டுள்ள‌ பிளாஸ்டிக் த‌ண்ணீர் பாட்டில்க‌ள், பிளாஸ்டிக் குழ‌ந்தைக‌ளின் பால் குப்பிக‌ள், பிளாஸ்டிக் கோப்பைக‌ள், பொம்மைக‌ள் ம‌ற்றும் ப‌ல‌ வீட்டு உப‌யோக‌ப் பொருட்க‌ளிலும் இது காண‌ப்ப‌டுகிற‌து. மேலும் Epoxy Resins உண‌வுப் பொருட்க‌ளை வைக்க‌ ப‌ய‌ன்ப‌டுத்தும் உலோக‌ பொருட்க‌ளில் உள் பூச்சிகாக‌வும், த‌ண்ணீர் கொண்டு செல்லும் குழாய்க‌ள் உள் பூச்சிகாக‌வும், பாட்டில்க‌ள் உள் பூச்சிகாக‌வும், பொம்மைக‌ள், சில‌ காகித‌ பொருட்க‌ளிலும் ம‌ற்றும் ப‌ல் ம‌ருத்துவ‌த்தில் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டும் சில க‌ல‌வைக‌ள், பூச்சிக‌ளுக்காவும் Epoxy Resins ப‌ய‌ன்ப‌டுத்த‌ப் ப‌டுகின்ற‌ன. மேற்க‌ண்‌ட‌ BPA த‌ண்ணீர், உண‌வு பொருட்க‌ள் வைத்திருக்கும் பிளாஸ்டிக் பொருட்க‌ளிலிருந்து உண‌வு பொருட்க‌ளுட‌ன் க‌ல‌ந்து  ந‌ம் உட‌லுக்குள் செல்கின்ற‌ன.

 

இவ்வாறு உட‌லுக்குள் செல்லும் BPA வினால் ஆண் ம‌ல‌ட்டு த‌ன்மை, இன‌ப்பெருக்க‌ குறைபாடுக‌ள், பெண்க‌ளுக்கு இருத‌ய‌ நோய்க‌ள், ஆண்க‌ளுக்கு ஹார்மோன் ச‌ம்ப‌ந்த‌மான‌ நோய்க‌ள், இர‌ண்டாம் ர‌க‌ நீர‌ழிவு, மூளை ச‌ம்ப‌ந்த‌மான‌வைக‌ளான‌ நியாப‌க‌மின்மை, க‌ல்வி க‌ற்க‌ இய‌லாமை, ம‌ன‌ அழுத்த‌ம், பெண் க‌ரு முட்டை ச‌ம்ப‌ந்த‌மான‌ நோய‌க‌ள், மார்ப‌க‌ புற்று நோய், ஆஸ்துமா போன்ற‌ நோய்க‌ளும், குறைபாடுக‌ளும்  ஏற்ப‌ட‌ வாய்ப்புள்ள‌ன‌.

 

நாம் ப‌ய‌ன்ப‌டுத்தும் பொருட்க‌ளில் ஒட்டியுள்ள‌ வேதிப் பொருளே இந்த‌ அள‌வு பாதிப்பை ஏற்ப‌டுத்துகின்ற‌ன‌. ஆகையால் வேதிப் பொருட்க‌ள் க‌ல‌ந்துள்ள‌தை ப‌ய‌ன்ப‌டுத்துவ‌தை த‌விர்ப்ப‌து உட‌ல் ஆரோக்கிய‌த்திற்கு ந‌ல்ல‌து.

 

30 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பு உமிக‌ரி கொண்டு ப‌ல் துல‌க்கிய‌ கால‌த்திலும் ப‌ல் ச‌ம்ப‌ந்த‌மான ‌ பிர‌ச்ச‌னைக‌ள் சில‌ருக்கு இருந்த‌து என்ப‌து உண்மை தான். ஆனால் த‌ற்போதுள்ள‌ அள‌விற்கு இருந்த‌தா? என்ப‌து தான் கேள்வி.  30 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பை விட‌ த‌ற்போது ம‌க்க‌ள் தொகை அதிக‌ரித்து விட்ட‌து ஆகையால் அத‌ற்கு ஏற்ப‌ ப‌ல் நோயாளிக‌ளின் எண்ணிக்கை அதிக‌ரித்து இருக்க‌லாம் என்ப‌து ஓர் அள‌விற்கு உண்மை தான். ஆனால் த‌ற்போது வீட்டிற்கு இர‌ண்டு அல்ல‌து மூன்று ப‌ல் நோயாளிக‌ள் உள்ளார்க‌ள். வேதி பொருட்க‌ளால் த‌யாரிக்க‌ப் ப‌ட்ட‌ ப‌ற்ப‌சைக‌ளை ப‌ய‌ன்ப‌டுத்த‌ தொட‌ங்கிய‌த‌ற்கு பிற‌கு தான் ந‌ம் அனைவ‌ருக்கும் இந்த‌ நிலை. ஆக‌ வேதிப் பொருட்க‌ளை கொண்டு தயாரித்த‌வைக‌ளால் ந‌ன்மைக‌ள் சில‌ இருந்தாலும் தீமைக‌ள் தான் அதிக‌ம் உள்ள‌து என்ப‌து இந்த‌ ப‌ல் நோயாளிக‌ளின் பெருக்க‌த்திலிருந்து அறிய‌ முடிகிற‌து.

 

அப்ப‌டியென்றால் ப‌ற்ப‌சை ப‌ய‌ன்ப‌டுத்த‌ கூடாதா என்ற‌ கேள்வி எழும். இங்கு ப‌ற்ப‌சை பிர‌ச்ச‌னை இல்லை, வேதிப் பொருட்க‌ள் தான் பிர‌ச்ச‌னை. ஆகையால் வேதிப் பொருட்க‌ள் குறைவாக‌ உள்ள‌ டாப‌ர், மிஸ்வாக் போன்ற‌ ப‌ற்ப‌சைக‌ளை ப‌ய‌ன்ப‌டுத்த‌லாம். மேலும் எங்க‌ளிட‌ம் கூட‌ மிக‌ மிக‌ குறைவான‌ அள‌வில்  வேதிப் பொருட்க‌ள் க‌ல‌க்க‌ப்ப‌ட்டுள்ள‌ சிறு க‌ற்றாழையை முக்கிய‌ மூல‌ப் பொருளாக‌ கொண்டும், ஓர் இந்திய நிறுவ‌ன‌மான‌ யெத்துரூ நிறுவ‌ன‌த்தால் தயாரிக்க‌ப்ப‌ட்டு வ‌ரும் த‌ர‌ம் மிகுந்த‌ ப‌ற்ப‌சைக‌ள் கிடைக்கின்ற‌ன‌.

 

மேற்க‌ண்ட‌ ப‌ற்ப‌சையை ப‌ய‌ன்ப‌டுத்துப‌வ‌ர்க‌ளுக்கு ப‌ற் க‌றை இருந்தால் போய் விடும். ப‌ற் கூச்ச‌ம் இருக்காது. வாய் துர்நாற்ற‌ம் வெகு நேர‌த்திற்கு வ‌ராம‌ல் பாதுகாக்கும்.

 

1. வேதிப் பொருளே இல்லாத‌ அல்ல‌து குறைவாக‌ க‌ல‌க்க‌ப்ப‌ட்டுள்ள‌ உண‌வை தேர்ந்தெடுந்து உண்ணுங்க‌ள்.

2. அன்றாட‌ம் ப‌ய‌ன்ப‌டுத்தும் சோப்பு, ஷாம்பு, டூத் பேஸ்ட் போன்ற‌வைக‌ளில் வேதிப் பொருட்க‌ள் இல்லாத‌ அல்ல‌து குறைவாக‌ உள்ள‌வ‌ற்றை ப‌ய‌ன்ப‌டுத்துங்க‌ள்

3. சின்ன‌ஞ்சிறு உபாதைக‌ளுக்கெல்லாம் ‌ வைத்திய‌த்தை குறிப்பாக‌  ஆங்கில வைத்திய‌த்தை  நாடுவ‌தை  த‌விர்த்து விடுங்க‌ள்.

4. உண‌வு உண்ணும் போது உண்ணுப‌வ‌ரும் யாருட‌னும் பேச‌ வேண்டாம். ம‌ற்ற‌வ‌ர்க‌ளும் உண்ணுப‌வ‌ருடன் பேச‌ வேண்டாம்.

5. உண‌வு உண்ணும் போது செய்தி தாள், தொலைகாட்சி, வானொலி, தொலைபேசி, புத்த‌க‌ங்க‌ள் முத‌லிய்வைக‌ளை முற்றிலும் த‌விர்க்க‌ வேண்டும்.

 

6. குளித்து அரை ம‌ணி நேர‌ம் வ‌ரை சாப்பிட‌ வேண்டாம்.

7. சாப்பிட்டால் இர‌ண்ட‌ரை ம‌ணி நேர‌த்திற்கு குளிக்க‌க் கூடாது.

8. சாப்பிடுவ‌த‌ற்கு 30 நிமிட‌ங்க‌ளுக்கு முன்பும், சாப்பிட்ட‌ பிற‌கு 10 வ‌ரையிலும் த‌ண்ணீர் ப‌ருகுவ‌தை த‌விர்த்து விடுங்க‌ள். சாப்பிட்ட‌வுட‌ன் த‌ண்ணீர் ப‌ருக‌த் தான் வேண்டும் என்ற‌ ப‌ழ‌க்க‌த்தை விட்டு விடுங்க‌ள். சாப்பிடும் நேர‌ங்க‌ளை த‌விர‌ ம‌ற்ற‌ நேர‌ங்க‌ளில் தேவைக்கு த‌ண்ணீரை ப‌ருகி கொள்ளுங்க‌ள்.

 

9. ப‌சித்தால் ம‌ட்டுமே உண‌வு உட்கொள்ளுத‌ல் ந‌ல்ல‌து. ஆனால் ப‌சித்தும் உண‌வு உட்கொள்ளாம‌ல் இருப்ப‌து நீங்க‌ள் உங்க‌ள் உட‌லுக்கு செய்யும் துரோக‌ம்

 10.உண‌வை வாயில் வைத்த‌ பிற‌கு உத‌டுக‌ள் பிரியாம‌ல் நிதான‌மாக‌ மென்று விழுங்குக‌ள். இப்ப‌டி செய்வ‌தால் உமிழ் நீர் சுர‌ப்பு அதிக‌ரிக்கும்.

 

11.மேலும் நிதான‌மாக‌ மெல்லும் போது நாவில் உள்ள‌ சுவை மொட்டுக‌ள் வ‌ழியாக ச‌த்துக்க‌ள் உறிஞ்ச‌ப்ப‌டும்.

 

12.உண‌வு உண்ணும் போது உண‌வில் ம‌ட்டுமே க‌வ‌ன‌ம் இருக்க வேண்டும்.

 

13.உண‌வை ப‌ரிமாறுகிற‌வ‌ர்க‌ளும், தாய்மார்க‌ளும் த‌ங்க‌ள் குழ‌ந்தைக‌ளுட‌ன் சேர்ந்து சாப்பிட‌ வேண்டாம்.ஏனென்றால் உண‌வை ப‌ரிமாறுகிற‌வ‌ர்க‌ள் த‌ங்க‌ள் சாப்பாட்டில் க‌வ‌ன‌ம் செலுத்தாம‌ல் ப‌ரிமாறுவ‌திலும், தாய்மார்க‌ள் குழ‌ந்தைக‌ள் என்ன‌ சாப்பிடுகிறார்க‌ள் எவ்வ‌ள‌வு சாப்பிடுகிறார்க‌ள் என்ப‌தில் தான் க‌வ‌ன‌ம் செலுத்துவார்க‌ள்.

 

14.சாப்பிட்டின் தேவை ஆளுக்கு ஆள் மாறுப‌டும். ஆகையால் இத்த‌னை கிராம் தான் சாப்பிட‌ வேண்டும் என‌ நிர்ண‌ய‌ம் செய்ய‌ இய‌லாது. அவ‌ர‌வ‌ர் தேவைக்கு சாப்பிட்டு கொள்ளுங்க‌ள். ஏப்ப‌ம் வ‌ந்துவிட்டால் சாப்பாட்டை நிறுத்தி விடுவ‌து ந‌ல்ல‌து.

 

13.அதோடு உங்க‌ளுக்கு பிடித்த‌மான‌தை சாப்பிட்டுக் கொள்ளுங்க‌ள்.

 

14.சாப்பாடு என்ப‌து எப்போது அறுசுவை கொண்டதாக‌ இருக்க‌ வேண்டும். அத‌ற்காக‌ தின‌மும் வ‌டை பாயாச‌த்துட‌ன் எப்ப‌டி சாப்பிட‌ முடியும் என்ற‌ கேள்வி எழ‌லாம். ஆறு சுவை தான் முக்கிய‌மே த‌விர‌ வ‌டை, பாயாச‌ம் இல்லை. பாயாச‌த்திற்கு ப‌திலாக‌ சிறு வெல்ல‌க்க‌ட்டியை சாப்பிட‌லாம்.

 

15 த‌ண்ணீர் ப‌ருகுவ‌த‌ற்கு கொடுக்கும் முக்கிய‌த்தை விட‌ கூடுத‌ல் முக்கிய‌த்துவ‌ம்  உமிழ் நீரை விழுங்குவ‌த‌ற்கு கொடுங்க‌ள்.

.

 

சுவாச‌க் காற்று

1. காற்றோட்ட‌ம் உள்ள‌ இட‌ங்க‌ளில் உற‌ங்க‌ வேண்டும். கொசுவிற்காக‌ ச‌ன்ன‌ல்க‌ளை மூடி வைத்துக் கொண்டு உற‌ங்குவ‌து பாதிப்பை தான் ஏற்ப‌டுத்தும்.

 

2. சுவாச‌த்திற்கு தீங்கும் இழைக்கும் கொசி விர‌ட்டிக‌ளை ப‌ய்ன்ப‌டுத்திக் கொண்டு உற‌ங்க‌ கூடாது.

 

த‌ண்ணீர்

 

1.மின‌ர‌ல் இல்லாத‌ மின‌ர‌ல் வாட்ட‌ர் விற்க‌ப்ப‌டும் த‌ண்ணீர் குடிப்ப‌தை த‌விர்த்து விடுங்க‌ள்.

 

2.வெண்ணீரை கூட‌ த‌விர்த்துக் கொள்ளுங்க‌ள்.

 

3.த‌ண்ணீர், பான‌ங்க‌ள் ப‌ருகும் போதும் அண்ணார்ந்து குடிக்காம‌ல் வாயில் வைத்து உமிழ் நீர் க‌ல‌ப்பை ஏற்ப‌டுத்தி பின் விழுங்குக‌ள்.

.   

 

ஒரு நாளைக்கு 1லிட்ட‌ர் முத‌ல் 1.5 லிட்ட‌ர் வ‌ரை உமிழ் நீர் சுர‌க்கும். பிர‌யாண‌த்தின் போதும், ஓய்வின் போதும், தியான‌த்தின் போதும் உங்க‌ளின் உத‌டுக‌ள் பிரியாம‌ல் இருக்கும் ப‌டி பார்த்துக் கொள்ளுங்க‌ள். உத‌டுக‌ள் இர‌ண்டும் சேர்ந்திருந்தால் தான் உமிழ் பெருக்கு ஏற்ப‌டும். அந்த‌ உமிழ் நீரை விர‌ய‌ம் செய்யாம‌ல் விழுங்கி விடுங்கள்.

 

அதிக‌ ப‌சி ஏற்ப‌ட்டு சிறிது நேர‌த்தில் எவ்வித‌ பாதிப்பையும் ஏற்ப‌டுத்தாம‌ல் ப‌சி ம‌றையுமானால் உங்க‌ள் உட‌ல் செரியூட்ட‌ப் ப‌ட்ட‌ ச‌ர்க்க‌ரையை சேமிக்க‌ தொட‌ங்கி விட்ட‌து என்ப‌தை உண‌ர‌லாம். இந்த‌ த‌ருண‌த்திலிருந்து உங்க‌ள் உட‌லின் நோய் எதிர்க்கும் ச‌க்தி மேம்ப‌ட‌ தொட‌ங்கிவிடும். இந்த‌ கால‌ங்க‌ளிலிருந்து நீங்க‌ள் அன்றாட‌ம் உட் கொண்டு வ‌ரும் மாத்திரை ம‌ருந்துக‌ளை குறைத்துக் கொள்ளூம் ப‌டி உங்க‌ள் உட‌லே உங்க‌ளை வ‌ழியுறுத்தும். உதார‌ண‌த்திற்கு நீர‌ழிவு நோயாளி இனிப்பு சாப்பிட்டாலும் சுக‌ர் முன்பை போல் ஏறாது. ம‌ருந்துக‌ளை ஒரே நாளில் நிருத்தி விடாம‌ல் ப‌டிப்ப‌டியாக‌ குறைத்துக் கொள்ளுங்க‌ள்.

 

S.T..முகைதீன்,

க‌ற்றாழை அங்காடி,

117/4-54, வ‌ட்க்கு மெயின் ரோடு,

ஏர்வாடி‍ 627103, திருநெல்வேலி மாவ‌ட்ட‌ம்,

கைபேசி 9944217373

 






Medical
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..