Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை - பாகம் 5)
Posted By:peer On 5/24/2013

அப்போது நம்ம ஊரில் சினிமா தியேட்டர் கிடையாது. நம்ம ஊரை அடுத்துள்ள வள்ளியூரில் அருணா தியேட்டரும், களக்காட்டில் பாக்கியலெட்சுமி தியேட்டரும், நான்குநேரியில் ஒரு தியேட்டரும் உண்டு. எனக்கு சிறு வயதில் இருந்தே சினிமா பார்ப்பதில் நாட்டம் கிடையாது. இருப்பினும் எப்பவாவது ஒருமுறை வள்ளியூருக்கு திரைப்படம் பார்க்கச் செல்வதுண்டு. பஸ் ஏறி போகவெல்லாம் பொருளாதாரம் கிடையாத...ு. சினிமா டிக்கெட் 40 காசு. பஸ்ஸூக்கு போகவர என்பதெல்லாம் 2 ரூபாய் செலவாகிவிடும். அபபோதைய 2 ரூபாய் என்பது இன்றைய 200 ரூபாய்க்குச் சமமானது. எனவே மிகப்பெரிய பட்ஜெட் போடப்பட்டு எனது சினிமா பார்க்கும் நாட்டம் நிறைவேற்றப்படும் அதற்கு பெரிதும் துணைபுரிவது இந்த வாடகை சைக்கிள்தான்.

2 பேர் இணைந்து கொள்வது. வாடகை சைக்கிளுக்கு ஒருவர் காசு கொடுப்பது. சினிமா டிக்கெட்டிற்கு இன்னொருவர் காசு கொடுப்பது என்கிற ஒப்பந்தம் போடப்படும். வள்ளியூருக்கு சினிமாவிற்குச் செல்வதென்றால் என்னோடு இணைந்து கொள்வது எனது சாச்சி மகன் (கட்டளைத்தெரு) முகைதீன்தான். 1 மணிக்கு சாப்பிட்டுவிட்டு கோவில் வாசல் செல்வது. தேரடி மூட்டில் வெங்கடாசலம் அண்ணாச்சியின் தேவி சைக்கிள் மார்ட்டில் கேரியர் வைத்த சைக்கிள் அரைநாள் வாடகைக்கு எடுப்பது. சைக்கிள் வாடகைக்கு எடுக்கும்போதே வெங்கடாசலம் அண்ணாச்சியின் கேள்விகள் சி.பி.ஐ. லெவலுக்கு இருக்கும். 'ரெண்டு பேரா போறிய? படத்துக்குத்தானே? கரெக்டா படம் முடிஞ்ச உடனே திரும்பிரனும். என்னப்போ?' என்கிற கேள்விக்கணைகளும், ஆலோசனைகளும், புத்திமதிகளும் அதிகமாக இருக்கும். அதுவும் சினிமாவுக்கு என்றால் உடனடியாக சைக்கிள் கிடைக்கும். ஏனெனில் சினிமா பார்க்கும் அந்த 3 மணி நேரமும் சைக்கிள் ஓடாமல் - தேய்மானத்திற்கு உள்ளாகாமல் இருக்கும் என்கிற ஆசைதான்.

சரியாக 75 காசுகள் வாடகை. முன்பணமாக கொடுக்கப்பட்டுவிடும். ஆளுக்கு 1 ரூபாய்தான் வைத்திருப்போம். 75 சாசு அரைநாள் சைக்கிள் வாடகை போக பாக்கி 25 காசுகள் ஒருவரிடம் மீதம் இருக்கும். மற்றவர் சினிமாவுக்கு தரை டிக்கெட் எடுக்க வேண்டும். 1 டிக்கெட் 40 காசு வீதம் 80 காசுகள் செலவிடுவார். அவரிடம் 20 காசுகள் மிச்சமிருக்கும். 10 காசுகள் சைக்கிள் பார்க்கிங் காசு கொடுக்க வேண்டும். பாக்கியுள்ள பணத்தில் (பணத்தில் என்ன பணத்தில் பைசாவில்) 15 காசுகள் வீதம் 2 டீ. 30 சாசுகள், ஆக 5 காசுகள் மிச்சத்தோடு, வீடு வந்து சேருவோம்.

வெங்கடாசலம் அண்ணாச்சியின் தேவி சைக்கிள் கடை சைக்கிள்கள் நன்றாக பராமரிக்கப்பட்டு இருக்கும். பின்பக்க கேரியரில் ஒருவர் சைக்கிள் ஓட்டுவது போலவே அமர்ந்துகொள்ள முன்பக்க சீட்டில் சைக்கிள் ஒட்டுபவரும். இரண்டு பேரும் பெடலில் கால்வைத்து ஓட்டி, சரியாக 10 நிமிடங்களில் ஏர்வாடியில் இருந்து வள்ளியூர் வந்து அடைந்து விடுவோம். வள்ளியூரில் அருணா தியேட்டரில் மதிய காட்சிகள்தான் பார்த்திருக்கிறோம். சமீபத்தில் வெளியான சினிமா எனில் கூட்டம் அலைமோதும். இருப்பினும் டிக்கெட் வாங்கி படம் பார்த்துவிடுவொம். அடுத்து சினிமா பார்க்க பொருளாதாரம் சேர்க்கும் முயற்சி. அது எப்படி? (இன்ஷா அல்லாஹ் தொடரும்)

 

 

ஹஸன் ஷேக் அடுத்து சினிமா பார்க்க பொருளாதாரம் சேர்க்கும் முயற்சி. அது எப்படி? (இன்ஷா அல்லாஹ் தொடரும்)/////  திண்ணையில் உள்ள குண்டு பல்பை கழட்டி விட்டு,ஒரு பைசாவை உள்ளே வைத்து,பல்பை திருகி,சுவிட்சை போட்டால்,பீஸ் போகும்,பீஸ் போட ஒரு ருபாய்,உடனடி வருமானம்,அடுத்து,வீட்டில் உள்ள பழைய பேப்பர்,அடுத்து அப்துஸ்ஸலாம் பலசரக்கு கடையில் படிக்கும் புஸ்தகத்தை அடகு வைத்து ஒரு ரூபாய் வாங்குதல்,இறுதியாக வீட்டில் கொழும்பில் இருந்து வந்திருக்கும் ஏலக்காய்,கிராம்பு 8 வது தெரு கர்தார் கடைக்க,அடுத்து மறைந்த 8வது தெரு சங்கிலி பாத்தி முத்து அவர்கள் வீட்டில் இரவே தேங்காய் இறங்கிவிடும்,அதை மறைத்து வைக்க ஆற்றில் குழி தோண்டி புதைத்து விட்டு அதற்க்கு மேல் அடையாளத்திற்கு ஒரு "மனித மலம்"(அப்போதான் அதை யாரும் தொடமாட்டார்கள்)நாங்க அப்பவே இல வயது விஞ்ஞானியாக்கும்.
 
 
Si Sulthan  நம் எல்லாருக்கும், சாலை வழித்தடங்களும், ஆற்றங்கரை மணல்வெளிகளும், தெருவோரக் குட்டிச்சுவர்களும், பள்ளிக்கூடத்துப் பின்பக்கத் தோப்புகளும், அடிக்கடி டாப் அடித்த டீக்கடைகளும், எங்கோ ஒரு தியேட்டரில் அடித்த விசில் சத்தங்களும், பேருந்து நிறுத்தக் கைப்பிடிச் சுவர்களும், ஒளித்துவைத்திருக்கிற எம்ப்ராய்டரி கைக்குட்டைகளும், வீட்டில் பழசு பட்டையை ஒழிக்கும்போது வந்துவிழும் ஆட்டோகிராஃப் புத்தகங்களும், கொடைக்கானல் மலைச் சரிவுகளும், மொட்டை மாடி சிவப்புத் தரைகளும்... நம் நட்பை, உறவுகளை, ஆத்மார்த்தங்களை ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. தூக்கத்தில் திடுக்கிட்டு விழித்து, மலங்க மலங்கச் சுற்றிப் பார்த்துவிட்டு பிறகு படுத்துக்கொள்வதைப் போல் இந்த ஞாபகங்களில் எழுந்து மீண்டும் படுத்துக்கொள்கிறோம்
 
 



 




Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..