Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
சூழ்நிலைகளால் பாதிப்பில்லை
Posted By:nsjohnson On 9/24/2013 9:42:02 AM

lexapro side effects starting

lexapro side effects

amoxil without prescription

antibiotic without insurance

இறைவனின் கருணை இருந்தால்தான் ஒருவனுக்கு இறைக்காட்சி கிடைக்கும். இதற்காக, தினமும் தியானமும் ஜபமும் செய்துகொண்டிருக்க வேண்டும். இவை மனதில் உள்ள மாசுகளைப் போக்குகின்றன. பிரார்த்தனை போன்ற ஆத்ம சாதனைகளை செய்ய வேண்டும். சந்தனக்கட்டையை கல்லில் உரைக்கும்போது நறுமணம் கிளம்புவதுபோல, இறைவனை இடையறாது நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஆன்மிக விழிப்பு ஏற்படுகிறது. ஆசையற்ற நிலை உன்னிடம் வருமானால், நீ அந்தக் கணக்கிலேயே இறைக்காட்சியைக் காண்பாய்.

இறைவனின் திருவடிகளில் மனதை நிலை நிறுத்துவதற்காகவே ஆன்மிக சாதனைகள் செய்கிறோம். ஆன்மிக சாதனைகள் மனதை இறை எண்ணத்தில் மூழ்கச் செய்கின்றன. தனிமையான இடத்தில் இருந்து சிறிது காலம் ஆன்மிக சாதனைகள் செய்து வந்தால் உன் மனம் ஆற்றல் மிகுந்ததாக மாறி அமையும். அதன்பின் நீ சூழ்நிலைகளால் பாதிக்கப்பட மாட்டாய் என்பதால், நீ எங்கும் வசிக்கலாம். செடி சிறியதாக இருக்கும்போது அதைச் சுற்றி வேலி அமைக்க வேண்டியுள்ளது. அது பெரிதாக வளர்ந்து மரமாகிவிட்டால் ஆடு, மாடுகளால் அதற்கு எந்தத் தொல்லையும் இல்லை. அதுபோல் உன்னுடைய ஆன்மிக அனுபவமும் காலம் செல்லச் செல்ல இடையூறுகளைத் தாண்டி வளர்ந்துவிடும்.

காலை, மாலை இரு வேளையும் தியானம் செய். மூளையை குழப்பாமல் பிரார்த்தனை, தியானம் முதலியவை பழகி வா. இதை நடைமுறையில் கொண்டு வருவது கடினம்தான். எனவே மிகவும் சிரமப்பட்டு இந்த நிலையை நீ அடைய வேண்டும்.




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..