சில பொன்மொழிகள்.
1. வணங்கத்தகுந்தவர்கள் - தாயும், தந்தையும் 2. வந்தால் போகாதது - புகழ், பழி 3. போனால் வராதது - மானம்,உயிர் 4. தானாக வருவது - இளமை, முதுமை 5. நம்முடன் வருவது - புண்ணியம், பாவம், 6. அடக்க முடியாதது - ஆசை, துக்கம் 7. தவிர்க்க முடியாதது - பசி, தாகம் 8. நம்மால் பிரிக்க முடியாதது - பந்தம், பாசம் 9. அழிவை தருவது - பொறாமை, கோபம் 10. எல்லோருக்கும் சமமானது - பிறப்பு, இறப்பு
11. கடைத்தேற வழி - உண்மையும்,உழைப்பும்
12. ஒருவன் கெடுவது - பொய் சாட்சி, செய் நன்றி மறப்பது
13. வருவதும் போவதும் - இன்பம், துன்பம்
14. மிக மிக ந்ல்ல நாள் - இன்று
15. மிகப் பெரிய வெகுமதி - மன்னிப்பு
16. மிகவும் வேண்டாதது - வெறுப்பு
17. மிகப் பெரிய தேவை - சமயோசித புத்தி
18. மிகக் கொடிய நோய் - பேராசை
19. மிகவும் சுலபமானது - குற்றம் காணல்
20. கீழ்தரமான விஷயம் - பொறாமை
21. நம்பக்கூடாதது - வதந்தி
22. ஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சு
23. செய்யக்கூடாதது - தவறுகள்
24. செய்ய வேண்டியது - உதவி
25. விலக்க வேண்டியது - விவாதம்
26. உயர்வுக்கு வழி - உழைப்பு
27. நழுவ விடக்கூடாதது - வாய்ப்பு வாழ்க வளமுடன்..
நன்றி : முகநூல் - தேடுகிறேன் ஒரு தாய் மடியை தோழியே உன் வடிவில்.
|