Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
உம்மா! உம்மா!! உம்மா!!!
Posted By:peer On 5/13/2016 2:40:00 AM


     தொகுப்பு கே. ஆர். மஹ்ளரி


✏ 'உம்மா' சொன்ன அற்புதமான பொய்களில் ஒன்று : கடைசி உருண்டையில்தான் எல்லா
சத்தும் இருக்கும், இத மட்டும் வாங்கிக்கோடா
கண்ணா!

 

✒ நாம் பெற்ற முதல் இரத்த தானம் எது தெரியுமா? நம் 'உம்மா'வின் பால்தான்.

✏ தன் 'உம்மா' தனக்கு என்னவெல்லாம்
 செய்தாள் என்பதை, மனிதன் கடைசி வரை உணர்வதில்லை. அவன் அதை உணரும்போது, அவள் உயிரோடு இருப்பதில்லை.

 

✒ 'உம்மா' என் அருகில் இருந்தால், கல்பாறை கூட பஞ்சு மெத்தைதான்.

 

✏ சொல்ல வந்ததை சரியாக சொல்ல முடியாமல் தவித்து நின்று பார். தாய்மொழியின் அருமை புரியும். வெளிநாட்டில் இருந்து பார். தாய்நாட்டின் அருமை புரியும். இதேபோல, 'தாயை' விட்டு தள்ளி இருந்து பார். தாயின் அருமை புரியும்.

 

✒ என் முகம் பார்க்கும் முன்பே, என் குரல் கேட்கும் முன்பே, என் குணம் அறியும் முன்பே என்னை நேசித்த ஒரே மனித இதயம், என் 'உம்மா' மட்டும்தான்.

 

✏ ஓர் 'உம்மா'வின் இறுதி ஆசை. என் மண்ணறையின் மீது உன் பெயரை எழுதி வை. உன்னை நினைப்பதற்கு அல்ல, அங்கும் உன்னைச் சுமப்பதற்கு!

 

✒ என்னை நடக்க வைத்து பார்க்க வேண்டும் என்ற ஆசையை விட, நான் விழுந்து விடக்கூடாது என்ற கவலையில்தான் இருந்தது என் 'உம்மா' வின் கவனம்.

 

✏ நான் ஒருமுறை உம்மா என்று அழைப்பதற்காக, பிரசவ நேரத்தில் ஆயிரம் முறை அம்மா, அம்மா என்று கதறியவள்தான் என் 'உம்மா'.

 

✒ குழந்தைகளின் பல்வேறு அழுகைகளின் அர்த்தம் புரிந்த ஒரே டிஸ்னரி புக், 'உம்மா' மட்டும்தான்.

✏ தாய்மையின் வலி என்னவென்று எனக்கும் தெரியும். அதனால்தான் அன்று 'உம்மா' வுடன் சேர்ந்து நானும் அழுதேன் பிறக்கயில்.

✒ தேங்காய் திருகும்போது, 'உம்மா' விடம் திட்டு வாங்கிக் கொண்டே சாப்பிடும் சுகமே தனி!

✏ உம்மா...! வாப்பா, ஆடம்பரமாய் கட்டிக் கொடுத்த வீட்டை விட, உன் ஆடையில் கட்டித் தந்த அந்த (தொட்டில்) வீடுதான் பெரும் நிம்மதியைத் தந்தது.

 

✒ நோய் வரும்போது ஓய்வுக்கு பாயைத் தேடுவதை விட, என் 'தாயை'த் தேடுது மனசு.

 

✏ உலகில் மிகவும் அழகான வார்த்தை எது தெரியுமா? எனக்கு 'உம்மா'! உங்களுக்கு..?

 

✒ 'உம்மா' என்பது வெறும் பெயரல்ல, மறப்பதற்கு! அது உயிரோடு கலந்த உதிரத்தின் உறவு.

 

✏ ஆயிரம் கைகள் என் கண்ணீரைத் துடைத்துப்
போனாலும், ஆறாத துன்பம் 'உம்மா' வின் சேலைத் தலைப்பில் துடைக்கும்போதுதான் நீங்கியது.

 

✒ கடைசி தோசை சாப்பிடும் போது, சட்னியை வேண்டும் என்றே அதிகமாக வைத்து, சட்னியை காலி செய்வதற்காக, இன்னொரு தோசை வைக்கிறதுதான் 'உம்மா'வின் அன்பு.

 

✏ நான் நேசித்த முதல் பெண்ணும், என்னை நேசித்த முதல் பெண்ணும் நீதானே 'உம்மா'!

 

✒ மண்ணறையில் உறங்கச் சொன்னால் கூட, தயங்காமல் உறங்குவேன். 'உம்மா', நீ வந்து ஒரு தாலாட்டுப் பாடினால்...!

✏ மூச்சடக்கி ஈன்றாய் என்னை.
என் மூச்சுள்ள வரை காப்பேன் 'உம்மா' உன்னை.

 

✒ அன்பைப் பற்றி படிக்கும் போதெல்லாம் தவறாமல் வந்து போகிறது 'உம்மா' வின் முகம்.

 

✏ உலகில் தேடித் தேடி அலைந்தாலும், மீண்டும் அமர முடியாத ஒரே சிம்மாசனம், 'உம்மா' வின் கருவறை.

 

✒ வாழ்க்கையில் தியாகம் செய்பவர் வாப்பா. வாழ்க்கையையே தியாகம் செய்பவர் 'உம்மா'!

 

✏  'உம்மா...!' அன்று நம் தொப்புள்கொடியை அறுத்தது, நம் உறவைப் பிரிக்க அல்ல. அது நம் பாசத்தின் தொடக்கத்துக்கு வெட்டப்பட்ட திறப்பு விழா ரிப்பன்!

 

✒ தமிழில் 'அம்மா' என்ற சொல் எப்படி வந்ததென்று தெரியாது. ஆனால், 'அன்பு' என்ற சொல் அம்மாவிடமிருந்துதான் வந்திருக்க வேண்டும்.

✏ மூன்றெழுத்து கவிதை சொல்லச் சொன்னால், முதலில் சொல்வேன் 'உம்மா' என்று!

 

✒ உலகில் பல அதிசயங்கள் இருந்தாலும், என்னைப் பொறுத்தவரை ஒரே அற்புதம், என் அன்பு 'உம்மா' மட்டும்தான்.

✏  உன்னோடு பேச ஒரு நிமிடம் கிடைத்தால் போதும் 'உம்மா'! கண்ணோடு இருக்கும் கண்ணீர் மட்டுமல்ல, என்னோடு இருக்கும் கவலைகளும் மறந்து போகும்.

 

✒ மழையில் நனைந்த நிலையில் இல்லத்துள் நுழைந்தேன்.

▪ குடை ஏன் எடுத்துப் போகவில்லை என்று திட்டினாள் என் அக்கா.

▪ மழை நின்ற பிறகு வந்து தொலைத்திருக்கலாமே என்று திட்டினான் என் அண்ணன்.

▪ உன்னால் டாக்டருக்கு ஆயிரம் ரூபாய் தண்டம் என்று திட்டினார் என் வாப்பா.

▪ துண்டை எடுத்து என் தலையைத் துவட்டி விட்டுக் கொண்டே திட்டினாள் என் 'உம்மா'.

● என்னை அல்ல! மழையை!!

 

இதுதான் உம்மா  நம்மீது காட்டும் அன்புக்கும், பிறர் நம்மீது காட்டும் அன்புக்குமான வேறுபாடு.

எனவேதான், 'உலகிலேயே நாம் யாருக்கு அதிக நன்றிக்கடன் செய்ய கடமைப்பட்டுள்ளோம்?' என்று நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்ட போது, மூன்று முறை 'உம்மா' என்று சொல்லி உம்மாவை முன்னிலைப்படுத்தினார்களோ..?

 

 

மே 08 அன்னையர் தினம்.




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..