Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
ஏர்வாடி பத்தாஸ் அப்பா - வீரம் சொறிந்த வரலாற்றின் மாவீரர்!
Posted By:peer On 8/19/2016 1:33:30 AM

வீரம் சொறிந்த வரலாற்றின் மாவீரர்!
அஷ்- ஷைகு ஃபத்தாஹ் அப்பா (ரஹ்)
(பத்தாஸ் அப்பா)

சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்    
ஷஹீத் செய்யத் இப்ராஹீம் பாதுஷா (ரஹ்) அவர்களின் தலைமையில் இஸ்லாமிய அழைப்புப் பணி மற்றும் ஜிஹாதுக்காக மதீனாவின் "யர்பாத்" எனும் பகுதியிலிருந்து தென் இந்தியாவுக்கு வருகைத் தந்த  5000 முஜாஹிதீன்கள் கொண்ட படைப் பிரிவின் தளபதிகளில் ஒருவர் நம்  பத்தாஸ் அப்பா (ரஹ்) அவர்கள்.  

இஸ்லாமிய அழைப்புப் பணிக்கு இடையூறு விளைவித்த,
நெல்லையை ஆட்சி செய்த பாண்டிய மன்னனை வீழ்த்தியது ஷஹீத் செய்யித் இப்ராஹீம் பாதுஷா (ரஹ்) அவர்களின் தலைமையிலான மதீனாவின் இஸ்லாமிப் படை.
முஸ்லிம்களிடம் வீழ்ந்த நெல்லையின் ஒரு பகுதிக்கு தன் படையின் வீரத் தளபதிகளில் ஒருவரான பத்தாஸ் அப்பா (ரஹ்) அவர்களை நியமித்து இஸ்லாமிய அழைப்புப் பணியைத் தொடர வைத்தார்.
அப்படையின் தலைவர் ஷஹீத் செய்யித் இபுராஹீம் பாதுஷா (ரஹ்).

தலைமையின் ஆணைக்கு இணங்க
தளபதி பத்தாஸ் அப்பா (ரஹ்) அவர்கள் லெட்சுமி நரசிங்கபுரம் என்ற ஏர்வாடியின் இன்றைய லெப்பைவளவு பகுதியில் தங்கி இருந்து தன் இஸ்லாமிய அழைப்புப் பணியைத்  தொடர்ந்து மேற்கொண்டார்கள்.
இஸ்லாமிய தீபம் நம் மண்ணில் சுடர்விட தன் வாழ்நாள் முழுவதையும் நம் மண்ணிலேயே அர்ப்பணித்து மரணித்தார்கள்.

அவர்களின் மண்ணரை லெப்பைவளவு சாவடித் தெருவின் தெற்கு கடைசியில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

லெட்சுமி நரசிங்க புரம் என்று அழைக்கப்பட்ட ஏர்வாடிக்கு....
ஏர்வாடி என்ற பெயர் வந்தது இவர்களின் வருகையால்தான்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பாதம் பட்டதால் புனித பூமியாக மாறிய மதீனாவின் மிக  அருகாமையிலுள்ள
#யர்பாத் என்ற இவர்களின் பூர்வீக பூமியின் பெயரே நமது ஊருக்கு சூட்டப்பட்டு பின்னர் அது ஏர்வாடி என்று மருவியது.

இன்றைய லெப்பைவளவு பகுதி.
இங்கிருந்துதான் ஏர்வாடி என்ற பெயர் உதயமானது.
இஸ்லாமிற்காக தங்கள் வாழ்வை அர்பணித்த பல தியாகிகளின் வருகையும்
அர்ப்பணிப்பும் நம் மண்ணை
முஸ்லிம்களின் பூமியாகவே மாற்றியது.
ஏர்வாடியில் இஸ்லாம் தழைத்து வளர்ந்தது.

    ஒரு வீரம் சொறிந்த வரலாற்றின் இணையற்ற ஓர் பெருவீரர்.
ஏர்வையின் வரலாற்று  நாயகர் நம் பகுதியில் வாழ்ந்து மறைந்திருப்பதை நம்மில் பலர்  தெரியாமலேயே வளர்ந்திருக்கிறோம்.    

இஸ்லாமிற்காக தங்கள் வாழ்வையே அர்ப்பணம் செய்த இறைநேசர்கள் அவ்லியாக்கள், குறித்த சிலரின் தவறான விமர்சனங்களும், பரப்புரைகளும் அவர்களைப் பற்றி அறிவதையும், அவர்களின் வரலாறுகளைத் தெரிவதையும் விட்டு இந்த சமூகத்தை தூரமாக்கிவிட்டது என்பது நிதர்சனமான உண்மையாகும்.

ஒவ்வொரு இறைநேசர்களின் மண்ணரையோடும் அவர்களின் வரலாறுகளையும் சேர்த்தே புதைத்துவிட்டது இந்த சமூகம்.

நமது அந்த  வரலாறுகளில் சில வெறுமனே ஏடுகளில் மட்டும் புதையுண்டுக் கிடக்கிறது அதை எடுத்து வந்து நினைவு கூறுவதற்கும்
அதிலிருந்து  படிப்பினைப் பெறுவதற்கும் நம் சமூகம் முன்வராதவரை நம்மால் வரலாறு படைக்க முடியாது.

  
 #ஏர்பாத் ஆவணப்படம் மூலம் அதை நமக்கு புரிய வைத்த சகோதரர்  ஆதில் Mohammed Aadhil பாராட்டப்பட வேண்டியர்.
அந்த ஆவணப்படத்தில் அவர் பதிவு செய்துள்ள தகவல்கள் குறித்து நாம் இது போன்று அவ்வப்போது எடுத்தியம்புவோம்.
இன்ஷாஅல்லாஹ்!

ஏர்வாடியின் வரலாற்றில் ஓர் புதிய திருப்பத்தை உண்டாக்கும் விதத்தில் கடந்த கால வரலாறுகளையும், பண்பாடுகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தியுள்ள நம் அருமைச் சகோதரர் ஆதில் அவர்களின் சமூகப் பணிகள் தொடரவும்,
அதில் அல்லாஹ்வின் பேருதவி நிலைக்கவும் வாழ்த்திப் பிரார்த்திக்கிறோம்.

அன்புடன்:
#லெப்பைவளவு_இஸ்லாமிய_சகோதரர்கள்




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..