Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் - Episode 09
Posted By:Hajas On 10/6/2016 12:46:52 PM

viagra prodej brno

viagra prodej harshpande.net

பறக்கும் தட்டுக்களும் ஜின்களும்
=============================

by - Abu Malik

Episode 08: உண்மை 2 (ஒளியின் வேகம்):  

Episode 09: உண்மை 5 (சக்தியாலான பிரபஞ்சம்):  

இந்தப் பேரண்டம் உருவானதும், இயங்கிக் கொண்டிருப்பதும் வெறும் சக்தியால் மட்டுமே; சடப்பொருட்களால் அல்ல என்பது தான் குவாண்ட்டம் கோட்பாட்டின் நிலைப்பாடு. இந்தக் கருத்துக்களைப் பிரதிபலிக்கும் விதமாகவே மார்க்கத்தின் நிலைபாடுகள்கூட இருக்கின்றன. பின்வரும் ஆதாரங்கள் மூலம் இதை விளங்க முயற்சிப்போம்:

ஆதாரம் 1:
“(அவன்) வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவன். ஒரு காரியத்தை அவன் முடிவு செய்யும்போது அது குறித்து 'ஆகு' என்றே கூறுவான். உடனே அது ஆகி விடும்.” – (2:117)

இந்த வசனத்தை ஊன்றிக் கவனித்தால், இந்த மொத்தப் பிரபஞ்சமும் அல்லாஹ்விடமிருந்து வெளிப்பட்ட ஒரு சக்தியின் எதிரொளி மட்டுமே என்பது விளங்கும்.

அதாவது ஒலி (சத்தம்) என்பதுவும் சக்தியின் ஒரு வடிவம் தான். அல்லாஹ்வின் வாயிலிருந்து வெளிப்பட்ட “குன்” என்ற ஒரு வார்த்தையின் சக்தி தான் அவனது கட்டளைகளுக்கு ஏற்ப விரிவடைந்து, பல சக்திச் சொட்டுக்களாகப் பாகுபடுத்தப்பட்டு, இந்தப் பிரபஞ்சமாக உருவெடுத்திருக்கிறது.

பெருவெடிப்பு (The Big Bang) எனும் நிகழ்வின் விளைவாகவே இந்தப் பிரபஞ்சம் உருவானது என்பது தான் என்பதே இன்றைய விஞ்ஞானம் முன்வைக்கும் கருத்து. ஒருசில தப்பான புரிதல்கள் இந்தப் பெருவெடிப்புக் கோட்பாட்டில் இருந்தாலும், இதில் ஓரளவுக்கு உண்மையும் இருக்கிறது என்பதை மேற்கண்ட குர்ஆன் வசனத்தின் மூலம் நாம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

பெருவெடிப்புக் கோட்பாட்டை மேற்கூறப்பட்ட குர்ஆன் வசனத்தின் வெளிச்சத்தில், அல்லாஹ்வின் “குன்” என்ற வார்த்தையின் அடிப்படையில் விளங்கிக் கொள்ள முயற்சித்தால், இதைத் தெளிவு படுத்திக் கொள்ளலாம்.

உண்மையில் பெருவெடிப்பு நிகழ்வு என்பது மைய நீரோட்ட விஞ்ஞானிகள் கூறுவது போல் ஓர் அணுகுண்டு வெடிப்பது போல் நாலா பக்கமும் சிதறி வெடித்த ஒரு வெடிப்பு அல்ல. அந்த அடிப்படையில் பெருவெடிப்பை விளங்கப் போனால் தான், சடப்பொருள் எங்கிருந்து வந்தது என்ற குழப்பம் ஏற்படும். ஆனால், இதே பெருவெடிப்புக் கொள்கையை ஒருசில திருத்தங்களோடும், குர்ஆன் கூறும் அடிப்படையோடும் பின்வரும் அடிப்படையில் விளங்க முயற்சித்தால், எந்தவிதமான குழப்பமும் இருக்காது என்பதே எனது கருத்து:

இந்தப் பிரபஞ்சத்தை அல்லாஹ் சடப்பொருட்களால் படைக்கவில்லை; சக்தியால் மட்டுமே படைத்தான். உண்மையில் பெருவெடிப்புக்கு முன் எந்தப் பொருளும் இருக்கவில்லை; வெடித்த பின்பும் எந்தப் பொருளும் உருவாகவில்லை. சடப்பொருள் என்று எதுவுமே சுத்தமாக இல்லை.

அல்லாஹ் “குன்” என்ற வார்த்தையைத் தனது வாயிலிருந்து உச்சரித்த அந்த நிகழ்வு தான் பெருவெடிப்பு எனும் நிகழ்வாக இருக்க வேண்டும். இதுவே மார்க்கத்துக்கு உகந்த சரியான புரிதலும், விளக்கமும் ஆகும்.

“குன்” எனும் இந்த வார்த்தையானது, வல்லமை மிக்க அல்லாஹ்வின் வாயிலிருந்து வெளிப்பட்ட சத்தம் எனும் சக்தியின் ஒரு துளி மட்டுமே. இந்த சக்தி கற்பனைக்கு எட்டாத அளவு அபாரமான ஒரு சக்தியாக இருந்திருக்க வேண்டும். தூசு படிந்திருக்கும் ஒரு மேற்பரப்பில் நாம் “ப்பூ...” என்று ஊதும் போது அந்தத் தூசு துணிக்கைகள் எல்லாம் எப்படி ஒரு புள்ளியிலிருந்து சிதறி ஊதப்பட்ட காற்றின் திசையில் வேகமாக விசிறப்படுமோ, அது போன்ற ஏதோ ஓர் அமைப்பிலேயே இந்த நிகழ்வும் இருந்திருக்க வேண்டும். அதாவது, அல்லாஹ்வின் வாயிலிருந்து ஊதி விடப்பட்டது போல் வெளியான “குன்” என்ற இந்த வார்த்தையின் சக்தியானது, அதன் வேகத்தை மிஞ்சி எந்த ஒரு வேகமும் இல்லை என்று சொல்லும் அளவுக்குக் கடும் வேகத்தில் விசிறப்பட்டு, தூசி துணிக்கைகள் சிதறியது போல் மிக நுண்ணிய “சக்திச் சொட்டுக்களாக” வின்வெளியில் சிதறியிருக்க வேண்டும்.

பிறகு இந்த சக்திச் சொட்டுக்களே அல்லாஹ்வின் கட்டளைகளுக்கேற்ப ஆறு கட்டங்களாக ஒருங்கிணைந்து, அணுக்களாக, மூலகங்களாக, கல்லாக, மண்ணாக, சூரியனாக, சந்திரனாக, உருவெடுத்திருக்க வேண்டும். இதைப் பின்வரும் ஆதாரங்கள் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்:

ஆதாரம் 2:
எதையேனும் அவன் (படைக்க) நாடினால், அதற்கு அவன் கட்டளையிடுவதெல்லாம்; "குன்" (ஆகிவிடுக) என்று கூறுவதுதான்; உடனே அது ஆகிவிடுகிறது. (36:82)

ஆதாரம் 3:
நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான். (7:54)

இந்த இரண்டு வசனங்களையும் இணைத்து விளங்கும் போது, ஆரம்பத்தில் “குன்” என்ற ஒரு வார்த்தையின் மூலம் இல்லாமையில் இருந்து புதிதாக இந்தப் பிரபஞ்சத்தை அல்லாஹ் தனது சக்தியைக் கொண்டு மட்டுமே உருவாக்கினான் என்பதும், இவ்வாறு உருவாக்கப்பட்ட சக்திச்சொட்டுக்களைப் பின்னர், தான் விரும்பியவாறு ஆறு கட்டங்களாக (ஆறு நாட்கள்) வடிவமைத்துச் செப்பனிட்டு, இந்தப் பிரபஞ்சத்தின் படைப்பை நிறைவு செய்திருக்கிறான் என்பதும் புரிகிறது.

இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளும் உண்மை ஒன்று தான். இந்த மொத்தப் பிரபஞ்சமுமே அல்லாஹ்வின் ஒரு வார்த்தையின் பிரதிபலிப்பு மட்டுமே. அந்த வார்த்தை அவனது வாயிலிருந்து வெளிப்பட்ட அந்த வேகம் இன்னும் குறையவே இல்லை. அதனால் தான் இன்னும் இந்தப் பிரபஞ்சம் ஓயாமல் விரிவடைந்துகொண்டே செல்கிறது. இந்த விளக்கத்தைப் பின்வரும் குர்ஆன் வசனம் மேலும் ஊர்ஜிதப்படுத்துகின்றது:

ஆதாரம் 4:
“(நமது) சக்தியைக் கொண்டு வானத்தைப் படைத்தோம். மேலும் (அதை) நாம் விரிவுபடுத்துவோராவோம்.” - (51:47)

இந்த வசனத்தில் இரண்டு தகவல்களை அல்லாஹ் ஒன்றாகச் சேர்த்துக் கூறுகிறான்.

முதலாவது தகவல்:
சக்தியைக் கொண்டு தான் பிரபஞ்சத்தைப் படைத்ததாக இங்கும் அல்லாஹ் ஊர்ஜிதப் படுத்துகிறான்.

இரண்டாவது தகவல்:
படைக்கப்பட்ட பிரபஞ்சத்தைத் தொடர்ந்தும் விரிவடையச் செய்து கொண்டே இருப்பதாகவும் கூறிக் காட்டுகிறான்.

இதில் முதலாவது தகவலை இரண்டு அர்த்தங்களில் நாம் புரிந்து கொள்ளலாம். ஆழமான அறிவியலோடு நோக்காமல், சாதாரண மனித சிந்தனையோடு இந்த வசனத்தை அனுகினால், “அனைத்தையும் படைக்கும் தனது ஆற்றல் மூலம் இந்தப் பிரபஞ்சத்தை அல்லாஹ் படைத்தான்” என்ற மேலோட்டமான பொருள் இதிலிருந்து வெளிப்படும். அதே நேரம் இதே வசனத்தை சக்திச்சொட்டுக் கோட்பாடுகளின் வெளிச்சத்தில் விஞ்ஞானபூர்வமாக நோக்கும் போது, “எந்தவிதமான சடப்பொருட்களும் இல்லாமல், நூற்றுக்கு நூறு வீதம் சக்திச் சொட்டுக்களைக் (Quanta) கொண்டு மட்டுமே இந்தப் பிரபஞ்சத்தை அல்லாஹ் உருவாக்கியிருக்கிறான்” என்ற அறிவியல் அர்த்தம் கூட இதிலிருந்து வெளிப்படுகிறது.

இந்த வசனத்தில் மட்டுமல்ல; படைத்தல் பற்றி அல்லாஹ் கூறும் எந்த வசனத்திலுமே இந்தப் பிரபஞ்சத்தை அவன் சடப்பொருளால் படைத்ததாகவோ, அல்லது அது சார்ந்த கருத்திலோ கூறியதில்லை. மாறாக, சக்தியால் படைத்ததாகவே குறிப்பிடுகிறான்.

மேலும், “அதை நாம் விரிவு படுத்துவோராவோம்” என்ற வசனத்தின் மூலம், இந்தப் பிரபஞ்சம் தொடர்ந்தும் விரிவடைந்து கொண்டே செல்கிறது; நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்கிறது எனும் அறிவியல் உண்மையையும் இங்கு அல்லாஹ் பதிய வைக்கிறான்.

ஆகவே, இந்தக் குர்ஆன் வசனத்தின் கருத்துக்கள் மூலம், இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் சடப்பொருட்கள் அனைத்தும், உண்மையில் சடப்பொருட்களல்ல; சக்தியின் பிரதிபலிப்புக்கள் மட்டுமே என்பது மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தப் படுகிறது.

இதே போல் யுகமுடிவு நாளின் போது இந்தப் பிரபஞ்சம் அழிக்கப்படுவது கூட “ஸூர்” ஊதப்படுவதால் ஏற்படும் சத்தம் எனும் சக்தியின் மூலம் தான் நிகழும் என்று தான் மார்க்கம் எமக்குச் சொல்லியிருக்கிறது.

இதிலிருந்து என்ன தெரிகிறது?

இந்தப் பிரபஞ்சம் ஆக்கப்பட்டதும் சத்தம் எனும் சக்தியைக் கொண்டு தான்; இறுதியில் இது அழிக்கப்படுவது கூட சத்தம் எனும் சக்தியைக் கொண்டு தான். அதே போல், ஆரம்பம், முடிவு எனும் இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் இடைப்பட்ட நிலையில் இன்று நம்மைச் சுற்றி இருப்பவை கூட சக்தியின் பிரதிபலிப்புக்கள் தாம். இது தான் மார்க்கம் நமக்கு உணர்த்தும் பேருண்மை.

அதாவது, எல்லாம் வல்ல அல்லாஹ்விடமிருந்து வெளிப்பட்ட சக்தியிலிருந்து தோற்றம் பெற்றிருப்பது தான் இந்தப் பிரபஞ்சம். யுக முடிவு நாளின் போது இந்த மொத்த சக்தியும் மீண்டும் அவனிடமே திரும்பி விடும்.

உண்மை 6 (ஓடிக் கொண்டிருக்கும் பிரபஞ்சம்):

பெருவெடிப்பு நிகழ்வு தொடக்கம் இன்று வரை இந்தப் பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டு செல்வது ஒரே வேகத்தில் அல்ல; மாறாக அதிகரித்துச் செல்லும் வேகத்தில் அது விரிந்து செல்கிறது என்பது தான் அண்மைய கண்டுபிடிப்பு. ஒவ்வொரு நட்சத்திரமும், கிரகமும் ஏதோ ஓர் ஓட்டப்பந்தயத்தில் ஓடிக்கொண்டிருப்பதைப் போல் ஏதோ ஒரு திசையை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றன என்பது தான் இதன் பொருள்.

இதையும் குர்ஆன், பின்வரும் வசனம் மூலம் உறுதிப்படுத்துகிறது:

“சூரியனால் சந்திரனை அடைய (துரத்திப் பிடிக்க) முடியாது. இரவு, பகலை முந்தாது. ஒவ்வொன்றும் ஆகாயத்தில் ஓடுகின்றன.” – (36:40)

இந்த இடத்தில் நாம் ஓர் அம்சத்தைக் கவனிக்க வேண்டும்:

நியூட்டன், ஐன்ஸ்டைன் மற்றும் அவர்கள் சார்ந்த அனேகமான மையநீரோட்ட விஞ்ஞானிகளது கருத்துக்களின் பிரகாரம், நாம் வாழும் பூமி உட்பட இந்த சூரிய குடும்பத்தில் இருக்கும் கோள்கள் அனைத்துமே சூரியனைச் சுற்றி வலம் வந்து கொண்டிருக்கின்றன என்ற சித்தாந்தம் தான் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலைபாடாக இருந்து வருகிறது.

அதாவது, இதை இன்னொரு விதத்தில் கூறுவதென்றால், நமது சூரியகுடும்பத்தில், சூரியன் எனும் நட்சத்திரம் தான் புனித கஃபாவைப் போல் மத்தியில் இருப்பதாகவும், அதைச் சுற்றி, ஹஜ் செய்யும் மக்கள் தவாபு செய்வதைப் போல் எல்லாக் கோள்களும் ஆண்டுதோறும் வலம் வந்து கொண்டிருக்கின்றன என்பதும் தான் இந்தக் கோட்பாட்டின் அர்த்தம்.

ஞாயிற்றுத் தொகுதியில் இருக்கும் எல்லாக் கோள்களையும் விட சூரியனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வடிவமைக்கப் பட்டிருக்கும் ஒரு கோட்பாடு தான் இது. இந்தக் கோட்பாட்டைத் தான் கல்விக் கூடங்களில் கூட இன்று வரை கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள். இதைத் தான் உண்மையென்று நம்பி மாணவர்கள் கூட கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், உண்மை இதுவல்ல. இது ஒரு தவறான கோட்பாடு. அல்லாஹ்வின் வேத வசனங்களுக்கு இந்தக் கோட்பாடு கூட சற்று முரண்படுகிறது. சூரியன் உதிப்பதையும், அஸ்த்தமிப்பதையும் பற்றி சொல்லப்பட்டிருக்கும் குர்ஆன் வசனங்கள், மற்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் அனைத்தையும் தொகுத்தெடுத்து வாசித்துப் பாருங்கள்; மார்க்க ஆதாரங்களுக்கு எந்த வகையிலும் ஒத்துவராத ஒரு கோட்பாடாகவே இந்தக் கோட்பாடும் இருப்பதை நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

உண்மை இதற்கு மாற்றமானது. எந்தக் கோளும் எதையும் சுற்றி வலம் வந்து கொண்டிருப்பதில்லை. சூரியனுக்கென்று தனிச்சிறப்பு எதுவுமே இல்லை. ஒவ்வொரு கோளுக்கென்றும் தனித்துவமான ஒரு பாதை அல்லாஹ்வால் வகுக்கப் பட்டிருக்கிறது. இந்தப் பாதை நேர்கோட்டுப் பாதையோ, அல்லது வட்ட வடிவிலான பாதையோ அல்ல. மாறாக, திருகு சுழல் (Helix / Spring) வடிவில் தான் இந்தப் பாதைகள் வடிவமைக்கப் பட்டிருக்கின்றன. தத்தமக்கென்று நியமிக்கப்பட்டிருக்கும் இந்தத் திருகுசுழல் பாதை வழியே ஏதோ ஒரு திசையை நோக்கி ஒவ்வொரு கோள்களும் பயணித்துக் கொண்டிருக்கின்றன. அதே போல், சூரியனுக்கென்றும் ஒரு தனித்துவமான திருகுசுழல் பாதை வகுக்கப் பட்டிருக்கிறது. அந்தப் பாதையூடாகத் தான் சூரியன் கூட பயணித்துக் கொண்டிருக்கிறது.

இதை இலகுவாகப் புரிந்து கொள்ள ஒரு நடைமுறை உதாரணத்தைக் குறிப்பிடுகிறேன். துப்பாக்கியிலிருந்து சுடப்படும் ஒரு குண்டு நேர்கோட்டில் பயணிப்பது போல தான் வெறும் கண்களால் பார்க்கும் போது நமக்குத் தெரியும். ஆனால், உண்மை அதுவல்ல. துப்பாக்கியிலிருந்து புறப்படும் அந்தக் குண்டின் பயணம், நேர் எதிரான திசையை நோக்கி நேராகப் பயணித்தாலும், அதன் பாதையானது ஒரு திருகுசுழல் (Spring) வடிவத்தில் தான் அமைந்திருக்கும். மேலும், அந்த குண்டு எந்த அசைவும் இல்லாமல் பயணிப்பதில்லை. மாறாக, துப்பாக்கி ஏற்படுத்தும் விசையின் விளைவாக அதிவேகத்தில் அந்தக் குண்டு சுழன்று கொண்டு தான் பயணிக்கும்.

சுருக்கமாகக் கூறுவதென்றால், துப்பாக்கியிலிருந்து வெளிப்படும் குண்டு படு வேகமாகத் தன்னைத் தானே சுழன்று கொண்டும், தனது திருகு சுழல் பாதை வழியாக திருகித் திருகிப் பயணித்துக் கொண்டுமே, நேராக இருக்கும் தனது இலக்கை அடைகிறது.

இதே அடிப்படையில் தான் இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்துக் கோள்களும் தத்தம் திருகு சுழல் பாதையில் சுழன்று கொண்டே பயணிக்கின்றன. எல்லாக் கோள்களது திருகுசுழல் பாதையும் ஒரே விட்டத்தில் / பருமனில் அமைந்தவை அல்ல. சில கோள்களது பாதையின் விட்டம் பெரியதாக இருக்கும்; சில கோள்களின் திருகுசுழல் பாஅதை விட்டத்தில் ஒடுங்கியதாக இருக்கும்.

இந்த அடிப்படையில், நமது சூரிய குடும்பத்தில் சூரியனின் திருகுசுழல் பாதை தான் விட்டத்தில் மிகவும் ஒடுங்கிய பாதை. இதனால் தான் சூரியன் எல்லாக் கோள்களுக்கும் நடுவில் இருப்பதைப் போல் நமக்குத் தோன்றுகிறது. அதே போல், நெப்டியூன், ப்ளூட்டோ போன்ற கோள்களது திருகுசுழல் பாதைகள் தாம் விட்டத்தில் மிகவும் அகலமானவை. இதனால் தான் இவை சூரியனிலிருந்து மிகவும் தூரத்தில் சுழல்வதைப் போல் தோன்றுகிறது.

இதை இன்னும் எளிய நடையில் சொல்வதென்றால், எந்தக் கோளும், எதையும் சுற்றி வலம் வரவில்லை. கோள்கள், சூரியன், சந்திரன் ஆகிய அனைத்தும் ஏதோ ஒரு திசையை நோக்கித் தத்தம் அச்சில் சுழன்று கொண்டே ஓடிக் கொண்டிருக்கின்றன; அவ்வளவு தான்.

ஆனால், குறுகிய நோக்கோடும், மேலோட்டமாகவும் பார்க்கும் போது, கோள்கள் எல்லாம் சூரியனைச் சுற்றி வலம் வருவது போல தான் தோற்றம் இருக்கும். இந்தத் தோற்றத்துக்குக் காரணம், ஒரே திசையை நோக்கி சூரியன் உட்பட அத்தனை கோள்களும் ஒரே கூட்டமாக ஒன்றாக ஓடிக் கொண்டிருக்கும் போது, கூட்டத்தோடு கூட்டமாக ஓடிக் கொண்டிருக்கும் சூரியன் மட்டும், கூட்டத்துக்கு நடுவில் ஓடிக் கொண்டிருப்பதால் தான் இந்தத் தோற்றம் ஏற்பட்டிருக்கிறது.

இதைத் தான் மேற்கண்ட குர்ஆன் வசனம் அழகாக உறுதிப்படுத்துகிறது. இந்தக் கருத்தை உறுதிப்படுத்தும் விதமாகவே குவாண்ட்டம் கோட்பாடுகளின் வெளிச்சத்தில் இன்றைய விஞ்ஞானம் சூரிய குடும்பத்தைப் பற்றி முன்வைக்கும் சில புதிய கோட்பாடுகள் அமைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.

குறிப்பாக “ஹெலிக்கல் மோஷன்” (Helical Motion) எனும் கோட்பாட்டைக் குறிப்பிடலாம். Youtube இற்குச் சென்று, “helical motion of solar system” என்று டைப் செய்து தேடிப் பாருங்கள்; இந்த விளக்கத்தையொட்டிய சில வீடியோக்கள் புரிந்து கொள்வதற்கு இலகுவான வடிவத்தில் காணக் கிடைக்கின்றன.

உண்மை 7 (அனைத்திலும் சுழற்சி):

குவாண்ட்டம் பொறிமுறையின் இன்னொரு நிலைப்பாடு தான், ஒவ்வொரு சக்திச்சொட்டும், அணுக்களும், அதனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புக்களும் சுழல் காற்றின் வடிவத்தில் தொடர்ச்சியாகச் சுழன்றுகொண்டேயிருக்கின்றன என்பது. இது கூட மார்க்கத்துக்கு உடன்பாடான ஒரு நிலைபாடு தான். பிரபஞ்சத்தின் மாபெரும் கட்டமைப்புக்களான கலெக்ஸிகள் தொடக்கம், நம் அன்றாட வாழ்வில் அவதானிக்கும் இயற்கை வடிவங்கள், மற்றும் DNA போன்ற நுண்கட்டமைப்புக்கள் வரை ஒவ்வொரு படைப்பும் தத்தம் பாணியில் ஒரு சுழல் காற்றின் வடிவத்தில் சுழன்று கொண்டு தான் இருக்கின்றன என்பது தான் நிதர்சனம்.

இதைத் தான் பின்வரும் குர்ஆன் வசனம் பறைசாற்றுகிறது:

“அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் வெட்டவெளியில் சுழல்கின்றன.” – (21:33)

இவ்வாறு படைப்பின் ஒவ்வோர் அம்சத்தையும் சரியான விஞ்ஞானத்தின் பார்வையில் உற்று நோக்குவதன் மூலம் மட்டுமே, அல்லாஹ்வின் வல்லமைகளையும், அவனது ஆட்சியின் மகத்துவத்தையும் சரியாகப் புரிந்து கொள்ளலாம் என்பது தான் இதுவரை முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் மூலம் நாம் பதிவு செய்து கொள்ள வேண்டிய கருத்து. ஆய்வு செய்யும் விஞ்ஞானமே தவறானதாக இருந்தால், அதையொட்டி எடுக்கப்படும் விளக்கங்கள் கூட தவறானதாகவே இருக்கும்.

இந்த உண்மைகளை அடிமனதில் பதிய வைத்துக் கொண்டு, மார்க்க ஆதாரங்களை விளங்க முயற்சிக்கும் போது மட்டுமே, அவற்றின் சரியான விளக்கம் நமக்குக் கிடைக்கும்.

உதாரணத்துக்கு, ஒவ்வொரு நாளும் பின்னிரவில் அல்லாஹ் அடிவானத்துக்கு இறங்கி வருதல், நபி (ஸல்) அவர்கள் மேற்கொண்ட மிஹ்ராஜ் எனும் வின்னுலகப் பயணம், மற்றும் வானவர்கள், ஜின்கள் போன்ற படைப்புகளின் ஒளி வேகத்தையும் தாண்டிய அதி வேக ஆற்றல் போன்ற மார்க்கம் கூறும் பல அம்சங்களை சரியான விஞ்ஞானத்தின் அடிப்படையில் புரிந்து கொள்ள முயற்சித்தால், பல கருத்துக் குழப்பங்களைத் தவிர்க்கலாம்; அழகான, அறிவுபூர்வமான விளக்கங்களை இலகுவாக எட்டலாம் என்பதே இந்தப் பீடிகை மூலம் நான் நிலைநாட்ட விழையும் கருத்து.

இன் ஷா அல்லாஹ் வளரும்...

- அபூ மலிக்

 Episode 10: -----------------





Power of Creator
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..