பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் =============================
Episode 11: ஸ்கேலார் அலைகள்
Episode 12: -“மனித ஜீனோம் செயல்திட்டம்”
“மனித ஜீனோம் செயல்திட்டம்” (Human Genome Project), மற்றும் HAARP (High Frequency Active Auroral Research Program) என்ற பெயர்களில் இரண்டு வகையான செயல்திட்டங்கள் ஏக காலத்தில் (1990ம் ஆண்டு) இலுமினாட்டிகளால் ஆரம்பிக்கப்பட்டன.
மனித ஜீனோம் செயல்திட்டத்தின் மூலம் மனித மூளை சிந்திக்கும் பொறிமுறை பற்றிய ஆய்வுகள் மனித DNA மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டன. இந்த ஆய்வுகளுக்குத் தேவையான DNA தரவுகளையும், மற்றும் ஒவ்வொரு மனிதனது சிந்தனைக்கும், அவனது DNA இற்கும் இடையிலுள்ள தொடர்புகள் பற்றிய தரவுகள் போன்ற தகவல்களையும் இவர்களுக்குத் தேவைப்படும் விதத்தில் வழங்கிக் கொண்டிருக்கும் பணியில் சில நிறுவனங்கள் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. முக்கியமாக இந்தப் பணியில் கூகுல் (Google) நிறுவனம் ஷைத்தானியர்களது பிரதான அடியாளாக இன்றுவரை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இதே நேரம் இன்னொரு பக்கம் HAARP செயல்திட்டங்கள் மூலம் மேலும் சில நாசகார ஆய்வுகள் முடுக்கி விடப்பட்டன.
வளி மண்டலத்தின் சீரான தன்மையைக் குழப்பியடிப்பதன் மூலம் வானிலை மாற்றங்களை (Weather Modification) ஏற்படுத்துதல்; ELF / VLF வகையைச் சார்ந்த சில அதிர்வலைகள் மூலம் செயற்கைப் பூகம்பங்கள் / சுனாமி போன்றவற்றைத் தோற்றுவித்தல்; ELF வகையைச் சார்ந்த சில அதிர்வலைகள், மற்றும் ஸ்கேலார் அலைகள் போன்றவற்றின் மூலம் மனித மூளையின் சிந்தனை அலைவரிசைகளின் ஒழுங்குகளைக் குலைத்தல் போன்ற ஒருசில செயல்திட்டங்களை உதாரணமாகக் குறிப்பிடலாம்.
மனித ஜீனோம் செயல்திட்டம், மற்றும் HAARP ஆகிய இந்த இரண்டு செயல்திட்டங்களையும் ஒருங்கிணைப்பதன் மூலம், மனித சிந்தனையைத் தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது தான் இலுமினாட்டிகளது இறுதி நோக்கம். இந்த நோக்கத்தோடு தான் இன்று பல ஆய்வுகளும், செயல்திட்டங்களும் உலகளாவிய ரீதியில் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன.
உண்மையில் இவ்வாறான செயல்திட்டங்கள் மூலம் மனித சிந்தனையைக் கட்டுப்படுத்துவது இலுமினாட்டிகளால் சாத்தியமா? அவ்வாறு சாத்தியப் பட்டாலும், அது எந்த அளவுக்கு சாத்தியப்படும்? என்பன போன்ற ஒருசில கேள்விகள் இந்த இடத்தில் சிலருக்கு எழலாம். இந்தக் கேள்விகளுக்கான முழுமையான, நிச்சயமான பதிலைச் சொல்லும் அளவுக்கு எனக்கு ஞானம் இல்லை.
ஆனால், மனித சிந்தனையைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு தான் ஷைத்தானியர்கள் இன்று பல செயல்திட்டங்களில் மும்மரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மட்டும் சந்தேகத்துக்கு இடமில்லாமல் அறுதியிட்டு உறுதியாகக் கூற முடியும். இவர்களின் முயற்சி எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பது பற்றி அல்லாஹ்வே அறிவான்.
அதேநேரம் இவர்களது செயல்திட்டங்கள் வெற்றிகரமாக அரங்கேறுவதற்கு விஞ்ஞானபூர்வமான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா? என்று கேட்டால், நிச்சயமான இதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே இருக்கின்றன என்பது தான் எனது பதில். இது எவ்வளவு தூரத்துக்கு சாத்தியமானது என்பதைப் பின்வரும் தகவல்கள் மூலம் நீங்களே புரிந்து கொள்ளலாம்:
நமது உடற்கலங்களின் அடிப்படைக் கட்டமைப்புக்களாக இருக்கும் DNA என்பது ஒரு தகவல் களஞ்சியம் என்று தான் இதுவரை நம்மில் அனேகமானோர் விளங்கி வைத்திருக்கிறோம். ஆனால், நமது DNA என்பது ஒரு தகவல் களஞ்சியம் மட்டுமல்ல; அதையும் தாண்டிய பல இரகசியங்கள் உள்ளே இருக்கின்றன.
நமது உடலிலும், மூளையிலும் இயங்கிக் கொண்டிருக்கும் உடற்கலங்கள் ஒவ்வொன்றும் தமக்கிடையிலும், தம்மைச் சுற்றி இருக்கும் சுற்றுச் சூழலுடனும் தொடர்பாடல்களை மேற்கொள்வதற்குக் கூட DNA ஐத் தான் பிரதானமாக உபயோகிக்கின்றன.
அதாவது, உடற்கலங்கள் ஒன்றோடொன்றும், சுற்றுச் சூழலில் இருக்கும் சக்திச் சொட்டுக்களோடும் தொடர்பாடல்களை ஏற்படுத்திக் கொள்வதற்கு உபயோகிக்கப்படும் ஒரு “சக்திச்சொட்டு அண்ட்டனா” (Quantum Antenna) ஆகவும் நமது DNA தான் தொழிற்படுகிறது.
இந்தத் தொடர்பாடல்கள் (communication) “ஸ்கேலார்” அலைவரிசைகளில் தான் பிரதானமாக நடைபெறுகின்றன.
மேலும், ஒவ்வொரு மனிதனது DNA யும் அவனது கைரேகையைப் போல் தனித்துவமானவை. அவரவருக்கென்று தனித்துவமான ஓர் அதிர்வெண்ணில் தான் அவரவர் DNA யின் சக்திச்சொட்டுக்கள் அதிர்கின்றன.
ஒரு மனிதனது DNA இந்த அதிர்வெண்ணைச் சரியாகக் கண்டுபிடித்து, அதே அலைவரிசைக்குப் பொருந்தும் விதத்தில் அவன் மீது “ஸ்கேலார்” அலைகளைச் செலுத்துவதன் மூலம், அவனது சிந்தனையை சில கருவிகள் மூலம் தொலைவிலிருந்து கூட மாற்றியமைப்பதற்கான முகாந்திரங்கள் நிறையவே இருக்கின்றன.
இந்த அடிப்படையில் மனித சிந்தனையைத் தமது விருப்பத்துக்கேற்பக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் தான் இன்று பல இரகசிய ஆய்வுகள் இலுமினாட்டிகளால் மேற்கொள்ளப் படுகின்றன.
இவர்களது இந்த நோக்கம் இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை; ஓரளவு இதுவரை வெற்றி கண்டிருக்கிறார்கள். இந்தக் கருவிகளின் வீரியத்தை இன்னும் அதிகரிக்கும் விதமாக இன்றைய மனிதர்களது உடல்களிலும் திட்டமிட்டு பல மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்கென்று தனியாக வேறு பல செயல்திட்டங்கள் ஏற்கனவே அமுலில் இருக்கின்றன. அவற்றுள் ஒருசிலதைச் சுட்டிக் காட்டுகிறேன்:
செயல்திட்டம் 1: நமது இரத்தத்தில் எவ்வளவு அதிகம் பாரமான உலோகங்கள் (Mercury, Aluminium, போன்றவை) கலந்திருக்கிறதோ, அவ்வளவுக்கு இவர்களது கருவிகளின் வீரியம் அதிகரிக்கும். கையடக்கத் தொலைபேசியின் சிக்னல் வீரியம் அதிகரிப்பது போல் இதைப் புரிந்து கொள்ளலாம். இதனால் தான் நமது உணவு, மருந்து மாத்திரைகள் போன்ற அத்தனையிலும் இன்று பாரமான உலோகங்கள் திட்டமிட்டுக் கலக்கப்படுகின்றன. குழந்தைகளுக்கு ஏற்றும் தடுப்பூசிகளில் கூட அலுமினியம், மேர்குரி போன்ற சில பாரமான உலோகங்கள் திட்டமிட்டுக் கலக்கப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம்.
செயல்திட்டம் 2: அதிகரித்த செல்ஃபோன் உபயோகங்களின் மூலமும் இந்த சிக்னல் தொடர்பு இன்னும் வீரியப்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக சமகால செல்ஃபோன்களில் இன்று மேலதிகமாக சேர்க்கப்பட்டுக் கொண்டு வரும் சக்தி அலைகளை அடிப்படையாகக் கொண்ட பல தொழினுட்பங்களைக் குறிப்பிடலாம்.
செயல்திட்டம் 3: அதிகமதிகம் மக்களை இசைக்கு அடிமையாக்குவதன் மூலமும் இந்தச் செயல்திட்டங்களின் வீரியம் இன்னும் அதிகரிக்கிறது. இசை என்பது சாதாரண சத்தம் எனும் சக்தியின் ஒரு வெளிப்பாடாக இருந்தாலும், குறிப்பிட்ட சுருதியில் அது இருப்பதால், காதுகளை வந்து எட்டும் போது அதன் அதிர்வெண்கள் மூளையின் சிந்தனைத் திறனோடு சம்பந்தப்பட்ட சில அதிர்வு அலைகளை செயலிழக்க வைக்க வல்லது.
இசை மூலம் பிரதானமாக இது எப்படி சாதிக்கப்படுகிறதென்றால்... மனித மூளையின் சிந்திக்கும் பொறிமுறையை சிதைக்கும் சக்திகள் அதன் சிந்தனை வட்டத்துக்குள் ஊடுருவ விடாமல் பாதுகாக்கும் விதமாக, சில சக்தி அலைவரிசைகள் காவல் அரண்கள் போல் நமது சிந்தனை அலைவரிசைகளைச் சுற்றிச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இசை மூலம் பிறப்பிக்கப்படும் பிரத்தியேக ஒலி அலைகள், காவல் அரண்களாக செயல்படும் இந்த அலைவரிசைகளைக் குழப்பியடித்து, செயலிழக்கச் செய்ய வல்லவை. இதன் மூலம் நம் சிந்தனைத் திறனின் பாதுகாப்பு தகர்க்கப்படுவதற்கு நிறையவே வாய்ப்புகள் இருக்கின்றன. பாதுகாப்பு தளர்த்தப்பட்ட பின், மூளையின் சிந்தனை எல்லைக்குள் தீய சக்திகளுக்கு சுலபமாக ஊடுருவலாம்.
இந்த உண்மைகளை ஏற்கனவே அறிந்ததால் தான் அன்றே இஸ்லாம் இசையை “ஷைத்தானின் கருவிகள்” என்று கூறித் தடை செய்திருக்கிறது என்பது புரிகிறது. இதைப் பின்வரும் ஹதீஸ் ஆதாரங்கள் மூலம் விளங்கலாம்:
ஆதாரம் 1: “அல்லாஹ் உங்களுக்கு மதுவையும், சூதாட்டத்தையும், மத்தளத்தையும் தடை செய்துள்ளான். போதையூட்டக் கூடிய அனைத்தும் தடை செய்யப்பட்டதாகும்.” – (அஹ்மத் 2494)
இங்கு நபி (ஸல்) அவர்கள் இசையை, மதுவைப் போன்ற போதையூட்டக்கூடிய ஒரு விசயம் என்று குறிப்பிடுகிறார்கள். இன்னொரு விதத்தில் கூறுவதென்றால், ஒரு மனிதனது சிந்தனையை மழுங்கடித்து, மாற்றியமைக்கும் சக்தி மதுவுக்கு இருப்பது போல், இசைக்கும் இருக்கிறது என்று தான் பொருள்.
ஆதாரம் 2: “ஒரு ஆட்டிடையனின் குழலோசை இப்னு உமர் (ரலி) அவர்களின் காதில் விழுந்தது. அப்போது அவர்கள் தம் இரு காதுகளிலும் விரலை வைத்துக் கொண்டு அந்தப் பாதையை விட்டுவிட்டு (வேறொரு பக்கம்) வாகனத்தைத் திருப்பினார்கள்.
அவர்கள் '(அந்தச் சப்தம்) உனக்குக் கேட்கிறதா?' என்று வினவினார்கள். அதற்கு நான் ஆம் என்றேன். அவர்கள் (சிறிது தூரம்) சென்ற பிறகு, 'எனக்குக் கேட்கவில்லை' என்று நான் கூறினேன். கைகளை (காதிலிருந்து) எடுத்து விட்டு மறுபடியும் அதே பாதைக்கு வாகனத்தைத் திருப்பினார்கள்.
'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஆட்டிடையனின் குழலோசையைக் கேட்ட போது அவர்கள் இதைப் போன்று செய்வதை நான் பார்த்தேன்' என்று கூறினார்கள்.” - (அஹ்மத் 4307)
இந்த இரண்டு ஹதீஸ்களையும் இணைத்து நோக்கும் போது இசை என்பது எவ்வளவு பாரதூரமான ஒரு ஷைத்தானிய சக்தி என்பது விளங்கும். நபி (ஸல்) அவர்கள் காதில் விரலை வைத்து அடைத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டே ஓடினார்கள் என்றால், இசையின் பாரதூரம் எத்தகையது என்பதை நம்மால் உணரலாம்.
இன்றைய உலக நடப்புகளைப் பார்க்கும் போதும் இந்த உண்மையை உணரலாம். ஷைத்தானின் ஊழியர்களாக இருக்கும் இலுமினாட்டிகளின் அனேகமான முகவர்கள், ஏனைய துறைகளையும் விட இசைத் துறையில் தான் அதிகம் கவனம் செலுத்திக் காலூன்றியிருக்கிறார்கள்.
இவ்வாறு நாளுக்கு நாள் ஷைத்தானியர்களது நோக்கம் படிப்படியாக நிறைவேறிக் கொண்டிருக்கிறது. இறுதியில் தஜ்ஜால் வெளிப்படும் போது இந்த செயல்திட்டம் பூரண கட்டத்தை அடைந்திருக்கும். இவ்வாறான பல தொழினுட்பங்களின் மூலம் தான் பெரும் திரளான மக்களின் சிந்தனையை தஜ்ஜால் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, வழிகெடுக்கப் போகிறான். ரிமோட் கண்ட்ரோல் மூலம் பொம்மைகளை இயக்குவதைப் போல் பெரும்திரளான மக்களை அவனது கைப்பாவைகளாக இயக்கப் போகிறான். இது தான் நம்மில் அனேகமானோர் இதுவரை கவனிக்கத் தவறிய உண்மை.
இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்:
தஜ்ஜால் வந்து நிகழ்த்தப் போகும் அதிசங்களில் அனேகமானவை உண்மையில் அதிசயங்கள் அல்ல; அவற்றில் அனேகமானவை தொழினுட்பங்கள் மட்டுமே. அதாவது, ஷைத்தானின் உதவியோடும், விஞ்ஞான அறிவைக் கொண்டும் இலுமினாட்டிகளால் வடிவமைக்கப் படும் சில தொழினுட்பங்கள் மட்டுமே.
ஆனால், இந்த உண்மையைக் கூட புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு “படித்த முட்டாள்களாக” தான் அனேகமான மக்கள் அப்போது இருப்பார்கள்.
பெரும்பாலான மக்களை இவ்வாறான “படித்த முட்டாள்”களாக மாற்றியமைக்கும் இலக்கை நோக்கித் தான் ஷைத்தானியர்களது சிந்தைக் கட்டுப்பாட்டு உத்திகள் (Mind Control Programs) அனைத்தும் இன்று வடிவமைக்கப் படுகின்றன. இந்த இலக்கை அடைந்து கொள்வதிலேயே ஷைத்தானிய இலுமினாட்டிகள் மும்முரமாக செயல்படுகின்றனர். இதுவரை இந்தத் திட்டங்களில் ஓரளவு வெற்றி கண்டும் விட்டார்கள். நாளுக்கு நாள் மனிதர்களில் அனேகமானோர் படித்த முட்டாள்களாகத் தான் இன்று பரிணமித்துக் கொண்டிருக்கிறார்கள்.
படித்த முட்டாள்களை உருவாக்கும் பாரிய செயல்திட்டத்தின் இன்றைய வடிவங்கள் தாம்: மடமையைப் போதிக்கும் நவீன கல்வித்திட்டம், போலியான ஒழுக்கவியல் நெறிகள், பொய்யையே பிழைப்பாகக் கொண்ட மீடியாக்களின் ஆதிக்கம், பொய்யை அடிப்படையாகக் கொண்ட இன்றைய மருத்துவ சித்தாந்தம்... இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
இந்தப் பாரிய சதி வலைப் பின்னலிலிருந்து தப்புவதற்கு நாமே நினைத்தாலும், நம்மால் மட்டும் அது முடியாது. அல்லாஹ்வின் நேரடி உதவி இல்லாமல் இதிலிருந்து விடுதலை கிடைக்காது. மறுமை நாளை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த ஃபித்னா யுகத்தில் கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களை அடைத்து வைப்பதற்காக ஷைத்தானியர்கள் வடிவமைக்கும் இருள் சிறை தான் இது.
அல்லாஹ்வின் உதவி கிடைக்கப்பெறும் ஒருசிலரைத் தவிர மற்ற எவருக்கும் இந்தச் சிறையிலிருந்து இப்போதைக்கு விடுதலை கிடைக்கப் போவதில்லை. அல்லாஹ்வின் நாட்டப்படி ஈஸா (அலை) அவர்கள் வந்து தஜ்ஜாலைக் கொன்ற பிறகு தான் இந்தச் சிறைச்சாலை முற்றாகத் தகர்க்கபட்டு, மொத்த மனித சமூகத்துக்கும் பூரண விடுதலை கிடைக்கும். அது வரை போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
இத்தோடு இந்த முதலாவது தொடர் நிறைவடைகிறது. இந்த நீண்ட பீடிகையை சொன்னதன் நோக்கம், இதைத் தொடர்ந்து அலசப்பட இருக்கும் இரண்டாம், மூன்றாம், நான்காம் தொடர்கள் முழுமையாகப் புரிய வேண்டும் என்பது தான்.
இங்கு சொல்லப்பட்ட தகவல்களின் அடிப்படையில், பிரபஞ்சத்திலிருக்கும் பல அமானுஷ்ய சக்திகள் பற்றிய ஆய்வுகளாகத் தான் இன் ஷா அல்லாஹ் இனி வரும் தொடர்கள் இருக்கும். அவை இலகுவாகப் புரிய வேண்டும் என்றால், இந்த அறிமுகம் கட்டாயமாக இருக்கிறது.
இன் ஷா அல்லாஹ் அடுத்த தொடர், இலுமினாட்டிகள் மனித குலத்துக்கு எதிராக உபயோகிக்கும் இந்த இரகசிய விஞ்ஞான அறிவுகளை எங்கிருந்து கற்றுக் கொண்டார்கள்? என்ற கேள்விக்கான விடையைக் அலசுவதாகவே இருக்கும்.
இதன் நிறைவுகள் அனைத்தும் அல்லாஹ்வைச் சாரும்; குறைகள் அனைத்தும் என்னைச் சாரும். அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.
- அபூ மலிக்
Episode 13: பயணம் ஆரம்பம்.... |