Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் - Episode 13
Posted By:Hajas On 10/9/2016 3:13:35 AM

பறக்கும் தட்டுக்களும் ஜின்களும்
=============================

by - Abu Malik

Episode 12: -“மனித ஜீனோம் செயல்திட்டம்” 


தொடர் 2: வேற்றுக்கிரகவாசிகள்

Episode 13: பயணம் ஆரம்பம்....


அறிமுகம்:
இது நமது நெடுந்தொடரின் இரண்டாவது தொடர். இதில் மார்க்கம் சார்ந்த எந்தத் தகவலும் இருக்காது; சில வரலாற்றுச் சம்பவங்கள் பற்றி மட்டுமே அலசப்படும். ஏற்கனவே முதலாவது தொடரில் அலசப்பட்ட பல அடிப்படைகள் பற்றிய சரியான அறிமுகம் இல்லாத நிலையில் இந்தத் தொடரை யார் வாசித்தாலும், கண்டிப்பாக இதில் அலசப்படும் பல தகவல்கள் நம்ப முடியாதவை போலவே தோன்றும். ஏனெனில், இங்கு அலசப்படவிருக்கும் மறைக்கப்பட்ட பல வரலாற்றுச் சம்பவங்கள் முழுக்க முழுக்க அமானுஷ்யமானவை. இந்தத் தொடருக்கான அவசியமும், நியாயங்களும் என்னவென்பதை, இதையடுத்து வரவிருக்கும் மூன்றாவது தொடரின் போது வாசகர்கள் புரிந்து கொள்ளலாம், இன் ஷா அல்லாஹ். அதுவரை பொறுமையைக் கடைப்பிடித்து வாசிக்குமாறு வாசகர்கள் வேண்டப் படுகிறார்கள்.

பயணம் ஆரம்பம்....
~~~~~~~~~~~~~~~~~

கதைகளில் சில கதைகள் சுவாரசியமானவை;
காரணம், நிதர்சனத்துக்கு அப்பாற்பட்ட புதுமைகளால் அவை புனையப் படுகின்றன.

சில நிஜங்கள் கதைகளை விடவும் சுவாரசியமானவை;
காரணம், சில நிஜங்களை அடிப்படையாகக் கொண்டு தான் பல கதைகளே புனையப் படுகின்றன.

இதுவரை நாம் இலுமினாட்டி என்று அழைக்கப்படும் பதின்மூன்று குடும்பங்களைச் சேர்ந்த மனித ஷைத்தான்கள்களைப் பற்றியும், இந்த உலகில் வாழும் முழு மனித சமூகத்தையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கத்தோடு திரைமறைவில் அவர்கள் அரங்கேற்றிக் கொண்டிருக்கும் ஒருசில சதித்திட்டங்கள் பற்றியும் சென்ற தொடரில் பார்த்தோம்.

இப்போது நாம் விடை தெரிந்து கொள்ள வேண்டிய அடுத்த கேள்வி, இந்த இலுமினாட்டிகளை இயக்குவதும், அவர்களுக்குத் தேவையான உதவிகளைத் திரைமறைவில் செய்து கொண்டிருப்பதும் யார்? என்பது தான். இந்தக் கேள்விக்கான விடையைக் கண்டறிந்து கொள்ளும் இலக்கிலேயே இனி நமது பயணம் ஆரம்பிக்கிறது.

பறக்கும் தட்டுக்கள் (UFO):
~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சம்பவம் 1:
பண்டைய ரோம சாம்ராஜ்ஜியத்தின் வரலாறுகளைத் தொகுத்த பிரபல வரலாற்று ஆசிரியராகக் கருதப்படும், “டைட்டஸ் லிவியஸ்” (Titus Livius) என்பவர், பிரபலமான வரலாற்றுத் தொகுப்பு நூலாகக் கருதப்படும் “Ab Urbe Condita Libri” (நகரத்தின் அத்திவாரத்திலிருந்து தொகுக்கப்பட்ட நூல்கள்), எனும் தனது நூலில், “வானில் கப்பல்கள்” என்ற தலைப்பில் ஒரு விசித்திரமான சம்பவத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

அதாவது, அன்றைய ரோம சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரான ரோம் நகரில், கி.மு. 214 ஆம் ஆண்டின் குளிர்காலப் பகுதியில், கப்பல்களைப் போன்ற சில விசித்திரமான ஊர்திகள் மக்கள் அனைவரும் பார்க்கும் வண்ணம் வானில் தோன்றியதாகவும், தொடர்ச்சியாக இவை வானில் மிளிர்ந்து கொண்டிருந்ததாகவும் இவரது பதிவுகளில் குறிப்பிட்டிருக்கிறார். தனது நூலில் இந்தச் சம்பவத்தை டைட்டஸ், “navium speciem de caelo adfulsisse” (வானிலிருந்து நெருங்கி வந்து மின்னிக் கொண்டிருந்த கப்பல்களின் தோற்றம்) என்று நேரடியாகவே தனது மொழியில் பதிவு செய்திருக்கிறார்.

அமானுஷ்யமான பறக்கும் தட்டுக்களைப் போன்ற காட்சிகளை மக்கள் வானில் கண்கூடாகக் கண்டதாகப் பதியப்பட்டிருக்கும் பல வரலாற்றுக் குறிப்புகளில் இது தான் மிகவும் பழமையானது.

சம்பவம் 2:
கி.பி. 1600 காலப்பகுதிகளில், கொரிய நாட்டை “ஜோசியோன்” எனும் அரச குடும்பம் ஆட்சி செய்து கொண்டிருந்த காலம் அது. இந்தக் காலப்பகுதியில் கொரியாவின் “கான்சியோங்-குன்”, “வோஞ்ஜு-மொக்”, “காங்ரியுங்-பு”, “யாங்யாங்-பு”, “காங்வோன்-டு” ஆகிய மாகாணங்களிலும், நகரங்களிலும் நடந்த ஓர் அமானுஷ்யமான சம்பவத்தைப் பற்றி, “Annals of the Joseon Dynasty” (ஜோசியோன் அரசவம்சத்தின் வரலாற்றுப் பதிவேடுகள்) எனும் வரலாற்றுத் தொகுப்பிலும், மற்றும், “Diary of Gwanghaegun of Joseon” (ஜோசியோன் க்வாங்ஹேகனின் நாட்குறிப்பு) எனும் வரலாற்றுக் குறிப்பு நூலிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அதாவது, கி.பி. 1609ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ம் திகதி, மேகமூட்டம் இல்லாத தெளிவான வானில், மூன்று பிரதேசனங்களில் முற்பகல் 9-11 மணியளவிலும், இன்னொரு பிரதேசத்தில் நடுப்பகல் வேளையிலும், பிரிதொரு பிரதேசத்தில் பிற்பகல் 1-3 மணியளவிலும் பெரும் திரளான மக்கள், பிரகாசமாக மின்னக் கூடிய, வட்டமான அகண்ட பாத்திரத்தின் வடிவில் சில வானூர்திகளைக் கண்டதாகவும், எந்தவிதமான தடயங்களும் இல்லாமல் அவை திடீரென்று வானில் தோன்றியதாகவும், இடிமுழக்கத்தையொத்த பெரும் சத்தத்தோடு மீண்டும் அவை அம்பின் வேகத்தில் சென்று மறைந்து விட்டதாகவும் சம்பவம் விபரமாக சொல்லப்பட்டிருக்கிறது.

மேலும், அவை ஏற்படுத்திய விசித்திரமான சந்ததத்தால் ஆகாயமும், நிலமும் அதிர்ந்ததாகவும் சம்பவம் கூறுகிறது. ஆரம்பத்தில் அவை தரையிறங்கப் போவது போல் நிலத்தை நெருங்கி வந்ததாகவும், பிறகு திடீரென்று முடிவை மாற்றிக் கொண்டது போல் சற்றே சரிந்து மேலெழும்பி மின்னல் வேகத்தில் மறைந்து போனதாகவும் கூட இந்தச் சம்பவம் விவரிக்கப் பட்டிருக்கிறது. மேலும், அவற்றின் அசைவையும், நடவடிக்கைகளையும் அவதானித்த ஏராளமான மக்கள், அவை ஏதோ ஒரு விசித்திரமான சக்தியைக் கொண்டு தான் இயங்குவது போல் தோற்றமளித்ததாகவும் சம்பவத்தின் பதிவுகள் குறிப்பிடுகின்றன.

சம்பவம் 3:
1492ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11ம் திகதி: பிரபல நாடுகாண் பயணி “கிரிஸ்டோஃபர் கொலம்பஸ்” (Christopher Columbus), அமெரிக்கக் கண்டத்தைக் கண்டுபிடிப்பதற்கான தனது நீண்ட கடற்பயணத்தின் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்த சமயம் அது. அன்றிரவு அத்திலாந்திக் சமுத்திரத்தில் தனது கப்பலில் நின்று கொண்டு கடலைப் பார்த்துக் கொண்டிருந்த போது விசித்திரமான ஒரு காட்சியைக் கண்டார். கொலம்பஸ் மாத்திரமல்ல; கப்பலில் கூடப் பயணித்த அனைவருமே இந்தக் காட்சியைக் கண்டார்கள்.
நடுக்கடலில் மையிருட்டுக்கு மத்தியில் திடீரென்று தீச்சுடரைப் போன்ற வெளிச்சத்தாலான ஏதோ ஓர் ஊர்தி, நீருக்குள் இருந்து மேலெழும்பி அந்தரத்தில் உயரத்தை அடைந்ததாக சம்பவம் குறிப்பிடுகிறது. சற்று நேரம் இவ்வாறு காட்சியளித்த இந்த வெளிச்சம் மறுபடியும் மாயமாக மறைந்து விட்டதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த பல சாட்சிகள் குறிப்பிட்டதாக பதிவுகளில் காணக் கிடைக்கின்றன.

இந்தச் சம்பவத்தைப் பற்றி விவரித்துக் கொலம்பஸ் தானே கைப்பட எழுதிய பதிவுகள் இன்றுவரை அவரது டைரிக் குறிப்புகளில் காணக் கிடைக்கின்றன. இதன் ஒரு பிரதியைப் பின்வரும் லின்கில் பார்த்துக் கொள்ளலாம்:

https://upload.wikimedia.org/wikipedia/commons/a/ae/Copy_of_the_abstract_from_Columbus%27_journal_by_Bartolomé_de_las_Casas.jpg

கொலம்பஸ் மட்டுமல்லாது, சம்பவத்தை நேரில் பார்த்த கொலம்பஸின் மகன், மற்றும் பல நேரடி சாட்சிகள் கூட இந்தச் சம்பவத்தை ஊர்ஜிதப்படுத்தியிருக்கிறார்கள்.

இதே போன்ற இன்னும் ஆயிரக்கணக்கான சம்பவங்கள் உலக வரலாற்றில் பல்வேறு பிரதேசங்களிலும் பல்வேறு காலப்பகுதிகளிலும் நடந்திருப்பதற்கான ஏராளமான சான்றுகள் இருக்கின்றன. இப்போதைக்கு நமது ஆய்வுக்கு இந்த மூன்று உதாரணங்களும் போதும் என்று நினைக்கிறேன். மேலதிக ஆதாரங்கள் தேவைப்படும் சகோதரர்கள் இணையத்தில் இது போன்ற பல தகவல்களை இலகுவாகத் தேடி வாசிக்கலாம்.

ஆரியர்களும், ஜேர்மனியும்:
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

“எட்வர்ட் பி. லிட்டன்” (Edward B. Lytton) எனும் பிரித்தானியாவின் பிரபலமான எழுத்தாளர் 1871ம் ஆண்டு ஒரு புத்தகத்தை வெளியிட்டார். “எதிர்வரும் இனம்” (The Coming Race) என்பது தான் இந்தப் புத்தகத்தின் பெயர். வெளியிட்ட கொஞ்ச காலத்திலேயே இந்தப் புத்தகம் பிரபலமானது.

இலுமினாட்டிகள் பின்பற்றும் ஷைத்தானிய மதத்தின் புதிய உட்பிரிவான “பிரம்மஞானம்” (Theosophy) எனும் புதிய கோட்பாட்டை தோற்றுவித்த பெண்ணாகவும், இப்லீஸை வழிபடுவது குறித்த உலக பிரசித்தி பெற்ற பல விளக்க நூல்களின் ஆசிரியையாகக் கருதப்படுபவருமான, இலுமினாட்டிகளால் பெரிதும் போற்றப்படக் கூடிய ரஷ்ய நாட்டைச் சேர்ந்த “ஹெலனா ப்ளவாட்ஸ்கி” (Helena Blavatsky) என்பவள், எட்வர்ட் லிட்டனின் “எதிர்வரும் இனம்” என்ற நூலைப் பற்றிப் பெரிதும் சிலாகித்து அன்று கருத்து வெளியிட்டார். பல “மறைவான ஞானங்களை” உள்ளடக்கிய ஒரு பெறுமதி மிக்க புத்தகமாக இதை அவர் பாராட்டினார்.

உலக பிரசித்தி பெற்ற ஒரு ஷைத்தானிய மதத் தலைவர் பாராட்டிக் கருத்து வெளியிடும் அளவுக்கு அந்தப் புத்தகத்தில் அப்படி என்ன தான் எழுதப் பட்டிருக்கிறது?

வரலாறுகளுக்கு முற்பட்ட பண்டைக் காலத்தில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் உலகில் பரவலாக வாழ்ந்ததாகவும், இந்த உலகையே ஒரு காலத்தில் கட்டி ஆண்டதாகவும் குறிப்பிடப் படும் ஒரு மனித இனத்தைப் பற்றிய புத்தகம் தான் இது.

குறிப்பு: இந்தப் புத்தகத்தில் விவரிக்கப் பட்டிருக்கும் கதைகள் அனைத்தும் உண்மை தானா என்பதை அலசுவது நமது நோக்கமல்ல. அது எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். ஆனால், இந்தப் புத்தகம் முன்வைத்த சில கருத்துக்களின் அடிப்படையில் இந்த உலக வரலாறே தலைகீழாக மாறியது. இந்த வரலாற்று மாற்றங்கள் பற்றியும், அவை ஏற்படுத்திய விளைவுகள் பற்றியும் ஓரளவுக்கு அலசுவதே நமது ஆய்வின் நோக்கம்.

புத்தகத்தின் சாராம்சம் இதுதான்:

இன்றைய மையநீரோட்ட வரலாறுகளில் காணக் கிடைக்காத, மறைந்த ஒரு வரலாற்றைப் பற்றியே இந்தப் புத்தகம் கூறுகிறது. அதாவது, வரலாறுகளுக்கு முற்பட்ட பண்டைக்காலத்தில் ஓர் “எஜமானர் இனம்” (Master Race) இந்த உலகில் வாழ்ந்ததாகவும்; அறிவிலும், நாகரீகத்திலும், ஆரோக்கியத்திலும், ஆயுட்காலத்திலும், உருவத்திலும், அழகிலும்... அனைத்திலுமே அவர்கள் நம்மை விடப் பல மடங்கு சிறந்தவர்களாக விளங்கினார்கள் என்றும்; மேலும், அவர்கள் இன்றைய மக்களைப் போலல்லாது மேன்மக்களாக இருந்தவர்கள் என்றும்; இந்த உலகையே அவர்கள் கட்டி ஆண்டதாகவும் புத்தகம் கூறுகிறது. இவர்கள் தாம் உண்மையான தூய “ஆரியர்” இனம் என்பது தான் இந்தக் கருத்தின் படி முளைத்த சித்தாந்தம்.

இன்றைய நூற்றாண்டில் நமது தொழினுட்பங்களில் அனேகமானவை இயங்கிக் கொண்டிருப்பது பெட்ரோலியம் சார்ந்த எரிசக்திகள் மூலம் தான். அதாவது இன்றைய மனித நாகரிகத்தின் பிரதான சக்தி முதல் என்பது “பெட்ரோலியம்” எனும் எண்ணெய் வளம் தான். இதே போல், அன்று உலகைக் கட்டியாண்ட ஆரியர்கள் எனப்படும் இந்த மேன்மக்களது பிரதான சக்தி முதலாக “வ்ரில்” (Vril) எனப்படும் ஒரு மறைவான பிரபஞ்ச சக்தி தான் அவர்கள் உபயோகத்தில் இருந்தது என்று தான் புத்தகம் கூறுகிறது.

இந்தப் புத்தகத்தின் மையக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டும், ஷைத்தானிய மதகுருவான “ஹெலனா ப்ளவாட்ஸ்கி”யின் மறைஞான சித்தாந்தகளை அடிப்படையாகக் கொண்டும், இந்தக் காலப் பகுதியில் ஜேர்மனியின் தலைநகரான “பெர்லின்” நகரில், ஜேர்மனி அரசின் அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த பல உயர்மட்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய ஓர் இரகசிய இயக்கம் ஆரம்பிக்கப் பட்டது. இந்த இரகசிய இயக்கத்தின் பெயர் கூட “வ்ரில்” என்று தான் அழைக்கப்பட்டது.

இந்த “வ்ரில்” இயக்கத்தின் பிரதான குறிக்கோள், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப் பூமியிலிருந்து மறைந்து போன அந்த ஆரியர் எனும் இந்த உயர்ந்த இனத்தை எப்படியாவது தேடிக் கண்டுபிடித்து, அவர்களோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதும்; இதன் மூலம் இவர்களும் அவர்களைப் போலவே வாழ்வின் எல்லா அம்சங்களிலும் சிறந்தவர்களாக மாறி, மேன்மக்களாக இந்த உலகை ஆள வேண்டும் என்பதும் ஆகத் தான் இருந்தது.

இன் ஷா அல்லாஹ் வளரும்...

- அபூ மலிக்

Episode 14: மரியா ஓர்சிக் (Maria Orsic):




Power of Creator
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..