Abortion Pill Online Ph abortion pill philippines scaletheplanet.com abortion pill online ph பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் =============================
தொடர் 2: வேற்றுக்கிரகவாசிகள்
Episode 13: பயணம் ஆரம்பம்....
Episode 14: மரியா ஓர்சிக் (Maria Orsic):
ஜேர்மனியின் பெர்லின் நகரில் உருவாக்கப்பட்ட “வ்ரில்” இயக்கத்தின் ஒரு பிரதான அங்கத்தவராக ஆஸ்த்திரிய நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் இருந்தாள். இவளது பெயர் “மரியா ஓர்சிக்”. வ்ரில் இயக்கத்தில் அங்கம் வகிப்பதற்கு முன்பிருந்தே மரியாவுக்கு மறைவான உலகம் பற்றிய ஈடுபாடுகள் அதிகம் இருந்தன. ஆவி உலகத் தொடர்புகள் போன்ற துறைகளில் இவள் ஏற்கனவே ஆழமான ஆய்வுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவள்.
மரியாவின் வருகைக்குப் பின்னர், வ்ரில் இயக்கத்தினுள் அங்கம் வகித்த பெண்களையெல்லாம் ஒன்று திரட்டி, உள்ளுக்குள் இன்னொரு உப பிரிவு உருவாக்கப் பட்டது. பெண்களை மட்டுமே கொண்ட இந்தப் பிரிவுக்கு மரியா தான் தலைமை நிர்வாகியாக நியமகிக்கப்பட்டாள். மரியாவின் தலைமையின் கீழ் மறைவான உலகம் குறித்த பல ஆய்வுகளில் ஈடுபாட்டோடு செயல்படும் பெண்கள் அணி வீரியமக செயல்பட ஆரம்பித்தது. இந்த முப்பரிமாண உலகில் வாழக்கூடிய மனிதர்களுக்கும், மறைவான நான்காம் பரிமாண உலகில் வாழக்கூடிய அமானுஷ்யமான ஜீவராசிகளுக்கும் இடையில் தொடர்பாடல்களை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்தப் பிரிவைச் சேர்ந்த பெண்கள் ஊடகங்களாக (Medium) செயற்படுபட்டு வந்தார்கள். இது குறித்த பல விசித்திரமான ஆய்வுகளில் இவர்கள் மும்மரமாக ஈடுபட்டிருந்தார்கள்.
இந்தப் பெண்களது நம்பிக்கைப் பிரகாரமும், ஆய்வுகளின் பிரகாரமும், நான்காம் பரிமாண உலகில் வாழக்கூடிய வேற்றுக் கிரகவாசிகள் போன்ற உயிரினங்களுக்கும் தமக்கும் இடையில் “டெலிபதி” (Telepathy) எனும் தொடர்பு அலைவரிசைகள் மூலம் தொடர்புகள் இருப்பதாகவும், இவ்வாறான மறைவான உலக ஜீவராசிகள் அடிக்கடி இவர்களோடு டெலிபதி மூலம் தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும் இவர்கள் கூறி வந்தார்கள்.
மேலும், இந்த இயக்கத்தில் அங்கம் வகித்த அனேகமான பெண்கள், தமது முழங்கால் அளவையும் தாண்டிய நீண்ட தலைமுடிகளை உடையவர்களாக இருந்தார்கள். இதற்கான காரணமாக இவர்கள் கூறியது: மறைவான உலகத்தோடு தொடர்பாடகளை ஏற்படுத்துவதில் இவர்களது தலைமுடி கூட ஓரு வகையான “அண்ட்டனா” (Antenna) போல் தொழிற்படுவதாகவும், எவ்வளவு நீளத்துக்குத் தலைமுடி இருக்கிறதோ, அதற்கேற்றாற்போல் அவர்களது டெலிபதி தொடர்பாடலின் “சிக்னல்” (Signal) வீரியம் அதிகரிக்கிறது என்றும் குறிப்பிட்டார்கள்.
https://theawakezone.files.wordpress.com/2016/07/maria-orschitsch2.jpg
“தூலே” இயக்கம் (Thule Society): ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
“வ்ரில்” இரகசிய இயக்கம் ஜேர்மனியின் பெர்லின் நகரில் அரச மட்ட உயர் அதிகாரிகளுக்குள் இரகசியமாக இயங்கிக் கொண்டிருந்த அதே வேளை, “அடோஃப் ஹிட்லர்” (Adolf Hitler) இன் நாசி கட்சியினுள்ளும் இன்னோர் இயக்கம் செயற்பட்டுக் கொண்டிருந்தது. இந்த இயக்கத்தின் பெயர், “தூலே இயக்கம்” (Thule Society) என்பதாகத் தான் இருந்தது. இந்த தூலே இயக்கத்தவர்களது குறிக்கோளும் கூட பண்டைய காலத்தில் மறைந்து போனதாக சொல்லப்படும் அதே ஆரிய எஜமானர் இனத்தவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதாகத் தான் இருந்தது.
அதாவது, இதை இன்னொரு விதத்தில் கூறுவதென்றால், ஒரே காலகட்டத்தில் ஒரே நாட்டின் அரசாங்கத்துக்குள் இரண்டு இரகசிய இயக்கங்கள் ஒரே இலக்கை நோக்கி சமாந்தரமாகப் பயணித்துக் கொண்டிருந்தன. நாசி ஜேர்மனியின் தலைவர் “அடோஃப் ஹிட்லர்” (Adolf Hitler), மற்றும் ஹிட்லரின் வலது கையைப் போல செயற்பட்ட “ஹயின்ரிக் ஹிம்லர்” (Heinrich Himmler) போன்ற உயர் அதிகாரிகள் ஆகிய அனைவருமே “தூலே” இயக்கத்தின் முக்கிய அங்கத்தவர்களாகவே இருந்தார்கள்.
தூலே இயக்கத்தின் நம்பிக்கைக் கோட்பாடுகள் பிரகாரம், ஒரு காலத்தில் இந்த உலகையே கட்டியாண்டுவிட்டு, பிறகு இந்தப் பூமியிலிருந்து மறைந்து போன அந்த எஜமானர் இனத்தின் நேரடி வழித்தோன்றல்கள் என்று தான் தூலே அங்கத்தவர்கள் தம்மைக் கருதிக் கொண்டார்கள். இந்த உலகத்தை ஆளப் பிறந்த உயர்ந்த ஜாதி தமது இனம் மட்டும் தான் என்பது தான் இவர்களது நம்பிக்கையாக இருந்தது. முழு உலகையும் கைப்பற்ற வேண்டுமென்ற வெறியோடும், வீரியத்தோடும் உலக யுத்தத்தில் நாசி ஜேர்மனி மும்முரமாகப் பங்கேற்றதற்கு இந்த நம்பிக்கையும் ஓர் அடிப்படைக் காரணம்.
மேலும், மறைந்து போன எஜமானர் இனம் பற்றிய இவர்களது நம்பிக்கைக் கோட்பாடுகள் பின்வருமாறு தான் இருந்தன:
பல்லாயிரம் ஆண்டுகள் முன்பே பூமியில் இருந்து மறைந்து போன எஜமானர் இனம் தான் “ஆரியர்கள்” எனும் தூய இனம். இவர்களே ஆதிகால உலகின் எஜமானர்களாக இருந்தார்கள். ஏனைய மனித இனங்களையெல்லாம் தமது அடிமைகளாக இவர்களே கட்டியாண்டார்கள். இவர்களே என்றென்றும் இந்த உலகை ஆள்வதற்குத் தகுதி பெற்றவர்கள். மேலும், இந்த “ஆரியர்” இனத்தைச் சேர்ந்தவர்கள் மேன்மக்களாகவும், அறிவில் மிகவும் முதிர்ச்சியடைந்தவர்களாகவும், நம்மை விட மிகவும் உயரமானவர்களாகவும், நம்மை விட நீண்ட காலம் உயிர்வாழக் கூடியவர்களாகவும், நம்மை விடத் தொழினுட்பத்தில் மிகவும் முன்னேற்றம் அடைந்தவர்களாகவுமே இருந்தனர்.
கடைசியாக பூமியின் மேற்பரப்பில் நிலவிய பணியுகத்திற்கு (Ice Age) முற்பட்ட காலம் வரை (கிட்டத்தட்ட பத்தாயிரம் வருடங்களுக்கு முன்) இந்த எஜமானர்கள், பூமியின் வட துருவத்தை அண்டிய நிலப்பரப்புகளில் தான் வாழ்ந்து வந்தார்கள். அங்கிருந்து கொண்டு தான் மொத்த உலகையுமே ஆண்டார்கள். குறிப்பாக இன்றிருக்கும் கிரீன்லாந்து, சைபீரியா, ஸ்காண்டினேவியா (நோர்வே + ஸ்வீடன் + ஃபின்லாந்து + டென்மார்க்) ஆகிய நிலப்பரப்புகளை உள்ளடக்கியதாகவே அவர்களது சாம்ராஜ்ஜியம் வியாபித்திருந்தது.
பணியுகம் ஆரம்பித்ததும், இந்த அரச வம்சத்தவர்கள் மேலும் வடக்கு நோக்கி, அதாவது வட துருவத்தை நோக்கி இடம்பெயர்ந்தார்கள். இறுதியில் திடீரென்று எந்தத் தடயமும் இல்லாமல், இந்தப் பூமியிலிருந்தே மாயமாக மறைந்து விட்டார்கள். ஆனால் இவர்கள் அழிந்து போகவில்லை; மாறாக புதியதோர் உலகைக் கண்டுபிடித்து, அங்கு சென்று குடியமர்ந்து விட்டார்கள். இந்தப் புதிய உலகின் சூழல் அமைப்பானது இவர்களது உடல் / உள வளர்ச்சிக்கு இன்னும் உறுதுணையாக இருந்ததால், முன்பை விட அதிக முன்னேற்றத்தோடும், பலத்தாலும், அறிவாலும், அழகாலும், ஆயுளாலும் நம்மையெல்லாம் விட இன்னும் மிகைத்தவர்களாகவும் அந்தப் புதிய உலகில் இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இது தான் தூலே இயக்கத்தைச் சேர்ந்த நாசி ஜேர்மனியர்களது நம்பிக்கை சார்ந்த கோட்பாடாக இருந்தது.
கிட்டத்தட்ட இந்தக் கதைக்கு நிகரான இதே போன்ற இன்னொரு கதை, வட துருவப் பிரதேசத்தை அண்டி வாழும் “எஸ்கிமோ” இனத்தவர் மத்தியில் கூட இன்று வரை பரவலாக நம்பப் படுகிறது. எஸ்கிமோக்களின் நம்பிக்கைப் பிரகாரமும், முன்னொரு காலத்தில் உயர் குலத்தைச் சார்ந்த ஒரு மனித சமூகம் வட துருவத்தை நோக்கிப் புலம்பெயர்ந்து, இறுதியில் மறைந்து போனார்கள் என்ற கூற்று பரவலாக கிராமப் புறங்களில் சொல்லப்படுகிறது.
தூலே இயக்கத்தின் கனவு, தமது மூதாதையர்களான இந்த எஜமானர் இனத்தவர் வாழும் உலகத்தைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களோடு மீண்டும் சேர வேண்டும். இதன் மூலம் தாமும் அவர்களைப் போல் சக்திமிக்க மனிதர்களாக மாற வேண்டும் என்பதாகத் தான் இருந்தது. இந்தக் கனவை அடிப்படையாகக் கொண்டே நாசி ஜேர்மனி, தனது மொத்த அரசியல் திட்டங்களையும் வகுத்துக் வந்தது.
“அட்மிரல் ரிச்சர்ட் பர்ட்” (Admiral Richard Byrd): ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில் அமெரிக்க கடற்படையின் ஒரு கப்பல் பிரிவுக்குத் தளபதியாகப் பணியாற்றியவர் தான் “அட்மிரல் ரிச்சர்ட் பர்ட்” என்பவர். அமெரிக்க கடற்படை மட்டத்தில் மிகவும் மதிப்புக்குரிய ஒரு தளபதியாகவே இவர் இருந்தார். மேலும், இவர் ஒரு கடற்படைத் தளபதியாக மட்டும் இருக்கவில்லை; அரச சார்பாக தூரதேச நாடுகளுக்குச் சஞ்சாரங்களை மேற்கொண்டு, தகவல்களை சேகரிக்கக் கூடிய ஒரு நாடுகாண் பயணியாகவும் பணியாற்றிய ஒருவர் தான் இவர்.
தூர தேசங்களுக்குத் தனது கடற்படைப் பிரிவு, கடற் பிரயாணங்களைத் மேற்கொள்ளும் போதெல்லாம், அந்தப் பிரதேசங்களையொட்டிய புதுப்புது நிலப்பரப்புகளுக்கும் அரசு சார்பாக சஞ்சரித்து, அந்தப் பிரதேசங்கள் குறித்துப் பல ஆய்வுகளை மேற்கொண்டு, அவை பற்றிய தகவல்களையும் திரட்டி அமெரிக்க அரசுக்கு சமர்ப்பிப்பவராக இவர் இருந்தார்.
தனது ஆயுட்காலத்தினுள், துருவப் பிரதேசங்களுக்கு மட்டுமே உத்தியோகபூர்வமான நான்கு பிரதானமான சஞ்சாரங்களை மேற்கொண்டவர் தான் அட்மிரல் ரிச்சர்ட் பர்ட். இவரது வட துருவ (Arctic Region) சஞ்சாரம் 1926ம் ஆண்டு மேற்கொள்ளப் பட்டது. அதே போல் தென் துருவத்துக்கு (Antarctic Region) என்று மட்டும் பிரத்தியேகமாக மூன்று உத்தியோகபூர்வ சஞ்சாரங்களை 1928, 1947, 1955 ஆகிய ஆண்டுகளில் இவர் மேற்கொண்டார்.
வட துருவத்துக்கான இவரது முதலாவது சஞ்சாரத்தை முடித்து விட்டுத் திரும்பி வந்த போது இவர் சமர்ப்பித்த சில தகவல்கள் அமெரிக்க அரசையே திகைக்க வைத்தன. அதாவது, பூமியின் வட துருவத்தின் நடுப் புள்ளியை அண்மிக்கும் போது தனது இராணுவ விமானத்தின் திசைகாட்டி (Compass) மிகவும் விசித்திரமான முறையில் செயல்பட்டதாகவும், மேலும் வட துருவத்தின் முனையில் நாம் நினைத்துக் கொண்டிருப்பது போல் எந்த நிலப்பரப்போ, சமுத்திரமோ இல்லையென்றும், துருவத்தையொட்டிய பூமியின் மொத்த நிலப்பரப்பும் உள் நோக்கியே குவிந்து உள்வாங்கிச் செல்வதாகவும், பூமியின் உள் நோக்கி ஒரு பாதை இருப்பதாகவும், குறிப்பிட்ட இடத்தை அண்மித்த போது தனது விமானத்தின் கட்டுப்பாட்டைத் தான் இழந்து விட்டதாகவும், ஏதோ ஒரு சக்தி மூலம் விமானம் உள் நோக்கி ஈர்க்கப் பட்டு, பூமியினுள் ஏதோ ஓர் இடத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப் பட்டதாகவும், பிறகு அங்கிருந்தே தான் மீண்டும் திரும்பி வந்ததாகவும் இவர் பல சுவாரசியமான தகவல்களைச் சமர்ப்பித்தார்.
கொஞ்சம் கூட நம்ப முடியாத விதத்தில் இவரது தகவல்கள் இருந்த போதும், இந்தத் தகவல்கள் உலகின் நாலா புறங்களிலும் பல புரளிகளைக் கிளப்பத் தொடங்கி விட்டன. அன்றைய உலகின் வல்லரசுகளாகத் திகழ்ந்த ஜேர்மனி, அமெரிக்கா, ரஷ்யா போன்ற பல நாடுகள், இவரது தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தமது அரசியல் நிலைபாடுகளையே மாற்றிக் கொள்ளத் தொடங்கின. இந்தத் தகவல்கள் மூலம் உலக வரலாறே புதியதோர் திருப்பத்தை அடைந்தது. மேலும், உள்ளுக்குள் பேசிக் கொண்டு, தமக்குள் இரகசியமாக முடிவெடுத்துக் கொண்டது போல், இந்த வல்லரசு நாடுகள் அனைத்துமே ஒருங்கிணைந்து, அட்மிரல் ரிச்சர்ட் பர்ட் சம்பந்தப் பட்ட இந்தக் கதையை வெளியில் கசிய விடாமல் மூடி மறைப்பதற்கு மிகவும் பிரயத்தணம் எடுத்துக் கொண்டன.
ஒரு கடற்படைத் தளபதியின் தகவல்களை மூடி மறைப்பதற்குப் பல வல்லரசு நாடுகள் உள்ளுக்குள் ஒன்று கூடி, ஒருமித்துப் பல பிரயத்தனங்களை எடுக்கும் அளவுக்கு இதில் என்ன விஷேசம் இருக்கிறது என்பது புதிராக இருந்தாலும், அட்மிரல் ரிச்சர்ச் பர்ட் அன்று சமர்ப்பித்த தகவல்களுக்கு இந்த வல்லரசு நாடுகள் அனைத்துமே உத்தியோக பூர்வமாக மிக முக்கியத்துவம் கொடுத்தன என்பது மட்டும் வரலாற்றில் உறுதிப்படுத்தப்பட்ட உண்மை. அது ஏன் என்பது தான் அன்று யாருக்குமே புரியவில்லை. மொத்தச் சம்பவத்தைச் சூழவும் விடை காணப்படாத ஒரு மர்மமே இருந்தது.
நாசிகளும் பறக்கும் தட்டும்: ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 1937ம் ஆண்டு, நாசி ஜேர்மனியின் ஒரு கிராமத்தையொட்டிய பிரதேசத்தில் மிகவும் சிறிய அளவிலான ஒரு பறக்கும் தட்டு, காரணம் அறியப்படாத ஏதோ ஒரு விபத்துக்குள்ளாகிக் கீழே விழுந்தது. ஊர் மக்கள் பீதியில் திகைத்துப் போயிருந்த வேளையில், ஹிட்லரின் நாசிப் படையைச் சேர்ந்த பல உயர் அதிகாரிகளை உள்ளடக்கிய விசேட இராணுவப் படைப்பிரிவொன்று திடீரென்று தளத்தை வந்தடைந்தது. பெரிய ஒரு ட்ராக் வண்டி சகிதம் தளத்தை வந்தடைந்த இந்த இராணுவப் பிரிவினர், அவசர அவசரமாக கீழே விழுந்து கிடந்த பறக்கும் தட்டை ட்ராக் வண்டியில் ஏற்றிக் கொண்டு, அங்கிருந்து விரைந்து சென்று விட்டனர். மேலும், இந்தச் செய்தி எந்த மீடியாக்களிலும் வெளியாகாதவாறும், ஹிட்லரின் நாசி அரசாங்கம், இந்த மொத்தச் சம்பவத்தையும் அன்று மூடி மறைத்தது.
ஹிட்லரின் தலைமை அதிகாரியாகவும், வலது கையைப் போலவும் செயற்பட்ட “ஹயின்ரிக் ஹிம்லர்” உடைய நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஓர் இராணுவ ஆய்வுகூடத்துக்கு இந்தப் பறக்கும் தட்டு இரகசியமாகக் கொண்டுசெல்லப் பட்டது. அங்கு இது குறித்த பல ஆய்வுகள் ஏக காலத்தில் முடுக்கி விடப்பட்டன.
மேலும், இந்தப் பறக்கும் தட்டு பற்றிய பல கேள்விகளுக்கு விடை காணும் பொருட்டு ஹிட்லர் இது குறித்த ஆய்வுகளில் அதிக கவனம் செலுத்தினார். ஏற்கனவே “வ்ரில்” இயக்கத்தின் பெண்கள் பிரிவுக்குத் தலைமை தாங்கிக் கொண்டிருந்த மரியா ஓர்சிக்கையும் ஹிட்லர் பிரத்தியேகமாக இந்த இரகசிய இராணுவ ஆய்வுகூடத்துக்கு வரவழைத்து, இது குறித்த ஆய்வுகளின் ஒரு பகுதிக்குத் தலைமை தாங்குமாறு நியமித்தார். இதன் மூலம், தூலே இயக்கத்தையும், வ்ரில் இயக்கத்தையும் இந்த விடயத்தில் ஒருங்கிணைத்துப் பணியாற்றுமாறு ஹிட்லர் பணித்தார்.
இரண்டு தனித்தனிப் பகுதிகளாக இந்த ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. ஆய்வின் ஒரு பகுதியானது, குறித்த பறக்கும் தட்டை ஆய்வு செய்து, அதன் தொழினுட்ப இரகசியங்களைக் கண்டுபிடிப்பதன் மூலம் இதே போன்ற பறக்கும் தட்டுக்களைத் தாமும் தயாரிக்க முயற்சிப்பதை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இந்தப் பகுதி ஆய்வுக்கு தூலே இயக்கமே பொறுப்பாக இருந்தது.
ஆய்வின் இரண்டாவது பகுதியானது, பறக்கும் தட்டு விபத்துக்குள்ளான போது, அதனுள் இருந்து குற்றுயிராக மீட்கப்பட்ட வேற்றுக் கிரகவாசி பற்றிய தகவல்களைத் திரட்டுவதாகவே இருந்தது. இந்த வேற்றுக் கிரகவாசியோடு டெலிபத்தி மூலம் தொடர்பாடல்களை மேற்கொண்டு, அவர்களது பூர்வீகம் பற்றிய தகவல்களைச் சேகரிக்கும் பணியில் தான் மரியா ஓர்சிக் பிரத்தியேகமாக நியமிக்கப் பட்டிருந்தார்.
குறிப்பிட்ட வேற்றுக்கிரகவாசியோடு மேற்கொண்ட பல தகவல் பரிமாற்றங்களதும், ஆய்வினதும் இறுதியில் மரியா சில சுவாரசியமான தகவல்களை ஹிட்லருக்கு சமர்ப்பித்தார். அவை என்ன தகவல்கள் என்பது குறித்த முழு விபரமும் தெரியவில்லையென்றாலும், அந்தத் தகவல்களைத் தொடர்ந்து மொத்த ஜேர்மனியும் தலைகீழாக மாறியது என்பது மட்டும் உறுதி.
இந்த ஆய்வின் முடிவையொட்டி ஹிட்லரின் நடவடிக்கைகளில் பல திடீர்த் திருப்பங்கள் ஏற்பட்டன. பல புதிய செயல்திட்டங்கள் நாசி ஜேர்மனியில் அவசர அவசரமாக ஆரம்பிக்கப் பட்டன. முதல் கட்ட நடவடிக்கையாக, தனித்தனி இயக்கங்களாக இருந்தவாறே பறக்கும் தட்டு குறித்த ஆய்வில் ஈடுபட்டிருந்த வ்ரில் மற்றும் தூலே இயக்கங்களை, ஆய்வின் முடிவில், ஒரே சக்தியாக இயங்குமாறு இரண்டு இயக்கங்களையும் ஹிட்லர் ஒன்றிணைத்தார்.
இதைத் தொடர்ந்து பல அவசரகால செயல்திட்டங்களின் அடிப்படையில் உலகின் நாலாபக்கங்களுக்கும் பல விசேட குழுக்களை நாசி அரசு அனுப்பி வைத்தது. ஆர்க்டிக் மற்றும் அண்ட்டார்க்டிக் ஆகிய வட, தென் துருவங்களுக்கென்று விஷேட ஆய்வுக் குழுக்கள் அனுப்பப் பட்டன. மேலும், இமயமலை மேட்டுநிலத் தேசமான திபெத் நோக்கிப் பிரிதொரு ஆய்வுக் குழு அனுப்பப் பட்டது. இந்தக் குழுக்களுக்கும், திபெத்தின் அப்போதைய தலாய் லாமாவுக்கும் இடையில் இரகசிய பேச்சுவார்த்தைகள் நடந்தன.
இந்த இரகசியப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, திபெத்திலிருந்து நூற்றுக்கணக்கான புத்த பிக்குகள் ஜேர்மனிக்கு வந்து சேர்ந்தனர். இவ்வாறு வந்து சேர்ந்த பல புத்த பிக்குகளும், “லாமா”க்களும் நாசி ஜேர்மனியினுள் பல இரகசிய செயல்திட்டங்களை ஆரம்பித்தனர். உள்ளுக்குள் என்ன நடந்ததென்பது யாருக்கும் தெரியவில்லை. திபெத்தின் புத்த பிக்குகளுக்கும், ஜேர்மனியில் இருக்கும் நாசிகளுக்கும் இடையில் அப்படி என்ன தான் இரகசியத் தொடர்பு உருவானது என்றும், இவர்களுக்கிடையில் திடீரென்று முளைத்த பிரிக்க முடியாத பந்தம் ஏன் என்ற மர்மமும் புரியவேயில்லை. ஆனால், ஏதோ ஒரு பாரிய குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டே இந்தத் தொடர்புகளும், அதையொட்டிய செயல்திட்டங்களும் அமைந்திருந்தன என்பது மட்டும் உறுதி.
மேற்குறிப்பிடப்பட்ட சம்பவங்கள் குறித்த சில ஆதரங்களைப் பின்வரும் லின்க்குகளில் பார்க்கலாம்:
https://tibettalk.wordpress.com/2009/12/24/the-influence-of-the-occult-on-the-1939-german-expedition-to-tibet/ http://exopolitics.org/wp-content/uploads/2015/10/Bundesarchiv_Bild_135-KA-11-008_Tibetexpedition_Expedition_zu_Gast_bei_Gould.jpg
இவ்வாறு பல ஆய்வுக் குழுக்கள் மூலம் நடத்தப்பட்ட ஆய்வுகளின் விளைவாக இறுதியில் ஹிட்லரின் நாசி ஜேர்மனி சில முடிவுகளை எடுத்தது. குறிப்பாக 1938ம் ஆண்டு, மனித நடமாட்டமே இல்லாத, முழுவதும் பணியால் மூடப்பட்ட, மனிதன் வாழ்வதற்குக் கொஞ்சம் கூட பொருத்தமில்லாத அண்ட்டார்க்டிக் எனும் தென் துருவ நிலப்பரப்பில் தனது இருப்பை உறுதிப் படுத்திக் கொள்ளும் நடவடிக்கைகளில் ஜேர்மனி இறங்கியது. இந்த முயற்சிக்காக தன்னிடமிருந்த மொத்த வளங்களையும், செல்வங்களையும் ஜேர்மனி வாரியிரைத்தது. இவ்வளவு பிரயத்தணம் எடுக்கும் அளவுக்கு, அண்ட்டார்க்டிக் கண்டத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது என்று அன்று யாருக்கும் புரியவில்லை.
பல பாரிய முயற்சிகளின் பின்னர், இறுதியில் அண்ட்டார்க்டிக் கண்டத்தின் “Queen Maud Land” எனும் கரையோரப் பிரதேசத்தில் ஹிட்லரின் நாசி இராணுவம் தரையிறங்கித் தனது இராணுவத் தளத்தை வெற்றிகரமாக அமைத்தது. இதன் மூலம் அண்ட்டார்க்டிக் கண்டத்தின் குறிப்பிட்ட நிலப்பகுதியை ஜேர்மனி சொந்தம் கொண்டாட ஆரம்பித்தது. தாம் கைப்பற்றிய இந்தப் புதிய துருவ நிலப்பரப்பை “புதிய ஸ்வாபியா” (New Swabia) என்று பெயரிட்டு ஜேர்மனி பிரகடனமும் செய்தது.
இதைத் தொடர்ந்து பத்து வருடங்களாக நாசி ஜேர்மனியின் பல நடவடிக்கைகள் மர்மமாகவே இருந்து வந்தன. விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் என்று மட்டுமில்லாமல், இவர்களது பல இராணுவ நடவடிக்கைகள் கூட மர்மங்கள் நிறைந்த புதிராகவே இருந்து வந்தன.
இன் ஷா அல்லாஹ் வளரும்...
- அபூ மலிக்
Episode 15: 2ம் உலகப்போர் |