Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் - Episode 53
Posted By:Hajas On 5/6/2017 4:42:19 AM

cialis online

cialis 5 mg

பறக்கும் தட்டுக்களும் ஜின்களும்
==============================

by - Abu Malik

தொடர் 4: வேற்றுக்கிரக வேஷம்

Episode 52: (Nordic Aliens தொடர்ச்சி 06)

.Episode 53: (Nordic Aliens தொடர்ச்சி 07)

Image may contain: 4 people, people smiling, people standing and text
.
கட்டம் 3 – லாஹு (Lahu) தொடர்பு (2005/2006):
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பீட்டர் கூரி வசம் இருந்த இரண்டு முடி இழைகளையும் DNA பரிசோதனைகளுக்கு உட்படுத்தியதன் விளைவாக அதில் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத இரண்டு வேறுபட்ட மனித இனத்தவர்களுக்குரிய கையெழுத்துக்கள் இருக்கவே, இதில் ஏதோ குழப்பம் இருக்கிறது என்பதை Bill Chalker புரிந்து கொண்டதால், இந்தக் குழப்பத்துக்குத் தீர்வு காண வேண்டுமென்றால், பீட்டர் கூரிக்கும், அவரிடம் வேற்றுக்கிரகவாசிகள் விட்டுச் சென்ற முடி இழைகளுக்கும், தென் சீனாவின் யுன்னான் பிராந்தியத்தில் தனித்த இனமாக வாழும் லாஹு பழங்குடி மக்களுக்கும் இடையிலுள்ள தொடர்பு என்னவென்பதைக் கண்டு பிடித்தாக வேண்டும் என்று உறுதி பூண்டார். இதன் விளைவாக Bill Chalker இன் ஆய்வின் அடுத்த கட்டம் இந்தப் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு அமைந்தன.

பல விரிவான ஆய்வுகளை Bill Chalker மேற்கொண்டதன் பிறகு கூட, எந்த விதத்திலும் அவரால் இந்த மூன்று அம்சங்களுக்கும் இடையில் தர்க்க ரீதியான எந்தத் தொடர்பையும் கடைசி வரை கற்பிக்கவே முடியவில்லை.

அதாவது, ஒருபுறம் பீட்டர் கூரிக்கும், யுன்னான் மாகாணத்தில் வாழும் லாஹு பழங்குடி மக்களுக்கும் இடையில் எந்தச் சந்தர்ப்பத்திலும் எந்தத் தொடர்புமே ஏற்படுவதற்கான எந்த முகாந்திரமும் அவரது வாழ்வில் அறவே இருக்கவில்லை. இன்னொரு புறம், வட ஐரோப்பிய வெள்ளை இனத்துப் பெண்ணொருத்திக்குச் சொந்தமாக இருக்க வேண்டிய ஒரு முடி இழைக்கும், லாஹு பழங்குடிகளுக்கும் இடையில் எந்தத் தொடர்பும் ஏற்படுவதற்கான முகாந்திரங்கள் கூட இருக்கவில்லை. வேறொரு புறம், அவுஸ்திரேலியாவில் வாழும் பல்வேறு பட்ட மனித இனத்தவர்களையும் தான் மொத்தமாக எடுத்துக் கொண்டாலும், அவர்களில் எந்த இனத்தவர்களுக்கும், லாஹு பழங்குடிகளுக்கும் இடையில் கூட எந்தவிதமான நேரடி சம்பந்தத்தையும் கற்பிப்பதற்கு ஏதுவான தடயங்களைக் கூட அவரால் காண முடியவில்லை. 

பிறகு எப்படி இந்தச் சம்பந்தம் ஏற்பட்டது? சம்பந்தமே இல்லாமல் உலகின் எங்கோ ஒரு மூலையில் தனித்து வாழக் கூடிய ஓர் இனத்தவரின் மரபணுத் தடயங்கள் ஒரு வட நாட்டு வெள்ளைப் பெண்ணின் முடி இழைக்குள் எப்படி நுழைந்தன? இந்த இரண்டுக்குமே சம்பந்தமில்லாமல், உலகின் இன்னொரு தெற்கு மூலையான அவுஸ்திரேலியாவில் வாழும் பீட்டரின் பிறப்புறுப்பின் மேல் அந்த முடி இழைகள் எப்படி வந்து ஒட்டின?

என்ன தான் உள்ளுக்குள் இருந்து கொண்டு பல அடிப்படைகளில் ஆய்வு செய்த போதும், கடைசி வரை இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை. எனவே, இறுதியாக இந்தப் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட “லாஹு” இனத்தவர்களது பூர்வீகம், வரலாறு, கலாச்சாரப் பின்னணி, யுன்னான் பிராந்தியத்தின் சமகால நிகழ்வுகள் போன்றவை பற்றிய ஒரு விரிவான ஆய்வை மேற்கொள்வதன் மூலமாவது விடைகள் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில், லாஹு இனத்தவர்களது பூர்வீகம் குறித்த நேரடி ஆய்வுகளில் Bill Chalker இறங்கினார். இதுவரை அவருக்குக் கிடைக்காத பல விடைகள், லாஹு இனத்தவர்கள், மற்றும் யுன்னான் பிராந்தியம் ஆகியவற்றின் ஆய்வின் போது கிடைக்க ஆரம்பித்தன. இதுவரை புலப்படாமல் இருந்த பல உண்மைகள், இந்த ஆய்வின் போது புலப்பட ஆரம்பித்தன. அவை பற்றிய சுருக்கத்தை இப்போது பார்க்கலாம்.

யுன்னான் பிராந்தியம், மற்றும் அதையொட்டிய வட தாய்லாந்து எல்லைப் பிராந்தியங்கள் ஆகிய பகுதிகள் குறித்துத் திரட்டப் பட்ட தகவல்களிலெல்லாம் சுவாரசியமான ஓர் அம்சத்தைப் பொதுப்படையாகவும், தெளிவாகவும் அவதானிக்க முடிந்தது. அது வேறெதுவுமல்ல; தென் சீனா, வட தாய்லாந்து, பர்மா, லாவோஸ், வியட்னாம் ஆகிய பிராந்தியங்களை உள்ளடக்கிய அந்தப் பாரிய நிலப்பரப்பில் குறிப்பாக யுன்னான் பிராந்தியத்தையொட்டியே வரலாறு நெடுகிலும் பறக்கும் தட்டுக்கள், மற்றும் வேற்றுக்கிரகவாசிகளின் நடமாட்டங்கள் ஏராளம் இருந்து வருவதை அவதானிக்க முடிகிறது என்பது தான் அந்த உண்மை.

குறிப்பாக யுன்னான் பிராந்தியத்தை மையமாகக் கொண்ட பிரதேசங்களில் அடிக்கடி நிகழும் நிகழ்வுகளில் ஒன்று தான் இரவு நேரங்களில் வானத்தில் விசித்திரமான வெளிச்சங்களால் ஆன தோற்றங்கள் / காட்சிகள் சார்ந்த சம்பவங்கள். இவ்வாறான நிகழ்வுகள் யுன்னான் பிரதேச மக்கள் வாழ்வில் சகஜமான நிகழ்வுகளாகவே மாறியிருப்பதை அவதானிக்க முடிகிறது.

மேலும், லாஹு இனத்தவர்களில் அனேகமானோரின் மத நம்பிக்கை / வழிபாடுகள், பேய், பிசாசு, ஆவிகள் போன்றவற்றின் அடிப்படையிலான “ஷாமனிஸம்” (Shamanism) எனப்படும் மதம் சார்ந்ததாகவே இருக்கிறது. அதிலும் குறிப்பாக லாஹு மக்களின் ஷாமனிஸ வழிபாடுகளில் சம்பந்தப்படும் குறியீடுகள் / சின்னங்கள் / உருவங்கள் போன்றவற்றில் அனேகமானவை வேற்றுக்கிரகவாசிகள் சார்ந்தவையாக இருப்பது இன்னொரு புறம் பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது.

Dr. Anthony Walker என்பவர், லாஹு பழங்குடி இனத்தவர்களது பூர்வீகம், கலாச்சாரப் பின்னணிகள் குறித்து மிகவும் விரிவான, ஆழமான ஓர் ஆய்வை ஏற்கனவே மேற்கொண்டவர். அவரது ஆய்வு, “Merit and the Millenium – Routine and Crisis in the Ritual Lives of the Lahu People” எனும் தலைப்பில், 907 பக்கங்களைக் கொண்ட ஓர் ஆய்வறிக்கையாக வெளியிடப்பட்டது. இந்த ஆய்வறிக்கையிலும் ஒரு சுவாரசியமான செய்தி கூறப்பட்டிருக்கிறது. 

அதாவது, ஷாமன் மதத்தைப் பொருத்தவரை, அதன் அனேகமான மத குருக்களுக்கு ஆவிகள் / பேய் பிசாசுகள் / இஷ்ட தெய்வங்கள் போன்ற பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் பல்வேறு ஷைத்தானிய ஜின்களோடு தொடர்புகள் இருப்பது வழமை. ஷாமன் மத நம்பிக்கைகளின் படி ஒரு மதகுருவின் தரம் / அந்தஸ்த்து என்பது, மறைவான சக்திகளோடு (ஜின்களோடு) அவருக்கு இருக்கும் நேரடித் தொடர்புகளின் அளவின் அடிப்படையிலேயே தீர்மாணிக்கப் படுவதுண்டு.

இந்த அடிப்படையில் Dr. Anthony Walker இன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் செய்தி என்னவென்றால், லாஹு மக்களிடையே மதிப்புக்குரிய மதகுருக்களாகக் கருதப்படும் பலருக்கும் ஆகாயத்திலிருந்து இறங்கி வரக் கூடிய வின்னுலக சக்திகளோடு நேரடித் தொடர்புகள் இருப்பதாகப் பரவலாக நம்பப் படுகிறது. அவ்வாறானவர்களுள் ஒருவர் தான் “கா நு” (Ca Nu) என்றழைக்கப்படுபவர். மறைவான சக்திகள் குறித்து இவர் குறிப்பிடும் போது, வானத்திலிருந்து இறங்கி வரும் தேவர்களோடு தனக்கு நேரடித் தொடர்பு இருப்பதாகவும், அடிக்கடி இந்த தேவர்கள் வின்னுலகிலிருந்து இறங்கி வந்து தன்னைச் சந்தித்து விட்டுச் செல்வதாகவும், இவ்வாறு வந்து வந்த சந்தர்ப்பங்களில் ஒரு தடவை ஒளிரும் பளிங்குக் கல் ஒன்றைத் தனக்குப் பரிசளித்து விட்டுச் சென்றதாகவும், இந்தப் பளிங்குக் கல்லில் பல அறிவுறுத்தல்களை உள்ளடக்கிய குறியீடுகள் கூட பொறிக்கப் பட்டுள்ளதாகவும் கூறியதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. 

மேலும், இது பற்றி அவர் கூறுகையில், பகல் நேரங்களில் சூரியனை வெறுங்கண்ணால் பார்க்கும் போது, அதன் குறுக்காக விசித்திரமான சில ஓட்டைகள் போன்ற கட்டமைப்புக்கள் தனது கண்களுக்குத் தெரியும் விதமாக நகர்வதாகவும், நட்சத்திரங்கள் குறித்த பல இரகசியங்களைக் கூட இந்த வின்னுலக தேவர்கள் தனக்குக் கற்றுத் தந்திருப்பதாகவும், வானிலிருந்து இறங்கி வரக் கூடிய இவர்களது (வேற்றுக்கிரகவாசிகளது) வருகைகள், தொடர்புகள் எல்லாம் ஆத்மீக ரீதியான பல தீர்க்கதரிசணங்களின் வெளிப்பாடுகளே என்றும் கூட இவர் குறிப்பிட்டதாகவும் கூறப் பட்டுள்ளது.

இவை அல்லாமல் இன்னும் பல அடிப்படைகளில் கூட பல்வேறு செய்திகள் காணக் கிடைக்கின்றன. சீனாவைச் சேர்ந்த புரட்சி எழுத்தாளர்களுள் ஒருவரான Ma Jian என்பவர், யுன்னான் மாகாணத்தின் தெற்குப் பகுதியில், லாஹு இனத்தவர்கள் வாழும் பகுதியையொட்டி 1986 ஆம் ஆண்டு, ஒளி பிழம்பினாலான ஒரு கோள வடிவத்தை ஒருமுறை நேரடியாகத் தானே கண்டதாக வாக்குமூலம் வழங்கியதாக Bill Chalker குறிப்பிடுகிறார். இது பற்றி அவர் கூறிய வாக்குமூலம் பின்வருமாறு இருந்ததாக Bill Chalker குறிப்பிடுகிறார்:

“கைதாகி இருந்த நான், அங்கிருந்து தப்பித்து ஓடி வருகையில், ஆபத்தான சில காட்டுப் பாதைகள் வழியாகப் பயணிக்க வேண்டி ஏற்பட்டது. இவ்வாறு வந்து கொண்டிருக்கும் போது, திடீரென்று காரிருளுக்குள் இருந்து ஒரு வெளிச்சம் தோன்றியது. அது ஒரு டோர்ச் வெளிச்சமாகவோ, தீப்பந்தம், மெழுகுவர்த்தி போன்றவை சார்ந்த வெளிச்சமாகவோ இருக்கவில்லை. வேறொரு பரிமாணத்திலிருந்து வரும் ஒரு வெளிச்சம் போலவே அது இருந்தது. ஓர் ஓடையிலிருந்து அது உதித்து, மரங்கள் அடர்ந்த காட்டை ஊடறுத்துக் கொண்டு இந்த வெளிச்சம் வந்தது. பிறகு இந்த வெளிச்சம் நான் இருக்கும் இடத்திலிருந்து கிட்டத்தட்ட பத்து மீட்டர் அளவு தூரத்தில் அப்படியே நின்று விட்டது. பிறகு அது எனது உயரத்தின் அளவுக்குக் கீழிறங்கியது. நான் தொடர்ந்தும் எனது பாதையில் நடக்கலானேன். ஆனால், தீப்பிழம்பு போன்ற இந்தப் பந்தும் என்னைத் தொடர்ந்து அதே தூரத்தில் வந்து கொண்டே இருந்தது. கிட்டத்தட்ட இருபது கிலோமீட்டர் அளவு தூரத்துக்கு வானம் வெளுத்து, விடியும் வரை இரவு முழுவதும் இந்த வெளிச்சம் என்னைத் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. அதன் நடவடிக்கைகளிலிருந்து, அந்த இருள் சூழ்ந்த காட்டுப் பாதையில் எனக்கு வழிகாட்டுவதற்காகவே என்னை இரவு முழுவதும் அது தொடர்ந்து வந்ததைப் போல தான் என்னால் அதை உணர முடிந்தது.”

இந்தச் சம்பவத்தை அந்த எழுத்தாளர் “Red Dust” எனும் தனது நூலில் கூட குறிப்பிட்டிருக்கிறார் என்று Bill Chalker மேலும் சுட்டிக் காட்டுகிறார். Bill Chalker இவரை 2003ம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற எழுத்தாளர் திருவிழாவின் போதே சந்தித்ததாகக் குறிப்பிடுகிறார். இதன் போது இந்தச் சம்பவம் குறித்து அவரிடம் கேட்கப் பட்ட போது, அதை அவர் உறுதிப்படுத்தியதாகவும் கூறுகிறார்.

மேலும் இது பற்றி Bill Chalker, பின்வரும் தகவல்களையும் மேலதிகமாகக் குறிப்பிடுகிறார்: 

“லாஹு பிரதேசத்திலிருக்கும் Lancang எனும் ஆற்றையொட்டிய பிரதேசங்களில் இந்த விசித்திர வெளிச்சம் பற்றிய அமானுஷ்யங்கள் மிகவும் பிரபலமான ஒன்று. அந்தப் பிரதேசங்களில் இது சகஜமாக நடக்கக் கூடிய ஒன்று. இதற்கு “நாகா வெளிச்சம்” (Naga light phenomena) என்று பெயர் கூட வழங்கப் பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. ஒருவேளை இது உலக லாபங்களை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு வதந்தியாக இருக்குமோ என்று நான் சந்தேகித்ததன் விளைவாக இதை நேரடியாகக் கண்களால் பார்த்து, வீடியோ ஆதாரமாகப் பதிவு செய்ய விரும்பினேன். அதனடிப்படையில் நேரடியாகச் சென்று பார்த்த போது, 2006ம் ஆண்டு எனது கண்களால் நானே இந்த அமானுஷ்யமான நாகா ஒளிப் பந்துகளைக் கண்டது மட்டுமல்லாமல், ஒளிப்பதிவும் செய்து கொண்டேன். இதன் மூலம், இது ஒரு வதந்தியல்ல என்பதையும், நிஜத்தில் அன்றாடம் நடந்து கொண்டிருக்கக் கூடிய ஒரு சம்பவம் என்பதையும் எனது புலனாய்வுகளில் நான் கண்டுகொண்டேன்.”

“நான் யுன்னான் பிரயாணம் மேற்கொண்டு திரும்பி வந்து அடுத்த மாதம், அதாவது நம்வம்பர் மாதம் 2006 இல் Kunming UFO Research Association எனும் அமைப்பைச் சேர்ந்த Yang Zheng என்பவரிடமிருந்து மிகவும் அதிர்ச்சிகரமான இன்னொரு செய்தி எனக்குக் கிடைத்தது. அதாவது, Zhenyuan Yi, Hani ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களும், மற்றும் லாஹு இனத்தவர்களும் ஆக ஆயிரக்கணக்கான கிராமவாசிகள் நேரடியாகக் கண்ட ஒரு காட்சி பற்றிய செய்தியே இது. 

வெள்ளை நிற அரைக்கோள வடிவத்திலான 7 விசித்திர வானூர்திகள் CPC (Chinese Communist Party) எனும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குச் சொந்தமான ஒரு கட்டிடத்திற்கு மேலாகக் கிட்டத்தட்ட இரண்டு மணித்தியாலங்கள் அந்தரத்தில் நின்று கொண்டே இருந்ததாகவும், இந்தக் காட்சியை ஆயிரக்கணக்கான ஊர் மக்கள் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்ததாகவும் இவர் குறிப்பிட்டார். மேலும் இந்த ஏழு ஊர்திகளும் அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்த போது, திடமான ஒரே வடிவத்தில் இருக்கவில்லை. மாறாக, நேரத்து நேரம் இந்த ஊர்திகள் ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்துக்கு உருமாறிக் கொண்டே இருந்தன. இதன் அமானுஷ்யத் தன்மையை மிகவும் ஊர்ஜிதப் படுத்தியது அடிக்கடி உருமாறிய இந்த விந்தையான செயற்பாடு தான்.

இது மிகவும் ஒரு சுவாரசியமான ஒரு காட்சி என்பதாலும், மேலும் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது கிராமப் புறத்தில் என்பதாலும், செய்தி காட்டுத்தீ போல் வாய்க்கு வாய் சென்று படு வேகமாக அந்தப் பிராந்தியம் முழுவதுமே பரவி விடவே, அக்கம்பக்கத்து ஊர்வாசிகள் கூட கூட்டம் கூட்டமாக அங்கு படையெடுத்து வருவது போல் வந்து இந்தக் காட்சியை வேடிக்கை பார்க்கலாயினர்.

இறுதியில், இந்த ஊர்திகள் அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தது மிகவும் தாழ்வான உயரத்தில் என்பதால், இதில் ஒன்றைப் பிடித்தால் என்ன? எனும் ஆர்வம் ஊர் மக்களுக்கு ஏற்படவே, அவர்கள் இந்த ஊர்திகளைப் பிடிக்கும் எண்ணத்தோடு நெருங்கியதும் திடீரென்று இந்த ஏழு ஊர்திகளும் மாயமாக மறைந்து விட்டன.

இந்தத் தகவலையும் நான் வேறு பல அடிப்படைகளிலும் உறுதிப் படுத்திக் கொண்டேன். இதுவும் எனது ஆய்வுக்கு மிகவும் பயனுள்ள தகவல் என்பதால், இதையும் உள்ளடக்கியிருக்கிறேன்.”

யுன்னான் மாகாணத்தைக் குறித்த இன்னுமொரு சுவாரசியமான செய்தி இங்கு குறிப்பிடத் தக்கது. 1975ம் ஆண்டு சீன மக்கள் சுதந்திரப் படையைச் (Chinese People’s Liberation Army) சேர்ந்த இரண்டு படை வீரர்கள், யுன்னான் மாகானத்தில் Jian-Shui எனும் ஊர் எல்லையில் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பிரும்மாண்டமான வட்டத்தட்டு வடிவத்திலான ஒரு பறக்கும் தட்டைக் கண்டனர். இந்தப் பறக்கும்தட்டு இந்த இரண்டு படைவீரர்களையும் சுற்றி சற்று நேரம் வட்டமிட்டுக் கொண்டிருந்தது மட்டுமல்லாமல், மென்மையான செம்மஞ்சள் நிறத்திலான ஓர் ஒளிக்கற்றையை அவர்கள் மீது பாய்ச்சவும் செய்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த இரண்டு வீரர்களில் ஒருவர், உதவிக்கு இன்னும் படை வீரர்களை அழைத்து வரும் பொருட்டு பக்கத்திலிருந்த தமது இராணுவ முகாமுக்குத் தலைதெறிக்க ஓடினார். ஓடிச்சென்று முறையிட்ட அடுத்த நிமிடமே துணைக்கு இன்னும் பத்துப் பன்னிரண்டு வீரர்கள் ஆயுதபாணிகளாக சம்பவத் தளத்தை நோக்கி ஓரிரு நிமிடங்களுக்குள் விரைந்து வந்து சேர்ந்தனர்.

சம்பவத்தளத்தை இராணுவ வீரர்கள் அடைந்த போது, ஏற்கனவே தனிமையில் விட்டுச் செல்லப்பட்ட படைவீரனை காணவில்லை. சம்பவத் தளத்தைச் சுற்றி சல்லடை போட்டுத் தேடிப் பார்த்த போதும் விடுபட்ட இராணுவ வீரன் காணப்படவே இல்லை. அதன் பிறகு அந்த இடத்துக்கு மேலதிகமாக இன்னும் நான்கு இராணுவ வீரர்களைக் காவலுக்கு நிறுத்தி விட்டு எஞ்சிய படைப்பிரிவு முகாமுக்குத் திரும்பிச் சென்றது. நான்கு வீரர்களும் விழிப்போடு காவல் காக்கலானார்கள்.

ஒருசில மணித்தியாலங்களின் பின்னர், காவல் காத்துக் கொண்டிருந்த வீரர்களின் முதுகுப்புறம் இருந்து யாரோ வேதனையில் முனகுவது போன்ற சத்தம் கேட்டது. சட்டென்று திரும்பிப் பார்த்த போது, ஏற்கனவே காணாமல் போயிருந்த படைவீரன் அங்கு திடீரென்று முளைத்தது போல் நிலத்தில் விழுந்து கிடந்ததையும், சுயநினைவற்ற நிலையில் அந்த வீரனின் வாயிலிருந்து முனகல் சத்தம் வந்து கொண்டிருந்ததையும் கண்டனர்.

அருகில் சென்று அந்த வீரனைத் தூக்க முயன்ற போது நான்கு இராணுவ வீரர்களும் அதிர்ச்சியடைந்து போயினர். ஏனெனில், ஒருசில மணித்தியாலங்களுக்கு முன்னர் காணாமல் போன அதே வீரன் திரும்பவும் மீண்டிருக்கும் கோலம் தலைகீழாக இருந்தது. அவனது முகத்தில், வருடக்கணக்காக வளர்க்கப் பட்டது போன்ற நீண்ட தாடியும் மீசையும் அந்த ஓரிரு மணிப்பொழுதுகளில் வளர்ந்திருந்ததைக் கண்டனர். 

அவன் மீண்டும் சுயநினைவுக்குக் மீண்ட பிறகு என்ன நடந்ததென்று விசாரித்த போது, எது பற்றிய ஞாபகவும் அந்த வீரனுக்கு இருக்கவில்லை. சம்பவத்தளம், சம்பவம் போன்ற அனைத்தையுமே சுத்தமாக மறந்தவனாக அவன் மேலும் கீழும் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான். மேலும், அவனது கைக்கடிகாரத்தைச் சோதித்துப் பார்த்த போது, நீண்ட நாட்களுக்கு முன்னரே செயலிழந்து நின்று போன ஒரு கடிகாரத்தைப் போலவே அது தோற்றமளித்தது. மேலும், அந்தப் படைவீரனின் கையிலிருந்த துப்பாக்கி, மற்றும் கடிகாரம் ஆகிய உலோகத்தாலானா அனைத்துமே சற்று காந்தத்தன்மை கொண்டதாக இருந்ததையும் அவதானிக்க முடிந்தது.

இந்தச் சம்பவத்தின் பல அம்சங்கள் இதுவரை தீர்க்கப்படாத மர்மமாகவே இருக்கின்றன. இது மட்டுமல்லாமல், இது போன்ற இன்னும் ஏராளமான சான்றுகள் காணக்கிடைக்கின்றன.

சீனாவின் வரலாற்றிலேயே அதிக எண்ணிக்கையான பறக்கும்தட்டுச் சம்பவங்கள் உத்தியோகபூர்வமாகவும், அசைக்க முடியாத வீடியோ, புகைப்பட ஆதாரங்களோடும் ஆச்சரியப்படத்தக்க அளவுக்கு அதிகம் பதிவாகியிருப்பது 2009, மற்றும் 2010 ஆண்டுகளையொட்டி காலப்பகுதிகளிலேயே ஆகும். இந்தச் சம்பவங்களில் பெரும்பாலானவை பதிவாகியிருப்பது குறிப்பாக யுன்னான் பிராந்தியத்தில் என்பது தான் ஆச்சரியப்படத்தக்க உண்மை.

யுன்னான் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பிரிவில் (Yunnan University - physics department) கடமையாற்றும் பேராசிரியரும், Kunming UFO Research Association எனும் அமைப்பின் தலைவருமான Professor Zhang Yifang என்பவர், யுன்னான் பிராந்தியத்துக்கும், வேற்றுக்கிரகவாசிகளுக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவி வரும் தொடர்புகள் குறித்துக் கூறிப்பிடுகையில், ஓர் இயற்பியளாளர் (Physicist), மற்றும் வானியலாளர் (Astronomer) எனும் அடிப்படைகளில் கூட தான் இந்த வேற்றுக்கிரகவாசிகளின் யதார்த்தத் தன்மைகளை நூறு வீதம் உறுதிப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது பற்றிக் கூறுகையில், யுன்னான், சிங்கியாங், மற்றும் ஹெய்லொங்ஜியாங் ஆகிய மாகாணங்களில் வேற்றுக்கிரகவாசிகளின் நடமாட்டம் என்பது சகஜமான ஒரு நிகழ்வாகவே இருப்பதாகவும் இவர் குறிப்பிடுகிறார். அதிலும் குறிப்பாக யுன்னான் மாகாணத்தின் தலைநகரான குன்மிங் எனும் ஊரின் வரலாற்றில் பெரும் பகுதி வேற்றுக்கிரகவாசிகளால் நிரம்பி வழிவதாகவும் இவர் சுட்டிக்காட்டினார்.

இந்தப் பேராசிரியரின் கருத்துக்களில் அனேகமானவை சீனாவில் பரவலாக ஜனரஞ்சகமாகியிருக்கும் கருத்துக்கள் என்றே Bill Chalker குறிப்பிடுகிறார். மேலும், தான் இவரை 2006ம் ஆண்டு குன்மிங் நகரில் நேரடியாகவே சந்தித்ததாகவும், அத்தோடு இவரின் அனுசரனையோடு குன்மிங் பல்கலைக் கழகத்தில் வேற்றுக்கிரகவாசிகள் குறித்த ஒரு சமர்ப்பண உரையைக் கூட தான் நிகழ்த்தி விட்டு வந்ததாகவும் Bill Chalker குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு பல்வேறு கோணங்களில் தனது ஆய்வை மேற்கொண்ட Bill Chalker இறுதியில் கண்டுகொண்ட உண்மை ஒன்று தான். பீட்டர் கூரிக்கும், மர்மப் பெண்ணின் முடி இழைகளுக்கும், யுன்னான் பிராந்திய லாஹு மக்களுக்கும் இடையில் மனித யதார்த்தத்தின் அடிப்படையில் நேரடித் தொடர்பை ஏற்படுத்தும் விதமான எந்த முகாந்திரங்களும் அறவே இருக்கவில்லை; வேற்றுக்கிரகவாசிகள் எனும் ஒரேயோர் அம்சத்தை மட்டும் தவிர.

இதிலிருந்து அவரது ஆய்வின் இறுதி முடிவாகப் பின்வரும் தீர்மாணமே அறிவிக்கப் பட்டது:

பீட்டர் கூரியிடம் மர்மப் பெண் விட்டுச்சென்ற முடி இழைகளுக்கும் லாஹு பழங்குடிகளுக்கும் இடையில் இருக்கும் ஒரே சம்பந்தம் வேற்றுக்கிரகவாசிகள் மட்டும் தான். இந்தச் சம்பந்தம் எந்த அளவுக்கு ஆழமானது என்பதைத் திட்டவட்டமாகக் கூற முடியவில்லை. ஆனால், இதிலிருந்து ஓரளவு அனுமானிக்க முடிவது ஒன்று தான். பீட்டர் கூரியிடம் வந்து விட்டுச் சென்ற பெண், இயற்கையான ஒரு மனித இனப் பெண் அல்ல என்பது உறுதி. அது ஒரு வேளை வேற்றுக்கிரகவாசியாகவே கூட இருக்கலாம். அல்லது, வேற்றுக்கிரகவாசிகள், வட நாட்டு Nordic இனத்தவர்கள், மற்றும் யுன்னான் பிராந்திய லாஹு மக்கள் ஆகிய மூன்று சாராரினதும் உயிரியல் தரவுகளை ஏதோ ஓர் அடிப்படையில் கலந்து, அதிலிருந்து உருவாக்கப்பட்ட ஒரு கலப்பினப் (Nordic-Lahu Hybrid) பெண்ணாகவும் கூட அது இருக்கலாம். இதைத் தாண்டிய மூன்றாவது ஒரு முகாந்திரம் இங்கு இல்லை.

Nordic ரக வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய நமது ஆய்வுக்குத் தேவையான தரவுகளை நாம் போதுமான அளவு மேற்குறிப்பிடப்பட்ட சம்பவங்கள் மூலம் பெற்றுக் கொண்டோம். இப்போதைக்கு இவ்வளவும் போதுமென்று நினைக்கிறேன். இது குறித்து மேலதிக ஆய்வுகளில் ஈடுபட விரும்புவோர், பின்வரும் இணைப்புக்கள் வாயிலாகத் தமது தேடல்களை ஆரம்பிக்கலாம்:

http://www.auforn.com/Bill_Chalker_22.htm
http://www.bibliotecapleyades.net/ciencia/ciencia_genoma11.htm
http://www.bibliotecapleyades.net/ciencia/ciencia_tuathadedanaan06.htm
https://en.wikipedia.org/wiki/Nordic_aliens

இதுவரை நாம் Nordic இனத்தவர்கள் பற்றிப் பார்த்தோம். இனி நாம் பார்க்கவிருப்பது இன்னும் ஒரு வேற்றுக்கிரகவாசி இனத்தவர்களைப் பற்றி மட்டும் தான். இந்த இனத்தவர்கள் பற்றியும் சற்று விரிவாகவும், நிதானமாகவும் நோக்க வேண்டியுள்ளது. ஏனெனில், இவர்களும் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியவர்கள்; நமது ஆய்வுக்கு இன்றியமையாதவர்கள்.

ஆனால், இந்த இனத்தவர்களைப் பற்றி நாம் அடுத்த கட்டமாக நோக்க முன், நமது தொடருக்கு அவசியமான இன்னொரு பகுதியை இங்கு நாம் தெளிவு படுத்திக் கொண்டு, அதன் பின்னர் இவர்கள் பற்றிய ஆய்வுக்குள் நுழைவதே பொருத்தமென்று கருதுகிறேன்.

அதாவது, ஏற்கனவே நாம் இந்த வேற்றுக்கிரகவாசிகளைப் பல நியாயங்களின் அடிப்படையில் ஜின்கள் என்றே குறிப்பிட்டுள்ளோம். இதுவரை இந்த ஜின் இனத்தவர்கள் குறித்துப் பல சுவாரசியமான கருத்துக்களை நாம் எதிர்கொண்டு விட்டோம். இவற்றுள், மார்க்க ஆதாரங்களோடு உரசிப் பார்க்கப்பட வேண்டிய பல கருத்துக்களும் உள்ளன. இவற்றுள் பிரதானமாக நோக்கப்பட வேண்டிய கருத்துக்களை இங்கு பட்டியலிட்டுக் காட்டுகிறேன்:

“ஜின்களால் மனிதர்களைக் கடத்த முடியுமா?”
“ஜின்களால் மனிதர்களுக்கு பௌதீக ரீதியில் தாக்கம் செலுத்த முடியுமா?”
“ஜின்களால் மனித உடல்களில் ஊடுறுவ / மேலாட முடியுமா?”
“மனித ஞாபகங்களை, சிந்தனையோட்டங்களை ஜின்களால் மாற்ற முடியுமா?”
“ஜின்களால் மனிதர்களோடு உடலுறவு கொள்ள முடியுமா?”

இவ்வாறான கேள்விகளுக்கெல்லாம் மார்க்கத்தின் வெளிச்சத்திலான பதில் என்ன?
இந்த நிலைபாடுகளை மார்க்கம் அங்கீகரிக்கின்றதா?
அல்லது மார்க்கத்தை மறந்து விட்டு நான், இந்த அம்சங்களைத் தான்தோன்றித் தனமாக ஆய்வு செய்து விட்டேனா?

இவ்வாறான பல கேள்விகள் இந்தக் கட்டத்தில் அனேகமான வாசகர் உள்ளங்களில் தோன்றியிருப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். எனவே, முதலில் இந்தக் கேள்விகளுக்குக் தக்க பதில்களை மார்க்க ஆதாரங்களின் வெளிச்சத்தில் தெளிவு படுத்திக் கொள்வதே நமது கடமை. இதைத் தெளிவு படுத்திக் கொண்டதன் பிறகு அடுத்த வேற்றுக்கிரகவாசி இனத்தவர்களைப் பற்றி நோக்குவதே சிறந்தது.

எனவே, அடுத்த எபிசோடிலிருந்து மார்க்க அடிப்படையிலான சில தெளிவுகளைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கலாம்.

இன் ஷா அல்லாஹ் வளரும்...

- அபூ மலிக்





Power of Creator
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..