cheap abortion pill kit online cheap abortion clinics in atlanta asser.nl அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி ஒரு நேர்காணலில் “தீண்டாமை, உடன்கட்டை ஏறுதல்(சதி) போன்றவற்றை நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றித் தடை செய்தது போல் முத்தலாக்கையும் சட்டம் இயற்றி ரத்து செய்ய வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
ஒரே மூச்சில் முத்தலாக் என்பதை நாம் ஆதரிக்கவில்லை. எதிர்க்கத்தான் செய்கிறோம். “குர்ஆன் கூறும் வழிமுறைக்கு ஏற்ப தலாக் நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்” என்பதே நமது கோரிக்கை. அது ஒருபுறம் இருக்கட்டும்.
தீண்டாமை, உடன்கட்டை ஏறுதல் போன்ற கொடூர பாவங்களின் பட்டியலில் தலாக்கை எப்படிச் சேர்க்க முடியும்?
தலாக்கில் தீண்டாமை எங்கே இருக்கிறது? பல நேரங்களில் “தீண்டாமல் இருப்பதால்தான்” (பாலியல் சிக்கல்கள்) தலாக் பிரச்னையே வருகிறது.
கணவன் இறந்ததும் உயிரோடு மனைவியை நெருப்பில் போட்டு எரிப்பதுதான் உடன்கட்டை ஏறுதல். இதற்கும் தலாக்கிற்கும் என்ன தொடர்பு?
உயிரோடு இருக்கும் கணவன், தன் மனைவியை வாட்டி வதைக்கக் கூடாது என்பதற்காகத்தான் இஸ்லாம் அழகான மணவிலக்கு முறையை அருளியிருக்கிறது.
மனைவி இறந்ததும் கணவன் உடன்கட்டை ஏறும் வழக்கம் இல்லை. ஆனால் இஸ்லாமிய மணவிலக்குச் சட்டத்தில் பெண்ணுக்கும் தலாக் உரிமை உண்டு.
தீண்டாமையிலும் உடன்கட்டை ஏறுதலிலும் மத ஆதிக்கமும் ஆணாதிக்கமும்தான் மேலோங்கியிருந்தன.
தீண்டாமை என்பது உயிர்களுக்கு விலங்கிடுதல்;
உடன்கட்டை ஏறுதலோ பெண்ணை உயிருடன் நெருப்பில் தள்ளுதல்.
ஆனால் மார்க்கம் கூறும் மணவிலக்குச் சட்டங்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் விடுதலை அளித்து சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க வைப்பவை.
நரக நெருப்பாய் வாழ்க்கை ஆகும்போது, அந்த நெருப்பிலிருந்து விடுதலை அளிக்கும் அருட்கொடைகளே மார்க்கச் சட்டங்கள்.
அட்டர்னி ஜெனரல் அரசியல் சாசனத்தை மட்டுமல்ல, அல்லாஹ்வின் சாசனத்தையும் படிக்க வேண்டும். -சிராஜுல்ஹஸன் |