Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 6 நீரில் இருந்து நிலத்திற்க்கு
Posted By:Hajas On 7/2/2017 5:19:16 PM

 

"பூமியின் (அ)பூர்வ கதை"

(பூமியின் மொத்த வரலாற்றில் ஒரு வேக பயணம்)

 

(பாகம் 5 : முதல் உயிர் )

(பாகம் : 6) (நீரில் இருந்து நிலத்திற்க்கு)


#ரா_பிரபு


(பூமியின் மொத்த வரலாற்றை சுற்றி ஒரு வேக பயணம்)

வளிமண்டலத்தில் ஆக்சிஜன் என்ற ஒன்று வந்த பின் பூமியின் மொத்த சூழலும் மாறி போனது. ஆக்சிஜனை உட்கிறகித்த உயிரினங்கள் முன்பு இல்லாத வகையில் பரிணாமம் கொண்டன.

அவ்வளவு ஏன் வானத்தின் முகத்தையே இது மொத்த மாக மாற்றி அமைத்தது. இதுவரை கரி பூசினது போல கருப்பு நிறத்தில் இருந்த வானத்திற்கு முதல் முதலாக நீல நிறத்தை ஆக்சிஜன் கொடுத்தது. அந்த நிறத்தை கடலிலும் பிரதி பலிக்க வைத்தது. ஆக்சிஜன் இல்லை என்றால் வானமே ஒரே இருளோன்னு இருக்கும்.
ஆக்சிஜனின் பிரதிபலிப்பு தன்மையால் தான் வானம் இவ்வளவு பளிச்சென்று இருக்கின்றது.

ஆக்சிஜன் சேர்ந்ததால் தான் பூமியின் மேல் பகுதி கட்டி பட ஆரம்பித்தது..
வளிமண்டல அழுத்தம் முன்பை விட இப்போது வேறு விதமாக மாற்றியது ஆக்சிஜன்.

மொத்தம் 460 கோடி ஆண்டுகள் பயண காலத்தில் இப்போது நாம் கால இயந்திரத்தில் இருப்பது இன்றையில் இருந்து 200 கோடி ஆண்டுகளுக்கு முன்....

இப்போது பூமியை உற்று பார்த்தால் இது வரை இருந்த உயிரற்ற தன்மை மறந்து அதன் முகத்தின் கலை கூடி இருப்பது பார்க்கலாம். 
கண்டங்கள் இப்போது கடலை விட்டு வெளியே எட்டி பார்க்க தொடங்கி இருந்தன. கடலுக்குள்ளே எட்டி பார்த்தால் பரிணாமம் தனது அழகிய விளையாட்டை அங்கே காட்டி இருப்பது பார்க்க முடியும்.. அதாவது எண்ணில் அடங்காத விசித்திர உயிரினங்கள் அங்கே வலம் வருவது பார்க்க முடிந்தது.
கடலுக்குள் இது வரை இல்லாத புதிய உலகம் ஒன்றை படைத்திருந்தது பரிணாமம்...
நுன்னுயிரி ...நுணுக்கமான உயிரி என்ற தனது பழக்கத்தை மாற்றி கொண்டு பெரிய பெரிய உயிரினங்களை படைக்க தொடங்கியது
அங்கே எல்லாமே பிரமாண்டம்.

(அக்காலத்தில் ஒரு தும்பி...இன்றைய கழுகின் அளவில் இருந்தது. ஒரு பூரான் பூனை அளவு இருந்தது.. எல்லா விலங்குகளிலும் ராட்சத தன்மை குடி இருந்தது. அதற்க்கு காரணம் காற்றில் அன்றைய காலத்தில் அதிகமாக ஆக்சிஜன் இருந்தது.)

சரி இப்போது நமது கால இயந்திரத்தில் கொஞ்சம் கியரை மாற்றி வேகமாக கடந்து ஒரு இடத்தில நிறுத்துவோம்...
இப்போது கால இயந்திரம் நிற்பது இன்றையில் இருந்து 55 கோடி ஆண்டுகளுக்கு முன்...

பூமி இப்போது 400 கோடி ஆண்டுகள் கடந்து அனுபவம் மிக்க ஒரு கிரகமாக மாறி இருந்தது.
இப்போது வளிமண்டலத்தில் ஆக்சிஜன் 
அளவு 13 சதம்... இந்த குறைந்த சதமே பூமியில் அளப்பரிய மாறுதல்கள் உண்டாக்க காரணமாக இருந்தது.
கடலில் நிஜ ராட்சதர்கள் இப்போது உலவி கொண்டிருந்தார்கள். பரிணாமம் விடாமல் இன்னும் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு தனது விளையாட்டை தொடர்ந்தது.

இன்றையில் இருந்து 50 கோடி ஆண்டுகளுக்கு முன்......

No automatic alt text available.

கடலில் முதல் போனி மீன் தோன்றியது..அதற்க்கு பெயர் 'Ostracoderms' . இவைகள் தண்டுவடம் உறுதியான தாடைகள் மற்றும் வாயில் பற்கள் கொண்டு இருந்தன. பார்க்க இன்றைய மீனுடனான உருவ ஒற்றுமை மிக குறைவாக இருக்கலாம் ஆனால் அவைகள் தான் மொத்த மீன்களுக்கு முன்னோடி பெரும் பாட்டன்.

ஆக்சிஜன் பெருக்கம் பூமியில் இன்னுமொரு மிக பெரிய மாறுதலுக்கு காரணமாக இருந்தது. நிலத்தையும் நீரையும்.....
கடலையும் ...கண்டங்களையும் ஒன்றாக கைகுளுக்கும் படி அது செய்தது.

அதாவது பூமியின் முதல் 400 கோடி ஆண்டுகளுக்கு உயிரினங்கள் கடலில் மட்டுமே கட்டுண்டு கிடந்தன. இதற்க்கு காரணம் சூரியனின் ஆபத்தான கதிர்வீச்சில் இருந்து கடல் தான் பாதுகாப்பு கொடுத்தது. ஆனால் பின்னால் நிலைமை மாற தொடங்கி இருந்தது. ஆக்சிஜன் ஓசோன் உடன் இனைந்து சூரியனின் கதிர்வீச்சை தடுத்து பாதுகாப்பு அரனை அமைக்க..
முதல் முதலில் கடலை விட்டு உயிரினங்கள் வெளியே எட்டி பார்த்தன .முதல் இட பெயற்சியை செய்து தொடங்கி வைத்தது தாவரங்கள் தான்.

பாசிகளும் செடிகளும் கொடிகளும் கொஞ்சம் கொஞ்சமாக பூமியில் காலடி எடுத்து வைத்தனர். 
அதன் பின் தீ பிடித்த வேகத்தில் பூமியில் தாவரங்கள் பரவின.
கொஞ்சம் கண்யர்ந்து விட்டு பார்த்த போது உலகம் முழுதும் காடுகள் நிரம்பி விட்டிருந்தது..

இப்போது......

40 கோடி ஆண்டுகளுக்கு முன்.....

ஒரு வரலாற்று புரட்சி சம்பவம் நடக்க இருக்கிறது வாருங்கள் அருகே சென்று அது என்ன என்று பாப்போம்.....

கடலில் வாழ்ந்து வந்த இருவாழ்வி ஒன்று முதன் முதலாக நிலத்தை நோக்கி நகர்ந்தது.
உயிரியல் பரிணாம வரலாற்றில் இது ஒரு முக்கிய காலடி...
காரணம் பின்னால் வர போகும் கோடி கணக்கான நில வாழ்விகளுக்கு இவைகள் தான் முன்னோடி.
நிலத்தில் இருந்த செடிகள் மரங்கள் நில சூழல்கள் இவற்றில் தங்களுக்கு தேவையான உணவு கிடைக்கிறது தங்களால் இங்கு வாழ முடியும் என அவை நம்பின .தங்களது குடி இருப்பை மாற்றின. அதன் மூலம் ஒரு புதிய வரலாறை ஆரம்பித்தன.

அப்படி வந்த இருவாழ்விக்கு ஒரு வாழ்க்கை பிரச்னை இருந்தது. அது தனது முட்டையை ஜெல் வடிவத்தில் போட்டு பழக்க பட்டவை ( தவளை முட்டை இன்றும் அப்படி தான் உள்ளது )
அதற்க்கு தனது முட்டையை காக்க தண்ணீர் தேவை.
இதனால் தங்களது முட்டையை ஓடு உள்ளவையாக பரிணாமம் அடைய செய்தன. இப்போது இவைகளால் தண்ணீரை தனது முட்டை குள்ளேயே சுமந்து செல்ல முடிந்தது..

இந்த முதல் பரிணாம மாற்றம் இவைகளை கடலுடனான கொஞ்ச நஞ்ச தொடர்பை முற்றிலும் துண்டித்து விட்டு தன்னை முழு நேர நில வாழ்விகளாக மாற்றி கொள்ள செய்தது.
கால போக்கில் இவைகள் தான் ஊர்வன வகுப்பாகவும் மாறின.

இப்போது ......
30 கோடி ஆண்டுகளுக்கு முன்.....

இப்போது தாவரங்களில் ஏற்பட்ட முக்கிய நிகழ்வு ஒன்று பிற்காலத்தில் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு மனிதனுக்கு பயன்பட இருக்கிறது...
30 கோடி ஆண்டுகளுக்கு முன்....
பூமியில் கால போக்கில் அழிந்த தாவரங்கள் மண்ணில் மக்க தொடங்கின... இவைகள் பெரும் அழுத்தம் மற்றும் வெப்பதில் அழுத்த பட்டு நிலகரியாகின... எதிர்காலத்தில் மனிதன் வெட்டி எடுக்க காத்திருந்தன.

இப்படி தெளிந்த நீரோடை போல எளிதாக போய் கொண்டிருந்த பூமியின் வாழ்க்கையில் முதல் திகில் திருப்பம் ஒன்று வந்து சேர்ந்தது..
பூமிக்கு முதல் முதலில் கொஞ்சம் வேர்க்க தொடங்கியது.

அது 25 கோடி ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒன்று.

உலகின் மிக பெரிய எரிமலை ஒன்று தனது ராட்சத எரிமலை குழம்புகளை அள்ளி வீசியது.
இவ்வளவு நாளாக ஆக்சிஜனை அழகாக அனுபவித்து வந்த விலங்குகளுக்கு மூச்சு முட்ட தொடங்கியது .காரணம் வளிமண்டலம் முழுக்க அந்த எரிமலை புகையால் கார்பன்டை ஆக்சைடாக மாறி கொண்டிருந்தது. நில வாழ் உயிரினங்களில் 70 சதம் உயிரினங்கள் இந்த சூழ்நிலை மாற்றம் தாங்க முடியாமல் செத்து மடிந்தன.

ஆனால்..... உஷார்...

இதன் தொடர்ச்சியாக ஒரு புத்தம் புதிய உயிரின வகை ஒன்று அடுத்ததாக பூமியில் களம் இறங்க இருக்கிறது.
அது தனது அதிரடியால் பூமியை மிரட்ட இருக்கிறது.

அது பூமியின் மொத்த வரலாற்றில் தங்களது முத்திரையை ஆழமாக பதித்து செல்ல இருக்கிறது.

இந்த பூமி பந்தை அமர்க்களமாக பல கோடி ஆண்டுகளுக்கு எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஆட்சி செய்ய இருக்கிறது.

பூமி யின் மொத்த வரலாற்றில் எந்த உயிரினமிடமும் இல்லாத அளவு பார்த்தாலே பிரமிப்பை ஏற்படுத்தும் பிரமாண்ட வடிவம் கொண்டு அவைகள் உலவ இருக்கின்றன.

ஆம் ... அவைகளின் பெயர்....

"டைனோசர்ஸ்...."

-பூமி இன்னும் சுழலும்............

(பாகம் :7 -"பூமியின் திகில் நாட்கள்")





General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..