Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் - Episode 63
Posted By:Hajas On 8/23/2017 6:09:34 AM

zoloft and weed smoking

zoloft and weed reddit

பறக்கும் தட்டுக்களும் ஜின்களும்
==============================

by - Abu Malik

 தொடர் 5: சூத்திரதாரிகள்

Episode 62: நகருயிர் சார்ந்தோர் (Reptilians / Draconians) – தொடர்ச்சி – 1:

 

Episode 63: நகருயிர் சார்ந்தோர் (Reptilians / Draconians) – தொடர்ச்சி – 2:

Image may contain: one or more people and text

நகருயிர் சார்ந்தோர் (Reptilians / Draconians) – தொடர்ச்சி – 2:

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நகருயிர் சார்ந்த ஜின் இனத்தவர்களே (Reptilians) இப்லீஸின் கோத்திரத்தவர்கள் என்பதை நாம் இதுவரை பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக மேலும் சில வரலாற்றுத் தடயங்களை இப்போது பார்க்கலாம்:

ஆதிகாலம் தொட்டு, மனித சமூகத்தவர்களுக்கு வழங்கப்பட்ட ஒவ்வொரு வேதத்தினுள்ளும் நகருயிர் சார்ந்த ஷைத்தானிய ஜின்கள் திட்டமிட்டு ஊடுறுவி, அவை ஒவ்வொன்றினுள்ளும் தம்மையும் ஒரு கடவுள் அவதாரமாகச் சித்தரித்து, அதன் மூலம் அந்த மதத்தின் சித்தாந்தத்தையே தலைகீழாக மாற்றியமைப்பதன் விளைவாக மக்களை மொத்தமாக வழிகெடுக்கும்வரை ஷைத்தான்கள் ஓய்ந்ததே இல்லை.

ஒருவகையில் சொல்லப் போனால், திரும்பத் திரும்ப ஒரே சமூகத்தவருக்குப் பல நபி மார்களை அல்லாஹ் தொடர்ச்சியாக அனுப்ப வேண்டிய தேவை ஏற்பட்டதே இதனால் தான் என்று சொன்னால் அது மிகையாகாது.

ஷைத்தானிய ஜின்கள் அல்லாஹ்வின் வேதத்தைத் தலைகீழாக மாற்றியமைப்பதும்; பிறகு அதை மீண்டும் தூய்மைப் படுத்த இன்னொரு நபியை அதே சமூகத்தவருக்கு அல்லாஹ் அனுப்புவதும்; அந்த நபி மீண்டும் அந்த வேதத்தை புதுப்பிக்கும் போது, அது ஒரு புது வேதம் என்பது போல் அடையாளப் படுத்தப் படுவதும்; மாசுபடுத்தப்பட்ட பழைய வடிவம் வேறொரு வேதம் என்பது போல் மாறி, உலகில் நிலைகொண்டு விடுவதுமாக இது ஒரு தொடர்கதையாகவே மனித வரலாற்றில் தொடர்ந்து வந்திருக்கிறது.

நன்மைக்கும், தீமைக்கும் இடையில் தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டிருந்த இந்தப் போட்டியின் விளைவுகளே இன்று ஆயிரக்கணக்கான பலதெய்வ வழிபாட்டு மதங்களின் தோற்றத்தின் பின்னணி.

இந்தப் போட்டியை நிறைவு செய்யும் விதமாகவே அல்லாஹ் இறுதி வேதமாக இஸ்லாத்தை நிறுவி, அதை இன்றுவரை பாதுகாத்து வருகிறான். ஆனால், ஷைத்தான்கள் அதையும் எப்படியாவது அழித்து விட வேண்டுமென்ற நோக்கத்தில் இன்றுவரை ஓயாமல் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றன.

மனித வரலாற்றில், இறைவேதத்துக்கும், ஷைத்தானிய சித்தாந்தங்களுக்கும் இடையில் தொடர்கதை போல் நிகழ்ந்து வந்த இந்த இடைவிடாத போட்டியின் சுவடுகளை இன்று வரை நாம் வரலாற்றுத் தடயங்களில் அவதானிக்கலாம். அதிலும் குறிப்பாக இறைவேதங்கள் ஒவ்வொன்றையும் மாசுபடுத்துவதற்காக, அவற்றுள் நேரடியாக நுழைந்த இப்லீஸின் கோத்திரத்தைச் சேர்ந்த நகருயிர் சார் ஜின் இனத்தவர்களின் தடயங்களைக் கூட நாம் தெளிவாகவே காணலாம். அவ்வாறான ஷைத்தானிய ஜின்களின் தடயங்கள் தாம் நகருயிர் சார்ந்த கடவுள் அவதாரங்களாக வரலாற்றில் எஞ்சியுள்ளன. இனி அவ்வாறான ஒருசில தடயங்களை வரலாற்றின் வெளிச்சத்தில் நோக்கலாம்.

வரலாற்றிலும், வரலாற்றுப் பதிவுகளுக்கு முற்பட்ட புராணங்களிலும் கூட பாம்பு, பறக்கும் ட்ராகன் (Flying Dragon) போன்ற ஏராளமான நகருயிர் அவதாரங்களைக் கண்கூடாகக் காண முடிகிறது. இந்த அம்சம் குறிப்பிட்ட ஒரு சமூகத்தவர் மத்தியில் என்று மட்டும் இல்லாமல், உலகின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் வாழும் எல்லாச் சமூகத்தவர் மத்தியிலும் ஒரே அடிப்படையில் இது பரவியிருப்பது தான் ஆச்சரியப்படத்தக்க உண்மை.

மெசொபொத்தேமியா (நாகரீகத்தின் தொட்டில்):
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மனித நாகரீகங்களின் தோற்றம் பற்றிய வரலாற்றுப் பதிவுகளை எந்தப் பக்கமிருந்து ஆய்வு செய்தாலும், அந்த ஆய்வுகளெல்லாம் எங்கு சுற்றினாலும், இறுதியில் வந்து முடியும் இடம், இன்றைய ஈராக் / குர்திஸ்தான் ஆகிய நி்லப்பரப்புகளை மையமாகக் கொண்ட பண்டைய மெசொபொத்தேமியாவாகவே இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

உலகில் தோன்றிய பல்வேறு நாகரீகங்களுக்கும் ஊற்றுக்கண்ணாகவும், மூல வேராகவும் மெசொபொத்தேமியா விளங்கியிருக்கிறது என்பதனாலேயே வரலாற்று ஆய்வாளர்கள் மெசொபொத்தேமியாவை “நாகரீகங்களின் தொட்டில்” என்று அழைப்பதுண்டு. இன்றைய மனிதர்களால் கற்றறிந்து கொள்ள முடிந்த வரலாற்றின் எல்லையாக மெசொபொத்தேமிய நாகரீகங்களே திகழ்கின்றன. எனவே தான் அனேகமான வரலாற்று ஆய்வாளர்கள், உலகில் தோன்றிய முதல் நாகரீகம் மெசொபொத்தேமியாவிலேயே தோன்றியிருக்கிறது என்று கருதுவதுண்டு. இந்தத் கருதலின் விளைவாகவே மெசொபொத்தேமியா “நாகரீகத்தின் தொட்டில்” என்று அழைக்கப் படுகிறது.

ஆனால், இது முற்றிலும் உண்மையில்லை. மனிதர்களாகிய நம்மால் ஆய்வு செய்து ஊர்ஜிதப் படுத்திக் கொள்ள முடிந்தது மெசொபொத்தேமியாவின் காலப்பகுதி வரை மட்டுமே. இதற்கு முந்திய நாகரீகங்களும் உலகில் இல்லாமலில்லை. ஆனால், அவை குறித்த உருப்படியான தடயங்கள் நம் வசம் இல்லாததையொட்டியே, முதல் நாகரீகமாக மெசொபொத்தேமியாவைக் கருதுகிறோம்.

மெசொபொத்தேமிய நிலப்பரப்பில் உதித்த பிரதான நாகரீகங்களாக சுமேரிய நாகரீகம், அக்காதிய நாகரீகம், அஸிரிய நாகரீகம், மற்றும் பாபிலோனிய நாகரீகம் ஆகிய நான்கு நாகரீகங்களையும் குறிப்பிடலாம். இவற்றுள் சுமேரிய நாகரீகமே முதன்மையானதும், மிகவும் பழமை வாய்ந்ததும் என்பதால், அதன் மீதே இங்கு நாம் அதிக கவனம் செலுத்துகிறோம்.

சுமேரியர்களது மத நம்பிக்கையைப் பொருத்தவரை, “அனுனாக்கி” (Anunnaki) எனும் கடவுள் கோட்பாடே அங்கு பின்பற்றப் பட்டது. அனு, என்க்கி, என்லில் ஆகியன போன்ற பல பிரதான கடவுள் அவதாரங்கள் ஒன்றுக்குள் ஒன்று பின்னி பிணைக்கப் பட்டு உருவாகியிருக்கும் “அனுனாக்கி” எனும் இந்தக் கோட்பாடு உண்மையில் ஷைத்தானிய ஜின்களால் உருவாக்கப்பட்ட பலதெய்வக் கோட்பாடு மட்டுமே.

ஆரம்பத்தில் ஓரிறைக் கோட்பாடாக இருந்த சுமேரிய மதத்தில் “அஸ்பு” எனும் பெயரில் பரம்பொருளாக அழைக்கப்பட்ட ஒரே இறைவனுக்கு (அதாவது அல்லாஹ்வுக்கு), “தியாமா” எனும் பெயரில் ஒரு மகள் பிறந்ததாகவும்; பிறகு, தனது சொந்த மகளாகிய தியாமாவோடு அஸ்பு தாம்பத்ய உறவு கொண்டதன் விளைவாக, “மம்மு”, “லஹ்மு”, “லஹமு” எனும் பெயர்களில் மூன்று பிள்ளைகள் பிறந்ததாகவும், அந்தப் பிள்ளைகள் தமக்குள் உடலுறவு கொண்டதன் விளைவாகப் பிறந்த வழித்தோன்றல்களிலேயே “அனுனாக்கி” எனும் இளவரசர்கள் உதித்ததாகவும் சுமேரியப் புராணங்கள் கூறுகின்றன.

இவ்வாறு உதித்த இளவரசர்கள் / சந்ததிகள் ஒவ்வொருவரும் பிற்காலத்தில் ஒவ்வொரு கடவுள் அவதாரமாகக் கருதப் பட்டனர். ஏக இறைக் கோட்பாடாக இருந்த சுமேரிய வேதம் இப்படித் தான் பிற்காலத்தில் ஒரு பலதெய்வக் கோட்பாடாக மாற்றப் பட்டது. சுமேரியர்களின் உண்மையான வேதத்தை இவ்வாறு பலதெய்வக் கோட்பாடாக மாற்றியது யார்? அனுனாக்கி எனும் கடவுள் அவதாரங்களாக அழைக்கப்படும் அந்த அவதாரங்களெல்லாம் உண்மையில் யார்? இதைக் கண்டுபிடித்தாலே போதும்; பின்னால் ஒழிந்திருக்கும் சதிகாரனின் முகத்திரை கிழிந்து விடும்.

பிரபல வரலாற்று ஆய்வாளர் “ஸகரிய்யா சிட்சின்” (Zechariah Sitchin) எழுதிய “The 12th Planet” எனும் பிரபல நூல், 1979ம் ஆண்டு வெளியிடப்பட்டது. கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் தொகுப்பையொட்டி வெளியிடப்பட்ட இந்த நூலில், சுமேரியர்களது அனுனாக்கி கோட்பாட்டை ஆய்வாளர் ஸகரிய்யா, பைபிளின் பழைய ஏற்பாட்டின் மூல மொழியாகக் கருதப்படும் ஹீப்ரூ மொழிப் பிரதியின் வெளிச்சத்தில் ஆய்வு செய்து, அந்த ஆய்வுகளின் அடிப்படையில் சுமேரியர்களது பண்டைய கல்வெட்டுக்களில் அனேகமானவற்றை மொழிபெயர்த்திருந்தார்.

இவரது ஆய்வுகளின் பிரகாரமும், மேலும் பல ஆய்வாளர்களது கருத்துக்கள் பிரகாரமும் சுமேரிய நாகரீகத்தின் விருத்திக்கு மனித அறிவு மட்டுமல்லாமல்; மனித அறிவுக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தியின் அறிவு, மற்றும் தொழினுட்பம் போன்றவை கூட வித்திட்டிருப்பதற்கான சுவடுகளை அவதானிக்க முடிவதாகவே கூறப்படுகிறது. அதாவது, எங்கிருந்தோ வந்த, மனித இனம் அல்லாத வேறு சில அமானுஷ்ய சக்திகள், அறிவு, மற்றும் தொழினுட்பம் சார்ந்த பல விடயங்களை சுமேரியர்களுக்குக் கற்பித்திருக்கிறார்கள் என்பது மட்டுமல்லாமல், சுமேரிய மக்களில் சில பிரிவினரோடு இவர்கள் இனக்கலப்பில் ஈடுபட்டு, அதன் விளைவாகத் தமது சந்ததிகளாக, தூய மனித இனம் அல்லாத, கலப்பின மனிதர்கள் பிறப்பதற்கும் இவர்கள் காரணமாக அமைந்தார்கள் என்பதே இவர்களின் கருத்தாக இருக்கிறது. மேலும் இந்தக் கலப்பின மனிதர்கள் வாயிலாகப் பெரும் திரளான மக்களை இவர்கள் கொத்தடிமைகளைப் போல் கட்டுப் படுத்தி வைத்திருந்தார்கள் என்பதும் இவர்கள் முன்வைக்கும் இன்னொரு கருத்து.

இந்தக் கருத்துக்கள் எல்லாவர்றையும் நூற்றுக்கு நூறு ஏற்றுக் கொள்ள வேண்டிய எந்த அவசியமும் இங்கு நமக்கில்லை. ஆனால், இதிலிருக்கும் சில கருத்துக்களில் உண்மையிருக்கிறது. அந்த உண்மைகளை அல்குர்ஆன் கூட ஓரளவுக்கு சரிகாண்கிறது. இந்த உண்மைகள் மீது மட்டுமே இங்கு நாம் கவனம் செலுத்துகிறோம். அதாவது, குர்ஆனில் 2:102 வது வசனத்தில் ஹாரூத் மாரூத் எனும் இரு வானவர்களைப் பற்றி அல்லாஹ் பின்வரும் தகவல்களைப் பதிவு செய்திருப்பதைப் பார்க்கலாம்:

பாபில் எனும் நகரில், ஹாரூத் மாரூத் என்போர், மனிதர்களுக்கு ஏதோ ஒரு ஞானத்தைக் கற்றுக் கொடுத்ததார்கள்.
மேலும், இந்த ஞானம் மிக ஆபத்தானது என்றும், இதைக் கற்பதால் ஒரு மனிதன் காஃபிராகி விடுவான் என்றும் எச்சரித்த பிறகே ஹாரூத் மாரூத் இதைக் கற்றுக் கொடுத்தார்கள்.
பிறகு, சுலைமான் (அலை) அவர்களது ஆட்சிக்காலத்தில், ஷைத்தானிய ஜின்கள், சூனியத்தோடு, ஹாரூத் மாரூத் கற்றுக் கொடுத்த இந்தக் கலையையும் சேர்த்துத் தான் யூதர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.
எனவே, இந்த ஞானத்துக்கும், சூனியம் எனும் கலைக்கும் இடையில் மிக நெருக்கமான சம்பந்தங்கள் இருக்கின்றன.

2:102 குர்ஆன் வசனத்திலிருந்து இவ்வளவு தகவல்களையும் நம்மால் பெற்றுக் கொள்ள முடிகிறது. மேலும், இங்கு பாபில் நகரம் என்று அல்லாஹ் குறிப்பிட்டிருப்பது மெசொபொத்தேமியாவைத் தான். எனவே, இந்த வசனத்தின் வெளிச்சத்தில் பண்டைய சுமேரியாவில், வானவர்கள் மூலம் சில அமானுஷ்ய அறிவு ஞானங்கள் கற்பிக்கப் பட்டுள்ளன என்பது நிரூபணமாகிறது.

ஆனால், இவ்வாறு கற்பிக்கப்பட்ட ஞானத்தையெல்லாம், பிற்காலத்தில் ஷைத்தானிய ஜின்கள் சூனியம் போன்ற பல கலைகளை வடிவமைப்பதற்கே உபயோகப் படுத்தினார்கள் என்பது மட்டுமல்லாமல், அவற்றை மக்களுக்குப் போதிக்கவும் செய்தார்கள் என்பது தான் இங்கு சொல்லப்படாமல் மறைந்திருக்கும் உண்மை.

சுமேரியாவின் கதை இத்தோடு முற்றுப் பெற்று விடவில்லை. ஹாரூத் மாரூத்துக்குப் பிறகு, இவ்வாறான வானவர்களைப் போல் தம்மையும் போலியாக அடையாளப் படுத்திக் கொண்டு வேறு பல ஷைத்தானிய ஜின்களும் கூட, வானிலிருந்து வானவர் இறங்குவது போலெல்லாம் இறங்கி, சுமேரிய மக்களை நன்றாகவே ஏமாற்றியுள்ளார்கள்.

இவ்வாறு ஆதிகால சுமேரியாவில் தம்மை வானவர்கள் போலவும், வானிலிருந்து இறங்கும் கடவுள் அவதாரங்கள் போலவும் சித்தரித்து நாடகமாடிய ஷைத்தானிய ஜின்களின் அமானுஷ்யத் தன்மைகளில் மயங்கி ஏமாந்த அன்றைய சுமேரியர்கள், இந்த ஜின்களை வானிலிருந்து பூமிக்கு இறங்கும் கடவுள்கள் என்று நம்பலானார்கள். இவ்வாறான ஷைத்தானிய ஜின்களே “அனுனாக்கி” எனும் கடவுள் அவதாரங்களாகப் பிறகு அழைக்கப் பட்டார்கள்.

சுமேரியர்களின் மொழிவழக்கில் வானிலிருந்து இறங்கிய இந்தக் கடவுள் அவதாரங்கள் “அனுனாக்கி” என்று அழைக்கப் பட்ட போதும், பைபிள் பழைய ஏற்பாட்டின் மூல மொழியாகக் கருதப்படும் ஹீப்ரூ மொழியாக்கத்தில் கூட இவர்களை பற்றிய ஒரு குறிப்பை வேறு பெயரில் காண முடிகிறது.

வரலாற்று ஆய்வாளர் ஸகரிய்யாவின் கருத்துப் பிரகாரம், “நெஃபிலிம்” என்று ஹீப்ரூ பைபிளில் (ஆதியாகமம் 6:4 இல்) அழைக்கப்படும் இவர்கள் பின்வருமாறு வர்ணிக்கப் பட்டுள்ளார்கள்:

“பூமியில் அப்போதும், அதன் பிறகும் நெஃபிலிம் இருந்தார்கள். (வானுலகக்) கடவுள்களின் குமாரர்கள், (பூமியில் வாழும்) ஆதாமின் குமாரத்திகளோடு சேர்க்கை செய்த போது, அவர்களின் (கடவுள்களின்) குழந்தைகளை இவர்கள் (மனிதப் பெண்கள்) வயிற்றில் சுமந்தார்கள். (இதன் மூலம் பிறந்த) அவர்களே என்றும் பலம் மிக்கவர்களாக (நெஃபிலிம் எனும் பலசாலிகளாக) இருந்தனர்”
(ஆதியாகமம் 6:4)

குறிப்பு: பைபிளின் இந்த வசனத்தில் உண்மையோடு பொய்யும் கலப்படமாகியே உள்ளது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, வானிலிருந்து யாரோ அமானுஷ்யமான சிலர் இறங்கியுள்ளார்கள் என்பதை இங்கு நாம் ஏற்றுக் கொள்கிறோம். மேலும், அவர்கள் மனிதர்களோடு உடலுறவு கொண்டு, அதன் மூலம் உலகில் சில கலப்பினங்களை உருவாக்கியிருக்கவும் வாய்ப்பிருக்கிறது என்பதையும் நாம் ஓரளவுக்கு சரிகாண்கிறோம். ஆனால், இவ்வாறு வானிலிருந்து இறங்கியவர்கள் கடவுள் அவதாரங்கள் அல்ல என்பதே இங்கு நமது நிலைபாடு. இந்த இடத்தில் தான் இங்கு நாம் பைபிளின் கருத்தை நிராகரிக்கிறோம்.

இந்த வசனத்திலிருக்கும் நெஃபிலிம் எனும் சொல்லுக்கு இன்றைய மொழியாக்கங்களில் “இராட்சசர்கள்” எனும் பொருள் தான் பரவலாக வழங்கப் படுகிறது. அதாவது, வானிலிருந்து இறங்கிய கடவுள் அவதாரங்கள், பூமியிலிருந்த மனிதப் பெண்களோடு உடலுறவு கொண்டதன் விளைவாகப் பிறந்த பலம் மிக்க ராட்சசக் குழந்தைகளே நெஃபிலிம் எனும் இனத்தவர்கள் என்பது தான் இங்கு சொல்லப்பட்டுள்ள கருத்து.

ஆனால், சிலரது கருத்துக்கள் பிரகாரம், நெஃபிலிம் எனும் ஹீப்ரூ சொல்லின் சரியான பொருள், “இராட்சசர்கள்” என்பதல்ல; மாறாக, “ந ஃப ல” எனும் ஆதிகாலச் சொல்லடியிலிருந்து முளைத்ததாகக் கருதப்படும் இந்தச் சொல்லுக்குரிய சரியான அர்த்தம் “துரத்தப் பட்டவர்கள்” என்பது தான். உண்மையில் இந்தக் கருத்தே அதிகம் ஏற்புடையதாக இருக்கிறது என்பதே எனது நிலைபாடும் கூட.

ஏனெனில், இஸ்லாத்தின் பார்வையில் “துரத்தப் பட்டவர்கள்” என்பது ஷைத்தானை மட்டுமே குறிக்கிறது. அதாவது வானுலகிலிருந்து துரத்தப்பட்ட ஜின் இப்லீஸ் தான். எனவே, இங்கு நம்மால் புரிந்து கொள்ள முடிந்த உண்மை, இப்லீஸின் கோத்திரத்தைச் சேர்ந்த சில Reptilian ஜின்களே இவ்வாறு வானிலிருந்து இறங்கிய கடவுள் அவதாரங்களைப் போல் சுமேரியர்களிடம் தோன்றி, அவர்களை நம்ப வைத்து, அதன் மூலம் அவர்களது உண்மையான வேதங்களை நாசமாக்கியுள்ளார்கள்.

மேலும், அவர்களில் சில மனிதர்களோடு இனக்கலப்பிலும் ஈடுபட்டு, அவற்றின் மூலம் மனித சமூகத்தினுள் சில கலப்பினங்களைக் (Genetic Hybrids) கூட இந்த ஷைத்தானிய ஜின்கள் உருவாக்கியுள்ளார்கள் என்பதையும் இங்கு ஓரளவு அனுமானிக்க முடிகிறது. (இது பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாகப் பிறகு பார்க்கலாம்).

மேலும், வானிலிருந்து இறங்கிய கடவுள் அவதாரங்கள் போல் பொய்யாகத் தம்மை அடையாளப் படுத்திக் கொண்டு சுமேரியர்களிடம் தோன்றியது Reptilian / Draconian எனப்படும் இப்லீஸின் கோத்திரத்தைச் சார்ந்த ஷைத்தானிய ஜின்கள் தான் என்பதை ஊர்ஜிதப் படுத்தும் விதமாக இன்னும் சில தகவல்களையும் கூட காண முடிகிறது.

அனுனாக்கி எனும் அவதாரங்களாக சுமேரியர்கள் மத்தியில் தோன்றிய ஷைத்தான்களுள் அனேகமானோர் கிட்டத்தட்ட மனித வடிவங்களுக்கு நெருக்கமான வடிவங்களிலேயே தோன்றியுள்ளார்கள். ஆனால், அவர்களால் முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முடியவில்லை. இவர்கள் உண்மையில் யார் என்பதைக் காட்டிக் கொடுப்பது போல் ஆங்காங்கே சில தடயங்கள் வெளிப்பட்டுள்ளன.

சுமேரியர்கள் வழக்கில், அனுனாக்கியோடு தொடபுள்ள பல கடவுள்களின் ஒரு கூட்டணியைப் பொதுவாக அழைக்கும் போது “ஸிர்” (SIR) எனும் பெயர் மூலம் தான் அழைத்துள்ளார்கள். “ஸிர்” எனும் இந்தப் பதத்தின் மொழியாக்கம், “Dragon” அல்லது “பெரிய பாம்பு” (Big Serpent) என்பது தான். “ஸிர்” எனும் இந்தச் சொல்லுக்கு நிகரான ஒரு சொல்லே சமஸ்கிருதத்திலும் கூட “சர்ப” (சர்ப்பம்) என்று வழங்கப் படுகிறது.

இந்தச் சொல்லை வைத்துக் கூட பல ஆய்வாளர்கள் அனுனாக்கி கடவுள்கள் Reptilian / Draconian வேற்றுக்கிரகவாசிகளாக இருக்கலாம் என்றும் சந்தேகித்திருப்பதுண்டு. இதை உறுதிப் படுத்துவது போலவே பின்வரும் இணைப்பிலுள்ள சுமேரியக் கல்வெட்டிலிருக்கும் உருவங்கள் கூட அமைந்திருப்பதைப் பார்க்கலாம்:

http://4.bp.blogspot.com/…/2M…/s1600/Reptilians+on+Earth.jpg

இது மட்டுல்லாமல் மேலும் சில சான்றுகள் வாயிலாகவும் Reptilian ஜின்களின் கையாடல்களே இங்கு ஊடுறுவியிருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இன்றைய ஈராக், குர்திஸ்தான், மற்றும் தென் துருக்கி ஆகிய எல்லைப் பிரதேசங்களையொட்டி வியாபித்திருக்கும் பாரிய மலைத்தொடர்கள் இன்று “ஸக்ரோஸ்” மலைகள் (Zagros Mountains) என்று அழைக்கப் படுகின்றன. இந்த மலைத்தொடர்களை அண்டிய பிராந்தியங்களில் இன்று குர்திஷ் மக்களே பெரும்பான்மையாக வாழ்கின்றனர். குர்திஷ் இனத்தவர்களது நம்பிக்கைப் பிரகாரம், இவை புனித மலைகள் என்பதாகவே இன்றுவரை கருதப் படுகின்றன.

இந்த மலைத்தொடர்களின் அடிவாரங்களில் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் அழிந்து போன ஓர் ஊரின் சிதிலங்கள் கண்டுபிடிக்கப் பட்டன. வரலாற்றுத் தடயமாக இன்று கருதப்படும் இந்த ஊர், “ஜர்மோ” (Jarmo) என்று அழைக்கப் படுகிறது. சுமேரியர்களது நாகரீகத்தின் ஒரு பகுதியாகவே இது கூட அனேகமானோரால் கருதப் படுகிறது. ஏனெனில், தொல்பொருள் ஆய்வுகளின் பிரகாரம் இந்த நகரம் கி.மு. 7090 (இற்றைக்கு 9000 ஆண்டுகளுக்கு முந்திய) காலப் பகுதியைச் சேர்ந்தது என்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. சுமேரிய நாகரீகத்தின் சிதிலங்களைப் போன்ற பல வரலாற்றுத் தடயங்கள் இங்கும் கண்டுபிடிக்கப் பட்டன.

இவ்வாறு கண்டுபிடிக்கப் பட்ட தடயங்களுள் ஒன்று தான், “செழுமைத் தாய் தெய்வம்” (The Mother Goddess of Fertility) எனும் ஒரு கடவுள் அவதாரத்தின் சிலை. இந்தச் சிலையைப் பின்வரும் இணைப்புகளில் பார்க்கலாம்:

http://www.bibliotecapleyades.net/ima…/fotodiosapmadonnp.jpg

http://2.bp.blogspot.com/…/f_Xy1…/s1600/Anunnaki+reptile.jpg

இந்தச் சிலையைப் பார்க்கும் போதே உண்மை வெளிச்சத்துக்கு வருகிறது. இன்றைய உலகில் வேற்றுக்கிரகவாசிகள் என்று அடையாளப் படுத்தப்படும் அதே Reptilian முக ஜாடையுடனேயே இந்தப் பெண் தெய்வத்தின் சிலையும் இருக்கிறது. மேலும், இந்தப் பெண் தெய்வம் கையில் சுமந்து பால் கொடுக்கும் குழந்தையின் முகம் கூட முழுக்க முழுக்க Reptilian முகமாகவே உள்ளதையும் பாக்க முடிகிறது.

பண்டைய சுமேரியாவில் வானிலிருந்து இறங்கிய கடவுள் அவதாரங்களைப் போல் நடித்து, அதன் மூலம் பெரும் திரளான மக்களைக் குறுகிய காலத்துக்குள் நரக நெருப்பின் பால் திருப்பி விட்டதெல்லாம், இப்லீஸின் கோத்திரத்தைச் சார்ந்த Reptilian எனப்படும் இந்த ஷைத்தானிய ஜின்களே. இது தான் வரலாற்றில் மறைந்திருக்கும் உண்மை.

சுமேரியாவுக்கு நடந்த இதே கதி தான், அதன் பிறகும் உலகில் தோன்றிய பல்வேறு நாகரீகங்களுக்கும் நேர்ந்திருக்கிறது. அங்கெல்லாம் மனிதர்கள் பின்பற்றிக் கொண்டிருந்த அல்லாஹ்வின் வேதங்களையெல்லாம் இதே அடிப்படையில் தான் ஷைத்தானிய ஜின்கள் மாசுபடுத்தி, அவற்றையெல்லாம் பலதெய்வக் கோட்பாடுகளாக மாற்றியுள்ளனர்.

இதே அடிப்படையில், நபி (ஸல்) அவர்களுக்கு முற்பட்ட காலத்தில் அரேபியாவில் பின்பற்றப் பட்டு வந்த இஸ்மாயீல் (அலை) அவர்களது வேதத்தைக் கூட இதே போன்று தான் ஷைத்தானிய ஜின்கள் சிதைத்து, இறுதியில் அல்லாஹ்வின் ஆலயமாகிய கஃபாவினுள்ளேயே 360 கடவுள் அவதாரங்களை இந்த ஷைத்தானிய ஜின்கள் வெற்றிகரமாகப் புகுத்தினர்.

பண்டைய சுமேரியாவில் “அஸ்பு” என்று அழைக்கப்பட்ட ஏக இறைவனுக்கு (அல்லாஹ்வுக்கு) ஒரு மகள் பிறந்ததாகவும், அந்த மகள் மூலமே அல்லாஹ்வுக்கு வாரிசுகள் தோன்றியதாகவும் ஷைத்தான்கள் கற்பித்த இதே சித்தாந்தம் தான் மனித நாகரிகத்தின் வரலாறு நெடுகிலும் தொடர்ந்திருக்கிறது. நாட்டுக்கு நாடு, மொழிக்கு மொழி பெயர்கள் தாம் வித்தியாசப் பட்டிருக்கின்றனவே ஒழிய, அடிப்படையில் இது ஒரு தொடர்கதை மட்டுமே. இவை அனைத்தும் ஷைத்தானிய ஜின்களின் கைவரிசையின் விளைவுகள் மட்டுமே. இதை அல்குர்ஆன் கூட பின்வருமாறு அழகாக உறுதிப் படுத்துகிறது:

ஜின்களை அல்லாஹ்வே படைத்திருக்கும் போது, அவர்களை அவனுக்கு இணையாக்கி விட்டனர். அறிவில்லாமல் அவனுக்கு ஆண் மக்களையும், பெண் மக்களையும் கற்பித்து விட்டனர். அவேனா தூயவன். அவர்கள் வர்ணிப்பதை விட்டும் அவன் உயர்ந்து விட்டான்.
(அல்குர்ஆன் 6:100)

இதன் தொடர்ச்சியை இன் ஷா அல்லாஹ் அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.

இன் ஷா அல்லாஹ் வளரும்...

- அபூ மலிக்

 

Episode 64 : நகருயிர் சார்ந்தோர் (Reptilians / Draconians) – தொடர்ச்சி – 3:




Power of Creator
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..