Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் - Episode 69
Posted By:Hajas On 11/21/2017 9:20:11 PM

பறக்கும் தட்டுக்களும் ஜின்களும்
==============================

by - Abu Malik

 தொடர் 5: சூத்திரதாரிகள்

 Episode 68: நகருயிர் சார்ந்தோர் (Reptilians / Draconians) – தொடர்ச்சி – 7

நகருயிர் சார்ந்தோர் (Reptilians / Draconians) – தொடர்ச்சி – 8:

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Image may contain: text

கடந்த ஒருசில எபிசோட்களில், நமது உணர்ச்சிகள் வாயிலாக உள்நுழைந்து, அவற்றின் மூலம் நமது சிந்தனையின் பூரண கட்டுப்பாட்டை நமது DNA அளவில் ஷைத்தானிய ஜின்களால் கைப்பற்றிக் கொள்ளலாம் என்பதைப் பார்த்தோம். இனி அதன் தொடர்ச்சியாக மேலும் சில அடிப்படைகளைப் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.

நம்மோடு கூடவே இருக்கும் “கரீன்” எனும் ஷைத்தானிய ஜின்களுக்கு நம் மீது இருக்கும் ஆதிக்கமானது நமது உணர்வுகளின் அடிப்படையிலானது மட்டுமே என்பதை நாம் ஏற்கனவே பார்த்தோம். இந்த அடிப்படையில், நமது DNA இல் இந்த ஜின்கள் ஏற்படுத்தும் மாற்றங்களில் அனேகமானவை தற்காலிகமானவையும், மட்டுப்படுத்தப் பட்டவையாகவுமே இருக்கும்.

ஆனால், மனித இனத்தை மொத்தமாகக் கருவறுக்கும் தனது பாரிய செயல்திட்டங்களை வெற்றிகரமாக அரங்கேற்றுவதற்கு, கரீன்களிடம் இருப்பது போன்ற, மட்டுப்படுத்தப்பட்ட, தற்காலிக மாற்றத்தை ஏற்படுத்த வல்ல ஆற்றல்கள் மட்டும் இப்லீஸுக்குப் போதாது. மனிதனது முழு DNA ஐயும் தனது கைப்பாவையைப் போல் இஷ்டத்துக்கு ஆட்டுவிப்பதன் மூலம் மட்டுமே அவனது திட்டங்கள் முழுமையாக நிறைவேறும். எனவே, மனித DNA இன் முழுக் கட்டுப்பாட்டையும் நிரந்தரமாகத் தன் வசம் ஆக்கிக் கொள்ளவே இப்லீஸ் முயற்சிக்கிறான். இது தான் உண்மையில் அவனது இலக்கு.

இந்த இலக்கை நோக்கமாகக் கொண்டு, கரீன் அல்லாத ஏனைய சக்தி மிக்க ஜின் இனத்தவர்களைக் கூட மனிதர்களை நோக்கி இப்லீஸ் மேலதிகமாக ஏவி விடுகிறான். அவர்களில் அனேகமானோர் கரீன்களை விட அதிக ஆற்றல் மிக்கவர்களென்பதால், தத்தம் ஆற்றலுக்கேற்ப பல்வேறு அடிப்படைகளில் நமது DNA இல் மாற்றங்களை ஏற்படுத்த அவ்வாறான ஜின்கள் முனைவதுண்டு. 

இவ்வாறான முயற்சிகளின் பிரதிபலிப்புக்களையே ஜின்கள் உடலில் புகுதல், ஜின் மேலாடுதல், ஜின்களால் பைத்தியம் ஏற்படுதல், ஜின்களால் வலிப்பு நோய் ஏற்படுதல், சூனியத்தால் பாதிக்கப்படுதல்... போன்ற பல்வேறு பெயர்களில் இலகுவான மொழி நடையில் நாம் இதுவரை புரிந்து வைத்திருக்கிறோம்.

ஆனால், ஷைத்தானிய ஜின்களின் இவ்வாறான முயற்சிகளால் நமக்குள் ஏற்படுத்தப்படும் மரபணு மாற்றங்கள் கூட அனேகமான சந்தர்ப்பங்களில் தற்காலிகமானவையாகவே இருப்பதுண்டு; நிரந்தர மாற்றங்களாக இவை கூட இல்லை. ஏனெனில், இவ்வாறான மரபணு மாற்றங்களால் ஏற்படும் ஷைத்தானிய தாக்கங்களுக்குத் தகுந்த நிவாரண நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளும் போது, இந்த மாற்றங்கள் கூட விலகி விடுகின்றன. கஷ்டப்பட்டு ஷைத்தானிய ஜின்கள் திட்டமிட்டு நமக்குள் ஏற்படுத்தும் இவ்வாறான மாற்றங்கள் சில சமயங்களில் நமது நிவாரண நடவடிக்கைகளால் ஒரே நொடியில் கூட செல்லாக்காசாகிப் போவதுமுண்டு.

உதாரணத்துக்கு ஷைத்தானிய ஜின்களின் இவ்வாறான முயற்சிகளின் விளைவாக ஒரு மனிதனில் ஏற்படும் மாற்றங்களை அவதானித்து, அதிலிருந்து அந்த மனிதனை மீட்கக்கோரி அல்லாஹ்விடம் பிரார்த்தித்தும், குர்ஆனை ஓதி ருக்யா செய்தும் நிவாரணத்தை வேண்டும் போது, நமது DNA இல் ஜின்களால் ஏற்படுத்தப் பட்டிருக்கும் இந்தத் தற்காலிக அதிர்வெண் மாற்றங்களெல்லாம் அல்லாஹ்வின் வேத வசனங்களின் சக்தியால் சீர்செய்யப் படுவதோடு, அந்த மாற்றங்களை ஏற்படுத்திய ஜின்னும் கூட அதன் மூலம் அங்கிருந்து துரத்தியடிக்கப் படுகிறது. இந்த அடிப்படையில் ஷைத்தான்களின் பல நாள் முயற்சிகள் ஒரே நாளில் தோற்கடிக்கப் பட்டு விடுகின்றன.

அதே போல், சூனியத்தால் ஒரு மனிதன் பாதிக்கப் படுதல் என்பது கூட சூனியம் செய்யப்படும் மனிதனது DNA இல் அந்த சூனியத்தைப் பலிக்கச் செய்யும் ஜின்கள் தோற்றுவிக்கும் அதிர்வெண் மாற்றங்களால் ஏற்படும் உடல் / உள்ளம் சார்ந்த மாற்றங்கள் மட்டுமே. சூனியத்தின் மூலம் ஏற்படும் சில பிரத்தியேகமான நோய்கள், மற்றும் உளவியல் மட்டத்தில் ஏற்படுத்தப்படும் குணாதிசய மாற்றங்கள் மூலம் குடும்பங்களுள் ஒருவருக்கொருவர் விருப்பு / வெறுப்புக்களில் ஏற்படும் மாறுதல்கள், மற்றும் விரிசல்கள் போன்ற அனைத்துமே அடித்தளத்தில் அந்தந்த மனிதர்களது DNA இல் ஷைத்தானிய ஜின்களால் ஏற்படுத்தப்படும் தற்காலிக மாற்றங்களின் விளைவுகள் தாம்.

ஆனால், இந்த மாற்றங்கள் கூட நிரந்தரமில்லை. ஏனெனில், இது போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப் பட்டோர், தமது பிரச்சினைகளைத் தீர்க்கக் கோரி, குர்ஆனைக் கொண்டும், பிரார்த்தனைகளைக் கொண்டும் அல்லாஹ்விடம் கையேந்தும் போது, சூனியத்தின் மூலம் சம்பந்தப் பட்ட மனிதரின் DNA இல் தோற்றுவிக்கப்பட்ட அதிர்வு மாற்றங்கள் கூட மீண்டும் சீர் செய்யப் படுகிறது. இதன் மூலம், சம்பந்தப் பட்டவர்களது உடல் நிலை, மற்றும் குணாதிசயங்கள் கூட பழைய நிலைக்குத் திரும்பி விடுவதால், அல்லாஹ்வின் நாட்டத்தோடு குடும்பப் பிரச்சினைகள் மீண்டும் சீராகி விடுவதுண்டு. இதே அடிப்படையில் தான் ஜின்கள் உடம்பில் கூடுவதால் ஏர்படும் வலிப்பு, பைத்தியம் போன்ற நோய்கள் பற்றிய நிலைமைகளையும் புரிந்து கொள்ள வேண்டும்.

அதாவது சுருங்கக் கூறினால், இப்லீஸ் மூலம் ஏவி விடப்படும் ஷைத்தானிய ஜின்களால் மனிதர்களாகிய நமது DNA சுருள்களில் தோற்றுவிக்கப்படும் அதிர்வெண் மாற்றங்கள் எதுவுமே நிரந்தரமானதில்லை. தகுந்த விதத்தில் அல்லாஹ்விடம் உதவி தேடிப் பாதிக்கப்பட்ட மனிதன் பிரார்த்திக்கும் போதும், குர்ஆனைக் கொண்டு நிவாரணம் தேடும் போதும், ஜின்களால் ஏற்படுத்தப்பட்ட DNA அதிர்வெண் மாற்றங்களெல்லாம் சீர் செய்யப்பட்டு விடுவதுண்டு. இதன் விளைவாகப் பல நாட்கள் திட்டமிட்டு, மிகவும் கஷ்டப்பட்டு ஷைத்தானிய ஜின்கள் செய்யும் முயற்சிகளுக்கான பிரதிபலன்கள் எல்லாமே ஒரு மனிதனின் ஈமானின் தரம் உயரும் போதும், அவனது பிரார்த்தனைகள் அல்லாஹ்விடம் எடுபடத் தொடங்கும் போதும் ஒரே நொடியில் காற்றில் பறந்து போவது போல் வீணாகியும் விடுகின்றன. இப்லீஸ் சந்திக்கும் மிகப்பெரும் தோல்விகளில் இதுவும் ஒன்று.

இவ்வாறான தோல்விகளைத் தொடர்ந்தும் இப்லீஸ் சந்திக்காமலிருக்க வேண்டுமென்றால், ஓதிப்பார்த்தல் போன்ற நோய் நிவாரணிகளால் கூட இலகுவில் சீர்செய்யப்பட முடியாத அளவுக்கு மனிதர்களது DNA இல் நிரந்தர மாற்றங்களை ஏற்படுத்துவதால் மட்டுமே அது சாத்தியப்பட வாய்ப்புண்டு. அதாவது, மனிதன் எனும் படைப்பின் அடிப்படைத் தன்மையிலேயே மரபணு ரீதியில் பௌதீக ரீதியான சில நிரந்தர மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் மட்டுமே தான் எதிர்பார்க்கும் வெற்றியை அடைய முகாந்திரம் இருக்கிறது என்பதை இப்லீஸ் அறிந்தே இருக்கிறான்.

இதன் பிரகாரம், மனிதர்களது DNA சுருள்களில் நிரந்தர மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமென்ற ஓர் அடிப்படைத் தேவை இப்லீஸுக்கு இருக்கிறது என்பதை நாம் இந்த நியாயங்களின் அடிப்படையில் இலகுவாகப் புரிந்து கொள்ளலாம்.

இப்லீஸின் இந்தத் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளும் நோக்கத்தில், நீண்ட நாட்களுக்கு மறையாமல் நீடிக்கக் கூடிய பௌதீக ரீதியான மாற்றங்களை மனிதர்களது DNA சுருள்களில் ஏற்படுத்தவே அவனைச் சார்ந்த Reptilian இனத்தவர்களாகிய ஷைத்தானிய ஜின்கள் இன்றைய உலகில் மிகவும் மும்மரமாகப் பல செயல்திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.

வேற்றுக்கிரக வேஷங்களில் வரும் ஷைத்தானிய ஜின்கள், லட்சக்கணக்கான மனிதர்களைத் தினசரி கடத்திச் செல்வதும், அவர்களது உடல்களில் சில விசித்திரமான அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்வதும், கடத்தப் படுவோரின் விந்து, மற்றும் முட்டை மாதிரிகளை அறுவடை செய்து கொள்வதும்.... எல்லாமே இவ்வாறான செயல்திட்டங்களின் சில வெளிப்பாடுகள் மட்டுமே.

இது போன்ற பல செயல்திட்டங்கள் மூலம் ஷைத்தானிய ஜின்கள் அடைய முனைவதெல்லாம் ஒன்றேயொன்றை மட்டுமே. அது தான், மனிதர்களது DNA சுருள்களில் உயிரியல் தொழினுட்ப ரீதியிலேயே சில நிரந்தர மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் இந்த மனித இனத்தைத் தூய மனித இனம் அல்லாத, ஒரு புதுவிதமான கலப்பினமாக மாற்றியமைப்பது.

இவ்வாறு மனித மரபணுக்களில் நிரந்தர மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் ஷைத்தான்கள் எதிர்பார்ப்பதெல்லாம், தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ், சாவி கொடுக்கப்பட்டு இயங்கும் பொம்மைகளைப் போல் மனிதர்கள் இயங்க வேண்டும் என்பது தான். இப்லீஸ் நினைக்கும் நேரங்களிலெல்லாம் அவன் நினைக்கும் விதத்தில் மனிதர்கள் தம் வாழ்வில் தீர்மாணங்களை எடுக்க வேண்டும். இதன் மூலம், அல்லாஹ்வின் அடிமைகளாக மட்டுமே இவ்வுலகில் வாழ்வதற்காகப் படைக்கப்பட்ட இதே மனித இனம், இப்லீஸின் அடிமைகளாக வாழ வேண்டும். இதன் மூலம் அல்லாஹ் மனிதனைப் படைத்த அடிப்படை நோக்கம் எனும் அம்சத்தில் இப்லீஸிடம் அல்லாஹ் தோற்க வேண்டும். இது தான் இப்லீஸின் இறுதி இலக்கு.

இந்த இலக்கை அடைவதற்கான செயல்திட்டங்களை அமுல்படுத்துவதற்காகவே வேற்றுக்கிரக வேஷங்களில் வரும் அத்தனை ஷைத்தானிய ஜின்களும் இன்றைய உலகில் காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். Hybridization / Cloning போன்ற அடிப்படைகளிலான பல தொழினுட்பங்கள் மூலம் மனித இனத்தவர்களைத் தூய மனித இனம் அல்லாத, மரபணு மாற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு புதிய கலப்பினமாக (Hybrid Species) மாற்றியமைப்பதற்காகவே இவர்கள் சர்வதேச மட்டத்தில் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தத் திட்டம், உலகளாவிய மாற்றங்களை இலக்காகக் கொண்ட ஒரு பாரிய திட்டம். எனவே, இதை வெற்றிகரமாக அரங்கேற்றுவதற்கு மனிதர்களது தரப்பிலிருந்தும் பல ஒத்துழைப்புக்கள் அத்தியாவசியம். இந்த ஒத்துழைப்பைக் கச்சிதமாக வழங்குவதற்கென்றே பல நூற்றாண்டுகளாகப் படிப்படியாகத் தயாரிக்கப்பட்ட இப்லீஸின் மனித அடியாட்களே இலுமினாட்டிகள்.

உலக மக்களின் DNA சுருள்களில் நிரந்தர மாற்றங்களை ஏற்படுத்தும் இப்லீஸின் இந்தச் செயல்திட்டம் முழு அளவில் முன்னெடுக்கப் படுவதற்கு முன்னர், இதற்கு முழுமூச்சாக உதவுவதற்காகவென்றே தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் தமது அடிமைகளான இலுமினாட்டிகள், தமக்கு விசுவாசமான அடிமைகளாக உழைக்க வேண்டியது அவசியம். எனவே, தமது முதல்தர சேவகர்களாக மனிதர்களுள் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இலுமினாட்டி கோத்திரத்தவர்களது DNA சுருள்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதே ஷைத்தானிய ஜின்களின் முதல் கட்ட அவசியமாக இருந்தது.

இந்த அவசியத்தைக் கருத்திற் கொண்டு கடந்த பல நூற்றாண்டுகளாகத் தலைமுறை தலைமுறையாக இலுமினாட்டி குடும்பத்தவர்களது மரபணுக்களில் கட்டம் கட்டமாகப் பல நிரந்தர மாற்றங்கள் திட்டமிட்டு ஏற்படுத்தப் பட்டன.

ஆரம்ப காலங்களில் ஷைத்தானிய வழிபாடுகளில் ஈடுபட்டு வந்த இலுமினாட்டிகள் திரைமறைவில் செய்வதற்காகவென்றே பல விதமான ஷைத்தானிய பூஜை வழிபாடுகள் ஜின்கள் மூலம் இலுமினாட்டிகளுக்குக் கற்பிக்கப் பட்டன. இவ்வாறான பூஜை வழிபாடுகள் அனைத்திலும் இரத்த பூஜை, நிர்வாண பூஜை, மற்றும் காம பூஜை போன்ற பூஜைகள் தவறாமல் உள்ளடக்கப் பட்டன.

இவ்வாறான பாரம்பரிய பூஜைகளின் போது உயிர்களைப் பலியிடுதல், நிர்வாண உடல்களை இரத்தத்தால் குளிப்பாட்டுதல் போன்ற வழிபாடுகள் செய்யப் படுவதோடு, பிரதானமாக உடலுறவு எனும் வழிபாடு தவறாமல் நடப்பதுண்டு. இதன் போது ஷைத்தானிய மந்திர உச்சாடனங்களோடு வட்ட வடிவில் பக்தர்கள் நின்று பார்த்துக் கொண்டிருக்க, வட்டத்துக்கு நடுவில், தரையில் போடப்படும் கோலத்தின் மீது முழு நிர்வாணமாகக் கிடத்தப்படும் பெண்களோடு முகமூடி அணிந்த, யாரென்று அறியப்படாத சில மர்ம நபர்கள் உடலுறவு கொள்வது தான் இந்தப் பூஜையின் உச்சகட்ட வழிபாடாக இருக்கும்.

இவ்வாறான உடலுறவின் போது, அந்த உடலுறவை ஆசீர்வதிப்பது போல், ஒரு பாம்பைக் கொண்டுவந்து, குறிப்பிட்ட பெண்ணின் பிறப்புறுப்பில் அதை நுழைப்பது கூட ஒரு வழக்கம். பாம்பு உள்ளே சென்று ஆசீர்வாதம் செய்த பிறகு தான் உடலுறவு நடக்கும்.

இதில் கவனிக்கத்தக்க இன்னோர் அம்சம் என்னவென்றால், இவ்வாறான பூஜைகளில் நடக்கும் உடலுறவுகளின் போது முகமூடி அணிந்து வந்து குறிப்பிட்ட பெண்ணோடு உறவு கொள்வோரில் சிலர் மனிதர்களாக இருக்கும் அதே வேளை, மேலும் பலர் நகருயிர் சார்ந்த ஷைத்தானிய ஜின்களாகவே இருப்பார்கள்.

இவ்வாறான முறைகேடான உடலுறவுகள் மூலமாகவும், இரத்தக் கலப்பு / பரிமாற்றம் போன்றவை மூலமாகவும் மனித, ஜின் ஆகிய இரு இனத்தவர்களதும் மரபணு சார்ந்த இனக்கலப்புக்கான அத்திவாரம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இலுமினாட்டி குடும்பத்தவர்களில் உறுதியாகப் போடப்பட்டு விட்டது.

இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட இந்த விசித்திரமான கள்ளத் தொடர்புகள் காலம் செல்லச்செல்ல மேலும் பல படித்தரங்கள் முன்னேற்றமடைந்து, இலுமினாட்டி குடும்பத்தவர்களுக்கும் ஷைத்தானிய ஜின்களுக்கும் இடையிலான பந்தம் இன்னுமின்னும் வலுப்பெற ஆரம்பித்தது. இதன் விளைவாக நாளடைவில் இலுமினாட்டி கோத்திரங்களில் மனித-ஜின் கலப்படத்தால் உருவான புதுப்புது கலப்பின சந்ததிகள் உருவாகத் தொடங்கினர்.

பிற்காலத்தில் இந்தக் கலப்பினச் சந்ததியரோடு இன்னுமின்னும் புதுப்புது விதமான விசித்திரத் தொடர்புகள் ஷைத்தானிய ஜின்களுக்கு அதிகரித்தன. உயிரியல் ரீதியில் பரிசோதனைக் குழாய்க் குழந்தைகள் (Test tube babies) உருவாக்கப் படுவது போன்ற பல அடிப்படைகளிலும், மற்றும் Hybrid / Cloning சார்ந்த பல இரகசியத் தொழினுட்பங்களின் அடிப்படையிலும் இலுமினாட்டி குடும்பத்துப் பெண்களுக்கும், நகருயிர் சார்ந்த ஷைத்தானிய ஆண் ஜின்களுக்கும் இடையில் பிறந்த நேரடி வாரிசுகளாகப் பல தலைமுறைகள் தோற்றம் பெற்றனர்.

இறுதியில் இப்லீஸ் எதிர்பார்க்கும் அளவுக்கு DNA சுருள்களில் உயிரியல் ரீதியில் நிரந்தர மாற்றங்களைக் கொண்ட, விருத்தியடைந்த கலப்பின வழித்தோன்றல்கள் இலுமினாட்டிகளின் பரம்பரையில் பெருகலாயினர்.

இன்றிருக்கும் இலுமினாட்டிகளில் எவருமே தூய மனித இனத்தவர்கள் அல்லர். உடலில் பெரும் பகுதி மனிதத் தன்மையோடும், உள்ளுக்குள் பெரும் பகுதி நகருயிர் ஜின் இனத்தவர்களது தன்மைகளோடும் ஆன கலப்பின மனிதர்களாகவே இந்த நூற்றண்டில் உலகைக் கட்டியாண்டு கொண்டிருக்கும் இலுமினாட்டிகள் உள்ளார்கள். இதை நாம் இன்றைய உலகில் கண்கூடாக ஆதாரங்களோடு பார்க்கலாம். அது எப்படியென்பதையும் சற்று விலாவாரியாகக் கூறி விடுவதே பொருத்தமென்று நினைக்கிறேன். இன் ஷா அல்லாஹ் இதை அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.

இன் ஷா அல்லாஹ் வளரும்....

- அபூ மலிக்

Episode 70: நகருயிர் சார்ந்தோர் (Reptilians / Draconians) – தொடர்ச்சி – 9






Power of Creator
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..