Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
டிசம்பர் 6 - நீதியின் மறுபக்கம்
Posted By:peer On 12/7/2017 10:48:52 PM

நாளை பாபர் மஸ்ஜித் இடிப்பை முன்னிட்டு நாடு முழுக்க அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடு..
தமிழகத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளதாம்!!!

பாதுகாப்பிற்க்கு நிற்க்கும் காவல்துறை அதிகாரிகளுக்கு தண்ணீர், உணவு தேவைப்பட்டால் கூறுங்கள்,, தாடி வைத்து தொப்பி போட்ட தீவிரவாதி கொண்டு வந்து இலவசமாக கொடுப்பான்!!!

1992 பாபரி பள்ளி இடிப்பின் போது அப்போது நடந்த கலவரத்திற்க்கு பிறகு 
அதை காரணம் காட்டி இதுவரை என் சமுதாயத்தான் ஒரு கலவரத்தினை கூட இங்கே நடத்திடவில்லை,, மாற்று மத சொந்தங்களின் வணக்கஸ்த் தலங்களையும் தகர்த்ததில்லை!!!

ஜன நாயகத்திற்க்கு மதிப்பளித்து சட்டத்திற்க்கு உட்பட்டு தான் என் சமுதாயத்தான் வருடா வருடம் டி.6 அன்று தொண்டை வற்ற கோஷம் போட்டு விட்டு கடந்து செல்கிறான்!!!

2015 ஆம் ஆண்டு டிசம்பரில் வெள்ளம் வந்த போது போராட்டம் செய்யாமல் எம் தமிழக மக்களுக்கு தான் ஓடி ஓடி சென்று உணவுகளையும், தேவையான பொருட்களையும் வாரி வழங்கினான்.. மாற்று மத வணக்கஸ்த் தலங்கள் உள்ளே வரை சென்று சுத்தம் செய்தான் இந்த தீவிரவாத சமுதாயம்!!!

ஏன் வெறுப்பு என்ற ஒன்று இருந்திருந்தால் அப்போது குண்டு வைத்திருக்க மாட்டானா இந்த தீவிரவாதக் கூட்டம்???
பள்ளிவாசல்களைக் கூட திறந்து விட்டு அனுமதி அளித்தான் இந்த மாபெரும் தீவிரவாத சமுதாயம்!!!

போன வருடம் டிசம்பர் 5 அம்மையார் ஜெயா அவர்கள் இறந்து 6 ஆம் தேதி அடக்கம் செய்யபட்ட போது,, ஒட்டுமொத்தமாக போராட்டத்தை உதறித் தள்ளினான் இந்த தீவிரவாத சமுதாயம்!!! ஏன் அப்போது கூட்டத்தில் நாசவேலை செய்யவில்லை என் தீவிரவாத சமுதாயம்???

இஸ்லாமிய சமுதாயம் போராடினால் நாசவேலை செய்வார்கள் என்ற விஷமமான நினைப்பினையும்,,
உதவிகள் செய்தால் இவர்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது என்ற விஷமமான கேள்வியினையும்,,

தூக்கி எறிந்து விட்டு எங்கள் தோள் மேல் கைப் போட்டு பழகிப் பாருங்கள் பிறகு புரியும் இஸ்லாமியர்கள் எந்தளவு இறைவனுக்காக மற்றவர்களை நேசிக்கக் கூடியவர்கள் என்று!!!

அப்படி நேசிப்பதன் விளைவே இருக்கின்றதை எடுத்துக் கொண்டு ஓடி வந்து உதவுகிறான் இந்த தீவிரவாத சமுதாயம்!!!

இல்லை உங்களைப் பொறுத்தவரை தாடி வைத்து தொப்பி போட்டு விட்டால் தீவிரவாதி, குண்டு வைப்பவன் தான் என்றால்,,
ஆம் நாங்கள் தீவிரவாதிகள் தான் சகோதரத்துவத்தையும், மனித நேயத்தையும் போற்றி நேசித்து வாழக் கூடிய மாபெரும் தீவிரவாதிகள் தான்!!!

#நன்றி..
நீதியின் மறுபக்கம்






Poetry
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..