Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
மர்மங்கள்_முடிவதில்லை - பாகம்1
Posted By:Hajas On 1/10/2018 8:55:49 AM

 

மர்மங்கள்_முடிவதில்லை

ரா_பிரபு

(பாகம்1 : மரண மலை )

 

இந்த உலகம் பல வகை மர்மங்களை மர்ம நிகழ்வுகளை மர்ம இடங்களை மர்ம மனிதர்களை கொண்டது. சொல்ல போனால் இந்த பூமியே ஒரு மர்ம கிரகம் தான் . யோசித்து பாருங்கள்.


"Observable univerce " என்று நாம் சொல்ல கூடிய அதாவது இன்று வரை வானத்தில் நாம் அண்டத்தின் அளவை எட்டி பார்த்து அளக்க முடிந்த தொலைவாகிய இந்த அண்டத்தின் அளவு 9300 கோடி ஒளி ஆண்டுகள். இவ்வளவு பெரிய பரந்து விரிந்த பரப்பில் இந்த தம்மாந்துண்டு பூமியில் இருப்பதை போன்ற காற்று தண்ணீர் மற்றும் உயிரினத்தை இது வரை ஆதார பூர்வமாக நம்மால் எங்கும் கண்டு பிடிக்க முடியவில்லை.. இது மிக பெரிய மர்மமாக தெரியவில்லையா ? இவ்ளோ பெரிய அண்டம் அதில் நாம் மட்டும் தான் தனியா இருக்கோம் இது மிக பெரிய ஆச்சர்யமாக இல்லையா ?இவ்வளவு பெரிய அண்டசராசரத்தில் நாம் மட்டும் தனியாக என்ன செய்து கொண்டிருக்கின்றோம் ?

அண்டத்தின் நமது இருப்பை பற்றி ஒரு விஞ்ஞானி ஒரு முறை இப்படி சொன்னார் , " இரண்டே உண்மைகள் தான் சாத்தியம் ஒன்று இவ்ளோ பெரிய மகா பிரபஞ்சத்தில் நாம் மட்டும் தான் தனியா இருக்கோம். அல்லது இந்த பிரபஞ்சத்தில் நாம தனியா இல்லை.... இந்த இரண்டில் எது உண்மையானாலும் இரண்டுமே ஒரே அளவு திகிலை கொடுக்க கூடிய உண்மைதான் " என்றார்.


இந்த பிரபஞ்சத்தில் நாம் தனித்து இருக்கும் ஆச்சர்யத்தை பற்றி தலையை கிறுகிறுக்க வைக்கும் பல கோட்பாடுகள் உள்ளன அவற்றை பற்றி விளக்கினால் இந்த கட்டுரை தொடர் அறிவியல் கட்டுரையாக மாறிவிடும் என்பதாலும் மர்மங்கள் தலைப்பு தாங்கி இந்த கட்டுரை தொடர் ஆரம்பிக்க பட்டுள்ளதாலும் மர்மங்கள் சிலதை பற்றி வரிசையாக அலசி விட்டு தொடரின் கடைசி அத்யாயத்தில் அந்த கோட்பாடுகள் பற்றிய விளக்கத்திற்கு மீண்டும் வருகிறேன்.


இப்போதைக்கு மர்மங்கள் மட்டும்......

மர்மமே வடிவான இந்த மர்ம பூமியில் அடங்கியுள்ள நிகழ்வுகள் பல வற்றில் பஞ்சம் இல்லாமல் மர்மங்களும் அமானுஷ்யங்களும் நிறைந்து கிடக்கின்றன. அதில் பலது அவ்வபோது விஞ்ஞானத்தால் தீர்க்க படுகின்றன. உதாரணமாக நீண்ட நாள் மர்மத்திற்கு பின் பெர்முடாவில் ஏதும் மர்மம் இல்லை என்று அங்கு நடந்த பல சம்பவங்களுக்கு விளக்கம் அளித்தது விஞ்ஞானம். ஆனால் இன்னும் விஞ்ஞானம் விடை காண முடியாத மர்மங்கள் இங்கு ஏராளம்.


நமக்கு அதிகம் பரிட்சய பட்ட பிரமிட் ,பயிர் வட்டங்கள் ,பெர்முடா, நாஸ்கா கோடுகள்,ஸ்டோன் எஜ்,ஏரியா 51 தொடங்கி பல சின்ன பெரிய விடை தெரியாத வில்லங்கங்கள் நிறைந்தது தான் இந்த உலகம்.(ஒன்றை இப்போதே சொல்லி விடுகிறேன் நமக்கு அதிகம் பரிச்சயமான அதிக பிரபலமான உலக மர்மங்களை பற்றி நான் கட்டுரையில் சொல்ல போவது இல்லை )

இம்முறை இந்த கட்டுரை வாயிலாக அப்படி ஒரு மர்ம உலகத்திற்குதான் உங்களை ஒரு குட்டி உலா அழைத்து செல்ல இருக்கிறேன். ஒரு சின்ன முன் விளக்கத்தை இப்போதே சொல்லி விடுகிறேன் இந்த கட்டுரையில் நாம் விளக்க முடியாத பல மர்மத்தை தான் பார்க்க போகிறோம் என்பதால் இதில் வரும் அனைத்திற்கும் அறிவியல் பூர்வமான ஆதாரமோ விளக்கமோ என்னால் கொடுக்க முடியாது. ஏனென்றால் இந்த தொடரில் சொல்ல போகும் பல சம்பவங்கள் விஞ்ஞானதாலேயே விளக்க முடியாதவை . சரி .. அந்த முடிவிலா மர்ம உலகத்திற்குள் நுழையலாமா.

 

1959 ஆண்டு அது ....இடம் ரஷ்யாவின் வடக்கு பகுதியில் உள்ள உறைய வைக்கும் பனி படர்ந்த ஒரு மலை.
மலை ஏறும் சாகச குழு ஒன்று அந்த பயங்கர குளிர் சூழ்ந்த பனி மலை அடிவாரத்தை வந்து அடைந்து இருந்தது. அன்று தேதி ஜனவரி 31. 9 பேர் கொண்ட இளைஞர்கள் கூட்டம் அது . அவர்கள் அனைவரும் ரஷ்யாவை சார்ந்த " Ural Polytechnical Institute " ஐ சார்ந்த மாணவர்கள் . அவர்களில் Igor Dyatlov எனும் 23 வயது மாணவன் தான் அந்த டீமின் லீடர்.


அந்த குழு ஒரு திறமையான மலை ஏறும் குழு . அவர்கள் அங்கே மலை ஏற வந்து இருந்ததில் ஒரு நோக்கம் இருந்தது. அவர்கள் அனைவருமே ஹைக்கர்ஸ் காண grade 2 தகுதியை பெற்றவர்கள் அவர்கள் இந்த மலை ஏற்றத்தை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு grade 3 வழங்க படும். அதனால் தான் Sverdlovsk Oblast எனும் இடம் வரை ரயில் பிடித்து பின் அங்கிருந்து லாரி பிடித்து 5 நாள் பயணம் கடந்து இந்த Kholat Syakhl எனும் மலையை வந்து அடைந்து இருந்தார்கள் (Kholat Syakhl எனும் ரஷ்ய பெயரின் ஆங்கில அர்த்தம்..dead mountain )

 

அங்கே அடிவாரத்தில் தங்களுக்கான உணவு மற்றும் கருவிகளை தயார் செய்து எடுத்து கொண்டார்கள். பிப்ரவரி 1 ஆம் தேதி அவர்கள் அந்த மலையில் ஏற துவங்கினார்கள் அந்த மலையை கடந்து அடுத்து அவர்கள் செல்ல இருக்கும் இலக்கை அவர்கள் நிற்காமல் கடந்து செல்ல முடிவு செய்தார்கள். இலக்கை அடைந்த பின் அடுத்த நாள் இரவு அங்கே கேம்ப் போட்டு தங்கி கொள்ளலாம் என முடிவு செய்திருந்தார்கள் .ஆனால் அன்று இரவு கடுமையான பனி பொழிவால் அவர்கள் பாதை கண்ணில் தெரியாமல் மறைந்து போன போது தங்கள் தவறை உணர்ந்தார்கள் அன்று இரவு அங்கேயே டென்ட் போட்டு தங்கிவிட முடிவு செய்தார்கள். அந்த 9 பேர் கொண்ட குழு அன்று தங்கள் வாழ்நாளில் கடைசி இரவு அது என தெரியாமல் அன்றைய இரவு அங்கேயே தங்கினார்கள். ஆம் அடுத்த நாள் அவர்களில் ஒருவர் கூட உயிரோடு இல்லை.

 

அவர்களின் பிணத்தை பிற்பாடு கண்டு பிடித்த போது மக்களுக்கு எக்க சக்க ஆச்சர்யமும் மர்மமும் காத்து கிடந்ததது. முதலில் கிடைத்த 6 பிணத்தில் உயிரை போக்கும் எந்த காயமும் இல்லை அவர்கள் ஹைப்போ தெர்மியாவால் (குளிரால் ) இறந்து இருப்பதாக முடிவு செய்தார்கள். அதில் ஒருவருக்கு மட்டும் கபாலத்தில் லேசாக விரிசல் கண்டு இருந்தது ஆனால் அது உயிரை குடிக்க போதுமானதல்ல என்று டாக்டர்கள் சொன்னார்கள்.

மீதி 3 பிணங்கள் கிடைத்த போது தான் பார்த்தவர்களுக்கு பித்து பிடித்தது. அங்கே நடந்துள்ளது விளக்க முடியாத ஒரு மர்மம் சம்பவம் என்று புரிந்தது. அங்கு கிடைத்த பிணங்களில் 3 பேரில் ஒருவர் மண்டை பிளந்து இருந்தது .இருவருக்கு நெஞ்சு எலும்பு நொறுக்க பட்டிருந்தது ஆனால் ஆச்சர்யமாக அதை நொறுக்கிய அடையாளமாக அந்த உடலில் வெளி காயங்கள் ஏதும் இல்லை. அந்த பாதிப்பை ஆராய்ந்த டாக்டர்கள் இந்த அளவு நெஞ்சு எலும்பை நொறுங்க செய்ய மனிதனால் முடியாது குறைந்தது ஒரு கார் அளவு அழுத்தம் தர பட்டு நொறுக்க பட்டுள்ளது என்றார்கள் . ஆனால் அவர்கள் இருந்த இடத்தை சுற்றி அவர்கள் காலடி தவிர வேறு ஏதும் தடயம் அங்கு இல்லை.


அந்த குழுவில் dubunina என்ற பெண்ணின் பிணத்தை ஆராய்ந்தவர்கள் மேலும் அதிர்ந்தார்கள். அந்த பிணத்தில் நாக்கு துண்டிக்க பட்டு இருந்தது மேலும் ஒரு கண்ணை காண வில்லை. முகதின் தோல் கொஞ்சம் பிய்க்க பட்டு இருந்தது மேலும் மண்டை ஓட்டில் சிறு பகுதி உடைத்து எடுக்க பட்டிருந்தது.

அந்த மர்ம மரணத்தை சரியாக விளக்க முடியாமல் நிபுணர்கள் திணறினார்கள். அவர்களின் பிணங்கள் ஒரே இடத்தில் கிடைக்க வில்லை சம்பந்தா சம்பந்தம் இல்லாம வேறு வேறு இடத்தில் கிடைத்து குழப்பியது. அதில் ஒருவன் உடல் பாதி புதைக்க பட்டு இன்னும் குழப்பினான் . அங்கே மிக விசித்திரமான ஒன்று காண கிடைத்தது .அவர்கள் தங்கள் உடைகளை அவர்களுக்குள் மாற்றி மாற்றி அணிந்திருந்தார்கள் .


அவர்கள் தங்கி இருந்த டென்ட் உள் பக்கமாக கிழிக்க பட்டிருந்தது . அவர்கள் காலடி தடங்கல் அவர்கள் அர்த்த ராத்திரியில் திடீரென டென்டை கிழித்து கொண்டு வெளியே ஓடி வந்து இருப்பதாக காட்டியது. நன்கு சாப்பிட்டு தூங்கிய அந்த குழு திடீரென நள்ளிரவில் டென்டை கத்தியால் கிழித்து கொண்டு வெளியேற வேண்டிய தேவை என்ன ? அந்த குழுவிற்கு நள்ளிரவில் நடந்த மர்ம பயங்கரம் தான் என்ன ? மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்தி கொண்டு அவர்கள் நெஞ்சை நொறுக்கி கால் அடி தடம் கூட தெரியாமல் அவர்களை வேட்டையாடி நாக்கை அறுத்து கண்ணை தோண்டி சிலரை சில அடி ஆழம் பூமியில் புதைத்து அவர்கள் உடையை அவர்களுக்குள் மாற்றி போட்டு..அந்த கொடூர வி்சித்திர செயலை செய்தது யார் அல்லது எது ? கடைசி வரை அந்த கேஸில் யாரும் சரியான விளக்கம் சொல்ல முடியவில்லை.

 

எக்க சக்க யூகங்கள் மட்டுமே மிஞ்சியது.
அங்கு வாழும் மான்சி இன மக்களால் அவர்கள் தாக்க பட்டிருக்கலாம் என்றார்கள் ஆனால் அந்த அதீத அழுத்தத்தை கொடுத்து நெஞ்சை நொறுக்குவது மனித சக்திக்கு அப்பார் பட்டு இருந்ததும் அந்த இடத்தில் வேறு எந்த காலடி தடமும் கிடைக்காததும் இடித்தது. இதை ஏதோ கொடூர விலங்கு செய்து இருக்கலாம் என்றார்கள் ஆனால் அப்போதும் காலடி தடம் இருந்து இருக்க வேண்டுமே.


'குளிர் அதிகமாகி அனைவரும் திடீர் பைத்தியம் பிடித்து மன நிலை பாதிக்க பட்டார்கள் 'என்று ஒரு தியரி சொன்னது ஆனால் காணாமல் போன கண் நாக்கு எல்லாம் தியரிக்கு பொருந்தி வர வில்லை. ஏதோ infra sound என்று ஒரு திகில் தியரியும் சொன்னார்கள் அதாவது இரவில் மலை சிகரங்களில் ஒரு வகை ஒலி எதிரொலிக்குமாம் அதை கேட்டு விட்டால் மனிதன் மன நிலை பாதிக்க பட்டு பைத்தியம் ஆகி விடுவானாம்.
இப்படி நிறைய தியரி இருந்தும் இன்று வரை அன்று அந்த பனி மலையில் மைனஸ் 25 டிகிரி குளிரில் அன்று நடந்ததை யாராலும் சரியாக விளக்க முடியவில்லை.

இந்த இடத்தில் Yuri Yudin, எனும் அதிர்ஷ்ட சாலியை பற்றி சொல்ல வேண்டும் அந்த குழு உண்மையில் 9 பேர் அல்ல இவருடன் சேர்த்து 10 பேர் ..பாதி வழியில் உடல் நிலை சரியில்லாமல் திரும்பிவிட்டவர் இவர். ஐயோ தன்னால் போக முடியவிலையே என்று வருத்த பட்டு புலம்பி கொண்டிருந்தவர் ( சம்பவம் கேள்வி படும் வரை... ) பிற்காலத்தில் ஒரு பேட்டியில் "நான் கடவுளை காண நேர்ந்தால் தயவு செய்து அன்றிரவு என் நண்பர்களுக்கு நடந்தது என்ன என்று மட்டும் சொல் என்று கேட்பேன் " என்றார்.

சரியாக இந்த சம்பவம் நடந்த அதே நேரம். சம்பவ இடத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தள்ளி இருந்த இன்னோரு மலை ஏறும் குழு ஒன்று இந்த சம்பவ இடத்தில் வானத்தில் மர்மமான ஆரஞ்சு நிற வட்ட வடிவ அமைப்பு ஒன்றை கண்டதாக பதிவு செய்தார்கள். அந்த பிப்ரவரி முதல் மார்ச் வரை அப்படி பட்ட ஆரஞ்சு வட்டங்களை பார்த்ததாக (பறக்கும் தட்டு ???) மேலும் சில பேர் பதிவு செய்தார்கள் அதில் ராணுவ ஆட்களும் கூட அடக்கம்.

அந்த ரஷ்ய சம்பவம் Dyatlov pass incident என்ற பெயரில் பின்னனாளில் புகழ் பெற்றது (அந்த டீம் லீடர் பெயர் )
அன்று அவர்களுக்கு நடந்தது என்ன என்பது கடவுளுக்கு தான் வெளிச்சம்.

ஆமா...ம்... ஏலியன்கள் நம்மை கண்காணிக்கிறார்கள் என்ற சந்தேகம் உங்களுக்கு உண்டா ?  கண்காணிப்பது என்ன ..ஏலியனால் கடத்த பட்டு மனிதனை சோதனை எலி போல பயன்படுத்த பட்ட கதைகளே கூட நிறைய உண்டு..அந்த மர்ம கதைகளை பற்றி அடுத்த பாகத்தில் சொல்கிறேன்.

மர்மங்கள் தொடரும்.......🕷 🕷

https://www.facebook.com/horrific/posts/1259524454181431

 பாகம் 2 : (கடத்தும் ஏலியன்கள் )




Others
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..