Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 3
Posted By:Hajas On 1/10/2018 11:37:27 AM

மர்மங்கள்_முடிவதில்லை

ரா_பிரபு

பாகம் 2 : (கடத்தும் ஏலியன்கள் )

பாகம் 3 : " மறைந்த குறிப்புகள் "

 

கடந்த பாகத்தில் UFO sight கதைகளை படித்து விட்டு நண்பர்கள் பல பேர் கமெண்ட் இல் மீண்டும் மீண்டும் கேட்ட ஒரு கேள்வி "ஏன் எல்லா நிகழ்வுகளும் வெளிநாடுகளில் நிகழ்கின்றன இந்தியாவில் ஏன் ஏலியன் வருவது இல்லை? " உண்மை என்னவென்றால் அவ்வபோது பல UFO கள் குறைவில்லாமல் இங்கே கிடைத்து கொண்டு தான் இருக்கின்றன . ஆனால் வெளிநாடுகள் போல் இங்கே பிரபலம் ஆவது இல்லை. மேலும் நம் நாட்டில் வி்சித்திர நிகழ்வு ஏதாவது நிஜமாகவே நடந்தாலும் நாம் முதலில் பழியை போடுவது ஆவிகள் மேல் தான். ஏலியன் மேல் நமக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை. வேற்றுகிரகவாசி என்றால் என்ன என்றே தெரியாதவர்களும் பல பேர் இருக்க தான் செய்கிறார்கள்.(ஆனா ஆவியை அறியாதவர் யாரும் இல்லை )

 

உண்மையில் இந்தியாவில் இந்த நிகழ்வுகள் நடக்கிறதா இல்லையா ? நடந்தால் அது எங்கே நடக்கிறது.? "Kongaka la paas " இது இமாலையாவில் 16965 அடி உயரத்தில் உள்ள இந்திய சீன எல்லை பகுதி. இங்கே ஒரு மர்ம இடம் இருக்கிறது . அதாவது UFO பேஸ் இந்த இடத்தில் மட்டும் சீனாவும் சரி இந்தியாவும் சரி ராணுவ வீரர்களை அங்கே நிறுத்திவைபதில்லை ஆனால் தவறாமல் தூரத்தில் இருந்து கண்காணித்து வருகின்றன. அதற்க்கு காரணம் அங்கே அவ்வபோது பார்த்த சில மர்ம பறக்கும் பொருட்கள் தான். அதை பல முறை பல பேர் பார்த்து உறுதி செய்து உள்ளனர் 2012 இல் ஒரு ராணுவ வீரர் மிக உறுதியான பல ஆதாரங்கள் பதிவு செய்தார். அவ்வளவு ஏன் அங்கே செல்லும் பயணிகள் கூட அதை பார்த்து இருக்கிறார்கள். அதில் ஒரு பயணியின் அனுபவம் ..ஆச்சர்யத்துடன் தான் பார்த்த பறக்கும் பொருள் பற்றி அங்கே கூட வந்த கைடு இடம் கேட்டாராம். அதற்க்கு அவன் சொன்ன பதில் " இது நான் அடிக்கடி பாத்துட்டு தான் சார் இருக்கேன் இதில என்ன ஆச்சர்யம் "
(இமாலையாவில் ஆவியை பார்த்து இருந்தா அந்த கைடு பயந்து இருப்பது நிச்சயம் )

 

சரி இப்போ சில சம்பவங்களை பாருங்கள்

👽 15 March, 10:20 காலை டெல்லி flying club ஐ சேர்ந்த 25 பேர் வானில் ஒரு சுருட்டு வடிவ அமானுஷ்ய பறக்கும் பொருளை பார்த்தார்கள் அதுவும் கிட்ட தட்ட 100 அடிக்கு . பார்த்து கொண்டிருக்கும் போதே மறைந்து போனதாக அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

👽 2007 ஆம் ஆண்டுஆக்டோபர் 29 இல் கொல்கத்தாவில் அதிகாலை 3.30 தொடங்கி 6.30 வரை ஒரு விசித்திர பொருளை பலரும் பார்த்தார்கள் அதன் வேகம் பிரமிக்க தக்கதாய் இருந்தது மேலும் முக்கோண வடிவத்தில் இருந்து நீண்ட வடிவமாக உருமாற கூடியதும் ஒளி உமிழ கூடியதுமாய் அது இருந்தது . 100 கணக்கான ஆட்கள் அதை E.M bypass எனும் இடத்தில ஒன்று கூடி பார்த்தார்கள் பலர் அதை வீடியோ எடுத்தார்கள் தொலைக்காட்சி செய்திகளில் அது இடம் பெற்றது. அப்போது பிர்லா பிளானிடோரியத்தின் இயக்குனராய் இருந்த D.P துரையும் இதை பார்த்தார்"extremely interesting and strange". என்று கருத்து தெரிவித்தார்.

👽 2013 ஆகஸ்ட் 4 இமயமலை லாடாக் இல் ராணுவ வீரர் ஒருவர் முதலில் UFO பார்த்ததாக பதிவு செய்தார். ஆசர்யம் என்ன வென்றால் அதன் பின் 100 கு மேற்பட்டவர்கள் பதிவு செய்து இருக்கிறார்கள்.

👽 2014 இல் 23 ஜூலையில் லக்னவ் ராஜாஜி புறத்தில் எடுக்க பட்ட சூரிய அஸ்தமன போட்டோ பலவற்றில் UFO பதிவாகி உள்ளது.

👽 2013 ஜூன் 20 இரவு 8.55 க்கு சென்னை முகப்பேர் இல் வசிக்கும் பல பேர் UFO பார்த்து இருக்கிறார்கள் .(இக்கட்டுரை படிக்கும் வாசக நண்பர் யாரும் அதில் அடக்கம் எனில் எனக்கு தெரிய படுத்தினால் மகிழ்வேன் )

ஒரு ஆச்சர்யமான விஷயம் சொல்கிறேன். இந்திய விமானிகள் ஒவொரு மாதமும் குறைந்தது 5 க்கு மேற் பட்ட விசித்திர பறக்கும் பொருள் பார்ப்பதாக பதிவு செய்கிறார்கள் . ஆகையால்............


ஏலியன் இந்தியர்களுக்கு ஓரவஞ்சனை செய்கிறது என்ற சந்தேகம் இனி உங்களுக்கு வேண்டாம்.

வேற்றுகிரகவாசிகள் பற்றிய நிகழ்வுகள் பறக்கும் தட்டு பற்றிய செய்திகள் இன்று நேற்று கிடைத்தவை அல்ல. கிட்ட தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்பே பறக்கும் தட்டு சாட்சியாளர்கள் இருக்கிறார்கள். என்ன ஒன்னு தான் பார்த்தது பறக்கும் தட்டுதான் என்று அவர்களுக்கே தெரியாது. பறக்கும் தட்டுகான வர்ணனைகள் அந்த கால எல்லா மத புராணங்களிலும் உண்டு. எல்லா பழைய கதைகளிலும் வேற்றுகிரகவாசிகள் பற்றிய "மறைந்த குறிப்புகள் " இருப்பதாக தோன்றுகிறது.

 

வானத்தில் ஏதோ வெளிச்சமாக பார்த்ததை... வானத்தில் இருந்து நெருப்பு வந்ததாக பார்த்ததை தன்னை பின் தொடரும் நட்சத்திரம் அல்லது வானத்தின் ஒளியை பார்த்ததை பல இடங்கில் புராண காலத்தில் வர்ணிக்க பட்டு இருப்பது பறக்கும் தட்டுகளாக இருக்கலாம் என்கிறார்கள்.


பைபிளில் பறக்கும் தட்டு பார்த்ததற்கான வர்ணணைகள் உண்டு.
பைபிளில் வரும் எசேக்கியேல் 1. 1-28 வசனம் பாருங்கள் வர்ணனைகள் உங்களை ஆச்சர்யபடுத்தும்.

" இதோ, வடக்கேயிருந்து புழல்காற்றும் பெரிய மேகமும், அத்தோடே கலந்த அக்கினியும் வரக்கண்டேன், அதைச் சுற்றிலும் பிரகாசமும், அதின் நடுவில் அக்கினிக்குள்ளிருந்து விளங்கிய சொகுசாவின் நிறமும் உண்டாயிருந்தது. அதன் நடுவிலிருந்து நாலு ஜீவன்கள் தோன்றின, அவைகளின் சாயல் மனுஷசாயலாயிருந்தது. அவைகள் ஒவொன்றுக்கும் நான்கு முகமும் நான்கு இறக்கைகளும் இருக்க கண்டேன் " ....என தொடங்கி அவைகள் தீ போல இருந்தது அவைகள் ரக்கையின் விதம் முக அமைப்பு என்று அந்த வசனம் விரிவாக வர்ணித்து சொல்கிறது. "அவைகளுடைய முகங்களின் சாயலாவது, வலதுபக்கத்தில் நாலும் மனுஷ முகமும் சிங்கமுகமும், இடதுபக்கத்தில் நாலும் எருது முகமும் கழுகு முகமுமாயிருந்தன. " என்று வசனம் வர்ணிப்பது நிச்சயம் வேற்றுகிரக வாசிகளின் விசித்திர முகரைகளை தான் என்கிறார்கள். அத்துடன் நிற்கவில்லை அதை தொடர்ந்து அந்த வசனம் பறக்கும் தட்டை வர்ணிப்பதை பாருங்கள்  "சக்கரங்களின் ரூபமும் அவைகளின் வேலையும் படிகப்பச்சை வருணமாயிருந்தது, அவைகள் நாலுக்கும் ஒரேவிதசாயல் இருந்தது, அவைகளின் ரூபமும் அவைகளின் வேலையும் சக்கரத்துக்குள் சக்கரம் இருக்குமாபோல் இருந்தது.


அவைகள் ஓடுகையில் தங்கள் நாலு பக்கங்களிலும் ஓடும், ஓடுகையில் அவைகள் திரும்புகிறதில்லை. அவைகளின் வட்டங்கள் பயங்கரப்படத்தக்க உயரமாயிருந்தன, அந்த நாலு வட்டங்களும் சுற்றிலும் கண்களால் நிறைந்திருந்தன. அந்த ஜீவன்கள் செல்லும்போது, அந்தச் சக்கரங்கள் அவைகள் அருகே ஓடின, அந்த ஜீவன்கள் பூமியிலிருந்து எழும்பும்போது சக்கரங்களும் எழும்பின. "  இந்த வர்ணனை ஒரு ஸ்பேஸ் ஷிப் டேக் ஆப் ஆவதை சொல்வது போல இருக்கிறது அல்லவா.


மேலும் வசனம் 24 இல் அவைகள் பறக்கும் போது சப்தம் எப்படி இருக்கும் என்று சொல்ல பட்டுள்ளதை பாருங்கள் "அவைகள் செல்லும்போது அவைகளுடைய செட்டைகளின் இரைச்சலைக்கேட்டேன், அது பெருவெள்ளத்தின் இரைச்சல்போலவும், சர்வவல்லவருடைய சத்தம்போலவும், ஒரு இராணுவத்தின் இரைச்சலுக்கு ஒத்த ஆரவாரத்தின் சத்தம்போலவுமிருந்தது, அவைகள் நிற்கும்போது தங்கள் செட்டைகளைத் தளரவிட்டிருந்தன. " (செட்டைகள் என்றால் ரக்கைகள் )

குர்ஆனில் பல வசனங்கள் பல்வேறு விதமான சொர்கங்களை பல உலகங்களை பற்றி பேசுகிறது . மற்றும் குர்ஆனில் சொல்ல படும் 'ஏஞ்சல் ' வேற்றுகிரகத்தினராக இருக்கலாம்

இது போன்ற ஏலியன் வர்ணனைகள் எல்லா மத புராணங்களிலும் காண படுகிறது.
ஹிந்துக்கள் புராணங்களில் வரும் இந்திர லோகம் , விஷ்ணு லோகம்,ப்ரம்மலோகம் போன்றவை வேறு வேறு கிரகங்களாக இருக்கலாம். இன்று நமக்கு ஐன்ஸ்டைனின் ரிலேடிவ் தியரி படி வெவேறு ஈர்ப்பு விசைக்கு உட்பட்டு இருக்கும் வெளியின் வெவ்வேறு இடங்களில் காலங்கள் வெவ்வேறாக மாறுபடும் என்று தெரியும் மிக ஆச்சர்யமாக இதை அப்படியே ஹிந்து புராணங்கள் வர்ணிக்கிறது . உதாரணமாய் பிரம்மாவின் ஒரு நாள் என்பது நமது சாதாரண சோலார் சிஸ்டதின் வருடம் படி 306,720,000 ஆண்டுகளுக்கு சமம் .

டைம் டைலேஷன் கான்செப்டுகள் புராணங்கில் வர்ணிக்க பட்டு இருப்பது உங்களை ஆச்சர்ய படுத்தும் .. வெவ்வேறு லோகத்தின் கால வேறு பாட்டை பற்றி அவைகள் சொல்வதை பாருங்கள்.. அதாவது மனிதனின் ஒரு வருடம் என்பது தான் தேவர்களின் ஒரு நாளாம் . அப்படி அவர்களின் 365 நாள் தான் தேவர்களின் ஒரு வருடம்.(அதாவது நமக்கு 365 வருடம் ) அப்படி தேவர்களின் வருட படி 12000 தேவர்கள் வருடம் சேர்ந்ததை தான் ஒரு சதுர யுகம் என்கிறார்கள். அப்படி 2000 சதுர் யுகம் சேர்ந்தது தான் பிரம்மாவின் ஒரு நாள் .(அதாவது முன்பு சொன்னது போல நம்ம பூமி கணக்கு படி 306,720, 000 ஆண்டுகள்) இப்படி பட்ட பிரம்மாவின் 365 நாள் தான் பிரம்ம வருடம் அப்படி மொத்தம் 100 பிரம்மா ஆண்டுகள் தான் பிரம்மாவின் ஆயுட்காலம் என்று புராணங்கள் வர்ணிக்கின்றன. அப்புறம் அவர் ஆயுள் முடிந்த பின் "மகா பிரளயம் வரும் அதில் பிரம்மா அழிக்க படுவார் அதன் பின் 100 பிரம்ம ஆண்டுகளுக்கு எந்த உருவாக்கமும் இருக்காது அதன் பிறகு மீண்டும் பிரம்மாவை மகா விஷ்ணு உருவாக்குவார் " என்று வர்ணிக்க பட்டு இருப்பது பிரபஞ்ச அழிவா அல்லது பிக் பேங் நிகழ்வா என்று நம்மை யோசிக்க வைக்கிறது.


பொதுவாக பல யுகங்களுக்கு ஒரு முறை நம்மை அவர்கள் வந்து பார்த்து விட்டு செல்வதாக நாம் நினைக்கலாம் ஆனால் நமக்கும் அவர்களுக்குமான கால வேறு பாட்டை கணக்கில் கொண்டால் நம் பூமி ஆரம்பம் முதல் அழியும் வரை அப்போபோ அவர்கள் வந்து பார்த்து விட்டு போவது அவர்கள் ஊர் கணக்கில் ஏதோ ஒரு மாத டூர் ஆக கூட இருக்கலாம்.

பொதுவாக பறக்கும் தட்டுகளை பல இடங்களில் நாம் நமக்கே தெரியாமல் படம் எடுத்து வைத்திருகிறோம் என்கிறார்கள் ஏலியன் ஆய்வாளர்கள். பல புகை படங்களில் தற்செயலாக பறக்கும் தட்டுகள் படம் பிடிக்க பட்டுள்ளடன. பழைய ஓவியங்கள் பல வற்றில் பறக்கும் தட்டுகள் போன்ற அமைப்புகள் வரைய பட்டு இருக்கின்றன அவ்வளவு ஏன் பழங்காலத்து குகை ஓவியங்களில் கூட பறக்கும் தட்டுகள் காண படுகின்றன . தட்டுகள் நமக்கு தெரிவது இன்று நேற்று இல்லை போல.

1998 இல் ஒரு இத்தாலிய பெண் எழுத்தாளர் இப்படி பட்ட ஓவியங்களில் ஒளிந்துள்ள பறக்கும் தட்டுகள் பற்றி கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தார் . அதில் பல ஆச்சர்யமான விஷயங்கள் தெரிந்தன. ஒரு ஓவியர் மிக தெளிவாக ஊர் மக்கள் வானத்தில் ஏதோ விசித்திர பறக்கும் பொருள் நெருப்பு கக்கி செல்வதை வரைந்து இருந்தார். குறிப்பாக.."Madonna with Saint Giovannino" என்ற புகழ் பெற்ற 15 ஆம் நூற்றாண்டு ஓவியத்தை அவர் மிக முக்கியமாக குறிப்பிட்டு இருந்தார் .(முடிந்தால் அதை தேடி பாருங்கள் ) அந்த ஓவியத்தில் மடோனா ஓவியத்திற்கு பின் புலத்தில் வானத்தில் ஒரு மர்ம பொருள் பறப்பதையும் அதை தூரே ஒருவர் ஆச்சர்யத்துடன் அண்ணாந்து பார்பதையும் மிக தெளிவாக ஓவியர் வரைந்து இருப்பதை நாம் பார்க்க முடிகிறது.

ஏலியன்கள் இருப்பதற்கான அன்றாட ஆதாரங்கள் இன்றளவும் நிறைய கிடைத்து கொண்டே தான் இருக்கிறது. வேற்றுகிரக வாசிகள் நம்மை எப்போதும் தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறார்கள் என்று சொல்ல படுகிறது. உலகமெங்கும் பல இடங்களில் திடீரென உண்டாகும் கிராப் சர்கில் எனும் பயிர் வட்டங்கள் வெறும் பயிரில் மட்டும் அல்ல பாலைவனத்தில் பனி படலத்தில் மற்றும் பெரும் சேற்று பகுதிகளிலும் உண்டாகி இருக்கிறது அந்த விசித்திர வடிவமைப்பு என்ன சொல்ல வருகிறது என்ற மர்மம் ஒரு புறம் இருக்கட்டும் .நம்மை விட மிக மிக உயர்ந்த தொழில் நுட்பத்தில் வாழும் அவர்கள் ஏன் இப்படி கற்கால ஸ்டைலில் படம் வரைந்து பாகம் குறிக்க வேண்டும் ? அவைகள் நம்மை டிஜிட்டல் மார்க்கத்தில் தொடர்பு கொள்ளாமல் இருப்பதற்கு சிலர் ஒரு காரணத்தை சொல்கிறார்கள் அதாவது வேற்றுகிராகவாசிகள் ஒரே இனம் அல்ல அதில் பல இனங்கள் உண்டு. ( ஏலியன் vs பிரடேட்டர் !! ? ) அதில் நல்லது கெட்டது உண்டு.. அவற்றில் ஒரு இனம் அடுத்த இனத்திற்கு தெரியாமல் நம்மை தொடர்பு கொள்ள பார்க்கிறது உயர் தொழில் நுட்பம் வாயிலாக தொடர்பு கொண்டால் அடுத்த குழு க்கு அது தெரிந்து விடும் என்பதால் தான் இந்த ஏற்பாடு என்கிறார்கள்.

அதே சமயம் ஒரு முறை நம்மை அவர்கள் அட்வான்ஸ் டெக்னாலஜி மூலம் தொடர்பு கொண்டதாக சொல்ல படும் சம்பவம் ஒன்று உண்டு..


அதை பற்றி அடுத்த பாகத்தில் சொல்கிறேன்.

மர்மங்கள் தொடரும்............🕷🕷

 பாகம் 4 : ஏலியன்களும் ஆதாரங்களும் 




Others
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..