Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 8
Posted By:Hajas On 1/14/2018 10:01:38 AM

மர்மங்கள்_முடிவதில்லை

ரா_பிரபு

பாகம் 7 : திகில் தீவுகள்

பாகம் 8 : மர்ம ஒளி/லிகள்

 

ஆஸ்திரேலியாவில் உள்ள குவின்ஸ்லாந்தின் புற பகுதிகளில் பல காலமாக மக்களை அச்சுறுத்தி வந்த மர்ம ஒளி ஒன்றை பற்றி தான் இன்று பார்க்க போகின்றோம். அந்த ஒளிகள் யாரோ ஒருவர் இருவர் மட்டும் பார்த்த புரளி ..வதந்தி டைப் ஒளி அல்ல கிட்ட தட்ட அந்த சுற்று புற கிராமங்களில் வசித்து வந்தவர்களில் பாதிக்கு மேற்பட்டோர் கண்ணில் தென்பட்ட மர்ம ஒளிகள் அவை . முதல் முதலில் பவுலியாவில் உள்ள மின் மின் ஹோட்டலில் இருந்து தான் இதை பார்த்ததாக சொன்னனார்கள் அதனால் மக்கள் மத்தியில் இது 'மின் மின்' ஒளிகள் என்று புகழ் பெற்றது. (ஆமாம் அது நீங்கள் நினைத்தது போல மின் மினி ஒளி அல்ல) அந்த பகுதியில் இரவில் யாராவது தனியாக சென்றால் தூரே தொடுவானில் அந்த ஒளி எட்டி பார்க்கும் .புதிதில் வெட்ட வெளி தொடுவானத்தில் அதை பார்த்தவர்கள் இங்கே என்ன அது ஒளி என்று அதை நோக்கி சென்று பார்த்தவர்களுக்கு அந்த ஒளி மாயமாய் மறைந்து போனது.


இரவில் வெளியே செல்லும் போது குறிப்பாக வெட்ட வெளி மாதிரி இடங்களில் தூரே தொடுவானில் அந்த ஒளி எட்டி பார்க்கும். கால போக்கில் அந்த ஒளி மக்களை அமானுஷ்ய அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியது. மக்கள் தனியே செல்ல பயந்தார்கள். அந்த ஒளி தங்களை நீண்டகாலமாய் கண்காணிப்பதாக நம்பினார்கள் . கிட்ட தட்ட 100 ஆண்டுகளாக இது நடந்து வருவதாக தெரிந்தது. பல பேர் அந்த ஒளி தங்களை பின் தொடர்ந்ததாக நம்பினார்கள். அங்கே ஒளி கதை மிக பிரபலம் ஆனது. அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இது இந்த மாதிரி ஒளி இடம் என்று குறிப்பிடும் பலகையை வைத்திருந்தார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

 

பல பேர் அதை வர்ணித்து இருந்தார்கள். ஒரு புட்பால் போல தோன்றும் ஒளி அப்படியே பெரிசாகும்... சில சில நேரம் டல்லடிக்கும் என்றும் திடீரென பிரகாசமாக எரியும் என்றும் தங்களை கண்காணிபதில் அது ஆர்வம் காட்டுகிறது என்றும் தங்களை தொடர்ந்து பல காலமாக அது கண்காணிக்கிறது என்றும் சொன்னார்கள். பயணிகள் நடந்தோ கால்நடையாகவோ.. வண்டியிலோ எப்படி போனாலும் அவைகள் வருகின்றன. ஆனால் குறிப்பிட தக்க ஒரு விஷயம் என்ன வென்றால் அந்த ஒளியால் யாருக்கும் எந்த ஆபத்தும் வந்தது இல்லை. ஆனால் 100 ஆண்டுகளாக தங்களை கண்காணிக்கும் ஒளி அவர்களுக்கு ஒரு வகை அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது.

உலகில் தீர்க்க படாத விடை தெரியாத பல மர்மங்களை போல தான் ஆஸ்திரேலியா வின் இந்த மின் மின் ஒளி மர்மமும் தீர்க்க படாத மர்மமாக இருக்க இருந்தது. ஆனால்....... நல்ல வேலையாக Jack Pettigrew எனும் குவின்ஸ்லேண்டின்..neuro scientist ஒருவர் இதை தீர்த்து தெளிவாக்கி நீர்த்து போக செய்தார். ஆம் மின் மின் ஒளிகள் இப்போது மர்ம ஒளிகள் அல்ல.

பல பேர் சொல்லி கேட்டு இருந்த கதையை ஜாக் நேரில் சந்திக்க நேர்ந்ததது. வயது வந்த ஆட்கள் கூட அந்த ஒளியை பார்த்து பயந்து அழுது கூட விடும் செய்திகள் கேள்வி பட்டு வருந்தி இருந்தார் ஜாக் ஆனால் அவர் பயப்பட வில்லை மாறாக இது என்னவாக இருக்கும் என ஆழ்ந்து சிந்தித்தார் . தூரே தொடுவானில் சாலையில் நரிகள் நிற்கிறது அதன் கண்கள் தனது கார் வெளிச்சத்தில் பிரதிபளிக்கிறது என யோசித்தார். தனது கார் ஹெட் லைட்டை அணைத்தார் ஆனால் அப்போதும் அந்த ஒளிகள் அங்கே இருந்தது. தனது தியரி தவறு என உணர்ந்தார். வேகமாக அங்கே கார் ஓட்டி சென்று பார்த்த போது வழக்கம் போல ஒளிகள் காணாமல் போய் விட்டன.

அது UFO அல்லது ஆவி அல்ல என்று உறுதியாக நம்பிய ஜாக் , அது என்ன என்பதை விளக்க முடியாமல் திணறினார் . ஆனால் அதை குறித்த ஆழ்ந்த ஆய்வு மனப்பான்மையில் இருந்தார். அதன் பிறகு ஒரு பகல் வேளையில் அதன் ரகசியம் அவருக்கு பிடி பட்டது. அந்த பகுதியில் இல்லாத மலை பகுதி ஒன்று ஒருமுறை தூரே கண்ணுக்கு தெரிவதும் பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் மறைவதும் பார்த்தார். அதே போல கடல் பகுதியில் தொடுவானில் கடல் பரப்பில் படகுகள் காற்றில் வானில் மிதப்பது போன்ற காட்சியை பார்த்தார். அதாவது Morgana mirage, எனும் இயற்கை நிகழ்வு தான் அதற்க்கு காரணம் என கண்டார். சமதள நிலம் தன்னை சுற்றி உள்ள காற்றை குளுமையாக வைத்து இருக்க அதை சுற்றி உள்ள சூடான காற்று வழியே ஒளி செல்லும் போது அது தடைகளை வளைந்து கடந்து நம் கண்ணுக்கு அடைகிறது என கண்டார். அது அந்த பகுதி நிலங்களில் மட்டும் நடக்கும் சிறப்பு நிகழ்வு என கண்டார்.


இதை நிரூபிக்க ஒரு காரியம் செய்தார். தனது காரை எடுத்து கொண்டு போய் தூரே கண்ணால் காண முடியாத இடத்தில் கொண்டு போய் நிறுத்தினார் அதன் ஹெட் லைட் ஆன் செய்தார் ..மேலும் ஆறாய வசதியாக வண்ண விளக்குகளை பயன்படுத்தினார் அணைத்து அணைத்து போட்டு பார்த்தார். வெகு தூரத்தில் இந்த ஒளி அந்த மர்ம ஒளி போலவே காண கிடைந்ததது .இவர் கார் லைட்டை அணைத்தத்தும் அந்த ஒளிகளும் நின்று போயின. நீண்ட தொலைவில் உள்ள நகரங்களின் ஒளி காற்றில் வளைந்து வந்து மர்ம ஒளியாக தெரிகிறது என அறிவித்தார். நூற்றாண்டு கால மர்மத்தை விளக்கி ஒரு முடிவிற்கு கொண்டு வந்தார்..jack pettigrew.

பெரும்பாலும் மர்ம கதைகள் நிகழ்வுகள் 18 ஆம் நூற்றாண்டுகளுக்கும் முன்பு இருந்திடும் காரணம் பின்னோக்கி செல்ல செல்ல மர்மங்களை விளக்க அறிவியல் வளர்ச்சி குறைவாக இருந்தது தான். கையில் எப்போதும் கேமாராவும் இணையத்தையும் வைத்து கொண்டு திரியும் இக்காலத்தில் பல மர்மங்கள் உடனடியாக விடை கண்டு பிடிக்க பட்டு விடுகின்றன. சமீப கால உதாரணம் ஒன்றை சொல்கிறேன்.


செப்டம்பர் 7 -2017 இல் மெக்சிகோவில் 8.1 magnitude அளவில் ஒரு பூகம்பம் வந்ததது அதன் பின் மெக்சிகோ வானில் பல வண்ணங்களில் மர்ம ஒளிகள் நடனம் ஆடுவதை கண்டார்கள். இக்காலத்தில் 24 மணி நேரமும் இயங்கி கொண்டிருக்கும் பல cc டிவி கேமராகளில் இந்த காட்சி பதிவாகி இருந்தது. பூகம்பமும் அதை தொடர்ந்து தெரியும் வண்ண ஒளிகள் பற்றிய கதையும் கிமு 89 களிலேயே பதிவு செய்ய பட்டு பல கதைகள் சொல்ல பட்டு வந்துள்ளன. ஆனால் இன்றைய விஞானதிற்கு அதன் காரணம் மிக துல்லியமாக தெரியும். பூமிக்கு அடியில் பாறைககள் அழுத்தத்தில் அதன் மூலக்கூறு பிணைப்பு விடுபட்டு ionized ஆக்சிஜனை (ion என்றால் ஒரு அணு மின்னூட்டம் பெற்று இருப்பது) வெளியிடுகிறது அது காற்றில் ஒரு எலக்ட்ரிக்கல் பீல்டை உண்டாக்கி கொரானோ டிஸ்சார்ஜ் ஆகிறது .


இந்த சாதாரண அறிவியல் உண்மை கி.மு களில் மர்ம ஒளிகளாக தான் இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

மனிதர்களை அச்சுறுத்தியத்தில் ஒளிகளுக்கு மட்டும் அல்ல ஒலிகளுக்கும் பங்கு உண்டு உதாரணமாக உட்லண்ட் சிட்டியில் கேட்ட மர்ம ஹம்மம்..ஒலி.
அந்த நகரத்தில் அதிகாலை 3 மணி அளவில் திடீரென அந்த மர்ம ஹம்மம் ஒலி கேட்கும் மிகவும் லோ பிட்சில் இருக்கும் அந்த மர்ம ஒலியை நகரத்தில் பல பேர் கேட்டார்கள். அது ஒரு விளக்கம் அளிக்க முடியாத மர்ம ஒலி யாக இருந்தது. பல பேர் அது தூரத்தில் டீசல் இன்ஜின்களின் சப்தம் என்றார்கள் .பலர் அது கடற் கரை ஓரம் என்பதால் கடல் ஏற்படுத்தும் சப்தம் என்றார்கள் ஏன்... மீன்கள் உண்டாக்கும் சப்தம் என்று கூட சொன்னார்கள். ஆனால் சரியாக அந்த ஒலி விளக்க பட வில்லை.. அது டர்ஹாம் ஹம் என்ற தலைப்பில் பல இடங்களில் செய்தி ஆனது.

Uk நியூஸ் களில் the phyenomenon மற்றும் the hum என்ற தலைப்பில் விவாதிக்க பட்டது. "நீங்கள் அந்த ஹம் ஒலியை கேட்டது உண்டா" என்று அந்த ஊரில் எடுத்த கணக்கெடுப்பில் 800 பேர் அதை கேட்டதாக சொன்னார்கள். பலர் அதை கேட்டு தலைவலி வந்ததாக பதிவு செய்தார்கள் அந்த ஒலி கேட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஒரே ஒரு இடத்தில பதிவு செய்ய பட்டது. இதை மையமாக வைத்து ஹாலிவூட்டில்" the hum" என்ற படம் 2015 இல் வெளியானது. விஞ்ஞானிகள் ஆய்வாளர்கள் மிகுந்த ஆராய்ச்சிக்கு பின் இந்த ஒலி பூமி ஏற்படுத்தும் ஒலி என்றார்கள் பூமிக்கு அடியில் உண்டாகும் குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலி கடல் வழியாக வெளியேறி மனிதன் உணரும் ஒலியாக கிடைக்கிறது என்கிறார்கள். ஆனாலும் எதனால் அது உண்டாகிறது என்பது கொஞ்சம் மர்மமாகவே உள்ளது.

இந்த ஹம் ஒலி மேலே சொன்ன ஊரில் மட்டும் நடந்த ஒன்று அல்ல.. இதே கதை உலகில் பல பகுதிகளில் நடந்துள்ளது... நியூ மெக்சிகோ வின் Tao's hum அதில் பிரபலமானது.

இந்த பாகத்தில் அறிவியலால் தீர்க்கபட்ட மர்மங்கள் சிலதை பார்த்தோம். ஆனால் அடுத்ததாக பார்க்க இருப்பவை அறிவியலே தலையை பிய்த்து கொள்ளும் சில விளக்க முடியாத மர்மங்களை பற்றி.
அதை பற்றி அடுத்த பாகத்தில்.....

மர்மங்கள் தொடரும்............🕷🕷

பாகம் 9 : கற்பனைகெட்டா கட்டிடங்கள்




Others
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..