Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 13
Posted By:Hajas On 1/16/2018 8:53:34 AM

மர்மங்கள்_முடிவதில்லை

ரா_பிரபு

பாகம் : 12 : சில மர்ம நிகழ்வுகள் (2 )

பாகம் : 13 : சில மர்ம நிகழ்வுகள்( 3 )

கடந்த பாகத்தின் தொடர்ச்சியாக மேலும் சில மர்ம நிகழ்வுகளை பார்ப்போம்.

( 8 )☸ பெல்மிஷின் மர்ம முகங்கள்

🕸 மேகங்களை வேடிக்கை பார்க்கும் போது அதில் பல வடிவங்கள் யானை பூனை குதிரை போல நமக்கு தெரியும் அல்லவா.. அப்படி வீட்டு சுவர்களில் தரைகளில் மனித முகங்கள் தெரிந்த ஒரு நிகழ்வு தான் "belmez faces " ஆனால் நாம் நினைபது போல அவை சாதாரண கற்பனை மேக வடிவம் போன்றது அல்ல. மிகவும் மர்மம் நிறைந்த நிகழ்வு அது.

1971 ஆம் ஆண்டு ஆகஸ்டு 23 இல் maria gomez என்பவர் தனது கிச்சன் தரையில் மனித முகம் தெரிவதை போல இருக்கிறது என்று தன் கணவர் ஜூயான் பெரேராவிடம் சொன்னார். அதை தொடர்ந்து அவள் கணவன் மற்றும் அவரது மகன் migual இருவரும் சேர்ந்து அந்த முகத்தை தட்டிவிட்டு புது சிமெண்ட் போட்டு ஒழுங்கு செய்தார்கள். ஆனால் ஆச்சர்யமாக மீண்டும் அங்கே முகம் தோன்றியது. அவைகள் மேகத்தில் நாம் செய்யும் கற்பனை வடிவங்கள் போல அல்லாமல் மிக தெளிவாக மனித முகங்களை காட்டி கொண்டிருந்தது அதுவும் முக பாவனைகளுடன் . பெல்மேஷின் மேயரே அந்த சிமெண்ட் முகத்தை உடைத்து ஆய்வுக்கு கொண்டு வாருங்கள் என்று உத்தரவு போட்டார். அந்த வீட்டில் மர்ம முகங்கள் தெரிவது தொடர்ந்தன. முகத்தில் முக பாவனைகள் தெளிவாக காட்டின. அழிக்க அழிக்க அவைகள் மீண்டும் மீண்டும் தோன்ற தொடங்கின. ஆன் முகம் பெண் முகம் என்று சரியாக அடையாளம் தெரிந்தன. வித விதமாக அவைகள் காட்சி தந்தன.

 

கால போக்கில் அந்த வீட்டில் மர்ம முகத்தை பார்க்க கூட்டம் கூட தொடங்கியது அந்த வீடே டூரிஸ்ட் ஸ்பாட் போல மாறி போனது .1972 ஈஸ்டர் அன்று நூற்று கணக்கான மக்கள் அங்கே படை எடுத்தார்கள் அந்த முகங்களை பார்க்க. அடுத்தது வித விதமான வடிவங்களில் முகங்கள் தெரிவது தொடர்ந்து கொண்டே இருந்தது என்று பெரேரா குடும்பம் விளக்கம் அளித்தது. இந்த மர்ம நிகழ்வு பற்றி பேராசைகாலிஜிஸ்டுகள்.....
"without doubt the most important paranormal phenomenon in the 20th century".என்ற கருத்தை சொன்னார்கள்.

 

அந்த இடத்தை ஆய்வு செய்தவர்கள் இதற்க்கு முன் அங்கே என்ன இருந்தது என்று ஆராய்ந்தார்கள். கிடைத்த பதில் அர்த்தமுள்ளதாக இருந்தது. அங்கே இதற்க்கு முன் சுடுகாடு இருந்தது. அங்கே தோண்டி பார்த்தவர்கள் சில சரியாக புதைக்க படாத எழும்புக்கூடுகளை கண்டார்கள். அவைகளை சரியாக புதைத்து மீண்டும் சிமெண்ட் போட்டார்கள் .இதான் பிரச்னை இனி முகங்கள் வராது என்றார்கள் ஆனால் ஒரு வாரம் கழித்து ஒரு பெண் முகமும் அதை சுற்றி ஒரு 10 சின்ன சின்ன முகங்களும் தோன்றி மீண்டும் மர்மத்தை கிளப்பியது. அங்கே தரைத்தளம் பல முறை தோண்ட பட்டு புதுப்பிக்க பட்டது ஆனால் முகங்கள் தோன்றுவது மட்டும் நிற்கவே இல்லை. டிடெர்ஜென்டை வைத்து அந்த முகங்களை கழுவி பார்த்தார்கள் அவைகள் கண்களை அகல திறப்பது முகபாவங்களை மாற்றுவது என்று தொடர்ந்தனர் ஆனால் மறைய வில்லை. 1972 வரை தொடர்ந்து தோன்றி கொண்டே இருந்தன. இன்று வரை அந்த மர்ம முகங்கள் தோன்றிய காரணம் யாருக்கும் கிடைக்க வில்லை.

அடுத்து பார்க்க இருப்பதும் ஒரு மர்ம முகம் பற்றிய தகவல் தான்...

( 9 )☸ கணவில் வரும் மர்ம மனிதன்

🕸 ஜனவரி 2006 இல் ஒரு நாள் ஒரு சைக்கியாட்ரிஸ்ட் தனது பேஷண்டை கவனித்து கொண்டிருந்தார். அவருக்கு கணவில் ஒரு ஆள் அடிக்கடி தோன்றி கொண்டே இருக்கிறானாம் அதான் கேஸ். இதை கேட்ட டாக்டர் ஒரு மெல்லிய ஆச்சர்யத்துக்கு சென்றிருந்தார். காரணம் கொஞ்சம் நேரத்திற்கு முன் இவர் கவனித்த இன்னோரு வழக்கும் இதே பிரச்னைதான் 'கனவில் யாரோ ஒருவன் தொடர்ந்து வருகிறான் டாக்டர்' "அவன் எப்படி இருப்பான் ''?


கேட்ட டாக்டரை பார்த்தார் பேஷண்ட் தனக்கு தெரிந்த வரை வர்ணித்து கொண்டே வந்த நோயாளி திடீரென நிறுத்தி "அட இவன் தான் அது " என்று மேஜையை காட்டினார். "அவன் போட்டோவை எப்படி கரெக்ட்டா முன்னாடியே வரைஞ்சி வச்சிருக்கிங்க" அதிர்ச்சியுடன் கேட்டார் அந்த நோயாளி. இப்போ அதிர்ச்சி அடைந்தது டாக்டர். காரணம் இதற்க்கு முன் வந்த பேஷண்ட் தனது கணவில் வருபவனை வரைந்து காட்டுவதாக கூறி வரைந்த சித்திரம் தான் அது.  'அதெப்படி இருவர் கனவில் ஒரே ஆள் வர முடியும். அந்த இருவருமே இந்த மூஞ்சியை தங்களது நிஜ வாழ்வில் பார்த்ததே கிடையாது என்று தெரிவித்தார்கள்.

அதன் பின் டாக்டர் ஒரு காரியம் செய்தார் தனது சக தோழர் டாக்டர்களுக்கு இந்த படத்தை அனுப்பி வைத்து. இப்படி பட்ட கேஸ் ஏதும் வந்துள்ளதா என்று கேட்டு பார்த்தார். ஒரு வாரத்தில் 4 பேர் அந்த முகத்தை பார்த்ததாக சொன்னார்கள். அவர்கள் அவனை this man எண்று அடிக்கடி குறியிடுவதால் திஸ்மேன் என்ற பெயரிலேயே பிரபலம் ஆனான் அந்த நிஜ உலகத்திற்கு வராத திஸ் மேன். அதன் பின் அந்த டாக்டர் ஒரு இணையதளத்தை தொடங்கி உலகம் பூரா அந்த முகத்தை பற்றி கேட்டு பார்த்தார். ஆச்சர்யமாக இன்று வரை உலகில் பல மூலைகளில் இருந்து அவனை கனவில் கண்டதாக 2000 கும் மேற்பட்ட ஆட்கள் பதிவு செய்து இருக்கிறார்கள். பல பேரின் கனவில் மட்டுமே வரும் அந்த மர்ம மனிதனை பற்றி www.thisman.Org என்பதில் தேடி பாருங்கள். கூடவே அந்த ஆணழகன் உங்கள் கனவில் வந்திருக்கிறானா என்றும் சொல்லுங்கள்.

இப்பொது நான் சொல்ல போகும் சம்பவம் கேட்பதற்கு ஹாலிவூட் பட காட்சிகள் போல இருக்கலாம். ஆனால் அது ஒரு குடும்பம் பதிவு செய்துள்ள மர்ம அனுபவம்.

(10)☸ கருப்புகண் மர்ம குழந்தைகள்

🕸 ஒரு நாள் காற்றும் மழையும் கலந்த ஒரு இரவு மணி 2 வெளியில் யாரோ அவசரமாக கதவை தட்டுவதை உணர்ந்த அந்த பெண்மணி எட்டி பார்த்த போது இரண்டு 8 வயது மதிக்க தக்க சிறுவர்கள் நிற்க கண்டார். குளிரில் நடுங்கும் அவர்களுக்கு உதவ கதவை திறந்தார். அந்த குழந்தைகள் ஒரு ஆண் ஒரு பெண் என கண்டார். என்ன பிரச்னை என்று விசாரித்த போது அவர்கள் "தங்கள் பெற்றோர் விரைவில் இங்கே வருவார்கள்" என்று மட்டும் சொன்னார்கள். அப்போது அந்த பெண்மணி கவனித்த இரண்டு விஷ்யங்கள் ஒன்று அந்த குழந்தைகளின் குரல்.. அது ஏதோ ஒரு மிஷின் தனமான சங்கீதம் ஒலிப்பது போன்ற ஒரு செயற்கைத்தனமான குரல். இரண்டாவதாக அவர்கள் நிமிர்ந்து பார்க்காமல் குனிந்து கொண்டே பதில் சொன்ன விதம். கொஞ்சம் ஆச்சர்யத்துடன் குழபத்துடன் அந்த பெண்மணி அவர்களுக்கு குடிக்க ஏதோ கொண்டு வர சென்றார்.

 

அவர் கொண்டு வந்த போது அவரது கணவர் மெலிதான தலை சுத்தலை உணர்வதாக சொன்னார். அந்த ஜுசை நீட்டிய போது நிமிர்ந்து பார்த்த குழந்தைகள் முகத்தை பார்த்த அந்த பெண்மணி அதிர்ச்சி அடைந்தாள். அவர்களது கண்கள் மிக அமானுஷ்யமாக இருந்தது அதில் வெள்ளை நிறம் துளி கூட இல்லை. முழுக்க முழுக்க அட்டை கருப்பாக அவர்களது கண்கள் இருந்தன . இது வரை அப்படி பட்ட கண்களை அவள் வாழ்நாளில் பார்த்ததே இல்லை.

 

அந்த சிறுவர்கள் பாத்ரூம் உபயோகிக்க அனுமதி கேட்டார்கள். சரி என்றதும் பாத்ரூம் நோக்கி சென்று மறைந்தார்கள். சரியாக அப்போது அந்த கணவரின் மூக்கில் ரத்தம் வெடித்து சிதறி ஊற்றியது அதிர்ச்சியில் அந்த பெண்மணி துடைக்க நாப்கின் கொண்டு வந்த போது திடீரென கரெண்ட் கட் ஆகி வீடு இருட்டில் ஆழ்ந்தது. அந்த இருட்டில் மின்னல் வெளிச்சத்தில் அந்த இரு குழந்தைகள் வாசல் ஓரத்தில் நின்று இவர்களை பார்ப்பது தெரிந்தது. திகிலின் உச்சத்தில் இருந்த அவர்களை நோக்கி தங்கள் பெற்றோர்கள் வந்து விட்டார்கள் என்று கூறி விட்டு மழை யில் இறங்கி சென்றார்கள் அந்த மர்ம குழந்தைகள்.

 

இது நடந்து சில நாளில் அந்த கணவனுக்கு மூக்கில் கேன்சர் வந்தது அதை ஆராய்ந்த டாக்டர் அதிக கதிர்வீச்சு பாய்ந்து இது ஏற்படதாக சொன்னார். இந்த சம்பவம் ஒரு திகில் கதை எழுத்தாளரின் அழகிய கற்பனையாக இருக்கலாம் ஆனால் இதில் ஒரு விசித்திரம் இருந்தது. அதாவது இந்த கருப்பு கண் மர்ம குழந்தைகளை பார்த்ததாக சொன்ன ஒரே குடும்பம் அல்ல இவர்கள். பல மூலையில் பல பேர் இப்படி பட்ட கருப்பு கண்கள் கொண்ட குழந்தைகளை கண்டதாக பதிவு செய்திருக்கிறார்கள். அவர்கள் வெளிறிய முகம் விச்சித்திர குரல் கொண்டவர்கள் என்று வர்ணித்தார்கள். பதிவு செய்த அனுபவங்களில் பெரும்பாலும் காரில் லிப்ட் கேட்டதாக சொல்ல பட்ட கதைகள் தான் அதிகம்.

எல்லோருடைய அனுபவமும் கிட்ட தட்ட ஒரே மாதிரி இருந்தது. அதாவது அந்த குழந்தை கார் கதவை திறக்க சொன்னால் அது மனோவசிய கட்டளை போல தன்னை அறியாமல் தனக்கு செய்ய தோன்றியது என்றார்கள். அவர்கள் கண்களை உற்று பார்த்தால் மனோவசியத்திற்கு ஆளாக நேருகிறது தலை சுற்றுகிறது என்றார்கள். அணைத்து கதைகளிலும் அந்த குழந்தைகள் காரில் பாதி வழியில் மறைந்து போனார்கள்.

இதை தவிர அடுத்த படியாக வீட்டு கதவை தட்டி பாத்ரூம் ஐ உபயோகிக்க அனுமதி கேட்ட கதைகள் தான் ஏராளம்.


1996 வாக்கில் இது மிக பிரபலமாக பேச பட்ட மர்ம சம்பவம் ஆகும்."the black eyed child " என்பதை வைத்து பல டிவி சீரியல்களும் வலம் வந்தன. இந்த சம்பவத்தை வைத்து "black eye children என்ற தலைப்பில் -let me in " என்ற சப் டைட்டில் தலைப்பு போட்டு 2015 இல் ஒரு திகில் திரைபடம் கூட ஹாலிவூட்டில் வெளியானது. எதற்க்கும் அடுத்த முறை குழந்தைகள் யாரவது லிப்ட் கேட்டால் அல்லது இரவில் கதவை தட்டினால் அவர்கள் கண்கள் என்ன நிறத்தில் உள்ளது என்பதை பார்த்து கொள்ளுங்கள்.

அடுத்த பாகத்தின் மர்ம சம்பவங்களையும் ஒரு மர்ம குழந்தைகள் சம்பவத்தில் இருந்தே தொடங்குகிறேன்.

மர்மங்கள் தொடரும்............🕷🕷

பாகம் : 14 : சில மர்ம நிகழ்வுகள் (4 )






Others
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..