Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 16
Posted By:Hajas On 1/19/2018 8:42:55 AM

மர்மங்கள்_முடிவதில்லை

ரா_பிரபு

பாகம் : 15 : மர்ம மண்டை ஓடுகள்

பாகம் : 16: மர்ம கிராமங்கள்

 

மர்மங்களை தனக்குள் புதைத்து வைத்திருக்கும் சில கிராமங்களை பற்றி இன்று பார்க்கலாம்..

"Dargavs " இது தெற்கு ரஷ்யாவின் osetia விற்கு சொந்தமான ஒரு பனி படர்ந்த மலை பிரதேச இடம். 3 மணி நேர அபாயகரமான ...பாதையை கடுமையாக வீசும் காற்றுக்கு இடையில் கடந்து இங்கே அடைந்தால்... கீழே பள்ளத்தாக்கு கிராமத்தில் இருந்து 13000 அடி உயரத்தில் ஒரு 17 கிலோ மீட்டருக்கு பரவி இருக்கும் இந்த இடத்தை அடையலாம். Fiagdon நதியை பார்த்த படி இருக்கும் மலை சரிவில் அமைந்து இருக்கும் ஒரு அழகிய கிராமம் இது.


அழகிய சிறு சிறு ஒரே மாதிரியான ஒரு மாதிரி பிரமிட் போன்ற கூம்பு வடிவ வீடுகளை கொண்ட ஒரு சிறு கிராமம் .வீடுகள் அதிக பட்சம் 2 அல்லது 3 அடுக்கு உயரம் கொண்டவை. பார்க்க பள்ளத்தாக்கில் இருக்கும் மற்ற கிராமங்களை போல சாதாரண கிராமம் போல தான் தெரியும் ஆனால் அருகே போய் பார்த்தால் தான் அங்கே எந்த ஒரு உயிருள்ள மனிதனும் வாழ்வது இல்லை என்று புரியும். அந்த ஊரின் பெயர் "the city of the dead"

ஆம் அங்கே இருப்பது வித விதமான பிணங்கள் மட்டும் தான். எல்லாமே பள்ளத்தாக்கில் வாழும் கிராமங்களில் வசித்தவர்களின் பிணங்கள். இவைகளை கல்லறையில் புதைக்காமல் எதற்கு இவ்ளோ தூரம் அன்ட முடியாத இடத்தில ஊரை கட்டி அங்கே கொண்டு போய் வைத்தார்கள் என்று தான் தெரியவில்லை. அங்கே இருக்கும் பிணங்கள் சிலது வித்யாசமான முறையில் புதைக்க பட்டுள்ளதை காணலாம் உதாரணமாக சிலரை படகுடன் சேர்த்து புதைத்து இருந்தார்கள். அந்த மலை சரிவில் படகிற்கு என்ன வேலை ?? (ஆன்மா படகில் ஏறி சொர்க்கம் செல்ல இந்த ஏற்பாடு என்கிறார்கள் ) அப்புறம் கூடவே நிறைய நாணயங்கள் கிடைக்க பெற்றன. அங்கே கிணற்றில் அந்த நாணயத்தை போட்டால் அது உள்ளே கல்லில் மோதியது என்றால் ஆன்மா சொர்க்கம் போகும் என்றும் அவர்கள் நம்பிக்கையாம்.

இப்போ மிரட்டும் விஷயம் என்ன வென்றால் அந்த இறந்தவர்களின் கிராமத்திற்கு உயிருள்ளவன் எவனும் அனாவசியமாக செல்வது இல்லையாம். காரணம் அப்படி சென்ற பல பேர் மீண்டும் உயிரோடு திரும்ப வில்லையாம். அந்த பக்கமா போனீங்கனா ஒரு நைட் தங்கி பாருங்களேன்.

"Yangsi " இது சைனாவின் Sichuan Province பகுதியில் மிக ஒதுக்கு புறமாக அமைந்திருக்கும் ஒரு மிக மிக சிறிய கிராமம்.


இந்த கிராமத்திற்கு சீன அரசாங்கம் ஒரு போதும் பார்வையாளர்களை அனுமதிப்பது இல்லை. காரணம் அங்கே வாழும் மிக சிறிய எண்ணிக்கையிலான கிராம வாசிகள் ஒரு வி்சித்திர நோயால் பாதிக்க பட்டுள்ளனர். அது ஒருவன் வளர்ச்சியை தடுத்து நிறுத்தி குள்ள மனிதனாக மாற்றும் நோய். இந்த நோய் உலகத்தில் புதிது அல்ல தான் ஆனால் இது உலகில் 20000 மனிதர்களில் ஒருவருக்கு வரும் மிக அறிய வகை நோய். அது இந்த ஒட்டு மொத்த கிராமத்தை ஆட்கொண்டுள்ளது எப்படி என்பது தான் விஞ்ஞானிகளும் குழம்பி நிற்கும் ஒரு கேள்வி. இங்கு நன்கு வளர்ந்த மனிதனின் உயரம் வெறும் 3 அடி . அவன் பெற்றெடுக்கும் குழந்தையும் அதற்க்கு மேல் வளருவது இல்லை.

இதற்கான காரணத்தை ஆராய அந்த இடத்தின் மண் தண்ணீர் காற்று எல்லா வற்றையும் சோதித்த ஆய்வாளர்களுக்கு சரியான காரணம் ஏதும் கிடைக்க வில்லை. அந்த கிராமதில் ஒரு 60 ஆண்டுகளுக்கு முன் ஏதோ ஒரு மர்ம நோய் பரவியதாம் அதன் பிறகு தான் எல்லோரும் இப்படி ஆகி விட்டார்களாம்.

அந்த yangsi கிராமம் தீய சக்தியின் பிடியில் இருப்பதாக கிராம வாசிகள் நம்புகிறார்கள். மேலும் சிலர் அதற்க்கு காரணமாக ஒரு கருப்பு ஆமையை சொல்கிறார்கள். அந்த ஆமையை கிராம வாசிகள் தொடர்ந்து உண்ணு வருவது தான் அவர்கள் வளர்ச்சியை நிறுத்திய அபூர்வ நோய் வர காரணம் என்கிறார்கள். சரியான காரணத்தை தெரியாமல் பல வருடங்களாக வாழ்ந்து வந்தது அந்த விசித்திர குள்ளர்களின் மர்ம கிராமம்.


(இப்போது கொஞ்ச கொஞ்சமாக அந்த நோயின் பிடியில் இருந்து மீளுவதாகவும் இந்த தலைமுறை பிள்ளைகளுக்கு அந்த நோய் பாதிப்பு குறைந்த காண படுவதாகவும் செய்தி)

கஜகஸ்தானில் இருக்கிறது kalachi எனும் கிராமம்.


செப்டம்பர் 2014 இல் புதிய கல்வி ஆண்டில் முதல் நாள் வகுப்பு சென்ற அந்த கிராமத்து குழந்தைகள் மட்டும் மர்மமாக தூங்கி விழுந்தன . பள்ளியில் குழந்தைகள் தூங்குவதில் என்ன மர்மம் இருக்கிறது பள்ளியில் குழந்தை தூங்காமல் இருந்தால் தான் மர்மம் என்று நினைப்பவர்களுக்கு... அந்த kalachi கிராமவாசிகள் தூங்கினால் உடனே விழிகாத மர்ம நோயால் பாதிக்க பட்டிருந்தார்கள் என்பது தான் ஆச்சர்யம். உடனே என்றால் சில பல மணி நேரங்கள் அல்ல. நான் சொல்வது சில பல நாட்கள்.

 

ஆம் அவர்கள் தூங்கினால் சிலர் 2 அல்லது 3 நாளும் சிலர் வார கணக்கிலும் தூங்கி முழிப்பார்கள் அப்படி முழிக்கும் போது தங்கள் நினைவு பாதிக்க பட்டிருப்பதை உணர்ந்தார்கள். சிலருக்கு வலிப்பு வந்ததது. சிலருக்கு அதற்க்கு பின் உயரத்தை கண்டால் அச்சம் உண்டானது. சிலருக்கு ஹாலுசினேஷன் என படும் மாய எண்ணங்கள் தோன்றின. இதில் கொடுமை என்ன வென்றால் பலர் தூக்கத்தில் இருந்து மீளுவதே இல்லை இறக்கும் வரை தூங்கி கொண்டே இருப்பார்கள்.

அந்த kalachi கிராமத்தின் விசித்திர நோய் பல இடங்களில் பீதியை கிளப்பியதை தொடர்ந்து கசகஸ்தான் அரசு அந்த கிராமத்தார்களை காலி செய்ய சொல்லி கேட்ட போது பலர் மறுத்து விட்டார்கள். ஆய்வாளர்கள் அங்குள்ள காற்று நீர் மண் மற்றும் விலங்குகள் மனிதர்கள் எல்லாவற்றையும் சோதனைக்கு உட்படுத்தினார்கள். மொத்தம் 20000 திற்கு மேற்பட்ட லேப் சோதனைக்கு பிறகு அவர்கள் அறிவித்த உண்மை என்ன வென்றால் காற்றில் அதிக அளவு கார்பன் மோனாக்சைடு கலந்து இருகிறது என்பது தான். Kalachi யிலிருந்து பல கிலோ மீட்டர் தள்ளி இருந்த 1990 களில் மூட பட்ட யரேனியம்


சுரங்கம் ஒன்று தான் மோனாக்சைடு ஏற்றத்திற்கும் மர்ம தூக்க நோய்க்கும் காரணம் என்று அறிவித்தார்கள்.
(மேலும் தகவலுக்கு kalachi sleeping village என்று தேடி பாருங்கள் )

அடுத்து சொல்ல போவது இவை எல்லாவற்றையும் விட விசித்திரமான ஒரு மர்ம கிராமத்தை பற்றி.

Dominican குடியரசில் உள்ள ஒரு கிராமம் தான் "salinas " இந்த கிராமதில் பல சுட்டி பெண் குழந்தைகளை காணலாம் . பள்ளிக்கு செல்லும் அந்த பெண் குழந்தைகளை கண்ட வேறு வெளியாட்கள் யாரும் சில பல வருடங்கள் கழித்து அந்த பெண் குழந்தைகள் இப்போது வயது வந்த பெண்ணாக வளர்ந்து இருப்பார்கள் என்று எண்ணி வந்து பார்த்தால் அதிர்ச்சி அடைவார்கள். காரணம் அந்த பெண் குழந்தைகள் எல்லாமே இப்போது வாட்ட சாட்டமான ஆன் பிள்ளைகளாக மாறி விட்டு இருப்பார்கள்.

மிக வித்தியாசமா ஒரு மரபணு நோயால் பாதிக்க படுகிறார்கள் அந்த கிராம மக்கள் . அதன் விளைவு அங்கு பிறக்கும் பெண் குழந்தைகள் 12 வயதை அடைந்ததும் கன்னி பருவம் நோக்கி செல்வது இல்லை மாறாக ஆன் பிள்ளையாக மாறி விடுகின்றனர். மிக விசித்திரமான இந்த மரபணு நோய் நடப்பது எப்படி என்பதை கொஞ்சம் அறிவியல் பூர்வமாக பார்த்தோமேயானால்......

இவர்களுக்கு ஆன்பாலின் ஹார்மோனாகிய "dihydro-testosterone " ஐ சுரக்கும் என்சைம் குறைபாடு இருப்பது தான் காரணம். கொஞ்சம் அறிவியல் பூர்வமாக சொல்ல வேண்டும் என்றால் அதாவது ஆன் குழந்தையோ பெண் குழந்தையோ எதுவாகினும் கருவில் இருக்கும் போது Gonads என்கிற ஒரு உள்ளுறுப்பை கொண்டிருக்கும் மேலும் இருபால் குழந்தைகளுமே பொதுவாக கால் களுக்கு இடையில் tubercle எனும் பகுதியை கொண்டிருக்கும் . இப்போது இது ஆணும் அல்ல பெண்ணும் அல்ல. 8 வாரங்களில் y குரோமோசோம்களை சுமந்துள்ள ஆன் சிசு அதிகளவில் dihydro-testosterone ஐ சுறக்க செய்கிறது. இந்த கட்டத்தில் தான் அந்த tubercle எனும் இவ்வளவு நாளாக பொதுவாக இருந்த பகுதி ஆன் உறுப்பாக மாறுகிறது. பெண் சிசுவிற்கு அதே tubercle பெண் உறுப்பாகிறது.


ஆனால் மேலே பார்த்த படி மரபனு குறைபாடாக இருக்கும் ஆன் குழந்தைகள் இந்த ஹார்மோனை சுரக்கும் enzyme 5-α-reductase ஐ தவற விடுகின்றன. அதனால் ஆன் குழந்தை பெண்ணாக பிறக்கிறது. பிறகு 12 வயதில் அடுத்த ஹார்மோன் சுறப்பிற்கு உடல் ஆளாகும் போது ஆணுக்கான உடல் மாற்றம் நடக்கிறது. அதாவது கருவில் சில வாரங்கில் நடக்க வேண்டிய நிகழ்வு இவர்களுக்கு 12 ஆண்டு கால தாமதமாக நடக்கிறது.

சரி இதற்க்கு அறிவியல் பூர்வமான விளக்கம் கொடுத்தாலும் அந்த கிராமத்தில் மட்டும் ஏன் இத்தனை பேர் இந்த மாதிரி என்பது மர்மமாக தான் இருக்கிறது.

நீங்கள் கார்ட்டூன் சீரியல்கள் பார்ப்பது உண்டா..?
குழந்தைகள் மட்டும் அல்ல பெரியவர்களும் கார்ட்டூன்கள் விரும்பி பார்ப்பது உண்டு. கார்ட்டூன்கள் சிரிப்பை ஏற்படுத்தி மகிழ்ச்சியை தருபவை . ஆனால் அடுத்து நான் சொல்ல போகும் அந்த மர்ம கார்ட்டூன் திகைப்பை ஏற்படுத்தி ஆச்சர்யத்தை... அமானுஷ்யத்தை தரும்.

மர்மங்கள் தொடரும்............🕷🕷

பாகம்:17 சிம்சன் எனும் மர்ம கார்ட்டூன்






Others
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..