Posted By:peer On 11/26/2018 5:29:55 AM |
|
ரொம்ப முக்கியமான, ஷாக்கான விஷயம் ஒன்னு, இந்த கஜா புயலை பற்றியது. பதிவு கொஞ்சம் நீளம். படிச்சு வைங்க உதவும்.
எங்களோட எம்ப்ளாயி ஒருத்தர் பிரிட்டிஷ் காரர், ஜியோபிசிஸ்ட் தொழில், வயது 68 பழுத்த பழம். பார்க்க நம்ப இந்தியன் தாத்தா மாதிரியே இருப்பார். பூலோக சம்பந்த பட்ட விசயங்களில் அத்துபடி, ஆபிஸ் ரூம்ல உக்காந்துகிட்டே பெட்ரோல் ரிக்ல இன்னும் எத்தனை அடில பெட்ரோல் இருக்குன்னு கண்டு பிடிச்சு சொல்ற வேலை. மனுஷன் லொக்கேசனை பார்த்தே சொல்லுவார் அந்த அளவுக்கு மண்டை. சம்பளம் நம்ப இந்திய மதிப்பில் மாதம் சுமார் 15 லட்சம் கொடுத்து அவரோட சேவை சவூதி நாட்டுக்கு தேவை என்ற காரணத்தால் இன்னும் ரிடயர்ட் கொடுக்காம வச்சிட்டு இருக்கோம்.
இன்னைக்கு அவரை பார்க்க போய் இருந்தேன். பேசிக்கிட்டு இருக்கும் பொழுது கஜா புயலை பற்றிய பேச்சு வந்தது. அப்படியே சொன்னேன். எங்க ஊரு திருச்சில, புயல் வரத்துக்கு எல்லாம் சான்சே இல்லை. ஆனால் போட்டு தாக்கிட்டு போய்டுச்சு. எப்பவுமே நடக்காத விசயமாக, கடலே இல்லாத திண்டுக்கல் என்ற ஊருல மையம் கொண்டு இருந்துச்சுன்னு சொன்னேன். இதை எல்லாம் கேட்டு கொண்டே இருந்த மனுஷன் நம்ப ஊரு மேப்பை எடுத்து அக்கு வேறாக ஆணி வேறாக ஒவ்வொரு கிரமாம் முதற் கொண்டு நமது ஊர் பெயரை சொல்லி ஆச்சரியப் படுத்தினார்.
ஆனால் அவர் அதற்கு மேல் சொன்ன விசயம் என்னை தூக்கி வாரி போடச் செய்தது. இந்த கஜா புயல் தமிழகத்தை தாக்க கூடிய அவசியமே வந்து இருக்காது. இது ஆந்திரா கொல்கத்தாவை தாக்கி இருக்க வேண்டியா புயல். என்ன பண்றது உங்க கவர்மென்ட் வெத்தலை பாக்கு வச்சு திரும்பி நின்னுட்டு ஏறிட்டு போடான்னு (அவர் இதவிட கொச்சையா சொன்னார்) புயலை வழியக்க கூட்டிட்டு வந்து விட்டார்கள் என்று கூறினார். அட என்னங்க பைரோன் புயலை யாரவது கூப்பிட முடியுமான்னு நான் எதிர் கேள்வி கேட்டேன்.
அதுக்கு அவர் சொன்னது யாரும் புயலை கூப்பிட முடியாது. ஆனால் வர வைக்க முடியும்ன்னு சொன்னாரு. அதெப்படின்னு கேட்டேன்.
புயல் வந்த திசைகளை கவனித்தயான்னு கேட்டார் நாகப்பட்டினம் வழியாக வந்து அப்படியே வந்துடுச்சுன்னு சொன்னேன். ஆமாம் கரெக்ட். புயல் வந்த திசைகள் எல்லாம் என்ன தொழில் நடக்குதுன்னு கேட்டார். அங்கே எல்லாம் விவசாயம் தான் இப்பதான் ஒரு ரெண்டு மூனு வருசமாக மீத்தேன், குருட் ஆயில் எடுத்துகிட்டு இருக்காங்கன்னு சொன்னேன். ஆங் நான் சொல்ல வந்த விஷயத்துக்கு நீ வந்துட்ட. இப்ப சொல்றேன் கேட்டுக்கோ ஒரு குறைந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலம் உருவாச்சின்னா குளிர்ந்த இடத்தை நோக்கி அது பயணம் செய்யாது. வெப்பம் எங்க அதிகமாக இருகிறதே அந்த இடத்தை நோக்கி தான் பயணம் பண்ணும். குளிர்ந்த இடம் நோக்கி போனால் வலுவிழந்து மழையாக மாறி போய்டும். நீ சொன்ன இடம் எல்லாம் மீத்தேன் போன்ற வெப்பமான பொருட்கள் எடுக்க படுவதால் அந்த இடம் முழுவது வெப்ப காடாக இருக்கும். புயலுக்கு வெப்பம் என்பது பிரியாணி சாப்பிடுவதை போன்றது. ரொம்ப பிடித்த மான காரியம் வெப்பம் மண்டல பகுதிகள்.
வெப்பமான இடத்தை நோக்கி செல்லும் பொழுது அதோட வேகம் 1000 மடங்கு அதிகரிச்சு இருக்கிற இடத்தை எல்லாம் துவம்சம் செஞ்சிட்டு போய்டும்ன்னு சொன்னாரு. நீங்கள் உங்க ஊருல இன்னும் எவ்வளவுக்கு எவ்வளவு ரிக் தோண்டுரீங்களோ அந்த அளவுக்கு புயலின் வேகம் இனி வரும் காலங்களில் அதிகரிக்கும் என்ற சாக் நியுசையும் சொன்னார்.
சரி சவுதில ஆயிர கணக்கான ரிக் இருக்கு இங்கே ஏன் புயல் வர மாட்டேங்குதுன்னு கேட்டேன். சவுதி அரேபியாவை பொறுத்த வரை கிழக்கு சைடு தான் அராம்கோ எண்ணை நிறுவனம் எல்லாம் இருக்கு. பூலோக படி அங்கே உள்ள கடலின் அளவு சிறியது. ஈரானுக்கும் சவுதிக்கும் நடுவில் குறைந்த அளவு தூரம் தான் கடல் ஆகையால் புயலில் வேகம் மிக மிக குறைவு. மேலும் இங்கே புயல் அடித்தாலும் ஒன்றும் ஆகப்போவதில்லை. இது பாலைவனம் மரங்கள் ஏதும் கிடையாது ஆகையால் நமக்கு எதுவும் தெரிவது இல்லைன்னு சொன்னார்.
அவர் சொன்னதை எல்லாம் வச்சு பார்க்கும் பொழுது மல்லி பட்டினம் - நாகபட்டினம் நரிமணம் எண்ணை சுத்திகரிப்பு ஆலை அங்கே உள்ளது. அதன் வழியாக தமிழகத்தில் புகுந்து கொஞ்சம் கொஞ்சமா கிழக்கு நோக்கி நகர்ந்து அங்க இருந்து புதுகை, தஞ்சை டெல்ட்டா மாவட்டங்கள் வழியாக பயணித்து திருச்சி வழியாக திண்டுக்கல்லிள் மையம் கொண்டு துவம்சம் செய்து சென்று இருக்கிறது. இந்த ஊர்கள் அனைத்தும் சிறிது காலத்துக்கு முன்பு மீத்தேன் எடுபதற்காக மக்கள் போராட்டம் செய்த பகுதிகள் என்பதை கூட்டி கழித்து பார்க்கும் பொழுது எனக்கு தலை சுற்றி விட்டது.
எனக்கு ஜியோபிசிஸ்ட் போன்ற துறைகளில் அந்த அளவுக்கு பரிட்சயம் கிடையாது. இது எந்த அளவுக்கு உண்மை என்றும் என்னால் அளவிட முடியவில்லை. அந்த துறையை சார்ந்த நண்பர்கள் அந்த பிரிடிஷ்காரர் கூறியது சரியா என்று விளக்கவும். |