Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
தப்லீக் பிற மதத்தினரிடம் அழைப்புச் செய்வதில்லையா? - (பிரான்ஸ்)
Posted By:peer On 1/26/2019 5:51:04 PM

 

பிரான்ஸ் நாட்டில் தப்லீக் ஜமாத் ஒன்று பைதல் ஜமாத்தாக (நடை பயணம்) சென்றுக் கொண்டிருந்தது. அப்போது காரில் சென்றுக் கொண்டிருந்த இரு பெண்கள் அவர்கள் நடந்து சென்றுக் கொண்டிருந்ததைப் பார்த்து தங்களது காரை நிறுத்தி அவர்களிடம் சில பணத்த்தைக் கொடுத்தனர். நீங்கள் பணமில்லை என்பதால் தானே நடந்து கொண்டிருக்கின்றீர்கள். இப்பணத்தின் மூலம் நீங்கள் வாகனத்தில் செல்லலாம். உங்களைப் பார்த்தால் நல்லவர்களாகத் தெரிகிறது. ஆகவேதான் நாங்கள் உங்களுக்கு உதவி செய்ய விரும்புகிறோம் என்றனர்.

இதனைக் கேட்ட அந்த ஜமாத்தின் அமீர் சகோதரி!, எங்களிடம் பணம் இருக்கின்றது. பணத்தின் காரணமாக நாங்கள் நடந்து சென்றுக் கொண்டிருக்கவில்லை என்றார்.

அதற்கு அந்தப் பெண்மணி அப்படியென்றால் நீங்கள் நடந்து செல்வதின் காரணம் என்ன என்றுக் கேட்டார். அதற்கு அந்த அமீர் எங்களது இந்தப் பயணத்தின் நோக்கம் மக்களை அல்லாஹ்வின் பால் அழைப்பதே. அவனது மார்க்கத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதைத் தவிர எங்களது இந்தப் பயணத்தில் வேறெந்த நோக்கமும் இல்லை. நாங்கள் அந்த மக்களுக்காக, அவர்கள் இறைவன் பால் நெருங்குவதற்காகவும் அவனது அருளைப் பெறுவதற்காகவும், துஆவும் செய்கிறோம். இதனைக் கேட்ட மற்ற் பெண்மணி கேட்டார் நீங்கள் எங்களுக்காகவும் இறைவனிடம் துஆ செய்கின்றீர்களா என்று? அதற்கு அமீர் ஆம் நாங்கள் உங்களுக்காகவும் அல்லாஹ்விடம் துஆச் செய்கின்றோம் எனக் கூறினார்.

இதனைக் கேட்ட அந்தப் பெண்மணி அப்படியியென்றால் நீங்கள் யார் என்று நான் கூறவா? என்றார். அதற்கு அமீர் சரி கூறுங்கள் என்றார். அந்தப் பெண்மணி நீங்கள் நபி என்றார். அதற்கு அமீர் சகோதாரி நீங்கள் எதன் அடிப்படையில் இதனைக் கூறுகிறீர்கள்? என்றார். அந்தப் பெண்மனி இந்த வேலையை நபிகள் தான் செய்வார்கள் என்று நான் படித்திருக்கின்றேன் என்றார்.

ஜமாத்தின் அமீர் அவர்களுக்கு விளக்கினார். நாங்கள் நபியல்ல. இறுதி நபியின் சமுதாயம் நாங்கள். தனக்குப் பின் இந்த வேலையைச் செய்வதற்காக எங்களது நபி எங்களுக்கு கட்டளையிட்டுள்ளார்கள். அதனால் தான் இதனை நாங்கள் செய்கின்றோம்.

இந்த இரண்டு பெண்மணிகளும் அந்த இடத்திலேயே இஸ்லாத்தை ஏற்றனர். மேலும் இந்த இரண்டாவது பெண்மண அமீரிடம் கேட்டார். நீங்கள் இந்த தேதியில் இந்த் நேத்தில் எந்த இடத்தில் இருப்பீர்கள் என்று. ஜமாத்தின் அமீர் அதனை அவருக்குத் தெரிவித்தார்.

அந்த குறிப்பிட்ட நாளில் மேலும் 8 பெண்களை அந்த இடத்திற்கு அந்த பெண்மணி அழைத்து வந்தார். அவர்கள் அனைவரும் இஸ்லாத்தை ஜமாத்தின் மூலம் ஏற்றுக் கொண்டனர்.

அல்லாஹ் யாரைக் கொண்டு யாருக்கு ஹிதாயத்தை நாடுகிறான் என்பது அவன் மட்டுமே அறிந்த ஒன்று. நாம் செய்யவேண்டியது முயற்ச்சி. முடிவு அவனது. மறுமையில் நல்லதை அறுவடை செய்ய விரும்புபவர்கள் இம்மையில் நல்லதை விதையுங்கள்.


Source: https://www.youtube.com/watch?v=Kzh5-j5t7HI




Religious
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..