Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
சொலவடைகள் - எள்ளல் தொனியும் உண்மைகளும்
Posted By:peer On 8/4/2020 2:06:01 PM

சொலவடைகள்

கிராமத்தில் எளிய மொழியில் காலங்காலமாக சொல்லப்பட்டவை சொலவடைகள். எள்ளல் தொனியும் உண்மைகளும் அதில் இருக்கும்.

*பாடுபட்டவனுக்குப் பத்துப் பல்லாம் இளிச்சவாயனுக்கு இருபது பல்லாம்.

வேலை செய்தவர்களைவிட வேலை செய்யாதவர்க்கு அதிக பலன் அடைவதாக..

*ஆனவனுக்கு புத்தி சொன்னா அறுவும் உண்டு நினைவும் உண்டு ஈனனுக்கு புத்தி சொன்னா இருக்கும் இடத்தையும் தோத்துதான் போகணும் என அறிவுரை யாருக்கு சொல்வதென்று வந்த சொலவடை

*பத்தாவுக்கு ஏற்ற பதிவிரதையாய் இருந்தால் எக்காலமும் கூடிவாழலாம். சற்று ஏறுமாறாக இருந்தால் கூறாமல் சந்நியாசம் போய்விடலாம் என இல்லற தம்பதி குறித்து சொல்வார்கள்

*உழுகிற மாடும் , உள்ளூர் மருமகனும் ஒன்றுதான்

*வேலையைத் தள்ளிப்போடுகிற மனப்பான்மைக்கு ஒரு சொலவடை...- "செல்வியக்கா புருசன் செவ்வாக்கிழமை செத்தானாம்,

வீடு வெறிச்சோடி போய்டுமேனு, வெள்ளிக்கிழமதான் எடுத்தாளாம்"

*ஏர் உழறவன் ஏமாளியா இருந்தா மாடு மச்சான் னு கூப்டுமாம்
*தென்னையை வச்சவன் தின்னுட்டு செத்தான், பனையை வச்சவன் பாத்துட்டு செத்தான்

*சின்ன மச்சான், குனிய வெச்சான் -நெருஞ்சி முள்

*நடந்தா நாடெல்லாம் உறவு

படுத்தா பாய் கூட பகை.

*தாகத்துக்கு தண்ணி கேட்டா குழிமேட்டுல வந்து ஊத்தின கதையா இருக்கே

*கம்பங்கதிரை கண்டா கை சும்மாயிருக்காது, மாமன் மகளை கண்டால் வாய் சும்மாயிருக்காது.

*உள்ளூர்ல உதை வாங்காத

வெளியூர்ல விதை வாங்காத..

என்பன போன்ற சொலவடைகளை ரசித்துப் படிக்கலாம்




தமிழ் மொழி
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..