திப்புவின் புலி’(Tipu’s Tiger) பிரிட்டிஷ் எதிரியை தாக்கிக் கொல்லும் இந்தியப் புலி என்றொரு கோட்பாட்டை உருவாக்கினார் திப்பு சுல்தான்.
இதன் அடையாளமாக ஒரு ரோபோவை உருவாக்கி தன் மாளிகையில் அவர் வைத்திருந்தார்.
இந்த ரோபோவுக்கு சாவி(Crank) கொடுத்தால் புலி உறுமும். அதை ஒரு வெள்ளையன் பார்த்து பதறி, பயந்து அலறுவான்.
இன்றைக்கு உலக அரங்கில் இந்தியா உரிமை கொள்ளும் ‘இந்திய ரோபோ தொழில் நுட்பத்தின் முன்னோடி’யாக திப்புவின் புலி விளங்கி வருகிறது.
இது Worm gear எனும் திருகு சர்க்கர இயக்கி, Cog wheel ⚙️ எனும் பற்சக்கரங்களை கொண்டது.
இந்த திருகு பற்சக்கர இயக்கி 13 ஆம் அல்லது 14 ஆம் நூற்றாண்டில் முதன் முதலாக டில்லி சுல்தான்கள் ஆண்ட காலத்தில் கண்டு பிடிக்கப்பட்டது.
அப்போது அறிவியலின் உச்சத்தில் இருந்த அரபுலகில் இது பயன்பாட்டில் இருந்தது. மேற்கு ஐரோப்பாவான பிரிட்டனோ பிரான்ஸோ இதை அறிந்திருக்கவே இல்லை.
இந்த இரும்பு பொருள்களை உற்பத்தி செய்திட தேவையான தரமான உருக்கு இரும்பு (wootz) தென்னிந்திய தீபகற்பத்தின் தமிழ்நாட்டிலுள்ள கொடுமணல், கர்நாடாக, ஆந்திரா பகுதியில் அமைந்த கோல்கொண்டா போன்ற ஊர்களிலிருந்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இது ‘டமாஸ்கஸ் இரும்பு’ என வரலாற்றில் அறியப்படுகிறது.
தனது நேச நாடான ஃபிரான்சின் (ஐரோப்பாவின்) தொழில் நுட்ப உதவியின்றி சுயமாக திப்பு சுல்தான் இதை சாதித்துள்ளார். இது Make in India வாகும்.
இந்தியாவின் சொத்துகளை சுரண்டி, கொள்ளையடித்து இங்கிலாந்துக்கு கொண்டு சென்று தம் தாய்நாட்டை வளப்படுத்தினர் வெள்ளையர்கள். ஆனால் திப்பு சுல்தான் உள்நாட்டு உற்பத்தியை பெருக்கி இம்மண்ணை வளப்படுத்தினார்.
திப்புவைக் கொன்றனர் வெள்ளையர். Make in India என்று மாய்மாலம் பேசி ஊரை ஏமாற்றும் ஃபாசிஸ்டுகள் திப்புவின் வரலாற்றைக் கொல்கின்றனர்.
தான் நடத்தி வந்த இஸ்லாமிய அரசுக்காக தன்னையே ஈந்த திப்பு சுல்தானைக் கொன்ற வெள்ளையர்கள் அவருடைய Tipu’s Tiger ஐ திருடிச்சென்றனர். இப்போது லண்டன் V.A. அருங்காட்சியகத்தில் கம்பீரமாக வீற்றிருக்கிறது.
ஆங்கிலேயர்கள் இந்தியா மீது நடத்திய ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தும் வரலாற்று ஆய்வாளர்களுக்கு Tipu’s Tiger இன்றும் அசௌகரியத்தை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கிறது.
தகவல்: தாருல் இஸ்லாம் பவுண்டேஷன் டிரஸ்ட் 2021 காலண்டர். -இல்யாஸ் ரியாஜி 27.12.2020 முகநூல் பதிவு.
|