Posted By:peer On 4/25/2021 10:20:52 PM |
|
சவூதி அரேபியாவில் 1940 -1950 காலப் பகுதியில், இரண்டாம் உலக யுத்தத்தினால் ஹஜ்ஜு செய்வதற்கு வெளிநாட்டு ஹாஜிகள் பயணம் செல்ல முடியாமல் போனதால் மக்கா மதினா மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் அரபிகளின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு பஞ்சத்தில் கஷ்டப்பட்டிருக்கிறது.
அந்த கால கட்டத்தில் இந்திய இலங்கை தமிழ் முஸ்லிம்கள் ரூபாய் 70 ஆயிரம் நிதி உதவி செய்திருக்கிறார்கள். (இன்றைய பெறுமதியில் பல நூறு கோடிகளுக்கு சமனாக இருக்கலாம்.)
இலங்கை டாக்டர் M.C.M. கலீல், மற்றும் இந்தியாவின் காயல்பட்டினம் பல்லாக் குடும்பத்தைச் சார்ந்த ஜனாப் P.S.அப்துல் காதர் அவர்களுடைய கணக்கறிக்கை ஆதாரத்தை இதனுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.
ஏழை குபேரனாவதை போல சஊதி இன்று பொன்னில் குளிக்கிறது. நாளை எதுவும் நடக்கலாம் !
மக்கா மதினா பஞ்ச நிவாரண கமிட்டியின் அலுவலகமாக செயற்பட்ட இடம்கொழும்பு, இலக்கம் 163 இரண்டாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள P.S.K.V பல்லாக் லெப்பை & கம்பெனி தான். அந்த கமிட்டியின் செயலாளராக பணியாற்றியது பல்லாக் லெப்பை & கம்பெனியின் பங்குதாரராக இருந்த காயல்பட்டணம் தைக்கா தெருவைச் சார்ந்த கண்ணியத்துக்குரிய மர்ஹூம் ஹாஜி P. S. அப்துல் காதர் அவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது ஒரு வரலாற்று பதிவாகும்.
|