Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
ஔரங்கசீப் அவர் அழித்ததைவிட அதிக கோவில்களைக் கட்டினார்
Posted By:peer On 12/16/2021 9:13:34 AM

-தமிழில்
உஸ்தாத் SM . இஸ்மாயில் நத்வி

பாபரி மஸ்ஜித்தை அழித்த பாரதீய ஜனதா கட்சியின் தலைமையிலான ஒரு மிகப்பெரிய வன்முறை இயக்கம் 1980 கள் மற்றும் 1990 களில் கோவில் இடிப்பை மைய்யமாக வைத்து உருவாகியது , ராமருக்கு ஒரு கோவில் அங்கு முன்பே அமைந்திருந்தது என்ற ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் அது செயல்பட்டது.

முரண்பாடாக, இடைக்கால காலப்பகுதியில் முகலாய காலத்து இந்துக்களின் கோயில்கள் அழிவுக்கு எந்தவிதமான புகாரும் எதிராக பதிய படவில்லை என்பது தான் உண்மை, இந்த நடவடிக்கைகள் உண்மையில் எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டு வந்தது. அல்லது 18 ஆம் நூற்றாண்டில் முகலாய சக்தியை இழந்த பின்னரும் கூட ( முகலாயத் தணிக்கையை வாதிடுவதற்கு ஒருவர் விரும்புவார் என்றால்).

சரித்திராசிரியர் ரிச்சர்ட் ஈடன் காட்டியுள்ளபடி, இந்தியாவில் உள்ள முஸ்லீம் ஆட்சியாளர்களின் கோவில்களின் அழிவு மிகவும் அரிதாக இருந்தது, அது நடந்தபோதும் கூட, இது ஒரு அரசியல் செயல் அன்றி அது ஒரு மதபோக்கு அல்ல.

ஔரங்சீப் மன்னர் சிறந்த புகழைப் பெற்று இருந்தபோதிலும், பன்முக சமூகத்தை வழிநடத்தும் விடயத்தில் ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்தார். அவருடைய ஆட்சி காலத்தில் கோயில்கள் அரிதாகவே அழிக்கப்பட்டன (அவுரங்கசீப் காலத்தில் 15 நிகழ்வுகள் மட்டும் பெற முடியும் அதுவும் அரசியல் ரீதியான காரணங்களினால் இந்த எண்ணிக்கையை ரிச்சர்ட் ஈடன் பதிவு செய்கிறார்) அரசியல் காரணங்களால் மட்டுமே .
எடுத்துக்காட்டாக, அவுரங்கசீப் டெக்கானில் கோயில்களை இலக்காகக் கொண்டு தாக்கவில்லை, இருப்பினும் அவருடைய மகத்தான இராணுவம் தனது ஆட்சியின் பெரும்பகுதி வரை முகாமிட்டு இருந்தது.

வடக்கில், அவர் கோவில்களைத் தாக்கினார், உதாரணமாக மதுராவில் உள்ள கஷவ ராய் கோயில். ஆனால் அரசியல் காரணம்: மதுரா பகுதியின் ஜாட்கள் பேரரசுக்கு எதிராக கலகம் செய்ததினால்.

அரசியலமைப்பின் இதே காரணங்களுக்காக, அவுரங்காசீபும் கோவில்களை ஆதரித்தார், ஏனெனில் மாநிலத்திற்கு விசுவாசமாக இருந்த இந்துக்கள் வெகுமதி பெற்றனர். லண்டன் கிங்ஸ் கல்லூரியில் இருந்து கேத்தரின் பட்லர் ஸ்கோஃபீல்டு குறிப்பிடுகையில், " ஔரங்கசீப் அவர் அழித்ததைவிட அதிக கோவில்களைத்தான் கட்டினார்
கேத்தரின் ஆஷர் ,எம்.அத்ஹர் அலி ஜலால் தீன் ஹேஸ் போன்ற சரித்திராசிரியர்கள் இந்த கோவில்களுக்கு வழங்கப்பட்ட ஏராளமான வரி-இலவச மானியங்களை பற்றி கூறி இருக்கிறார்கள், குறிப்பாக பனாரஸ் நகரில் உள்ள ஜங்கம் பாரி பாத் சித்ரகாட்டில் உள்ள பாலாஜி கோயில், அலகாபாத்தில் சோமேஷ்வர் நாத் மகாதேவ் கோவில், கோஹாட்டியில் உள்ள உமநாத் கோவில், மற்றும் பல.

மேலும், கோவில் அழிவு என்பது இந்திய அரசியலில் ஒரு பொதுவான பகுதியாக இருந்தது, முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல. உதாரணமாக, 1791 ஆம் ஆண்டில், சிரிங்கேரியில் உள்ள சங்கராச்சாரியரின் ஆலயத்தை மராட்டிய இராணுவம் சோதித்து, சேதப்படுத்தியது, ஏனெனில் அது அவர்களின் எதிரியான திப்பு சுல்தானால் ஆதரிக்கப்பட்டது. பின்னர், மன்னர் திப்புவினால் கோயில் புனரமைக்கப்பட்டது.

-பத்திரிக்கையாளர் சோஐப் டானியல்
Published Sep 02, 2015 · 01:30 pm

https://scroll.in/article/752358/was-aurangzeb-the-most-evil-ruler-india-has-ever-had




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..