order abortion pill online usa order abortion pill online usa mipnet.dk மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம்
இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்று 60 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. வெள்ளையர்களிடமிருந்து பெற்ற சுதந்திரத்தை கொள்ளையர்களிடம் தாரை வார்த்து நிற்கிறோம். இரவினில் பெற்றோம் சுதந்திரத்தை - இன்னும் விடியவே இல்லை என கொதிக்கிறான் ஒரு கவிஞன்.
ஏறத்தாழ குறைஷிகள் இருந்த அறியாமை மக்காவில் என்னென்ன கொடுமைகள் நடைபெற்றனவோ அதில் பல இன்னும் நமது இந்தியாவில் தலை விரித்தாடுகிறது. சுpல சமயங்களில் அதைவிட அதிகமாக டெக்னாலஜி ஜாஹிலியா!!
- உயர்ந்தவன் - தாழ்ந்தவன் வேறுபாடு மற்றும் பாகுபாடு
- பெண் குழந்தைகள் பிறந்தால் உயிரோடு புதைத்தான் அன்று ; பெண் குழந்தை பிறக்கும் முன்பே கருவறையே கழுவறையாக மாற்றுகிறான் இன்று
- வலுத்தவனுக்கு ஒரு நீதி - இளைத்தவனுக்கு ஒரு நீதி
- இன மாச்சார்யம் - என் ஜாதிக்காரன், மதத்துக்காரன் எந்த தவறு செய்தாலும் சரிதான்
- இறைவனுக்கு இணை வைக்கும் மாபெரும் பாவம் மற்றும் அநியாயம்
- நிர்வாணமாக கடவுளை? வணங்குதல்
- பகிரங்கமான விபச்சாரம் மற்றும் மது
நீங்கள் சிந்தித்தால் இன்னும் பல தொடரும். இதை மாற்ற வேண்டிய பொறுப்பு நன்மையை ஏவி தீமையை தடுக்கும் அல்லாஹ்வால் சிறந்த சமுதாயம் என பாராட்டப்பட்ட நம்மை சார்ந்தது. ஆனால் நமது நிலையை சற்று எண்ணி பாருங்கள். சத்தியத்திற்கு சான்று பகர வேண்டிய நாம் அசத்தியத்துடன் ஆராவாரமாக செல்வதை பெருமையாக கருதுகிறோம். ஸாமிரிக்களின் சித்து வேலையில் மயங்கி சத்தியத்தை மறைத்து விடுகிறோம் அல்லது மறந்து விடுகிறோம்.
அனைத்து தீமைகளையும் களைவதற்கு அண்ணலார் (ஸல்) எவ்வாறு தீரத்துடன் போராடினார்களோ அந்த வழியில் நமது பயணத்தை தொடர்வோம். பாதை துர்ரமாக இருக்கிறதே என கவலைப்பட தேவையில்லை. இறைவன் நம்முடன் இருக்கிறான். நாம் இந்த சத்திய பாட்டையில் அடி எடுத்து வைத்தால் இறைவன் பயணத்தை முடித்து வைக்கிறான். அவனுடைய வாக்குறுதியும் அதுதான் .
9:32 தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.
காந்தியடிகள் ஒரு முறை சொன்னார் - இந்தியாவில் உமர் (ரழி) அவர்களின் ஆட்சி அமுல்படுத்த வேண்டும் என்று. காந்தியின் இந்த கனவை நனவாக்குவோம். இது அவரது கனவு மட்டுமல்ல நமது கடமையும் கூட.
இந்தியாவின் பூரண விடுதலை இஸ்லாத்தின் மூலமே. இறைவனின் செய்தியை அனைத்து மக்களுக்கும் எடுத்துரைப்போம். அவர்களை அடிமைப்படுத்தி கொண்டிருக்கும் விலங்குகளை உடைத்தெறிவோம். இந்த உலகில் மட்டுமல்ல நிரந்தரமான மறுமை உலகிலும் மக்களனைவரும் சுதந்திரமாக இருக்க உழைப்போம்.
மேலும் எவர்கள் நம்முடைய வழியில் முயல்கின்றார்களோ நிச்சயமாக அவர்களை நம்முடைய நேரான வழிகளில் நாம் செலுத்துவோம். நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோருடனேயே இருக்கின்றான். 29:69
அன்புடன் முஹம்மத் உவைஸ்
|