Posted By:sohailmamooty On 12/31/2008 |
|
zoloft weed reddit can zoloft and weed kill you click மதுரை உட்பட 9 மாவட்டங்களில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க ஆன்லைனில் பதிவு கட்டாயம்
நாளை முதல் அமல்
நெல்லை, டிச.31: நெல¢லை உட்பட 9 மாவட்டங்களில் பாஸ்போர்ட் பெற, ஆன்லைனில் முன்பதிவு செய்த விண்ணப்பம் மட்டுமே ஏற்று கொள்ளப்படும் என மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் ஜோஸ் கே.மாத்யூ அறிவித்துள்ளார். இப்புதிய நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது. மதுரை பாஸ்போர்ட் அலுவலகம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இதில், நெல்லை, தூத்துக்குடி, குமரி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் கொண்டு வரப்பட்டன. பாஸ்போர்ட் அளிப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வந்ததால், அதை விரைவுபடுத்த பல்வேறு நடவடிக்கைகளை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் எடுத்து வருகிறது. இதில் ஒன்றாக, மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களிலும் பாஸ்போர்ட் பெற ஆன்லைனில் முன்பதிவு செய்த விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்று கொள்ளப்படும் என்று மண்டல பாஸ்போர்ட் அலுவலர் ஜோஸ் கே.மாத்யூ அறிவித்துள்ளார். இந்த புதிய நடைமுறை நாளை புத்தாண்டு முதல் அமலுக்கு வருகிறது. மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் தட்கல் பாஸ்போர்ட், மாற்று பாஸ்போர்ட் பெற, இணையதளம் மூலம் பதிவு செய்பவர்கள், தங்களுக்கு வசதியான நாள், நேரத்தை தேர்வு செய்து கொள்ளலாம். அந்த நேரத்திற்கு 15 ந¤மிடங்களுக்கு முன்பு மட்டுமே பாஸ்போர்ட¢ அலுவலகத்திற்குள் விண்ணப்பத்தாரர்கள் அனுமதிக்கப்படுவர். அதே நேரத்தில், வழக்கமான பாஸ்போர்ட் பெற கலெக்டர் அலுவலகங்களில் பாஸ்போர்ட் பிரிவில் விண்ணப்பம் அளிக்க விரும்புபவர்கள், ஆன்லைனில் தேர்ந்தெடுத்த தேதிக்கு முன்பாகவும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
|
|