அண்ணா காலத்து அரசியல் தலைவர் அலிசேக் மன்சூர்

Posted by S Peer Mohamed (peer) on 3/19/2013

  (தோற்றம் 03. 08. 1931, மறைவு: 03. 03. 2013)

கழகத் தலைவர் கலைஞர் அவர்களாலும் பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் அவர்களாலும் 'மன்சூர்' என்று அன்புடன் அழைக்கப்பட்டு அவர்களின் நெஞ்சுக்கு நெருக்கமாக இருந்த நெல்லைமாவட்டக் கழக மூத்த முன்னோடி அலிசேக் மன்சூர் மறைந்து விட்டார் என்ற செய்தி தி. மு. கழகத்திற்கு, குறிப்பாக நெல்லை மாவட்டக் கழகத்திற்குப் பேரதிர்ச்சியைத் தந்தது.

இயக்கப் பற்றுக்கு இலக்கணமாக இருந்த அலிசேக் மன்சூர் மாணவப் பருவத்திலேயே கருஞ்சட்டை வீரராக பகுத்தறிவுப் பணியாற்றியவர். துடிப்பும் துணிச்சலும் இளமைக் காலத்திலிருந்தே அவரின் அடையாளம். 1948 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் அண்ணா அவர்கள் வராத நிலையில், 'அண்ணா ஏன் வரவில்லை என்று துண்டுச் சீட்டுக் கொடுத்து பெரியாரிடம் கேள்வி கேட்ட நிகழ்வு முதல் தலைமுறை திமுகவினரால் மறக்க முடியாததாகும். இந்தி எதிர்ப்பு, இட ஒதுக்கீடு, விலைவாசி உயர்வு தொடர்பாக நடைபெற்றப் பல போராட்டங்களிலும் பங்கேற்றவர். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே இந்தி எழுத்து அழிப்புப் போராட்டம் உள்ளிட்ட இயக்கப் போராட்டங்களில் கலந்து கொண்டதால் அன்றைய ஆட்சியாளர்களால் பலமுறை கைது செய்யப்பட்டார்.

திமுக மாணவர் அமைப்பைத் தொடக்கி, இளைஞர்களிடம் கழகத்தை மிகப் பெரிய அளவில் வளர்த்தெடுத்தவர்களில் முக்கியமானவர் அலிசேக் மன்சூர் அவர்கள். ஒருமுறை அண்ணாவிடம் 'கழக மாநாட்டில் யார் யாரெல்லாம் பேசுகிறார்கள்?" என்று கேட்டபோது, 'அண்ணாதுரை முதல் அலிசேக் மன்சூர் வரை" என்று அண்ணாவால் குறிப்பிடப் பட்டது மறக்கமுடியாத வரலாற்றுப் பதிவாகும். திமுகழகத்த்தின் நெல்லை மாவட்ட முதல் மாநாட்டுச் செயலாளராக இருந்த பெருமைக்குச் சொந்தக்காரர் இவர்.

 அலிசேக் மன்சூர் எத்தகைய உறுதியான கட்சிக்காரராக இருந்தார் என்பதை உணர்ந்துகொள்ள அவரது மறைவை ஒட்டி தி. மு. கழகப் பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் அவர்கள் வெளியிட்டிருந்த இரங்கல் அறிக்கை ஒன்று போதும்.

 'திமுகழகத்தின் தொடக்க காலம் முதலே கட்சிப் பணியாற்றியவர். பேரறிஞர் அண்ணாவின் பேரன்பைப் பெற்றவர். கழகத்தை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சென்ற சிறந்த பேச்சாளர். எந்த நிலையிலும் தடம் மாறாதவர்" என்று இனமானப் பேராசிரியர் அவர்கள் அலிசேக் மன்சூர் அவர்களுக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார்.

சிறந்த பேச்சாளராக மட்டுமல்லாமல் இயக்கப் பணிகளில் ஒன்றான இலக்கியப் பணியிலும் முத்திரைப் பதித்தவர். கிளர்ச்சி, நம்நாடு, தென்றல், தனியரசு, முரசொலி உள்ளிட்ட இதழ்களில் அரசியல் கட்டுரைகளும் இலக்கியக் கட்டுரைகளும் தொடர்ந்து எழுதி வந்த அருமை மிகு எழுத்தாளர்.

இவருடைய மூத்தத் தலைமுறை முதல் மூன்றாம் தலைமுறை வரை திராவிட இயக்க உணர்வு கொண்டவர்கள் என்பது குறிப்பிடத் தக்கதாகும். பெரியாரிடமும் சுயமரியாதை இயக்கத் தலைவர்களிடமும் மிகுந்த மதிப்பு வைத்திருந்தவர் இவருடைய தந்தையார் .

 அலிசேக் மன்சூர் அவர்களின் திருமணம் ஏராளமான கழகத் தலைவர்களின் முன்னிலையில் 1954ல் நடைபற்றது. மும்பை புறநகர் திமுகவின் இன்றைய செயலாளராக உள்ள இவருடைய மகன் அலிசேக் மீரானின் திருமணம் தலைவர் கலைஞர் தலைமையில் 1981ல் நடைபெற்றது. இவருடைய பேரன் (அலிசேக் மீரானின் மகன்) மன்சூர் இம்ரானின் திருமணம் தளபதி மு. க. ஸ்டாலின் தலைமையில் 2010ல் நடைபெற்றது.

திமுகழகத்தின் தலைமைப் பொதுக்குழு உறுப்பினராகவும் நெல்லை மாவட்டக் கழகத்தின் பல்வேறு பொறுப்புகளில் இருந்தும் சிறப்பாகப் பணியாற்றியவர். அலிசேக் மன்சூர் அவர்களின் இல்லத்திற்கு வராத திராவிட இயக்கத் தலைவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இயக்கத்தின் மூத்த தலைவர்கள் பலரும் மிகவும் நெருக்கமாக இவருடன் பழகி இருக்கிறார்கள்.

 1950 ல் கலைஞரை அழைத்து பொதுக்கூட்டம் நடத்தியவர் இவர், 1955 ஆம் ஆண்டு நெல்லை மாவட்ட சுற்றுப்பயணம் சென்ற கலைஞர் இவருடைய இல்லத்தில்தான் தங்கியிருந்தார். பேரறிஞர் அண்ணாவின் நன்மதிப்பைப் பெற்ற அன்புத் தம்பியாகவும் , கலைஞர், பேராசிரியர், நாவலர், மதுரை முத்து, சி. பி. சிற்றரசு, கே. வி. கே. சாமி, என். வி. என்., எஸ். எஸ். தென்னரசு, எம். எஸ். சிவசாமி, நாகூர் அனிபா, கா. மு. கதிரவன் , இரத்தினவேல் பாண்டியன், உள்ளிட்ட கழக முன்னணித் தலைவர்கள் பலரின் மிகச் சிறந்த நண்பராகவும் விளங்கியவர்.

வாழ்ந்தால் இவரைப்போல இயக்கத்திற்கு உண்மையாக இருந்து வாழவேண்டும் என்று பலராலும் போற்றப்படும் அலிசேக் மன்சூர் அவர்களின் மறைவு கழகத்திற்கு மிகப் பெரிய இழப்பு என்பதில் எவ்வித ஐயமும் இருக்கமுடியாது. . .........................நன்றி அ .மீரான்


 

 

அலிசேக் மன்சூர் அவர்களின் மறைவு

திராவிட முன்னேற்றக் கழகத்தின்
அறுபது ஆண்டுகால அரசியல் விருட்சம்.
தனது விழுதுகளை விட்டுவிட்டு வேரோடு
... சாய்ந்து விட்டது.

பகுத்ததறிவு பகலவன் பெரியாரால்
பேரறிஞர் அண்ணாவால்
கட்சித்தலைமை கலைஞரால்
அலிசேக் என்றழைக்கப்பட்ட
ஆ. மீ. அலிசேக் மன்சூர்.

மாணவரணிச் செயலாளராய்
மாநிலப் பேச்சாளராய்
நெல்லை மாவட்டத்தின் முதன்மையாளராய்
அவரது அரசியல் பரிணாமம்.

ஆ.மீ.அலிசேக் மன்சூர்..
'அவர் எல்லோருக்கும் பொதுவானவர்.
அதனால்தான் பொதுவாக எல்லோராலும்
'பொதுக்குழு' என்றழைக்கப்பட்டார்.

அவர் அரசியல்வாதிதான்.
ஆனாலும் அவர் எவர் மீதும்
'அரசியல்' செய்து நாங்கள் அறிந்ததில்லை.

அவர் எதிர்கட்சிதான்.
ஆயினும் அவர் எவரையும்
எதிரி கட்சியாக்கிக் கொண்டதை நாங்கள் கண்டதில்லை.

அவர் மேடைப்பேச்சாளர்தான்
ஆனாலும் அவர் எவரையும்
ஜாடைப்பேசி நாங்கள் பார்த்ததில்லை.

அவர் பணம்படைத்தவர்தான்.
ஆயினும் அவர் ஆடம்பரமாய் வாழ்ந்ததை
நாங்கள் அறிந்ததில்லை.

மக்களெல்லாம் கேட்டது பேச்சாளர்களின் பேச்சை
ஆனால் எங்கள் ஊரில்
அந்த பேச்சாளர்களெல்லாம் கேட்டது இவரது பேச்சை அல்லவா?

தவைர்களைக் காண தொண்டர்கள் எல்லாம்
தலைநரகம் செல்வார்கள்.
ஆனால் அந்த தலைவர்களும் காண வந்த
தொண்டர் வாழ்ந்தது எங்கள் ஊரில் அல்லவா?

தலைவர்களின் இல்லத் திருமணத்தில் கலந்து கொள்ளத்
துடிப்பார்கள் தொண்டர்கள்.
ஆனால் அந்த தலைவர்களும் கலந்து கொண்ட
திருமணம் நடந்தது இவர் வீட்டில் அல்லவா?

எத்தனையோ மனிதர்கள் நாடாளுமன்றம்
சட்டமன்றம் செல்ல உதவியவர்.
ஆனால் தான் மட்டும் இருந்த இடத்திலேயே இருந்துவிட்டார்
ஏற்றி வைத்த ஏணியைப் போல..!

நிழலாய் - வீடாய் - ஏணியாய் நின்ற
விருட்சம்.
இன்று எம் நெஞ்சில் நினைவாய்
தங்கி நிற்கிறார்.

விழுதுகளே! விருட்சத்திடம்
வீரியமிக்க பல விஷயங்கள் பல உண்டு.
அதிலிருந்து படிப்பினை பெறுவோம்..
அவருக்காக பிரார்த்திப்போம்...!


 மாத்தளை எம்.எம். பீர் முஹம்மது - இலங்கை.
எம்.எம். மீராசாகிப் - அல்கோபர் - சவூதி அரேபியா.


 







 






Other News
1. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
2. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
3. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
4. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
5. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
8. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
9. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
13. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
14. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
15. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
22. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed
29. 03-02-2024 காஸா-115: புதிதாக 9000 இஸ்ரேலியா இராணுவ வீரர்களுக்கு பைத்தியம். - S Peer Mohamed
30. 03-02-2024 காஸா-114: காஸாவில் இருந்து,மீண்டும் தோற்று ஓடிய இஸ்ரேல்... - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..