benadryl and pregnancy risks benadryl and pregnancy third trimester click பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் ==============================
Episode 04: சிந்தைக் கட்டுப்பாட்டு உத்திகள்
Episode 05: 8 வது உத்தி - சக்தி அலைகள்:
நவீன இயற்பியல் விஞ்ஞானத்தின் (Modern Physics) மூன்றாம் தலைமுறையைத் தாண்டிய ஒரு காலத்தில் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
முதலாம் தலைமுறை: நியுட்டன் சார்ந்த இயற்பியல் (Newtonian Physics).
இரண்டாம் தலைமுறை: ஐன்ஸ்டைன் சார்ந்த இயற்பியல் (Einsteinian Physics).
மூன்றாம் தலைமுறை: சக்திச்சொட்டுப் பொறியியல் (Quantum Mechanics).
இதில் நியூட்டன் மற்றும் ஐன்ஸ்டைன் சார்ந்த இயற்பியல் கோட்பாடுகள் இரண்டுக்கும் இடையில் ஓர் ஒற்றுமை உள்ளது. இரண்டு கோட்பாடுகளும் முழுக்க முழுக்க நாத்திக வாதம், மற்றும் சடத்துவவாத்தை அடிபடையாகக் கொண்ட கோட்பாடுகள்; கடவுளை மறுக்கக் கூடிய கோட்பாடுகள்.
இந்தக் கோட்பாடுகளின் பார்வையில் இந்தப் பிரபஞ்சம் (Universe) என்பது 4 அம்சங்களைக் கொண்டு உருவாக்கப் பட்டிருக்கிறது:
1. உயிரற்ற சடப்பொருட்கள் 2. உருவமற்ற சக்தி (உதாரணம்: ஒளி, மின்காந்தப் புலன், ஈர்ப்பு விசை) 3. எதுவுமே அற்ற சூன்யமாக இருக்கும் வெற்றிடம் 4. காலம் (நேரம்)
அதாவது, இவர்கள் பார்வையில் இந்த நான்கு அம்சங்களினதும் கூட்டுச் சேர்க்கை தான் இந்தப் பிரபஞ்சம் என்பது. இவற்றைத் தவிர இந்தப் பிரபஞ்சத்தில் வேறு எதுவுமே இல்லை. மேலும், இவர்கள் பார்வையில் காலம் / நேரம் என்பது இந்த முப்பரிமான உலகின் இன்னொரு (நான்காவது) பரிமாணம் என்றே நோக்கப் படுகிறது.
இதை எளிய வடிவத்தில் கூறுவதென்றால், உயிரற்ற இந்தப் பேரண்டம் என்பது, உருவமற்ற சக்தியின் கட்டுப்பாட்டில் காலம் என்னும் ஒரு தண்டவாளத்தினூடே பயணித்துக் கொண்டிருக்கிறது. இதைக் கட்டுக்கோப்பில் வைத்திருக்கும் சக்திகள், ஆதி முதல் இன்று வரை ஒரே அடிப்படையில் மாறாமலிருக்கின்றன. அதாவது, ஈர்ப்பு விசை என்பது என்றென்றும் ஒரே மாதிரி தான் ஈர்த்துக் கொண்டே இருக்கும். ஒளி என்பது என்றென்றும் மாறாத ஒரே வேகத்தில் தான் பயணித்துக் கொண்டேயிருக்கும். அது அது அதன் பாட்டில் மாறாமல் அப்படியே இருந்து கொண்டும், சென்று கொண்டும் இருக்கின்றன. இந்தப் பிரபஞ்சத்திற்கு நிர்வாகி (கடவுள்) என்று சொல்லக் கூடிய யாரும் இல்லை.
சடப்பொருளாக இன்று இருக்கக் கூடியவையெல்லாம், ஆதி அணுக்கள் வெவ்வேறு ஒழுங்கில் தற்செயலாக இணைந்ததன் விளைவாக உருவான மூலகங்களின் இரசாயணச் சேர்மானங்கள் மூலம் காலப்போக்கில் அதுவாகவே உருவானவை.
இந்தக் கோட்பாடுகளை உன்னிப்பாகக் கவனிக்கும் போது என்ன தெரிகிறது?
இந்தக் கோட்பாடு, உயிரினங்களின் கூர்ப்புக் கொள்கையை ஒத்ததாகவே இருப்பதை அவதானிக்க முடிகிறது. அதாவது ஆதியில் அணுக்கள் எங்கும் சிதறிக் கிடந்தன. அதன் பிறகு ஈர்ப்பு விசை, மற்றும் பல்வேறு காலக்ஸிகளின் (Galaxies) தோற்றங்களில் வெளிப்பட்ட சக்திகள் போன்றவற்றின் காரணமாக இந்த அணுக்கள் ஒன்றன் பால் ஒன்று எந்த ஒழுங்கும் இல்லாமல் தானாக ஈர்க்கப்பட்டு இணைந்தன. இதன் விளைவாக, வெவ்வேறு மூலகங்கள் தற்செயலாக உருவாகின. இந்த மூலகங்களே இந்தப் பிரபஞ்சத்தில் இன்றிருக்கும் அனைத்து சடப்பொருட்களதும் அடிப்படை அலகுகளாகும்.
இதே அடிப்படையில் தான் உயிர்கள் கூட உருவானதென்று ”டார்வின்” போன்றோர் முன்வைத்த கூர்ப்புக் கொள்கையும் கூறுகிறது. அதாவது, ஆதியில் சிதறிக்கிடந்த அணுக்கள் எழுந்தமானமாகப் பிணைக்கப்பட்டுப் பல்வேறு மூலகங்கள் உருவாயின. இவ்வாறு உருவான பல்வேறு இரசாயண மூலகங்கள் ஆங்காங்கே திரண்டு, ஈற்றில் “மூலப் பதார்த்தக் கஞ்சி” (Primordial Soup) எனும் பதார்த்தம் தன்னால் உருவானது.
காலப்போக்கில் இந்த மூலப்பதார்த்தக் கஞ்சினுள் இருந்த வெவ்வேறு மூலகங்கள் தற்செயலாக மோதிக் கொண்டதாலும், ஒட்டிக் கொண்டதாலும், உயிர் எனும் இன்னொரு புது சக்தி, இந்த இரசாயணத் தாக்கத்தின் பக்க விளைவாக உருவானது. இதுவே உலகில் தோன்றிய முதலாவது உயிரிணமான நுண்ணங்கிகள் ஆகும். காலம் செல்லச் செல்ல இதே பொறிமுறை மீண்டும் மீண்டும் நடந்ததன் மூலம், நுண்ணங்கிகளையும் விட விருத்தியான பல கல உயிரினங்கள், தாவரங்கள் என்று கொஞ்சம் கொஞ்சமாக விருத்தியடைந்து இன்றிருக்கும் மனிதன் வரை அது கூர்ப்படைந்தது.
இந்தக் கூர்ப்புக் கோட்பாட்டையும், நியூட்டன் மற்றும் ஐன்ஸ்டைன் சார்ந்த இயற்பியல் கோட்பாடுகளையும் உண்ணிப்பாக அவதானித்தால் ஒரு விசயம் புலப்படும். படைத்தவன் ஒருவன் இருப்பதையும், இந்தப் பிரபஞ்சத்தில் அவனுக்கு இருக்கும் பங்களிப்புகளையும் இந்தக் கொள்கைகள் பரிபூரணமாக மறுப்பதைப் பார்க்கலாம்.
அதிலும் குறிப்பாக ஐன்ஸ்டைன் சார்ந்த இயற்பியல் கோட்பாடுகளில் இன்னொன்றையும் அவதானிக்கலாம். ஒளி என்பது என்றென்றும் ஒரே வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் ஒரு சக்தி. நொடிக்கு ஏறத்தாழ 300,000 கிலோமீட்டர் என்னும் அதே வேகத்தில் தான் ஒளி என்றும் பயணித்துக் கொண்டிருக்கும். மேலும் இப்பேரண்டத்தில் அதியுச்ச வேகத்தில் பயணிக்கக் கூட்டியது ஒளி மட்டுமே. ஒளியின் இந்த வேகத்தை மிஞ்சிய வேகத்தில் பயணிக்கக் கூடிய எந்தவொரு சக்தியும் இப்பேரண்டத்தில் இல்லை.
ஐன்ஸ்டைனின் இந்தக் கோட்பாட்டை இன்னொரு கோணத்திலிருந்து பார்த்தால் இந்தக் கோட்பாடு சூசகமாக என்ன சொல்கிறதென்பது விளங்கும்.
ஐம்புலன்கள் மற்றும் தொழினுட்பக் கருவிகள் மூலம் தான் இந்த மொத்தப் பேரண்டத்தையும் விஞ்ஞானம் கண்டறிந்து வகுத்துக் கூறியுள்ளது. இதிலும் குறிப்பாகப் பார்வையோடு சம்பந்தப்பட்ட தொழினுட்பம் தான் பேரண்டத்தின் பெரும் பகுதியை ஆய்வு செய்கின்றன. பார்வைப் புலன் சார்ந்த தொழினுட்பம் மொத்தமும் தங்கியிருப்பது ஒளி எனப்படும் சக்தியில் தான்.
அதாவது இந்தத் தொழினுட்பங்களது ஆற்றலின் எல்லை என்பது, ஒளியின் உச்ச வேகத்தின் அளவு தான். ஒளியின் வேகத்தைத் தாண்டிய எந்த ஒன்றையும் ஒளியால் துரத்திப் பிடிக்க முடியாது. ஒளியால் துரத்திப் பிடிக்க முடியாத எந்த ஒன்றையும் பார்வை சார்ந்த மனித தொழினுட்பங்களாலும் கண்டறிய முடியாது. இது தான் இந்த விஞ்ஞானம் பற்றிய உண்மை. இது தான் மனித விஞ்ஞானத்தின் எல்லை.
இவ்வாறான கருவிகளால் அல்லாஹ்வைப் பார்க்க முடியாது; ஏனெனில் அவன் ஒளியின் வேகம், கற்பனை அனைத்தையும் தாண்டிய ஒரு சாம்ராஜ்ஜியத்தில் வீற்றிருக்கிறான். அதே போல் அவனது சக்தி மிக்க படைப்புக்களான வானவர்கள், ஜின்கள் போன்ற படைப்புக்களையும் நம் கருவிகளால் கண்டறிய முடியாது. அவர்களும் ஒளியின் வேகத்தை மிஞ்சிய பரிமாணங்களில் சஞ்சரிக்கக் கூடியவர்கள்.
ஐன்ஸ்டைனின் கோட்பாடுகள் பிரகாரம், ”ஒளியின் வேகத்தை மிஞ்சிய எந்த ஒன்றும் இல்லை” என்பதன் உள் அர்த்தம் என்ன தெரியுமா? நம் கண்களாலோ, கருவிகளாலோ பார்க்க முடியாத எதுவும் உலகில் இல்லை என்பது தான் இதன் அர்த்தம். ஆழமாக யோசித்தால் இந்த அர்த்தம் புலப்படும்.
அதாவது இவர்களது கூற்றை இன்னொரு விதத்தில் கூறுவதென்றால், அல்லாஹ்வை நம் கருவிகளால் பார்க்க முடியவில்லை; எனவே அல்லாஹ் என்று ஒருவன் இல்லை. வானவர்களை நம் கருவிகளால் பார்க்க முடியவில்லை; எனவே வானவர்கள் என்ற ஓர் இனமும் இல்லை. இது தான் இந்த விஞ்ஞானக் கோட்பாட்டின் உண்மையான அர்த்தம்.
அதே போல் இவர்களது கோட்பாட்டின் படி, நேரம் என்பது நமது முப்பரிமான உலகின் மூன்று பரிமானங்களைப் (x,y,z) போல், நான்காவது ஒரு பரிமானம் மட்டுமே. அதாவது நேரம் என்பது நீளத்தை அளப்பதற்கு நாம் உபயோகிக்கும் ரூலர் அளவுகோல் போல, நிமிடங்கள், செக்கன்கள் என்று அலகு குறிப்பிடப்பட்ட ஒரு நீண்ட அளவுகோல் மட்டுமே. இந்த அளவுகோல் மீது தான் இந்தப் பிரபஞ்சம் தண்டவாளத்தில் பயணிக்கும் ரயில் போல நேர்கோட்டில் பயனித்துக் கொண்டிருக்கிறது.
நேரத்தின் வேகமும், ஒளியின் வேகமும் சமன். ஒளியின் வேகத்தை ஒத்த வேகத்தில் நாம் பயணித்தால், நம்மால் நேரத்தினூடே பயணிக்கலாம். நமது கடந்த காலத்துக்கு மீண்டும் நாம் திரும்பிச் செல்லலாம். இந்தக் கருத்தையும் சொன்னது ஐன்ஸ்டைன் தான். இதை இன்றைய விஞ்ஞானம், “நேரப் பிரயாணம்” (Time Travel) என்று கூறுகிறது.
ஐன்ஸ்டைனின் இந்தக் கோட்பாடும் அல்லாஹ்வின் அதிகாரங்களை நேரடியாக மறுக்கக் கூடிய ஒரு கோட்பாடு தான். காலத்தினூடாகப் பயணிக்கவோ, அல்லது காலத்தை அடிப்படையாகக் கொண்ட எந்தவொன்றிலும் அணுவளவேனும் மாற்றங்களை ஏற்படுத்தவோ எந்தவொரு மனிதனுக்கும் எள்ளளவும் அதிகாரம் இல்லை. என்ன தான் தலையைக் குத்தி ஆய்வு செய்தாலும், கியாம நாள் வரை காலத்தின் வரையரைகளைத் தாண்டிச் செல்ல எந்த மனிதனாலும் முடியாது என்பது தான் மார்க்கத்தின் திட்டவட்டமான நிலைபாடு. இதை இன்னும் கொஞ்சம் விபரமாக சற்று நேரத்தில் நோக்கவிருக்கிறோம்.
ஆக மொத்தத்தில் நியூட்டன் மற்றும் ஐன்ஸ்டைன் சார்ந்த இயற்பியல் கோட்பாடுகள் அனைத்தும் இறைமறுப்பைப் போதிப்பதாகவே அமைந்திருப்பது தெளிவாகப் புரிகிறது. மேலும், விஞ்ஞானம் என்ற பெயரில் பாலர் வகுப்பு முதல் பல்கலைக் கழகம் வரை கற்பிக்கப்படும் இந்தக் கோட்பாடுகள் மொத்தமும் பொய்யையும், பித்தலாட்டத்தையும் கொண்டு மனித சமூகத்தைப் நெறி தவறிய கல்வியின் பால் இட்டுச் செல்வதற்காகவே வடிவமைக்கப் பட்டிருக்கின்றன.
நெறி தவறிய கல்வியின் முடிவு எப்பொழுதும் வழிகேடாகத் தான் இருக்கும்.
விஞ்ஞான உலகை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த இவ்வாறான பித்தலாட்டங்கள் அனைத்துக்கும் சவாலாக அமையும் விதமாக 20ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதிகளில் விஞ்ஞான உலகில் ஒரு புதிய புரட்சி வெடித்தது. அது தான் “சக்திச் சொட்டுப் பொறியியல்” (Quantum Mechanics) எனும் புரட்சிகரமான விஞ்ஞானக் கோட்பாடு.
சக்திச்சொட்டுக் கோட்பாட்டின் தோற்றத்திற்குப் பிரதான காரணமாக அமைந்தது, அன்று ஒருசில விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்ட ஒளியின் இரட்டை நிலைப்பாடு எனும், ஒளி பற்றிய ஒரு விசித்திரமான உண்மை தான்.
19ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி வரை ஒளி (வெளிச்சம்) என்பது ஒரு சக்தி என்று தான் விஞ்ஞானிகளால் ஏகோபித்து ஏற்றுக்கொள்ளப் பட்டிருந்தது. ஏனெனில் ஒளியின் தன்மைகள் அனைத்தும் சக்தி அலைகள் போன்ற அலை வடிவத்திலேயே கண்டறியப்பட்டிருந்தன. சடப்பொருளுக்குரிய எந்தத் தன்மையும் ஒளிக்கு இருந்ததாக யாருமே அதுவரை அவதானித்திருக்கவில்லை. எனவே ஒளி என்பது ஒரு சக்தி மட்டுமே என்ற அடிப்படையிலேயே நோக்கப்பட்டது.
பிறகு ஆய்வுகூடங்களில் நடத்தப்பட்ட சில பரிசோதனைகளின் போது ஒளியைப் பற்றிய ஒருசில திடுக்கிடும் பேருண்மைகள் கண்டறியப்பட்டன. அனேகமான சந்தர்ப்பங்களில் சக்தி அலைகளாகத் தோற்றமளிக்கும் ஒளிக் கதிர்கள் சில சந்தர்ப்பங்களில் சடப்பொருளைப் போலவும் தோற்றமளிப்பது சில பரிசோதனைகளின் விளைவாகத் தெரிய வந்தது. அன்றிருந்த பல விஞ்ஞானிகளையும் இது குழப்பத்தில் ஆழ்த்தத் தொடங்கி விட்டது.
இதன் விளைவாக, ஒளி என்பது சக்தியா? அல்லது சடப்பொருளா? என்ற ஒரு புதிய கேள்வி விஞ்ஞான உலகைக் குடைந்தெடுக்க ஆரம்பித்து விட்டது. இதற்கு விடை காணும் நோக்கத்தோடு பலரும் பல்வேறு ஆய்வுகளில் இறங்கத் தொடங்கினர்.
இதே காலப்பகுதியில் வேறோர் ஆய்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஜேர்மன் நாட்டு இயற்பியலாளரான Max Planck என்பவர், எதிர்பாராத விதமாக ஓர் உண்மையைக் கண்டுபிடித்தார். 1900 இல் இதை ஒரு கொள்கையாக அவர் வெளியிட்டார். சக்தி என்பது தொடர் அலைகளாக இருப்பதில்லை; மாறாக “குவாண்ட்டம்” என்றழைக்கப்படும் சக்திச் சொட்டுக்களாகத் தான் அவை இருக்கின்றன.” என்பது தான் அவரது கோட்பாடு. இந்தக் கோட்பாடு தான் “சக்திச்சொட்டுப் பொறியியல்” (Quantum Mechanics) எனும் புரட்சிகரமான புது விஞ்ஞானத்தின் அத்திவாரமாக அமைந்தது.
Max Planck முன்வைத்த இந்தக் கருத்தை அப்படியே கவ்விக் கொண்ட ஐன்ஸ்டைன், அதை ஒளிக்கதிர்களுக்குப் பொருத்தி, ஒளியின் சக்திச் சொட்டுக்களை “ஃபோட்டோன்” (Photon) என்று பெயரிட்டு, Max Planck இன் அதே கோட்பாட்டை வேறு சில மேலதிக கோட்பாடுகளோடு கலந்து, 5 வருடங்களின் பின் தனது பெயரில் மீண்டும் வெளியிட்டார்.
அதாவது Max Planck இன் சக்திச்சொட்டுக் கோட்பாட்டோடு, ஏற்கனவே James Maxwell, Henri Poincaré, Olinto De Pretto போன்ற விஞ்ஞானிகளது ஆய்வுக் கோப்புகளிலிருந்து தான் திருடி வைத்திருந்த E=mc2 போன்ற சமன்பாடுகளையும் ஒருங்கிணைத்து, மொத்தத்தையும் ஓர் ஆய்வுத் தொகுப்பாக வடிவமைத்து, “விஷேட சார்பியல் கோட்பாடு” (Special Theory of Relativity) என்ற பெயரில் ஐன்ஸ்டைன், தனது சொந்த ஆய்வை வெளியிடுவது போல் வெளியிட்டார்.
இவ்வாறு ஐன்ஸ்டைன் வெளியிட்ட விசேட சார்பியல் கோட்பாடு வெகு சீக்கிரத்திலேயே உலகப் பிரசித்தி பெற ஆரம்பித்து விட்டது. ஏனெனில், பிரபஞ்சத்தின் பல அம்சங்களை ஒரே ஆய்வுக்குள் உள்ளடக்கியது போல் ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாடு தோற்றமளித்தது.
மேலும், இவ்வளவு ஆழமானதொரு ஆய்வை எந்தவொரு சாதாரன மனிதனாலும் தனியாக சிந்திப்பதென்பது முடியாத காரியம் என்பதை உணர்ந்த சக அறிஞர்கள், ஐன்ஸ்டைன் ஒரு விஷேட பிறவியென்று நினைக்கத் தொடங்கி விட்டனர்.
இந்த வாய்ப்பை சரிவரப் பயன்படுத்திக் கொண்ட ஷைத்தானிய இலுமினாட்டிகள், ஊடகங்கள் மூலம் ஐன்ஸ்டைனை ஒரு ஜீனியஸ் ஆகவும், விஞ்ஞான உலகின் சரித்திர நாயகனாகவும் உருவகப் படுத்தி, ஜனரஞ்சகப் படுத்தி விட்டனர்; உலகின் கவனத்தை ஐன்ஸ்டைன் பக்கம் திருப்ப ஆரம்பித்தனர். கற்றறிந்தோர் அனைவருக்கும் கண்கண்ட கடவுள் போல் ஐன்ஸ்டைன் வலம் வரத் தொடங்கினார்.
ஆனால், உண்மை இதுவல்ல. ஐன்ஸ்டைன் என்பவர் தனிச்சிறப்பு மிக்க ஒரு விஞ்ஞானி கிடையாது; எல்லா விஞ்ஞானிகளையும் போன்ற ஒரு சாதாரண விஞ்ஞானி தான். மேலும், சக விஞ்ஞானிகளது ஆய்வுகளைத் திருடித் தனது பெயரில் வெளியிட்ட ஓர் அயோக்கியன் தான் ஐன்ஸ்டைன். இந்த உண்மைகள் உலக அரங்கில் வெளிவராமலிக்கும் வண்ணம் ஷைத்தானியர்கள் வரலாற்றைத் திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்தனர். இந்த நாடகத்துக்கான தேவை என்னவென்பதைப் பிறகு பார்க்கலாம்.
ஷைத்தானியர்களது பித்தலாட்டம் மிக்க விளம்பரங்களின் விளைவாக மொத்த உலகமும் ஐன்ஸ்டைனின் அருமை பெருமைகளை சிலாகித்துப் பேசிக் கொண்டிருப்பதிலேயே காலத்தைக் கழித்தது. அதே போல், ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாட்டில் இருந்த சில பெரும் தவறுகளையும் கூட உலகம் உற்று நோக்கத் தவறி விட்டது. “ஐன்ஸ்டைன் எது சொன்னாலும், அது சரியாகத் தான் இருக்கும்” என்ற ஒரு மனோபாவத்தை அடிப்படையாகக் கொண்ட கண்மூடித்தனமான ஒரு கலாச்சாரம் பல்கலைக் கழகங்களில் உருவாக்கப்பட்டது. ஆதாரமே இல்லாமல் ஐன்ஸ்டைன் ஒரு கொள்கையை முன்வைத்தாலும், அதை அடுத்த கணமே சிரமேற்கொண்டு பின்பற்றும் ஒரு சமூகம் விஞ்ஞான உலகில் திட்டமிட்டு உருவாக்கப் பட்டது.
இந்தக் காலப்பகுதியில் தான், மறுபடியும் சக்திச்சொட்டுக் கோட்பாட்டின் புதுப்பிக்கப்பட்ட வடிவத்தோடு ஜேர்மன் நாட்டு இயற்பியலாளர் Werner Heisenberg மற்றும் டென்மார்க் நாட்டு இயற்பியலாளர் Niels Bohr ஆகியோர் ஐன்ஸ்டைனின் கோட்பாடுகளுக்கு எதிராகக் களமிறங்கத் தொடங்கினர். இதைத் தொடர்ந்து, அறிவியல் உலகில் ஒரு பணிப்போர் ஆரம்பித்தது. நியூட்டன் மற்றும் ஐன்ஸ்டைன் சார்ந்த இயற்பியல் கோட்பாடுகளுக்கும், குவாண்ட்டம் கோட்பாடுகளுக்கும் இடையில் ஆரம்பித்த அறிவியல் போர் தான் இது.
இன் ஷா அல்லாஹ் வளரும்...
- அபூ மலிக்
Episode 06: “சக்திச்சொட்டுப் பொறியியல்” (Quantum Mechanics) அறிமுகம்: -
|