Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் - Episode 70 (நிறைவு)
Posted By:Hajas On 12/6/2017 3:06:34 AM

பறக்கும் தட்டுக்களும் ஜின்களும்
==============================

by - Abu Malik

 தொடர் 5: சூத்திரதாரிகள்

 Episode 69: நகருயிர் சார்ந்தோர் (Reptilians / Draconians) – தொடர்ச்சி – 8

நகருயிர் சார்ந்தோர் (Reptilians / Draconians) – தொடர்ச்சி – 9

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Image may contain: one or more people, closeup and text 


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பொதுவாகக் கலப்பின இலுமினாட்டிகளின் தன்மைகளைப் பொருத்தவரை, அவர்களது DNA / மரபணு சார்ந்த அதிர்வெண்கள், தமது “ரூஹ்” எனும் ஆன்மாவுக்குப் பொருத்தமான அதிர்வெண்களில் அதிர்வதை விடவும், நகருயிர் சார் (Reptilian / Draconian) அதிர்வெண்களுக்கே அதிகம் நெருக்கமானவையாக இருக்கும். இதன் விளைவாக அவர்களது சிந்தனைகளும், நடவடிக்கைகளும் ஷைத்தானிய ஜின்களின் விருப்பத்துக்கேற்றவாறே பெரும்பாலும் இருக்கும்.

சாதாரண நிலையில் இந்தக் கலப்பினத்தவர்கள் இருக்கும் போது வெளிப்பார்வைக்கு அவர்களது உயிரியல் மாற்றங்கள் புலப்படாது. ஆனால், அரிதாக ஒருசில சந்தப்பங்களில், இவர்கள் உணர்ச்சிவசப்படும் பொழுதும், நகருயிர் சார் ஜின்களால் முழு அளவில் இவர்கள் ஆட்டுவிக்கப் படும் பொழுதும் இவர்களது உடல் உறுப்புக்களில், அதிலும் குறிப்பாகக் கண்களில் நகருயிர் சார் உயிரியல் மாற்றங்களைத் தற்காலிகமாக அவதானிக்கலாம்.

மனிதர்களது உடல் உறுப்புக்களில், ஏனைய எல்லா உறுப்புக்களையும் விட கண்களுக்கென்று சில தனித்துவமான இயல்புகள் உள்ளன. பொதுவாக ஒரு மனிதனது கண்கள், அவனது ஆன்மாவைப் பிரதிபலிக்கும் கண்ணாடி போன்றவை. ஒருவனது ஆன்மாவின் பலம் / பலவீனம் / ஆரோக்கியம் / நோய் போன்ற அனேகமானவை குறித்த உண்மைகளை அவனது கண்கள் இலகுவாகக் காட்டிக் கொடுத்து விடும்.

வெளியில் ஒரு மனிதன் என்ன தான் வேடமிட்டு நடித்துப் பொய் சொன்னாலும், அவனது ஆன்மா மறைத்து வைக்க முயலும் உண்மைகளை அவனது கண்கள் அனேகமான சந்தர்ப்பங்களில் காட்டிக் கொடுத்து விடும். இதனால் தான் ஒருவர் சொல்லும் வார்த்தைகள் உண்மையா? பொய்யா என்பதில் சந்தேகம் ஏற்பட்டால், உண்மையை அறிய முயற்சிக்கும் போது அவரிடம் நாம் “என் கண்ணைப் பார்த்து மீண்டும் சொல்” என்று கூறுகிறோம். ஏனெனில், கண்ணைப் பார்த்து ஒருவன் பேசும் போது, வாய் பேசும் வார்த்தைகளைக் கண்களும் ஊர்ஜிதப் படுத்தாவிட்டால், அனேகமாக அவன் உண்மை பேசவில்லை என்று நாம் புரிந்து கொள்கிறோம்.

ஆன்மாவுக்கு நெருக்கமான இவ்வாறான பல அம்சங்கள் மனித கண்களில் இருப்பதனாலேயே, கண்களை ஆன்மாவின் வாசல்கள் என்று பொதுவாகவே பண்டைக் காலம் தொடக்கம் மனிதர்கள் புரிந்து வைத்துள்ளார்கள். ஆன்மாவின் இரகசியங்களைக் கண்கள் அவ்வப்போது காட்டிக் கொடுத்து விடுவது வழமை.

உயிரியல் அடிப்படையில் மனித கண்களின் கண்மணியும், அதைக் கட்டுப்படுத்தும் கதிராளியும் வட்ட வடிவிலேயே அமைந்திருக்கும். விழித்திரையைச் சென்றடையும் ஒளியின் அளவைத் தேவைக்கேற்ப கட்டுப்படுத்தும் கதிராளியானது சுருங்கி விரியும் போது கூட நூற்றுக்கு நூறு வீதம் துல்லியமான வட்ட வடிவத்திலேயே சுருங்கி விரியும். இதைப் பின்வரும் காணொளிகள் மூலம் புரிந்து கொள்ளலாம்:

https://www.youtube.com/watch?v=CoePeom-ewk

https://www.youtube.com/watch?v=vAgGeLJ37iU

மேலுள்ள காணொளிகளில் காட்டப்படுவது போல், வட்ட வடிவம் அல்லாத வேறெந்த வடிவத்திலும் மனிதக் கண்களின் கதிராளிகள் ஒருபோதும் சுருங்கி விரிவதே இல்லை. மனிதக் கண்களை அல்லாஹ் படைத்திருப்பதே இவ்வாறு தான்.

ஆனால், விலங்கு ராஜ்ஜியத்தில் பாம்பு, பல்லி, முதலை போன்ற நகருயிர்களின் கண்கள் இவ்வாறு இயங்குவதில்லை. மனிதக் கண்களைப் போன்ற வட்ட வடிவமாக இலாமல், நிலைக்குத்தான ஒரு பிளவு போன்ற வடிவத்திலேயே நகருயிர்களின் கதிராளிகள் சுருங்கி விரியும். அதாவது இரண்டு கதவுகள் மூடிக் கொள்வதைப் போலவே நகருயிர்களின் கதிராளி இயக்கம் இருக்கும். இதைப் பின்வரும் காணொளிகள் மூலம் புரிந்து கொள்ளலாம்:

https://www.youtube.com/watch?v=vtLzxEYSe30

https://www.youtube.com/watch?v=sVjdrANmWoY

விலங்கு ராஜ்ஜியத்தில் பொதுவாக நகருயிர்களின் கண்களில் மட்டுமே நிலைக்குத்தான பிளவு வடிவத்திலான இந்தக் கதிராளி இயக்கம் உள்ளது. விதிவிலக்காகப் பாலூட்டி உயிரினங்களில் பூனையின் கண்களில் மட்டும் இந்த அமைப்பு காணப்படுகிறது. பூனை தவிர்ந்த வேறெந்தப் பாலூட்டி உயிரினங்களின் கண்களிலும் இந்த நிலைக்குத்துப் பிளவு வடிவிலான கதிராளி இயக்கம் இல்லை.

இவ்வளவு தகவல்களையும் நாம் இங்கு முன்வைப்பதன் அடிப்படை நோக்கம், ஓர் உண்மையைப் புரிந்து கொள்வது மட்டும் தான். அதாவது, அல்லாஹ்வின் படைப்பில் மனித இனத்தவர்களது கண்களில் கண்மணி, மற்றும் கதிராளி வடிவங்கள் எப்போதுமே துல்லியமான வட்ட வடிவத்தில் மட்டுமே இருக்கும். அதே போல் நகருயிர் இனத்தவர்களது கண்களில் கண்மணி, மற்றும் கதிராளி வடிவங்கள் எப்போதுமே நிலைக்குத்தான பிளவு வடிவத்தில் மட்டுமே இருக்கும். இது தான் அல்லாஹ் படைத்த இயற்கையான தன்மை. இந்த நியதியைப் புரிய வைப்பதற்காகவே இதுவரை சில அடிப்படைகளை நாம் பார்த்தோம்.

ஆனால், இந்த நியதிக்கு முற்றிலும் மாற்றமான அமைப்பிலேயே நகருயிர் சார் ஷைத்தானிய ஜின்களின் கலப்படத்தால் உருவான, தூய மனித இனம் அல்லாத, இன்றைய இலுமினாட்டி கலப்பினத்தவர்களது கண்கள் இருக்கும்.

அதாவது, இயல்பான நிலையில் கலப்பினத்தவர்கள் இருக்கும் போது, அவர்களது ஆன்மாவின் தன்மை மனிதத் தன்மை சார்ந்ததாக இருக்கும். இவ்வாறு மனிதத் தன்மையோடு அவர்கள் இருக்கும் அனேகமான வேளைகளில் அவர்களது கண்கள் கூட மனித கண்களைப் போலவே வட்ட வடிவிலான கண்மணியோடு இருக்கும்.

அதே நேரம், கலப்பினத்தவர்கள் உணர்ச்சிவசப் படும் போதோ, அல்லது தமக்குள் இருக்கும் நகருயிர் சார் ஜின்களின் தன்மை மேலிடும் பொழுதோ அவர்களிடம் மனிதத் தன்மைக்கு பதிலாக நகருயிர் சார் தன்மைகளே உள்ளுக்குள் ஆக்கிரமிக்க ஆரம்பிக்கும். இவ்வாறு உள்ளுக்குள் மேலிடும் நகருயிர் சார் தன்மைகளை அவர்களது கண்கள் அவ்வப்போது காட்டிக் கொடுத்து விடும்.

அதாவது, இவ்வாறான சந்தர்ப்பங்களில் இவர்களது கண்களின் கண்மணியும், கதிராளியும் வட்ட வடிவத்திலிருந்து, நகருயிர்களுக்கே உரித்தான நிலைக்குத்துப் பிளவு வடிவத்துக்குக் கணப்பொழுதில் மாறி விட்டு, மீண்டும் வட்ட வடிவத்துக்கு மீண்டு விடும். இந்த மாற்றத்தைத் தெளிவாக இவ்வாறான கலப்பினத்தவர்களின் கண்களில் நாம் பின்வரும் காணொளிகளில் அவதானிக்கலாம்:

https://www.youtube.com/watch?v=cGSdkNLBsxs
https://www.youtube.com/watch?v=fcVYnzWZdJY&t=13s
https://www.youtube.com/watch?v=jjAFHk1uWB4
https://www.youtube.com/watch?v=Iui4zcd4wHg

இன்றைய உலகில் இவ்வாறான கலப்பின மனிதர்கள் லட்சக்கணக்கானோர் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களது மரபணுக்களைப் பொருத்தவரை, ஷைத்தானிய ஜின்கள் மூலம் இவர்களது மரபணுக்கள் சில உயிரியல் மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளன.

இதே போன்ற உயிரியல் மாற்றங்களுக்குத் தாமும் உள்ளாகி இருப்பதனால் தான் இன்று இலுமினாட்டிகள், மனித இனத்தவர்களுக்கு எதிரிகளாகவும், தமது உண்மையான எஜமானர்களான ஷைத்தானிய ஜின்களுக்கு விசுவாசம் மிக்க அடிமைகளாகவும் பணியாற்றுவதன் மூலம் ஏனைய மனித இனத்தவர்களது அடிப்படைத் தன்மைகளையும் கூட மாற்றியமைக்கப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதுவரை பல நூற்றாண்டுகளாகத் திட்டமிட்டுக் கஷ்டப்பட்டு வெற்றிகரமாக இலுமினாட்டிகளைத் தனக்கு விசுவாசம் மிக்க அடிமைச் சமூகமாக இப்லீஸ் மாற்றியதை விடவும் பல மடங்கு வேகத்தோடும், செயல்திறனோடும் இன்று உலகில் வாழும் மொத்த மனித சமூகத்தையும் தனக்கு விசுவாசமான அடிமைகளாக மரபணு ரீதியில் மாற்றியமைக்கவே இப்லீஸ் பாடுபட்டுக் கொண்டிருக்கிறான்.

இந்தப் பாரிய சதித்திட்டத்தின் ஒரு பகுதியே இன்று உலகில் அரங்கேற்றப்படும் தடுப்பூசிச் செயல்திட்டம். உலகின் எந்த மூலையில் பிறக்கும் குழந்தையாக இருந்தாலும், அதன் பிறப்பு முதல், முழு வளர்ச்சி வரை முறையாகத் திட்டமிடப்பட்ட பல வேதிப் பொருட்களும், கிருமிகளும் நோய்த்தடுப்பு மருந்து எனும் போலி முகமூடிப் பெயரில் ஒவ்வொரு மனிதக் குழந்தையின் இரத்தத்திலும் இன்று கலக்கப் படுகின்றன.

இந்தத் தடுப்பூசிகளில் உள்ளடக்கப் பட்டிருக்கும் பதார்த்தங்களை ஒவ்வொரு மனிதக் குழந்தையின் இரத்தத்திலும் பிறப்பு முதலே இலுமினாட்டிகள் கலப்பதன் அடிப்படை நோக்கம், இனிவரும் மனிதத் தலைமுறைகளின் DNA இல் பல நிரந்தர மாற்றங்களை ஏற்படுத்துவது தான். இந்த மாற்றங்களில், மனித இனத்துக்கு நன்மை பயக்கும் விதமான அம்சம் ஒரு துளி கூட கிடையாது. முழுக்க முழுக்க இப்லீஸ் எதிர்பார்க்கும் மாற்றங்களுக்கான அத்திவாரங்களே இன்று தடுப்பூசிகள் வாயிலாகப் போடப் படுகின்றன.

இப்போது நாம் கேட்க வேண்டியது ஒரேயொரு கேள்வி மட்டும் தான்.

இயற்கையான மனித இனத்தில் உயிரியல் ரீதியாக மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம், தூய மனித இனம் அல்லாத, மனித – ஜின் கலப்பின மனிதர்களை உருவாக்கும் இந்தச் செயல் திட்டம் என்பது உண்மையில் அல்லாஹ்வின் படைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் புதியதொரு கலப்பினப் படைப்பை ஷைத்தானிய ஜின்கள் உருவாக்கும் செயன்முறையே.

இவ்வாறு அல்லாஹ்வின் படைப்பை மாற்றிப் புதியதொரு படைப்பாக ஒரு கலப்பினத்தை உருவாக்கும் ஆற்றல், அல்லாஹ் அல்லாத வேறு படைப்புக்களுக்கும் உண்மையில் இருக்கிறதா? இவ்வாறு புது இனங்களை உருவாக்கும் அனுமதியையும், ஆற்றலையும் மனித / ஜின் போன்ற தனது படைப்பினங்களுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கிறானா? இது பற்றி மார்க்கம் என்ன கூறுகிறது? இந்தக் கேள்விகளுக்கான சரியான பதில்களையும் இங்கு நாம் அறிந்து கொள்ளக் கடமைப் பட்டுள்ளோம்.

இந்தக் கேள்விகளுக்கான சுருக்கமான பதில், ஆம், அல்லாஹ்வின் படைப்புக்களில் சில மாறுதல்களை ஏற்படுத்துவதன் மூலம் புதுவிதமான (Hybrid) கலப்பினப் படைப்புகளை உருவாக்கும் ஆற்றல் ஜின்களைப் போன்ற அல்லாஹ்வின் படைப்புக்களுக்கு வழங்கப் பட்டே உள்ளது. ஆற்றல் தான் வழங்கப் பட்டிருக்கிறதே ஒழிய, இதைச் செய்யும் அனுமதியை அல்லாஹ் தன் படைப்புக்களுக்கு வழங்கவில்லை.

அதாவது, அல்லாஹ்வின் படைப்புக்களுக்கு ஒப்பாகத் தாமும் படைக்க முயற்சிக்கக் கூடாது என்று மார்க்கம் தடை விதித்திருக்கிறது. இது தான் மார்க்கத்தின் சுருக்கமான நிலைபாடு. இனி இதைத் தகுந்த ஆதாரங்களோடு சற்று விரிவாகப் பார்க்கலாம்:

ஆதாரம் 1:
"நிச்சயமாக உம்மை விட்டும் நான் ரஹ்மானிடம் காவல் தேடுகிறேன். நீர் பயபக்தியுடையவராக இருந்தால் (என்னை நெருங்காதீர்)" என்று (ஜிப்ரீலைப் பார்த்து மர்யம்) கூறினார்.
"நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன். பரிசுத்தமான ஒரு புதல்வரை உமக்கு அளிக்கவே (வந்துள்ளேன்)” என்று (ஜிப்ரீல்) கூறினார்.
அதற்கு அவர் (மர்யம்), "எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் தூய்மை கெடாதவளாகவும் இருக்கும் நிலையில் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?" என்று கூறினார்.
"அவ்வாறேயாகும்; ´இது எனக்கு மிகவும் சுலபமானதே மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும், நம்மிடமிருந்து ஒரு ரஹ்மத்தாகவும் நாம் அவரை ஆக்குவோம்; இது விதிக்கப்பட்ட விஷயமாகும்’ என்று உம் இறைவன் கூறுகிறான்" என்று (ஜிப்ரீல்) கூறினார்.
(அல்குர்ஆன் 19:18-21)

இந்த வசனங்களில் மர்யம் (அலை) அவர்கள் வயிற்றில், ஈஸா (அலை) அவர்களைக் கருவுறச் செய்வதற்காகவே தான் வந்திருப்பதாக வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் கூறும் போது, “ஓர் ஆண் என்னைத் தீண்டாமல் நான் எவ்வாறு கருவுறுவேன்?” என்று படைப்பின் இயற்கைத் தன்மையை முன்னிறுத்தி மர்யம் (அலை) அவர்கள் கேள்வி கேட்கிறார்கள். அதற்குப் பதில் கூறும் போது ஜிப்ரீல் (அலை) அவர்கள், “எனக்கு இது மிகவும் சுலபமான காரியம்” என்று அல்லாஹ் கூறுவதாகவும் கூறுகிறார்கள். இந்த வாசகத்தையே நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

படைப்பின் நியதிகளுக்கு மாற்றமாக ஈஸா (அலை) எனும் ஒரு மனிதரை உருவாக்கும் காரியம் என்பது தன்னால் மட்டுமே முடிந்த ஒரு காரியம் என்று அல்லாஹ் இங்கு கூறவில்லை; மாறாக தனக்கு இது சுலபம் என்றே கூறுகிறான். அதாவது, படைப்பின் நியதிக்கு மாற்றமாக ஓர் உயிரினத்தை உருவாக்குவது அல்லாஹ்வுக்கு சுலபம்; அதே நேரம் அல்லாஹ் அல்லாத அவனது ஏனைய படைப்புகளுக்கு இது கடினம் என்பதே இங்கு பொதிந்துள்ள அர்த்தம்; முடியாது என்பதல்ல.

ஆகவே இவ்வசனத்தின் மூலம், படைப்பின் நியதிகளுக்கு மாற்றமாக, DNA Splicing, Hybridization, Cloning போன்ற தொழினுட்பங்கள் மூலம் கலப்பினங்களை உருவாக்குவது போல் புதிய உயிரினங்களை அல்லாஹ் அல்லாத, அவனது படைப்பினங்கள் உருவாக்குவது சாத்தியம் என்பது இங்கு நிரூபணமாகிறது.

ஆதாரம் 2:
"உன்னுடைய அடியார்களில் குறிப்பிட்ட ஒரு பகுதியினரை நிச்சயமாக நான் எடுத்துக் கொள்வேன். மேலும், நிச்சயமாக நான் அவர்களை வழி கெடுப்பேன். அவர்களுக்குள் (தீய) எண்ணங்களை உருவாக்குவேன். நான் ஏவுவது போல் கால்நடைகளின் காதுகளை அவர்கள் அறுப்பார்கள். மேலும், நான் ஏவுவது போல் அல்லாஹ்வின் படைப்புக்களை அவர்கள் மாற்றியமைப்பார்கள்" என்றும் கூறியதற்காக அவனை (ஷைத்தானை) அல்லாஹ் சபித்தான். மேலும், எவன் அல்லாஹ்வை விட்டு ஷைத்தானை உற்ற நேசனாக ஆக்கிக் கொள்கிறானோ, அவன் நிச்சயமாகப் பெருநஷ்டத்தை அடைந்து விட்டான்.
(அல்குர்ஆன் 4:118-119)

இவ்வசனத்தில் நமக்கு இன்னோர் உண்ம புலப்படுகிறது. அல்லாஹ்வின் படைப்பை மாற்றியமைப்பது அவனது அடிமைகளான மனித / ஜின் இனத்தவர்களால் சாத்தியம் என்பதைக் கூறுவதோடு மட்டும் இவ்வசனம் நின்று விடவில்லை. அவ்வாறு அல்லாஹ்வின் படைப்புக்களை மாற்றியமைத்தல் என்பது, உண்மையில் இப்லீஸ் விரும்பிச் செய்யும் ஒரு காரியம் என்பதையும் இங்கு அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.

இந்த உண்மையின் வெளிச்சத்தில் இன்றைய கலப்பின மனிதர்களின் உருவாக்கத்தைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தாலே உண்மை தெரிந்து விடும். அதாவது, அல்லாஹ்வின் படைப்பாகிய மனித இனத்தை உயிரியல் ரீதியில் DNA மட்டத்தில் மாற்றியமைத்துப் புதிதாகக் கலப்பினங்களை உருவாக்கும் இன்றைய உலகின் சதித்திட்டம் கூட இப்லீஸின் கட்டளைகளுக்கு அமையவே நகருயிர் சார் ஜின் இனத்தவர்களாலும், அவர்களின் சேவகர்களாகிய இலுமினாட்டிகளாலும் இன்று அரங்கேற்றப் பட்டுக் கொண்டிருக்கிறது. மேலுள்ள குர்ஆன் வசனத்திற்கு அச்சொட்டாக இந்த நிதர்சனம் பொருந்திப் போவதைப் பார்க்க முடிகிறது.

ஆதாரம் 3:
அபூ ஸுர்ஆ அறிவித்ததாவது:
நான் அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் (மதீனாவின் ஆளுநர்) மர்வான் பின் அல்ஹகமின் வீட்டுக்குச் சென்றேன். அங்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள் சில உருவப் படங்களைக் கண்டார்கள். அப்போது அவர்கள், "எனது படைப்பைப் போன்று படைக்கத் தயாராகி விட்டவனை விடவும் அக்கிரமக்காரன் வேறு யார் இருக்க முடியும்? அவ்வாறாயின் அவர்கள் ஓர் உயிரணுவைப் படைத்துக் காட்டட்டும்! அல்லது ஒரு கோதுமை வித்தையோ, அல்லது ஒரு பார்லி வித்தையோ படைத்துக் காட்டட்டும்! என்று வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறினான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டுள்ளேன்'' என்று கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம்: 2111 / பாடம் 37, ஹதீஸ் 155

இந்த ஹதீஸில் இன்னொரு தகவல் பொதிந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. அல்லாஹ்வின் படைப்பைப் போல் புது விதமான படைப்புக்களைப் படைக்க முயற்சிப்போரை அக்கிரமக் காரர்களென்று அல்லாஹ் கூறுவதாக இந்த ஹதீஸ் கூறுகிறது. ஆனால், அவ்வாறு படைக்க முடியாது என்று இந்த ஹதீஸ் கூறவில்லை. தொடர்ந்து வரும் வாசகங்களை நுணுக்கமாக அவதானித்தால் இதைப் புரிந்து கொள்ளலாம்.

அதாவது, அல்லாஹ்வின் படைப்பைப் போல் புதுப் படைப்புகளை உருவாக்க முயற்சிப்போருக்கு அல்லாஹ் இங்கு ஒரு சவால் விடுக்கிறான். அந்தச் சவால், “முடிந்தால் எனது படைப்பைப் போல் இன்னொரு படைப்பை (உதாரணத்துக்கு மனிதனைப் போல் இன்னொரு புது மனித இனத்தைப்) படைத்துக் காட்டு பார்க்கலாம்?” என்ற அடிப்படையில் விடுக்கப் பட்ட சவால் அல்ல. மாறாக, “நீ உண்மையான படைப்பாளியாக இருந்தால், எதுவுமே இல்லாத சூன்யத்திலிருந்து புதிதாக ஒரு விதையைப் படைத்துக் காட்ட வேண்டும். அல்லது விந்தணு போன்ற ஓர் உயிரணுவைப் புதிதாகப் படைத்துக் காட்ட வேண்டும். அந்தப் புதிய அணுவிலிருந்தோ, அல்லது விதையிலிருந்தோ இன்னொரு சந்ததி விருத்தியடையும் அளவுக்கு அது விருத்தியடைவதாக இருக்க வேண்டும். இவ்வாறு படைப்பது மட்டுமே உண்மையான படைப்பு என்பதன் வரைவிலக்கணமாகும். மாறாக, ஏற்கனவே இருக்கும் ஒரு படைப்பில் சில மாற்றங்களை ஏற்படுத்தி, அதைச் சற்று மாறுபட்ட இன்னொரு படைப்பாக மாற்றியமைப்பதென்பது படைத்தல் அல்ல” என்பது தான் இங்கு அல்லாஹ் விடுத்திருக்கும் சவாலின் அர்த்தம்.

ஆக, இந்த ஹதீஸில் உணர்த்தப்படும் மறைமுகமான உண்மை கூட, அல்லாஹ்வின் படைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம், Hybridization / DNA Splicing / Cloning போன்ற தொழினுட்பங்கள் வாயிலாகப் புதுப்புது இனங்களை உருவாக்குவதென்பது முடியாத ஒரு காரியமல்ல. ஆனால், அது தடை செய்யப்பட்ட காரியம் என்பது தான்.

பின்வரும் ஹதீஸ் மூலம் இந்த உண்மை மேலும் ஊர்ஜிதப் படுத்தப் படுகிறது:

ஆதாரம் 4:
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்ததாவது:
(பிரயாணத்திலிருந்து திரும்பி வந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான் உருவப் படம் உள்ள திரைச் சீலையால் (வாசலை) மறைத்திருந்தேன். அதைக் கண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் நிறம் மாறிவிட்டது. அந்தத் திரைச் சீலையை எடுத்துக் கிழித்து விட்டார்கள்.
பிறகு "மறுமை நாளில் மக்களிலேயே மிகக் கடுமையான வேதனைக்குள்ளாவோரில், அல்லாஹ்வின் படைப்புகளுக்கு ஒப்பாகப் படைப்பவர்களும் அடங்குவர்'' என்று சொன்னார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம்: 4282

அல்லாஹ்வின் படைப்புக்களைப் போல் படைப்போர் மறுமையில் கடுமையான தண்டனைகளுக்கு உள்ளாவார்களென்று இந்த ஹதீஸில் நபியவர்கள் கூறியுள்ளார்கள். அல்லாஹ்வின் படைப்பில் மாறுதல்களை ஏற்படுத்திக், கலப்பினங்கள் போன்ற புதிய படைப்புக்களை உருவாக்குவது மனித / ஜின்களால் முடியாத ஒரு காரியமாக இருந்திருந்தால், இங்கு தண்டனை குறித்து நபியவர்கள் இவ்வளவு காரசாரமாக எச்சரித்திருக்கவே வேண்டியதில்லை. இல்லாத ஒரு சாராரைத் தண்டிப்பதாக ஏன் இவ்வளவு காரசாரமான எச்சரிக்கை விடுக்க வேண்டும்? ஆக, இதிலிருந்தும் நாம் புரிந்து கொள்ளும் உண்மை, இவ்வாறு புதிதாகப் படைக்கும் ஒரு சாரார் மறுமையில் தண்டிக்கப்படவுள்ளார்கள் என்பது தான். 

ஆகமொத்தத்தில் இந்தச் சதித்திட்டாத்தின் சாராம்சம் இது தான்:

மனிதன் தூய இனமாக இருந்தால், அவனைத் தனது நிரந்தர, முழு அடிமையாக வைத்துக் கொள்வது இப்லீஸுக்கு மிகவும் கடினமான காரியம். ஏனெனில், மனிதனுக்கென்று அல்லாஹ் வழங்கியிருக்கும் இயற்கையான பாதுகாப்புக்களும், அவனது ரூஹ் எனும் ஆன்மாவின் இயல்பான சக்தியும் இப்லீஸின் இந்தத் திட்டத்துக்குப் பெரும் இடையூறாக இருக்கின்றன.

எனவே, அல்லாஹ்வின் அடிமையாக இருக்க வேண்டிய மனிதனைத் தனது அடிமையாக மாற்றியமைக்கும் பொருட்டு, மனிதனது அடிப்படைத் தன்மைகளில் சில மாறுதல்களை ஏற்படுத்துவதன் மூலம் மனிதத் தன்மை குறைவான ஒரு படைப்பாக அவனை மாற்றியமைப்பது தான் இப்லீஸின் திட்டத்தின் அடிப்படை நோக்கம்.

ஏனெனில், இவ்வாறு செய்வதன் மூலமே மனிதனது ஆன்மாவின் சக்தியைப் பலமிழக்கச் செய்து, அல்லாஹ்வின் பாதுகாப்பிலிருந்து அவனைத் தூரமாக்குவது இப்லீஸுக்கு இலகுவாக சாத்தியப் படுகிறது. இன்றைய உலகில் இலுமினாட்டிகள் வாயிலாகவும், ஷைத்தானிய ஜின்கள் மூலமும் அரங்கேற்றப் படும் எல்லா நாடகங்களுக்குமான அடிப்படைத் தேவை இது தான்.

இப்லீஸின் பாரிய செயல்திட்டம் என்னவென்பதையும், அந்தச் செயல்திட்டத்தை வெற்றிகரமாக இவ்வுலகில் அரங்கேற்றுவதன் மூலம் மனித இனத்தவர்களை ஈருலகிலும் கருவறுப்பதற்கு அவனது அடியாட்களான ஷைத்தானிய ஜின்கள் எவ்வாறெல்லாம் காய்நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் எனது சக்திக்குட்பட்ட எல்லா அடிப்படைகளிலும் இந்தத் தொடரில் நான் தோலுரித்துக் காட்டியிருக்கிறேன்.

இந்தச் சதிவலையிலிருந்து சாதாரண ஒரு மனிதன் தப்பி வாழ்வதென்பது குதிரைக் கொம்புக்கு நிகரான காரியம். அல்லாஹ்வின் நேரடி உதவி இல்லாமல் இந்தச் சதிவலையிலிருந்து எந்தவொரு மனித ஆத்மாவும் தப்பிக்கவே முடியாது. அல்லாஹ்வின் நேரடி உதவி நமக்குக் கிடைக்க வேண்டுமென்றால், முறையான ஈமான் வழியாக அன்றி வேறெந்த வழியிலும் அதை அடைய முயற்சிப்பதில் எந்தப் பலனுமில்லை.

எனவே, சதிகார சக்திகளது எல்லாச் சதித் திட்டங்களையும் எதிர்த்து நிற்கும் உறுதியையும், உதவியையும் வழங்கத்தக்க ஒரே ஆயுதம் ஈமான் மட்டுமே. அந்த ஈமானையும், அதன் மூலம் அல்லாஹ்வின் கருணையையும், உதவிகளையும் அடைந்து கொள்ளும் மக்களாக நம் அனைவரையும் அல்லாஹ் ஆக்கியருள் புரிய வேண்டும்.

இத்தோடு இந்த நெடுந்தொடர் நிறைவடைகிறது. இதன் நிறைகள் அனைத்தும் அல்லாஹ்வைச் சாரும். குறைகள் அனைத்தும் என்னையே சாரும். அல்லாஹ்வே அனைத்தும் அறிந்தவன்.

- அபூ மலிக்






Power of Creator
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..