Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் - Episode 51
Posted By:Hajas On 5/5/2017 10:38:47 PM

பறக்கும் தட்டுக்களும் ஜின்களும்
==============================

by - Abu Malik

தொடர் 4: வேற்றுக்கிரக வேஷம்

 

Episode 50: (Nordic Aliens தொடர்ச்சி 04)

Episode 51: (Nordic Aliens தொடர்ச்சி 05)

.
சம்பவம் 5 – பீட்டர் கூரி (Peter Khoury):
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நூலாசிரியரும், பிரபல பறக்கும் தட்டு ஆய்வாளருமான Bill Chalker என்பவர் 2005, ஆகஸ்ட் மாதம் “Hair of the Alien: DNA and Other Forensic Evidence of Alien Abductions” எனும் தலைப்பில் ஒரு புத்தகம் வெளியிட்டார். பல அடிப்படைகளிலும் இது ஒரு தனித்துவம் வாய்ந்தத ஒரு புத்தகமாக இருந்ததையொட்டி இந்த நூல் மிகவும் பிரசித்தி பெற்றது. ஏறத்தாழ ஆறு வருடங்களின் பின்னர், 2011ம் ஆண்டு இதே புத்தகத்தை மையமாகக் கொண்ட இன்னொரு கட்டுரை “New Dawn Magazine” எனும் சஞ்சிகையில் பிரசுரமானது.

பிரசித்தி பெறும் அளவுக்கு அப்படி என்ன தான் அந்த நூலில் பிரஸ்தாபித்து எழுதப்பட்டிருக்கிறது? அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த “பீட்டர் கூரி” (Peter Khoury) எனும் நபருக்கு நேர்ந்த ஒரு சுவாரசியமான சம்பவத்தை மையமாக வைத்தே இந்த நூல் எழுதப் பட்டது. அது என்னவென்பதை இப்போது சற்று விரிவாக நோக்கலாம்.

இந்தச் சம்பவம் குறித்த ஆய்வை, Bill Chalker எந்த ஒழுங்கில் மேற்கொண்டாரோ, அதே ஒழுங்கிலேயே நானும் சம்பவத்தை இங்கு வழங்குகிறேன். சம்பவத்தைப் புரிந்து கொள்வதற்கு இது வசதியாக இருக்கும் என்பதனாலேயே இந்த அனுகுமுறை.

கட்டம் 1: விசித்திர ஆதாரம்:
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முதல் கட்டமாக, அவுஸ்திரேலியாவில் சிட்னியைச் சேர்ந்த பீட்டர் கூரி என்பவருக்கு 1992ம் ஆண்டு, சில Nordic வேற்றுக்கிரகவாசிகளோடு ஏற்பட்ட விசித்திரமான ஓர் அனுபவத்தைப் பற்றி விபரமாக அறிந்து கொள்வோம். ஆனால், இந்த ஒரு சம்பவத்தை வைத்து, பீட்டர் கூரியின் வாழ்வில் வேற்றுக்கிரகவாசிகள் குறித்து நிகழ்ந்த சம்பவம் இது மட்டும் தான் என்று நினைத்து விட வேண்டாம். இவரது வாழ்வில் சிறு பராயம் முதல் வேற்றுக்கிரகவாசிகள் சார்ந்த நேரடி அனுபவங்கள் பல ஏற்பட்டிருக்கின்றன. அவற்றுள் மிகவும் குறிப்பிடத்தக்க சம்பவமாக இது இருப்பதாலேயே இது குறித்து இங்கு அதிக கவனம் செலுத்துகிறோம்.

1992ம் ஆண்டு நிகழ்ந்த பிரதான சம்பவத்தை பார்ப்பதற்கு முன்பாக, 1988ம் ஆண்டு அவருக்கு நடந்த இன்னொரு சம்பவத்தையும் சுருக்கமாகப் பார்த்து விடுவதே நல்லது.

1988, ஜூலை 12ம் திகதி, பீட்டரின் வாழ்வில் நிகழ்ந்த சிறியதொரு சம்பவம், அவரது வாழ்க்கையின் பல அம்சங்கள் தலைகீழாக மாறுவதற்குக் கூட அத்திவாரமாக அமைந்தது. வேற்றுக்கிரகவாசிகளால் பீட்டர் கடத்தப்பட்ட ஒரு சம்பவம் இது. சம்பவத்தின் போது தான் ஒரு கட்டில் மேல் கிடத்தப் பட்டிருந்ததை பீட்டரால் உணர முடிந்தது. எழுந்திருக்கவோ, அசையவோ முடியவில்லை. முழு உடலும் செயலிழந்து போயிருந்தது.

தான் ஒரு கட்டில் மேல் கிடத்தப் பட்டிருக்க, தன்னைச் சுற்றி ஒருசில வேற்றுக்கிரகவாசிகள் நின்று கொண்டிருப்பதை பீட்டர் அவதானித்தார். அவர்களுள் ஒரு வேற்றுக்கிரகவாசியின் உருவம் பீட்டரின் உள்ளத்தில் ஆழப் பதிந்து விட்டது. மிகவும் உயரமான, தங்கத்துக்கு நிகரான மஞ்சள் நிறத்தில் மிகவும் ஒல்லியான, உடலமைப்போடு இருந்த இந்த வேற்றுக்கிரகவாசியின் கண்கள் மிகவும் பெரியதாகவும், கரிய நிறத்திலும் இருந்தன.

இந்த வேற்றுக்கிரகவாசி ஒரு நீண்ட ஊசியை பீட்டரின் தலையின் ஒரு பக்கத்தினுள் நுழைத்ததும், அவர் சுயநினைவை இழந்து விட்டார். திரும்பவும் சுயநினைவு வந்த போது தனது வீட்டில் படுக்கையறையில் வழமை போல் படுத்திருப்பதை பீட்டர் உணர்ந்தர். உடனே தனது மனைவி மக்களின் ஞாபகம் வரவே, பதறியடித்து எழுந்து ஓடிச் சென்று வீட்டின் அடுத்த அறியினுள் பார்த்தார். அங்கு தனது குடும்பத்தவர்கள் அனைவரும் Switch off செய்யப்பட்ட பொம்மைகளைப் போல், சுயநினைவற்ற நிலையில் இருப்பதைக் கண்டார். தொடர்ச்சியாக அவர்களை உலுக்கிய பிறகே அவர்கள் சுய நினைவை அடைந்தனர்.

ஐந்தாறு நிமிடங்களுக்குள் இந்த மொத்த சம்பவமும் நடந்து முடிந்ததைப் போலவே பீட்டருக்குத் தோன்றியது. ஆனால், மணிக்கூண்டைப் பார்த்த போது கிட்டத்தட்ட இரண்டு மணித்தியாலங்கள் கழிந்திருந்ததை உணர முடிந்தது. நடந்த சம்பவம் சில வேளை கனவாக இருக்குமோ என்ற சந்தேகத்தில், வேற்றுக்கிரகவாசிகள் தலையில் ஊசியால் குத்திய இடத்தைச் சோதித்துப் பார்த்த போது, உண்மையிலேயே அந்த இடத்தில் ஏதோ கூரிய ஓர் ஆயுதத்தால் துளையிடப் பட்டதற்கான தடயம் இருப்பது கண்டறியப் பட்டது.

இந்தச் சம்பவம் நடந்த புதிதில் இது குறித்த தீர்க்கமான ஒரு தெளிவு பீட்டருக்கு இருக்கவில்லை. விடை தெரியாத பல குழப்பங்களுடனேயே பீட்டரின் நாட்கள் கழிந்தன. பிற்காலத்தில் வேற்றுக்கிரகவாசிகள் மனிதர்களைக் கடத்துவது குறித்த சில தகவல்களை ஏனையவர்களிடமிருந்து கேள்விப்பட்டு அறிந்த பிறகு, தனக்கு நடந்ததும் இவ்வாறான ஒரு சம்பவமாகவே இருக்க வேண்டும் என்பதை பீட்டர் உணரத் தொடங்கினார்.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகும் கூட பீட்டர் வாழ்வில் அவ்வப்போது இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்ததுண்டு. அவற்றுள் மிக முக்கியமாந்தாகக் கருதப்படும் சம்பவமே பின்வரும் சம்பவம்:

1992, ஜூலை 23ம் திகதி, காலை 7 மணியளவில் தனது மனைவியை வழியனுப்பி விட்டு, ரயில் நிலையத்திலிருந்து வீடு வந்து சேர்ந்த போது, தனது உடல் மிகவும் பலவீனமாக இருப்பது போல் பீட்டர் உணர்ந்தார். எனவே, சற்று நேரம் ஓய்வெடுக்கலாமென்று கட்டிலில் கொஞ்ச நேரம் சாய்ந்திருந்தார். அசதியில் தன்னை மறந்து அப்படியே உறங்கியும் விட்டார்.

ஆழ்ந்த உறக்கத்திலிருந்த பீட்டருக்குத் திடீரென்று கட்டில் மேல் ஏதோ ஏறி இருப்பது போன்ற உணர்வு ஏற்படவே, திடுக்கிட்டுக் கண்விழித்தார். கண் திறந்து பார்த்தவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். பூட்டிய வீடும், அறையும் பூட்டிய படியே இருக்க, யாரென்றே தெரியாத இரண்டு பெண்கள் தனது கட்டிலில் மண்டியிட்டு அமர்ந்திருப்பதைக் கண்டதும் பீட்டருக்கு ஒரு கணம் அதிர்ச்சியில் என்ன சொல்வதென்றே புரியவில்லை.

இருவரில் ஒரு பெண் கிட்டத்தட்ட வடநாட்டு ஐரோப்பியர் தோற்றத்திலும், மற்றப் பெண் ஆசிய நாட்டுப் பெண்களின் தோற்றத்திலும் (மாநிறம் / கரிய கூந்தல்) இருந்தனர்.

அவர்கள் இருவருமே மனித தோற்றத்தில் இருந்த போதும், அவர்களது அங்க அடையாளங்களில் ஒருசில அம்சங்கள் சற்று மனிதத் தன்மைக்கு மாற்றமானவையாகவே இருந்தன. வெள்ளை இனப் பெண்ணின் முகம் வட்டமாகவோ, நீள்வட்டமாகவோ இல்லாமல், மனித லட்சணங்களுக்கு மாற்றமாக மிகவும் நீளமானதாக இருந்தது. மேலும் அவளது தாடை சற்று கூரான வடிவத்தில் இருந்தது. மேலும் அவளது கண்கள், மனித கண்களை விடவும் கிட்டத்தட்ட இரண்டு அல்லது மூன்று மடங்கு பெரிதாகவும், நீல நிறமாகவும் இருந்தன. மேலும், வெண்பொன் நிறத்திலிருந்த அவளது தலைமுடி சற்று தூக்கலாக அலை அலை போல் அடர்ந்திருந்தது. சருமம் வெளிறிய Nordic வெள்ளையர் நிறத்திலேயே இருந்தது.

ஆசியப் பெண்ணின் தோற்றத்திலிருந்த மற்றப் பெண்ணின் சருமம் பொன்நிறம் சார்ந்ததகவே இருந்தது. ஆனால், கண்களோ வெள்ளைப் படலமே இல்லாமல் முற்றுமுழுவதும் கறுப்பாகவே இருந்தன. இந்தப் பெண்ணின் கூந்தல் அடர்ந்த கறுப்பு நிறமாகவே இருந்தது.

இருவரது பாவனைகள் மூலமும், வெள்ளையர் தோற்றத்திலிருந்த பெண்ணே எஜமான் போலவும், ஆசியப் பெண், வெள்ளை இனப் பெண்ணின் கட்டளைகளுக்குக் கட்டுப்படும் பணியாள் போலவும் நடந்து கொள்வதை பீட்டரால் அவதானிக்க முடிந்தது. ஆனால் இருவருமே வாய் திறந்து எந்த வார்த்தையும் பேசவில்லை.

ஏற்கனவே அதிர்ச்சியில் உறைந்து போயிருந்த பீட்டர், அவர்கள் இருவரது உடலையும் அவதானித்த போது இன்னும் அதிர்ச்சியடைந்து போனார். ஏனெனில், இரண்டு பெண்களுமே உடலில் ஒட்டுத் துணி கூட இல்லாமல் முழு நிர்வாணமாகவே இருந்தனர்.

இதுவரை தனக்கு என்ன நடந்து கொண்டிருந்தது? இனி என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றிய ஒரு தெளிவில்லாத நிலையில், பீட்டர் தனது ஞாபகங்களை மீட்டிப் பார்க்க முயற்சித்துக் கொண்டிருக்கும் பொழுதே அடுத்த அதிர்ச்சி தொடர்ந்தது. திடீரென்று வெள்ளை இனத்துப் பெண், பீட்டர் மேல் படர்ந்து கட்டிப் பிடித்ததும், பீட்டர் நிலைகுலைந்து போனார்.

ஆறடிக்கு மேல் உயரமான உடலுடனும், மிகவும் பலசாலியாகவும் இருந்த இந்தப் பெண், பீட்டரின் பிடரிக்குப் பின்னால் தனது கைகளைக் கோர்த்துத் தன்னை நோக்கி இழுந்து, அவரது முகத்தைத் தனது மார்பில் வைத்து அழுத்தலானாள். முதல் தடவை பீட்டர் அதிர்ச்சியோடு தனது தலையை விடுவித்துக் கொண்டு, அவளிடமிருந்து விலக முயற்சித்தார். ஆனால், அவள் விடவில்லை. பீட்டரை விடவும் அவள் மிகவும் பலசாலியாக இருந்தாள். திரும்பத் திரும்ப மூன்று தடவை அவள் இழுத்துக் கட்டிப்பிடிப்பதும், பீட்டர் விலக முயற்சிப்பதுமாகவே நடந்தது. இறுதியில் அவளது ஸ்பரிஷத்தால் உணர்வுகள் தூண்டப்பட்டுத் தனது கட்டுப்பாட்டை இழந்த பீட்டர், தன்னை மறந்து அவளுடன் சல்லாபம் புரிய ஆரம்பித்து விட்டார்.

இவ்வாறிருக்கும் பொழுது, தன்னை மறந்து பீட்டர் அவளது மார்பகத்தைக் கடித்து விட, சற்றும் எதிர்பாராத விதமாக அந்த இடத்தின் ஒரு சதைத் துண்டு அப்படியே அறுந்து, பீட்டரின் தொண்டையினுள் சென்று விட, பீட்டரும் நிலை மறந்து அதை விழுங்கி விட்டார். 

அடுத்த கணம் அதிர்ச்சிக்குள்ளான பீட்டர், தான் செய்த காரியத்தால் அந்த பெண் கூக்குரலிட்டு வலியில் கத்துவாளென்று எதிர்பார்த்தால், அப்படியெதுவும் நடக்கவேயில்லை. கடிபட்டு, ஒரு துண்டு மொத்தமாக இல்லாமலிருக்கும் மார்பகத்திலிருந்து ஒரு துளி இரத்தம் கூட வரவில்லை. அந்தப் பெண் வலியில் துடித்து அலறவுமில்லை. மாறாக, சற்று குழம்பிப் போன முக பாவனையோடு மற்றப் பெண்ணின் முகத்தைப் பார்த்துக் கொண்டு, “இப்படியேதும் நடக்குமென்று நாம் எதிர்பார்க்கவேயில்லையே...??” என்று வாய் திறந்து பேசாமல், மௌனமாக எண்ணப் பரிமாற்றம் சார்ந்த பாஷையில் பேசிக் கொண்டிருந்தாள்.

வேதனையில் துடித்து அலறுவதற்குப் பதிலாக, குழப்பத்தோடு அந்தப் பெண் மற்றப் பெண்ணைப் பார்த்துப் பேசிக் கொண்டிருக்கும் போதே, பீட்டரின் தொண்டைக்குள் யாரோ அமிலத்தைக் கரைத்து ஊற்றியதைப் போல் உள்ளுக்குள் பற்றியெறிய ஆரம்பித்தது. விழுங்கப் பட்ட மார்பகத்தின் துண்டு தொண்டைக்குள் அடைத்துக் கொண்டு என்னமோ செய்வது போல் பீட்டர் மிகவும் அவதிப் படலானார். இதன் விளைவாக மூச்செடுக்க முடியாமல் போகும் அளவுக்கு பீட்டர் இடைவிடாது இருமத் தொடங்கினார். இருமிக் கொண்டே ஒரு கணம் தலையைக் குணிந்த பீட்டர், அடுத்த கணம் தலை நிமிர்ந்து பார்த்த போது, பூட்டியிருந்த கதவு பூட்டிய படியே இருக்க, அங்கிருந்த இரண்டு பெண்களும் மாயமாக மறைந்து போயிருந்தனர்.

ஏற்கனவே தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டிருந்த பல அதிர்ச்சிகளோடு ஒப்பிடுகையில், திடீரென்று இரண்டு பெண்களும் மாயமாக மறைந்து போனது பீட்டருக்கு ஒன்றும் அவ்வளவு பெரிய அதிர்ச்சியாக இருக்கவில்லை. எனவே, அது குறித்துக் கவலைப் படுவதை விட்டுவிட்டு, தனது தொண்டையினுள் பற்றியெரியும் வேதனையைத் தணிப்பதற்காகக் கொஞ்சம் தண்ணீர் குடிக்கலாமென்று பீட்டர் குளியலறை நீர்க்குழாயை நோக்கி ஓடினார்.

என்ன செய்த போதும் தொண்டையின் எரிவு தணியவே இல்லை. இன்னொரு புறம் கழிவறையினுள் சென்று சிறுநீர் கழிக்க முயற்சித்த போது அவருக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. ஒரு சொட்டு சிறுநீர் கூட கழிக்க முடியாமல் தனது பிறப்புறுப்பின் முன் பகுதியில் கடுமையான வேதனையை அவர் உணரவே, அந்த இடத்தைச் சோதித்துப் பார்த்த போது, மிகவும் மெல்லிய, சற்று நீளமான, வெண்-பொன் நிறத்திலான இரண்டு முடி இழைகள் தனது பிறப்புறுப்பின் முனைப் பகுதியைச் சுற்றி, தசையில் அழுத்தமாகப் பதிந்து சிக்கியிருந்ததை பீட்டர் அவதானித்தார். அந்த இரண்டு முடிகளையும் அங்கிருந்து அகற்றிய போது பீட்டருக்கு உயிரே போவது போல் கடும் வேதனை ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார். 

மேலும், இது பற்றிப் பிறகு விபரிக்கையில், தொடர்ச்சியாக ஆறு மணித்தியாலங்கள் தனது பிறப்புறுப்பு வழமைக்கு மாற்றமாக விறைத்த நிலையிலேயே இருந்ததாகவும், இடைவிடாமலிருந்த இந்த நிலை கூட தனக்கு மிகவும் வேதனையாக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

மிகவும் கஷ்டப்பட்டுப் பிரித்தெடுத்த இரண்டு மயிர் இழைகளையும் சற்று உன்னிப்பாகப் பார்த்த போது பீட்டருக்கு இன்னும் ஆச்சரியமாக இருந்தது. இந்த இரண்டு முடிகளும் தனது பிறப்புறுப்பில் சிக்கியிருப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லையென்பதை உணர்ந்தார். ஏனெனில், இது தனது முடியோ, அல்லது தனது மனைவியின் முடி அல்ல என்பது முதல் பார்வையிலேயே அவருக்குப் புரிந்து விட்டது. தனது மனைவியின் முடிக்கும் இந்த முடிக்கும் இடையில் இரவு பகல் வித்தியாசம் இருந்தது. மேலும், தனது மனைவியைத் தவிர வேறெந்தப் பெண்களோடும் உடலுறவு கொள்ளும் வழக்கம் கூட பீட்டருக்கு இல்லை. எனவே, இந்த முடி மிக நிச்சயமாக சற்று முன்னர் மாயமாக மறைந்து போன வெள்ளை இனப் பெண்ணின் முடியாக மட்டுமே இருக்க முடியும்; வேறெந்த வழியிலும் இது இங்கு சிக்கியிருக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்த பீட்டர், உடனடியாக அதைப் பத்திரமாக சேகரித்து வைக்கத் தீர்மாணித்தார். இந்த முடியை வைத்தாவது எப்படியாவது, வந்து விட்டுப் போன பெண்கள் யார் என்பதைக் கண்டறிய வேண்டுமென்று பீட்டர் உறுதி பூண்டார். எனவே, சிறிய ஒரு ப்ளாஸ்டிக் பையினுள் இரண்டு முடிகளையும் பத்திரமாகப் போட்டு, காற்றுப் புகாதவாறு அவற்றைச் சுற்றி எடுத்து வைத்தார்.

சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து சற்று மீண்ட பிறகு பீட்டரின் உள்ளத்துக்குள் பல்வேறு குழப்பங்கள் தோன்றலாயின. தனது வாழ்வில் ஏற்பட்ட எல்லாக் குழப்பங்களையும் ஒளிவு மறைவில்லாமல் தனது மனைவி விவியன் இடம் பகிர்ந்து பழக்கப் பட்ட பீட்டருக்கு இந்தச் சம்பவத்தை எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை. பீட்டர் வாழ்வில் கடந்த காலங்களில் நிகழ்ந்த இவ்வாறான அமானுஷ்ய சம்பவங்கள் குறித்த எல்லா விபரங்களையும் ஏற்கனவே அவர் தன் மனைவியிடம் பகிர்ந்து தான் இருந்தார். அவ்வாறான சந்தர்ப்பங்களிலெல்லாம் தன் மனைவி விவியன் தனக்கு உறுதுணையாக இருந்ததைப் போல் வேறெவருமே இருந்ததில்லை என்பதையும் பீட்டர் உணராமல் இல்லை.

ஆனால், இது தன் மனைவிக்கே துரோகம் செய்தது போன்றதொரு சம்பவம் என்பதால், இதைச் சொல்வதால் தமது இல்லற வாழ்க்கையில் ஏதும் பிரச்சினை ஏற்பட்டு விடுமோ என்று பீட்டர் அஞ்சினார். இதன் விளைவாகக் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக இதை அவர் மனைவியிடம் கூட சொல்லாமல் தனக்குள்ளேயே மறைத்துக் கொண்டு நாட்களை நகர்த்தினார்.

ஆனால், தொடர்ந்தும் அவரால் அவ்வாறிருக்க முடியவில்லை. வருவது வரட்டுமென்று ஒரு நாள் எதையும் மறைக்காமல் மனைவியிடம் சொல்லி விட்டார். ஆனால், அவர் அஞ்சியதற்கு மாற்றமாக, மனைவி விவியன் இதை மிகவும் இலகுவாகவே எடுத்துக் கொண்டார். பீட்டர், தன் சுய கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு நிலையில் நடந்த ஒரு சம்பவம் இது என்பதால், இதைத் தனக்குச் செய்த துரோகமாகத் தான் நினைக்கவில்லையென்றும்; மாறாக தன் கணவரின் விருப்பமின்றி நிகழ்ந்த ஒரு பாலியல் வல்லுறவாகவே இதைத் தான் கருதுவதாகவும்; இந்தப் பிரச்சினையிலிருந்து மீள்வதற்கு எப்போதும் போல் தன் கணவனுக்கு உறுதுணையாகவே தான் இருப்பதாகவும் மனைவி குறிப்பிட்டதும், பீட்டர் உள்ளத்திலிருந்த பெரியதொரு பாரம் இறங்கியதைப் போல் உணர்ந்தார்.

இதன் பிறகு தம்பதிகள் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விதமாகத் தமக்குத் தெரிந்த வட்டாரங்களில் இது குறித்து அறிந்தவர்களிடம் இரகசியமாக விசாரிக்க ஆரம்பித்தனர். ஆனால், இந்த இரகசியம் நெடு நாள் நீடிக்கவில்லை. சம்பவம் எப்படியோ வெளியில் கசிய ஆரம்பித்து விட்டது. நாளடைவில் இந்தச் சம்பவம், 1996ம் ஆண்டளவில் பிரபல ஆய்வாளர் Bill Chalker இன் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்தது. குறிப்பாக பீட்டர் வசம் இருக்கும் வேற்றுக்கிரகவாசியின் முடி இழைகள் குறித்த செய்தி அவரது ஈடுபாட்டை இன்னும் அதிகப்படுத்தியது. இதன் விளைவாக இந்தச் சம்பவம் குறித்த விரிவான ஓர் ஆய்வை அவர் மேற்கொள்ள ஆரம்பித்தார்.

விசாரணை ரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுகள் பற்றிய விபரங்களை இன் ஷா அல்லாஹ் அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.

இன் ஷா அல்லாஹ் வளரும்...

- அபூ மலிக்

Episode 52: (Nordic Aliens தொடர்ச்சி 06)




Power of Creator
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..